பகுதி_ 9
சுபிம்மா....
ஆ...என்னத்தை??
அவசரமாக விழிநீரைத் துடைத்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் சுபாங்கி...
ஜூஸ் தம்ளருடன் உள்ளே வந்த பிரபாவதியின் விழிகள் ஒரு கணம் மருமகளின் முகத்தைக் கூர்ந்தன..
அழுதியா சுபிம்மா??
இல்.. இல்லையேத்தை...
பொய் சொல்லாதேடா....அவன் வேறு முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு போகிறான்....அவன் தான் ஏதோ சொல்லியிருப்பான்...என்னடா சொன்னான்??
அப்..அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அத்தை....
சரி விடு ..இதுவே உன் அம்மா என்றால் உன் மனதில் இருப்பதை சற்றும் தயங்காமல் பகிர்ந்து கொண்டிருப்பாய்..என்ன இருந்தாலும் அத்தை அத்தை தானே....
ச்சே...ச்சே ....அப்படி எல்லாம் ஒன்றுமில்லத்தை...
அப்படியானால் சொல்லும்மா.... என்ன நடந்தது??
அது....அவர் ....என்னைத் தூக்கி வந்தது.....வேண்டாம் என்று சொன்னேன்..அது ...அதற்கு உன் மேல் உள்ள ஆசையில் தூக்கி வரவில்லை.....மனிதாபிமானத்தில் தான் செய்தேன் அப்படி என்று.....
நடந்ததை கோர்வையாக கூற முடியாமல் தட்டுத் தடுமாறி கூறிய சுபாங்கியின் முகம் அப்போதும் வாட மாறாக பிரபாவதியின் முகம் சட்டென மலர்ந்தது..
சுபிம்மா....ஒன்று சொல் உன் இந்த வாட்டம் எதனால்?? அவன் திட்டியதாலா அல்லது அவனுக்கு உன் மேல் ஆசை இல்லை என்று கூறியதாலா??
பிரபாவதியின் கேள்வியில் சுபாங்கி திகைத்து தடுமாறிப் போனாள்..அவள் கன்னங்களில் செம்மை படர..அது வந்து..அது அப்படி இல்லை அத்தை....அவர் கடுமையாக பேசவும்....அதனால்......அதனால் தான்...
அவளின் முகச் சிவப்பையும் தடுமாற்றத்தையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்த பிரபாவதி விழிகளில் நீர் அரும்ப அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்...
நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் டா..ஒன்றும் சொல்ல வேண்டாம்....எனக்கு புரிந்துவிட்டது..தனா அதிஷ்டசாலி...ம்ஹும்...அவனை விட நான் தான் அதிஷ்டசாலி.....என்றார் நெகிழ்ந்த குரலில்..
அச்சோ...அப்படி எல்லாம் ஒன்றுமில்லைத்தை.....என்று சுபி லேசான வெட்கத்துடன் முணுமுணுக்க...அவளின் முகத்தை நிமிர்த்தியவர்
அப்படியா செல்லம்?? எங்கே இந்த அத்தையின் கண்ணைப் பார்த்துச் சொல்லு ஹ்ம்ம்... என்று சிரிக்கவும்.... சுபாங்கிக்கும் சிரிப்பு வந்துவிட வெட்கத்துடன் அவர் மடியிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்...
வெட்கத்துடன் அவர் மடியில் தலை சாய்த்திருந்த சுபாங்கி கன்னத்தில் சூடாக விழுந்த கண்ணீர்த்துளிகளில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..
அத்..அத்தை ..என்னாச்சு?? ஏன் அத்தை அழுகிறீர்கள்?
இல்லைடா...நான் அழவில்லை...இத்தனை நாட்களாக நெஞ்சில் அடைத்திருந்த பாரம் சட்டென விலகியதால் வந்த ஆனந்தக் கண்ணீர் டா இது...
பாரம்..?? என்னத்தை??
ஹ்ம்ம் ..ஆமாம் டா....இவன் உன்னை கடத்தி வந்த நாளில் இருந்து நெஞ்சை அடைத்திருந்த பாரம்.... உனக்கு தெரியாது சுபிம்மா....இவன் தனா உன்னை இப்படி திருமணம் செய்ததில் நீ எனக்கே மருமகளானதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தான். ஆனால் திருமணம் நடந்தாலும் நீங்கள் இருவரும் இரண்டு துருவங்களாய் தனித்தனியே தான் இருந்தீர்கள்...என்னால் இருவரிடமும் பேச முடியவில்லை சுபிம்மா....உன் மனதைப் பற்றி தெரியாமல் உங்கள் வாழ்க்கையை சீராக்க என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை...
உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் அறிய முடியவில்லை.. பகலில் எல்லோர் முன்பும் நீ இயல்பாக நடமாடினாலும் இரவில் நான் உறங்கி விட்டேன் என்று எண்ணிக்கொண்டு நீ சோபாவில் அமர்ந்து சத்தமின்றி அழுவதைக் பல தடவை கண்டிருக்கிறேன் சுபிம்மா....உண்மையை சொன்னால் அப்போதெல்லாம் என் நெஞ்சு குற்றவுணர்ச்சியில் எப்படித் துடிக்கும் தெரியுமா??
ஏன் அத்தை இதில் நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்ள என்ன இருக்கிறது???
இருக்கிறது சுபிம்மா...நிறைய இருக்கிறது... முதலாவது அவன் உன்னை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி தான் திருமணம் செய்கிறான் என்று எனக்கு தெரியும்..நான் நூறு வீதம் மனது வைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும்..ஆனால் தெரிந்தும் மனதின் ஒரு பக்கம் உனக்காக துடித்தாலும் நீ தனாவின் மனைவியாய் இந்த வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் அமைதியாய் இருந்துவிட்டேன்.... ஏனோ நீ தனாவின் மனைவியாய் வந்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்ற ஒரு நம்பிக்கை...
ஆனால் திருமணம் நடந்து நீ இங்கு வந்த பின் இப்படி நீ இரவு நேரங்களில் அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சை ஏதோ பிசையும் சுபிம்மா....ஒரு சிறு பெண்ணின் வாழ்வை என் சுயநலத்துக்காக அழித்துவிட்டேனோ என்று எத்தனை இரவு உறங்காமல் கண்ணீர் விட்டிருக்கிறேன் தெரியுமா??
சில விஷேச வீடுகளில் சரோஜா தன் மகன் ரிஷிக்கும் உனக்கும் முடி போட்டு பேசுவதைக் கேட்டிருக்கிறேன்...முதலில் அதைப் பெரிதாக எடுக்காவிட்டாலும் இப்படி நீ அழும் சமயங்களில் உனக்கும் அவன் மேல் ஏதாவது ஈடுபாடு இருந்திருக்குமோ....அவனை மறக்க முடியாமல் தவிக்கிறாயோ என்றெல்லாம் எண்ணி எண்ணி....எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறேன் தெரியுமா??
அய்யோ...அத்தை..போதும்..போதும்.... நீங்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணி வேதனைப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் அர்த்தமே இல்லை. அதனால் இனி கவலையே படாதீர்கள்....சரியா??
நான் அழுதது....அத்தை நீங்களே சொல்லுங்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன பிறந்த வீட்டை மிஸ் பண்ணுவாள் தானே....என்ன வழக்கமான திருமணங்களில் புதுப்பெண்ணுக்கு அவள் கணவனின் ஆதரவு இருக்கும்..இங்கே....உங்கள் சத்புத்திரனைப் பற்றித்தான் தெரியுமே......
ஒரே உர்ர்ர் தான்....உன் அப்பாவைப் பழிவாங்கத்தான் உன்னை திருமணம் செய்தேன்...உன் வீட்டில் யாருடனும் பேசகூடாது...அப்படி பேசுவதாய் இருந்தால் உன் வீட்டுக்கே போய் விடு.....என்று வார்த்தைகளாலேயே விளாசினார்....போதாத குறைக்கு உன் மேல் ஆசைப்பட்டு ஒன்றும் மணக்கவில்லை என்று சுருக் சுருக் குத்தல்கள் வேறு....கோபமும் அழுகையும் எப்படி வரும் தெரியுமா?? கோபத்தை நேரேயே காட்டி விடுவேன்...ஆனால் அழுகை...?? இப்படி பேசுபவர் முன்னாலேயே அழுதால் என் தன்மானம் என்னாவது..?? அதுதான் நம் ரூமில் தனிமை கிடைக்கும் போது தான் அழுகை பொத்துக்கொண்டு வரும்.....அதோடு அங்கு வீட்டில் அம்மா , அப்பா, விபு, பப்பு என்று அவர்கள் நினைவு வேறு....
ஹ்ம்ம்...எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து நான் அழுததை நீங்கள் இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா ....அத்தை உங்களுக்கொன்று தெரியுமா??
என்னடா??
ரிஷிக்கும் எனக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசை அப்பாக்கு சரோஜாத்தைக்கு இருந்தது தான்..ஆனால் எனக்கு அப்படி எந்த எண்ணமும் எப்போதும் இருந்ததில்லை...புரிந்ததா?? இனிமேல் இப்படி அர்த்தமில்லாத எதைப்பற்றியும் எண்ணி வருத்தப்படக்கூடாது சரியா?? என் வீட்டினர் கூட பேச முடியவில்லை என்ற ஒரு குறையைத் தவிர நான் இங்கு மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறேன் அத்தை.....
சுபிம்மா....
ஆ...என்னத்தை??
அவசரமாக விழிநீரைத் துடைத்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் சுபாங்கி...
ஜூஸ் தம்ளருடன் உள்ளே வந்த பிரபாவதியின் விழிகள் ஒரு கணம் மருமகளின் முகத்தைக் கூர்ந்தன..
அழுதியா சுபிம்மா??
இல்.. இல்லையேத்தை...
பொய் சொல்லாதேடா....அவன் வேறு முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு போகிறான்....அவன் தான் ஏதோ சொல்லியிருப்பான்...என்னடா சொன்னான்??
அப்..அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அத்தை....
சரி விடு ..இதுவே உன் அம்மா என்றால் உன் மனதில் இருப்பதை சற்றும் தயங்காமல் பகிர்ந்து கொண்டிருப்பாய்..என்ன இருந்தாலும் அத்தை அத்தை தானே....
ச்சே...ச்சே ....அப்படி எல்லாம் ஒன்றுமில்லத்தை...
அப்படியானால் சொல்லும்மா.... என்ன நடந்தது??
அது....அவர் ....என்னைத் தூக்கி வந்தது.....வேண்டாம் என்று சொன்னேன்..அது ...அதற்கு உன் மேல் உள்ள ஆசையில் தூக்கி வரவில்லை.....மனிதாபிமானத்தில் தான் செய்தேன் அப்படி என்று.....
நடந்ததை கோர்வையாக கூற முடியாமல் தட்டுத் தடுமாறி கூறிய சுபாங்கியின் முகம் அப்போதும் வாட மாறாக பிரபாவதியின் முகம் சட்டென மலர்ந்தது..
சுபிம்மா....ஒன்று சொல் உன் இந்த வாட்டம் எதனால்?? அவன் திட்டியதாலா அல்லது அவனுக்கு உன் மேல் ஆசை இல்லை என்று கூறியதாலா??
பிரபாவதியின் கேள்வியில் சுபாங்கி திகைத்து தடுமாறிப் போனாள்..அவள் கன்னங்களில் செம்மை படர..அது வந்து..அது அப்படி இல்லை அத்தை....அவர் கடுமையாக பேசவும்....அதனால்......அதனால் தான்...
அவளின் முகச் சிவப்பையும் தடுமாற்றத்தையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்த பிரபாவதி விழிகளில் நீர் அரும்ப அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்...
நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் டா..ஒன்றும் சொல்ல வேண்டாம்....எனக்கு புரிந்துவிட்டது..தனா அதிஷ்டசாலி...ம்ஹும்...அவனை விட நான் தான் அதிஷ்டசாலி.....என்றார் நெகிழ்ந்த குரலில்..
அச்சோ...அப்படி எல்லாம் ஒன்றுமில்லைத்தை.....என்று சுபி லேசான வெட்கத்துடன் முணுமுணுக்க...அவளின் முகத்தை நிமிர்த்தியவர்
அப்படியா செல்லம்?? எங்கே இந்த அத்தையின் கண்ணைப் பார்த்துச் சொல்லு ஹ்ம்ம்... என்று சிரிக்கவும்.... சுபாங்கிக்கும் சிரிப்பு வந்துவிட வெட்கத்துடன் அவர் மடியிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்...
வெட்கத்துடன் அவர் மடியில் தலை சாய்த்திருந்த சுபாங்கி கன்னத்தில் சூடாக விழுந்த கண்ணீர்த்துளிகளில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..
அத்..அத்தை ..என்னாச்சு?? ஏன் அத்தை அழுகிறீர்கள்?
இல்லைடா...நான் அழவில்லை...இத்தனை நாட்களாக நெஞ்சில் அடைத்திருந்த பாரம் சட்டென விலகியதால் வந்த ஆனந்தக் கண்ணீர் டா இது...
பாரம்..?? என்னத்தை??
ஹ்ம்ம் ..ஆமாம் டா....இவன் உன்னை கடத்தி வந்த நாளில் இருந்து நெஞ்சை அடைத்திருந்த பாரம்.... உனக்கு தெரியாது சுபிம்மா....இவன் தனா உன்னை இப்படி திருமணம் செய்ததில் நீ எனக்கே மருமகளானதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தான். ஆனால் திருமணம் நடந்தாலும் நீங்கள் இருவரும் இரண்டு துருவங்களாய் தனித்தனியே தான் இருந்தீர்கள்...என்னால் இருவரிடமும் பேச முடியவில்லை சுபிம்மா....உன் மனதைப் பற்றி தெரியாமல் உங்கள் வாழ்க்கையை சீராக்க என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை...
உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் அறிய முடியவில்லை.. பகலில் எல்லோர் முன்பும் நீ இயல்பாக நடமாடினாலும் இரவில் நான் உறங்கி விட்டேன் என்று எண்ணிக்கொண்டு நீ சோபாவில் அமர்ந்து சத்தமின்றி அழுவதைக் பல தடவை கண்டிருக்கிறேன் சுபிம்மா....உண்மையை சொன்னால் அப்போதெல்லாம் என் நெஞ்சு குற்றவுணர்ச்சியில் எப்படித் துடிக்கும் தெரியுமா??
ஏன் அத்தை இதில் நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்ள என்ன இருக்கிறது???
இருக்கிறது சுபிம்மா...நிறைய இருக்கிறது... முதலாவது அவன் உன்னை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி தான் திருமணம் செய்கிறான் என்று எனக்கு தெரியும்..நான் நூறு வீதம் மனது வைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும்..ஆனால் தெரிந்தும் மனதின் ஒரு பக்கம் உனக்காக துடித்தாலும் நீ தனாவின் மனைவியாய் இந்த வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் அமைதியாய் இருந்துவிட்டேன்.... ஏனோ நீ தனாவின் மனைவியாய் வந்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்ற ஒரு நம்பிக்கை...
ஆனால் திருமணம் நடந்து நீ இங்கு வந்த பின் இப்படி நீ இரவு நேரங்களில் அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சை ஏதோ பிசையும் சுபிம்மா....ஒரு சிறு பெண்ணின் வாழ்வை என் சுயநலத்துக்காக அழித்துவிட்டேனோ என்று எத்தனை இரவு உறங்காமல் கண்ணீர் விட்டிருக்கிறேன் தெரியுமா??
சில விஷேச வீடுகளில் சரோஜா தன் மகன் ரிஷிக்கும் உனக்கும் முடி போட்டு பேசுவதைக் கேட்டிருக்கிறேன்...முதலில் அதைப் பெரிதாக எடுக்காவிட்டாலும் இப்படி நீ அழும் சமயங்களில் உனக்கும் அவன் மேல் ஏதாவது ஈடுபாடு இருந்திருக்குமோ....அவனை மறக்க முடியாமல் தவிக்கிறாயோ என்றெல்லாம் எண்ணி எண்ணி....எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறேன் தெரியுமா??
அய்யோ...அத்தை..போதும்..போதும்.... நீங்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணி வேதனைப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் அர்த்தமே இல்லை. அதனால் இனி கவலையே படாதீர்கள்....சரியா??
நான் அழுதது....அத்தை நீங்களே சொல்லுங்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன பிறந்த வீட்டை மிஸ் பண்ணுவாள் தானே....என்ன வழக்கமான திருமணங்களில் புதுப்பெண்ணுக்கு அவள் கணவனின் ஆதரவு இருக்கும்..இங்கே....உங்கள் சத்புத்திரனைப் பற்றித்தான் தெரியுமே......
ஒரே உர்ர்ர் தான்....உன் அப்பாவைப் பழிவாங்கத்தான் உன்னை திருமணம் செய்தேன்...உன் வீட்டில் யாருடனும் பேசகூடாது...அப்படி பேசுவதாய் இருந்தால் உன் வீட்டுக்கே போய் விடு.....என்று வார்த்தைகளாலேயே விளாசினார்....போதாத குறைக்கு உன் மேல் ஆசைப்பட்டு ஒன்றும் மணக்கவில்லை என்று சுருக் சுருக் குத்தல்கள் வேறு....கோபமும் அழுகையும் எப்படி வரும் தெரியுமா?? கோபத்தை நேரேயே காட்டி விடுவேன்...ஆனால் அழுகை...?? இப்படி பேசுபவர் முன்னாலேயே அழுதால் என் தன்மானம் என்னாவது..?? அதுதான் நம் ரூமில் தனிமை கிடைக்கும் போது தான் அழுகை பொத்துக்கொண்டு வரும்.....அதோடு அங்கு வீட்டில் அம்மா , அப்பா, விபு, பப்பு என்று அவர்கள் நினைவு வேறு....
ஹ்ம்ம்...எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து நான் அழுததை நீங்கள் இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா ....அத்தை உங்களுக்கொன்று தெரியுமா??
என்னடா??
ரிஷிக்கும் எனக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசை அப்பாக்கு சரோஜாத்தைக்கு இருந்தது தான்..ஆனால் எனக்கு அப்படி எந்த எண்ணமும் எப்போதும் இருந்ததில்லை...புரிந்ததா?? இனிமேல் இப்படி அர்த்தமில்லாத எதைப்பற்றியும் எண்ணி வருத்தப்படக்கூடாது சரியா?? என் வீட்டினர் கூட பேச முடியவில்லை என்ற ஒரு குறையைத் தவிர நான் இங்கு மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறேன் அத்தை.....