• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
21.கானல் நீரும் காதல் நதியானதே
வித்யா கங்காதுரை


இரவு நேரத்தில் நங்கை ஒருத்தி கண்ணீருடன் மண்டபத்தின் பின்பக்க வாயிலாக தன் அலங்காரங்களை கலைத்தப்படியே

யாரும் அறியா வண்ணம் வேகமாக வெளியேறினாள்... அவளின் கண்களும், மனமும் கலங்கி இருந்தது...



சாலையில் வந்த ஆட்டோவில் ஏறியவள்... யாருக்கோ போன் செய்து தன் வரவை தெரிவித்தாள்...



"கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போங்கண்ணா..." என்று ஓட்டுனரிடம் சொல்ல

அரை மணி நேரத்தில் ஆட்டோவும் போய் சேர்ந்தது... தன் கையிலிருந்த பணத்தை கொடுத்தவளோ மீதம் வாங்கும் மனநிலை கூட இல்லாமல் பேருந்தில் ஏறி ஜன்னலோரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்... அவளையும் மீறி கண்ணீர் பெருக்கெடுக்க... தன் கரங்கள் அவள் வயிற்றை தடவி கொடுத்தது... மூன்று மாத சிசுவை இப்போது சுமந்து கொண்டிருக்கின்றவள் பெயர் காவ்யா...



அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமர்நாத் ரேணுகா தேவி தம்பதியரும் காவ்யாவின் பெற்றோர்களும் குடும்ப நண்பர்களாக வசித்து வந்தனர்… அவர்களுக்கு இரண்டு மகன்கள் பெரியவன் அதிதேவ், இளையவன் சூரியதேவ் …



பொதுவாகவே சிறுவயதில் இருந்தே உயிர் நண்பர்களாக பழகி வருபவர்கள்… சூரிய தேவ்வும், காவ்யாவும் பீச், சினிமா, பூங்கா... என்று சுற்றித் திரிவார்கள்... அந்த ஏரியாவில் உள்ள பிள்ளைகளுடன் கிரிக்கெட் மற்றும் சைக்கிள் போட்டிகள் என எப்பொழுதும் ரகளை செய்து சுற்றி திரிந்து அந்த ஏரியாவில் அனைவருக்கும் தெரிந்த முகங்களாக வலம் வந்தனர்… காவ்யா வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அதிகமாக கண்டிக்க முடியாமல் விக்கிரமனும், மலர்வழியும் விழி பிதுங்கி போவார்கள்... சூரிய தேவ்தான் காவ்யாவின் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவளை சற்று அதட்டலுடன் தன் பாதுகாப்பிலே வைத்துக் கொண்டான்...



சூரியா வீட்டில் எப்பொழுதும் திருமணங்கள் மற்றும் தொழில் முறை பார்ட்டிகள் என நடந்த படியே இருக்கும்... சூர்யா, காவ்யாவை தன் வீட்டு விசேஷங்களில் தவிர்க்க மாட்டான்... ஆனால், தன் அண்ணன் வைக்கும் தொழில் முறை பார்ட்டிகளில் கண்டிப்பாக காவ்யாவை அனுமதிக்க மாட்டான்... ஏனென்றால், அந்த பார்ட்டியில் மது முதல் மாது வரை வரைமுறையின்றி கெஸ்ட் ஹவுஸில் நடக்கும் அந்த கூத்துக்களை கண்டு அவனே சில நேரங்களில் முகம் சுளிக்கும் படியாக இருக்கும்… அவன் அண்ணன் தொழில்முறையில் இதெல்லாம் வாடிக்கை என்பதால் அவற்றில் தலையிட மாட்டான்...



ஒருமுறை தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் அதிகமாகவும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பட்ட ஒருவன் தான் வருண் மித்ரன்... அவன் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்... அவனின் கவர்ச்சிகரமான சிரிப்பும், அவனின் வசீகரத் தோற்றமே அனைவரையும் ஈர்க்கும்..அவன் தந்தையின் தொழில்களை இளம் வயதிலேயே தன் வசப்படுத்தி இருந்தான்... எம்.வீ.எம் என்ற பெயரில் மிகவும் புகழ்ந்த வாழ்ந்த ஸ்தாபனமாக உயர்த்தியிருந்தான்...



மித்ரன் தொழிலும் கெட்டிக்காரன்..அதேசமயம் வாழ்க்கை வாழ்வதற்கே... அதை தன் விருப்பம் போல வாழ்பவன்... அதில் மது முதல் மங்கையர் வரை உண்டு... அவனின் ஆளுமை, கவர்ச்சியான அழகு, பேச்சு வசீகரத்தில் தானாக வரும் பெண்களையும்,அமையும் வாய்ப்புகளையும் அழகாக பயன்படுத்திக் கொள்வான்...



இவனும், அதிதேவ்வும் தொழில் முறையில் தான் நண்பர்களாக கைகுலுக்கி கொண்டார்கள்... இருவரின் உதவிகளும் இருவருக்குமே தேவைப்பட, ஒரே வயதினர் என்பதால் மிகவும் எளிதிலேயே நண்பர்களாக மாறினார்கள்... இப்படி அடிக்கடி அதிதேவ்வின் வீட்டு பார்ட்டிகளில் கலந்துகொள்ள வரும் வருண் மித்ரன் தான் காவ்யாவின் வாழ்க்கையிலும் அவனுக்கே தெரியாமல் பாதித்தான்… அப்பொழுது காவ்யா கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்...



முதலில் கிரஷ் என்று ஆரம்பித்து அதுவே காதலாக மாறியது... அவள் அறையில் எங்கும் அவனை பற்றிய புகைப்படங்கள், நேர்காணல் தொகுப்புகள், அட்டைப்படம் நிரம்பிய மேகசின்ஸ் புத்தகங்கள், அவனின் போட்டோக்கள்... என தன்னறையை அலங்கரித்திருந்தாள்...



ஒரு முறை சூரியா போன் பிரச்சினையாகி விட காவ்யாவின் போனை திறந்த பொழுது அதில் வருண் மித்ரன் கவர்ச்சிகரமாக சிரித்துக் கொண்டிருந்தான்... எஅவளைப் பார்த்து முறைத்தவன்...



"எதுக்கு, இவன் போட்டோ எல்லாம் வைச்சியிருக்க காவ்யா..."



"சூர்யா, என்ன நீ அவன் இவன் சொல்ற...ஐ லவ் ஹிம் எ லாட்..." என்று கண்கள் மூடி கிறக்கமாக கூறியவளை வினோதமாக பார்த்தவன்…



இளம் வயதில் வரக்கூடிய இனக்கவர்ச்சி தான் என்று விட்டுவிட்டான்... வருண் மித்ரன் அங்கு வரும்பொழுதெல்லாம் காவ்யாவும் அங்கே பிரசன்னமாகிட அதை கண்டு சூரியதேவ்வே கடுப்பாகி விடுவான்...



"ப்ளீஸ், தூரத்தில் இருந்து பார்த்துட்டு போயிடுறேன் சூர்யா..."



"ப்ளீஸ், ஒரே ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கிறேனே..." என்று அவள் வருண் மித்ரனை நெருங்க முயற்சி செய்யும் பொழுதெல்லாம் சூரியா தான் அவளுக்கு அரணாக இருந்து அவளை பாதுகாத்தான்... அவன் வந்தாலே நிறைய பேர் அவனை சூழ்ந்து கொள்ள அதில் காவ்யா அவன் கவனத்தில் பதியாமல் போனது...



அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளை அவள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து நிறைய முறை பார்த்திருக்கின்றாள்... சிலமுறை அவன் இவளை திரும்பி பார்ப்பது போல் இவளுக்கு தோன்றும்... ஆனால், அது எல்லாம் மாயை என்று நினைத்து அவள் தனக்குள்ளே அழுது கரைவாள்...



அவன் மீதான காதல் வளர்ந்துக் கொண்டே போனது...அவன் நினைவிலேயே தான் வாழ்ந்து மடிந்து விடலாம் என்று அவளுக்கு அடிக்கடி தோன்றி மறையும் எண்ணங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது விழிப்பாள்...



ஒரு முறை இருவருமே மோதி கொண்டார்கள்... ஆனால், அவனுக்கு இவளை யார் என்றே தெரியாது "சாரி"என்ற ஒற்றை வார்த்தையில் அவளை விலகி சென்றிட, அதில் பெண்ணவள் மனம் துடிதுடித்து போவாள்...



ஒருமுறை சூரியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது... அவன் பெற்றோர் காசி யாத்திரைக்கு சென்றிருக்க... அதிதேவ் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லையென்று கெஸ்ட் ஹவுஸில் வைக்க வேண்டிய பார்ட்டியை அவன் வீட்டிலேயே வைத்து விட்டான்...நிறைய பேர் வந்திருக்க... அதில் வருண் மித்ரனும் அடக்கம்...அவனின் காரைக் கண்டதுமே காவ்யா மனம் குதுகளித்தது... ஆனால், தன் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், சூர்யாவுக்கு சிறிதளவு ரசம் சாதம், சுடு தண்ணீர் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டின் பின்பக்க வழியாக மாடி அறைக்கு சென்றாள்... அங்கு சூர்யா மிகவும் களைப்புடன் படுத்திருக்க...அவனருகே சென்று "சூர்யா சூர்யா"... என்று அழைக்க...

கண் விழித்தவன் ...



"காவ்யா இங்கே‌ ஏன் வந்தே..."



"ஏய், என்ன இப்படி கேட்குற… என் ப்ரெண்டுக்கு பீவர் நான் வராமா யார் வருவாங்க..."



"காவ்யா அண்ணா, பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கான்... சோ, ப்ளீஸ் நீ சீக்கிரம் கிளம்பு..."



"இல்ல சூர்யா, உனக்கு ரொம்ப முடியலையின்னு அம்மா தான் ரசம் கொடுத்துட்டு வர சொன்னாங்க... ப்ளீஸ் இதை சாப்பிட்டு நீ டேப்லெட் மட்டும் போட்டுக்க... நீ சாப்பிட்டதும்... நான் கிளம்பிடுறேன்..."



"ம்ம்ம், ஓகே கண்டிப்பா சீக்கிரமா வீட்டுக்கு போயீடு... நிறைய கெஸ்ட்டுங்க வருவாங்க... நீ வேடிக்கை பார்த்துட்டு நிற்க கூடாது சரியா..."



"ம்ம்ம், நான் போறேன்... நீ முதல்ல சாப்பிட்டுட்டு டேப்லெட் போட்டுக்கோ..." என்று டிபன் பாக்ஸ் திறந்து ஸ்பூனை போட்டு கொடுக்க...அவளின் அக்கறையில் சூர்யாவின் கண்களும், மனமும் நெகிழ்ந்து போயீன...



"தேங்க்ஸ் மா"... என்று சொல்லியபடியே அவன் உண்டு முடிக்க... அவனுக்கு மாத்திரையை கொடுத்துவிட்டு அவனை படுக்க வைத்தவள் எடுத்து வந்த பொருட்களுடன் மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி வரவும்... அப்பொழுது கீழே சில உணவுப் பொருள்கள் சிதறியிருந்தை கவனிக்காமல் வைத்ததில் கால் வழுக்கி தரையில் விழுந்தாள்...



இசையின் இரைச்சலில் அவளை யாரும் கவனிக்கவில்லை... ஆடையில் உணவுப் பொருள்களும்,பழ துணுக்குகளும் ஒட்டிக் கொள்ள... அதை சுத்தம் செய்வதற்கென்று கீழேயிருந்த ஒரு அறையினுள் சென்றாள்... அங்கிருந்த பாத்ரூமுக்குள் தன் ஆடைகளை சுத்தம் செய்துவிட்டு வெளியே வர... அப்பொழுதென்று தள்ளாடியப்படியே ஒரு உருவம் அந்த அறைக்குள் வரவும் சரியாக இருந்தது...



"ஹாய், ஸ்வீட்டி நீ இங்கதான் இருக்கியா... நான் உன்னை தான் தேடிட்டு வந்தேன் பேபி..." என்று இவளை நோக்கி வர காவ்யா அதிர்ந்து நின்று விட்டாள்...



அந்த தள்ளாடிய உருவம் வேறு யாருமில்லை வருண் மித்ரனே ... அவனின் அருகாமையில் அவள் உள்ளம் தடுமாறினாலும், அவன் மீது வந்த மது வாடையில் அவள் முகம் சுணங்கி போனது... அவள் உடல் மனமும் பதர ஆரம்பித்தது... தனிமை சூழல் வேறு எப்படி இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டுமென்ற அவள் பெண்மை விழித்து கொள்ள சட்டென்று அவனை விட்டு நகர...



"ஏய், எங்கே போற ஸ்வீட்டி, டுடே யூ ஆர் மைன் நா..." என்று அவளை இழுத்து அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்... அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது... ஆனால், அதை எல்லாம் அவன் கவனிக்கும் பொருட்டில் இல்லை... அவளை கட்டிலில் தன்னுடனேயே அணைத்தபடி தொப்பென்று விழவும்...



"அம்மா"... என்று முதலில் அலறியவள்...



"ப்ளீஸ் வரு ப்ளீஸ்... ஐ வாண்ட் டு கோ ப்ளீஸ் வரு..."



"வாவ், யுவர் வாய்ஸ் இஸ் வெரி ரொமான்டிக் ஸ்வீட்டி..." என்று அவளின் கதறலை ரசித்து கூறுபவனை எப்படி தடுப்பது என்று புரியாமல் அவனை விட்டு விலக முயன்றாள்...



"வரு ப்ளீஸ்"



"மை ஸ்வீட்டி"... என்று அவள் முகம் எல்லாம் முத்தங்கள் பதித்து இறுதியில் அவளின் இதழிலும் தஞ்சம் புகுந்து விட்டான்... அவனை ஆழ்மனதில் ரசித்தவள் இன்று வெறுக்கவும் முடியாமல், ரசிக்க முடியாமல் அவள் இரண்டாம் கட்ட மன நிலைக்கு தள்ளப்பட்டாள்...அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… அவளின் ஆடைகளை கலைப்பதில் அவன் வேகம் கொள்ள...



"வரு வேண்டாம்..." என்று அவள் தடுத்து தாக்கியது எதுவும் அவனுக்கு போதையின் உச்சத்தில் இருந்தவனுக்கு உரைக்கவில்லை...



"ஏய் கமான், ஸ்வீட்டி என்ஜாய் திஸ் மொமெண்ட்..." என்று அவளின் போராட்டங்கள் அனைத்தையும் அவன் தடுத்திருக்க... இப்பொழுது இயற்கையாய் ஏற்பட்ட உணர்வுகளில் பெண்ணவளும், கட்டுண்டாள்... அவளையும் மீறி, அவள் மனதையும் மீறி அவள் உடல் மட்டும் அவன் வசம் சென்றதை அவளாலேயே தடுக்க முடியவில்லை... அவன் அவளை தன்னோடு அடக்கி அவளுள் அவனை தஞ்சம் புகுந்த தருணத்திலும் "வரு ப்ளீஸ் லீவ் மீ, ஐ டோண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யூ..." என்று அவள் கதறல்கள் அவன் மனதுக்குள் சென்று சேர்ந்ததை அவனே அறியவில்லை...



அனைத்தும் முடிந்து அவளை விட்டு பிரிந்தவன் களைப்பில் அப்படியே உறங்கி இருக்க... எழுந்தவள் அமர்ந்து தன்னையும், அவனையும் கண்டு இரு கைகளால் வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் மட்டுமே விட முடிந்தது...



தன் ஆடைகளை அனைத்தும் எடுத்து அணிந்தவள் துப்பட்டாவினால் தன் உடலை போர்த்திக் கொண்டவள் யாருக்கும் தெரியாமல் அந்த அறையை விட்டு ஓடியவள் தன் வீடு சென்று நின்றாள்... தன் அறைக்கு சென்று பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரில் நின்றாள்...அவள் உள்ளத்தை ஏற்கனவே பாதித்தவன்... இப்பொழுது உடலாலும் அவளை பாதித்திருந்தான்... அவளால் ஏதும் செய்ய முடியாமல் அழுது களைத்தவள்... பிறகு வேறு உடைய மாற்றிக் கொண்டு அமைதியாய் வெளியே வந்து தாயிடம் தலைவலி என்றவள் அவர் தந்த பாலை மட்டும் அருந்தி விட்டு படுக்கையில் விழுந்து விட்டாள்...



ஒரு முறை சூரியாவுடன் வெளியே சென்று இருந்தாள்...சமீப நாட்களாக அவளின் அமைதி சூரியாவை யோசனையில் ஆழ்த்தியது... அவளை சகஜமாக பொருட்டே பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான்...



சிறிது தூரம் நடந்தவள் திடீரென்று மயங்கி சரிந்து விட்டாள்... சூரியா பதறி போய் அருகில் இருக்கும் கிளினிக்குக்கு அவளை அழைத்துச் செல்ல அங்கே அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறவும்... அதிர்ந்தது சூரியா மட்டுமல்ல காவ்யாவும் தான்... அவள் இதை எதிர்பார்க்கவில்லை... அன்றைய நிகழ்வுகள் யாவும் நினைவுக்கு வர... அன்று நடந்தது எதிர்பாராத நிகழ்வா...? விபத்தா...? என்று புரியாமல் உள்ளம் கலங்கி போய் அமைதியாக இருந்தவளை ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்தவன்... விக்ரமன் மற்றும் மலரிடம் நடந்ததை கூறி விட்டான்... அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள்...



"என்னடி, யாருடி காரணம் ...என்ன காரியம் பண்ணி இருக்க..."



சூரியதேவ்வை அவர்கள் சந்தேகமாக பார்க்க...



"அய்யோ, ஆண்ட்டி, அங்கிள் அந்த மாதிரியெல்லாம் கனவுல கூட நினைச்சு பார்த்துடாதீங்க... அவ எனக்கு என்றைக்குமே பிரண்டு மட்டும் தான்..."



தன்னால் தன் உயிர் நண்பனின் உண்மை நட்பை கேள்வி குறியாக்கிவிட்டோமே என்று உள்ளம் கசந்து போனாள்..



 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862

"ப்ளீஸ் காவியா, இதுக்கு யார் காரணமுன்னு சொல்ல போறீயா இல்லை யா..." என்று அவன் கோபமாக கேட்க... முதலில் அமைதியாக இருந்தவள்... பெற்றோர்கள் தற்கொலைக்கு தயாராக வருண் மித்ரன் பெயரைக் கூறினாள்...



"வாட், காவ்யா எப்படி நீ அவன்கிட்ட பேசினது கூட இல்லைன்னு சொன்னியே...அப்புறம் எப்படி..."



அழுகையின் ஊடே நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்... பிறகு சூரியா மூலமாக விக்ரமனும், மலர்விழியும் வருண் மித்ரனின் பெற்றோரை சந்திக்க அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள்... ஆனால், அவனோ வேர்ல்ட் டூர் போயிருப்பதாக அவர்கள் கூறி விட, பிறகு நடந்தவைகள் அனைத்தையும் அவர்களிடம் சொல்லி நியாயம் கேட்க... வருண் மித்ரனின் பெற்றோருக்கும் அதிர்வு தான்... தங்களின் ஒரே மகன் தொழிலை சிறப்பாகவும் நடத்தி வருகிறான் என்று மகிழ்ந்தவர்கள் அதனோடு பல தவறான பழக்க, வழக்கங்களுக்கும் அவன் ஆளாகியிருந்தான் என்பதை நினைத்து அவர்கள் கலங்கி போயிருந்தார்கள்... ஆனால், ஒரு பெண்ணை சீரழித்திருப்பதை அறிந்து வெட்கி போயினர்... அவனை தொலைபேசியின் மூலமாக அழைத்து காவ்யாவின் பெற்றோரின் வருகையை தெரிவிக்க...அதை கேட்டு பலமாக சிரித்தவன்...



"குட் ஜோக், டாடி... அப்படி பாத்தீங்கன்னா டெய்லி ஒரு கேர்ள் வருவாளே... அவங்க எல்லாரையும் நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமா... பைசா செட்டில் பண்ணி அனுப்பி விடுங்க... மேரேஜாம், பிரெக்னெட்டாம்" என்று அவன் போனை கட் செய்துவிட, ஸ்பீக்கரிலேயே போட்டு கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, விக்ரமன் மற்றும் மலரும் கொதித்துப் போனார்கள்...



சூர்யாவுக்கு அவ்வளவு கோபம்... "ஆண்ட்டி, அங்கிள் வாங்க போகலாம்..." வருண் மித்ரனை கண்டிக்கும் சூழ்நிலையில் அவன் பெற்றோர்கள் இல்லை என்பதை அவர்கள் கைகளை பிசைந்தபடி விழித்ததை வைத்தே அறிந்து கொண்டனர்... நேராக வீட்டிற்கு வந்த மலர் ஒரு தாயாக காவ்யாவை அடித்து வைக்க... விக்ரமன் கண்ணீர் வடித்தார்...



"சரி என்ன முடிவு பண்ணி இருக்க காவ்யா..." என்ற‌ சூரியாவிடம்



"என்ன முடிவு எடுக்கணும்..."



"அபார்ட் பண்ணிடலாம்..." என்று மலர்விழி சொல்ல ...



"அம்மா"



"எஸ் ஆண்ட்டி, யூவர் கரெக்ட்..."



"வாட், கரெக்ட், ஆர் யூ மேட் சூர்யா..."



"நான் மேட் இல்லை... நீதான் அவன் மேல பைத்தியமா இருந்தே...அவன் என்ன சொன்னான் தெரியுமா ...?"



"என்ன சொன்னாரு..."



"அவரு, ம்ம்ம் வாவ் காவ்யா... என்ன ஒரு தெய்வீக காதல் உன்னோடது...சபாஷ்..."



"அவ...அவன்...என் பொண்ணுக்கு பணத்தை கொடுத்து செட்டில் பண்ண சொன்னான் மா..." விக்ரமன் தலையில் அடித்து கொண்டு கதறினார்...



அவரை கண்டு மற்ற மூவரும் விக்கித்து போயீனர்...



"என் பேபியை நான் என்னைக்குமே கலைக்க மாட்டேன்... அவரு என்னை லவ் பண்ணவும் வேண்டாம்... கல்யாணம் பண்ணவும் வேண்டாம்...என் பேபி நான் கண்டிப்பா அழிக்க மாட்டேன்..." என்று அவள் திட்டவட்டமாக சொல்லியவளை சூர்யா தீர்க்கமாக பார்த்து விட்டு



"சரி, நீ உன் முடிவை சொல்லிட்டே, அப்ப நானும் என் முடிவை சொல்லிடுறேன்...

ஆண்ட்டி, அங்கிள்...எங்க வீட்ல நான் காவ்யாவை மேரேஜ் பண்ணிக்க கேட்குறேன்..." என்று சொல்ல மற்ற மூவரும் அதிர்ந்து போயீனர்...



"சூர்யா, உனக்கு என்னாச்சு... ஏன் இப்படி தப்பு தப்பா பேசுற..." என்று காவ்யா அவன் சட்டையை பிடித்து அடித்து கதறினாள்...



"என் பிரண்டு இப்படி இல்லீகளா குழந்தை பெத்துக்க நான் விரும்பல... பிறக்க போகும் குழந்தை கண்டிப்பா லீகலா தான் இருக்கணுமுன்னு நினைக்கிறேன்... நீ வேணா ஹஸ்பண்ட் இல்லாம குழந்தை பெத்துக்க ரெடியா இருக்கலாம்... ஆனா,இந்த சொசைட்டி உன்னை சும்மா விடாது... அவங்க வார்த்தையால உன்ன கொன்னுடுவாங்க... பட், நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டாலும், ஹஸ்பண்ட் என்ற உரிமை உனக்கு தரமாட்டேன்... ஏன்னா, நீ என்னைக்குமே என் பிரண்டு மட்டும் தான் டி... மேரேஜ்க்கு ரெடியா இரு... நான் போய் என் பேரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வரேன்... இத நீ தவிர்க்கணும்னு நினைச்சேனா கண்டிப்பா உன் பிரண்ட்டை பாக்குறதுக்கு இது தான் கடைசியாக தடவையா இருக்கும்..." என்று அவளை மிரட்டி விட்டே சென்றான்...



"சூர்யா, ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மை பீளிங்க்ஸ் ..." என்று அவள் சொல்வதை

எதையும் கேட்காமல் வேகமாக தன் வீட்டுக்கு சென்றவன்...தன் தாய், தந்தையிடம் விஷயத்தை கூறினான்... முதலில் தயங்கியவர்கள் என்றாவது ஒருநாள் காதல் என்று வருவார்கள் என்று நினைத்திருக்க சூரியா சொன்னதும், காவ்யாவின் குடும்பமும் ஒரு கௌரவமான பின்புலமாக இருக்க அவர்களும் ஏற்றுக் கொண்டனர்...



தான் உயிராய் விரும்பும் ஒருவன் தன் பெண்மையை சீரழித்ததோடு அதற்கு பணம் கொடுத்து சரி கட்ட சொல்லி இருக்கிறானே... என் வருவா அப்படி சொன்னாரென்று நினைத்தவளின் மனம் அடிபட்ட பறவையாய் துடித்தது…



அவனுக்கு தெரியாமலே கொடுத்த குழந்தையை அவன் காதல் பரிசாக ஏற்க முடிவு செய்தவளுக்கு ஒரே பிரச்சனையாக இருப்பது சூரியாவே... அதிலும், அவனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவது தான்... நீண்ட யோசனைக்கு பிறகு மனதில் ஒரு முடிவை எடுத்து அதை செயல் படுத்தியும் விட்டே, பேருந்தில் பயணம் செய்தாள்... தன் நினைவுகளில் அக்கிரமிப்புகளும், கொந்தளிப்புகளும் அவளை அலைகழித்தது... சூர்யா பெற்றோரிடம் தன்னிலையை எடுத்துக் கூறியிருந்தாள்...



"இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை... சூர்யா அவன் தோழிக்கு நல்லது செய்வதாக நினைத்து அவன் வாழ்க்கை பணயம் வைப்பதை நான் விரும்பவில்லை... என் நண்பன் நன்றாக இருக்க வேண்டும்"... என்று அவள் கூறியதைக் கேட்டு சூர்யாவின் தாய் ரேணுகா இவளை அணைத்து கண்ணீர் வடித்தார்...



காவ்யாவும், ரேணுகாவும் சேர்ந்து ரேணுகா உறவில் இருந்த ஒரு பெண்ணை மணப்பெண்ணாக முடிவு செய்தனர்... அவர்களின் திட்டம் சூர்யாவுக்கு தெரியாது…திருமணத்திற்கு சில நிமிடங்கள் வரை காவ்யா அவன் அருகில் தான் இருந்தாள்... அவளும் மணமகளை போல் அலங்காரம் செய்து இருந்தாள்... ஆனால், சில சடங்கிற்காக மணமக்கள் இருவரும் தனித்தனியாக பிரியும் பொழுது ரேணுகா உறவு பெண்ணை காவ்யா இருந்த இடத்தில் அழைத்து வந்து நிறுத்திய சமயத்தில் காவ்யா மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தாள்...



திருமணம் முடிந்து அரை மணி நேரத்திலேயே தன் அருகில் இருப்பவள் காவ்யா இல்லை என்பதை கண்டுகொண்டவன்...அந்த மண்டபத்தில் பெரிய ரகளையை செய்து விட்டான்... ரேணுகா மூலம் அனைத்தும் அறிந்தவன்...



மணமகன் அறைக்கு சென்று தலையில் அடித்துக் கொண்டு "பாவி என்னை ஏமாத்திட்டியேடி... எங்கடி தனியா போன...வயிற்றில் பிள்ளையோடு எப்படி சமாளிப்ப... ஏன் இப்படி பண்ண... ப்ளீஸ் டி என் கிட்ட வந்திடும்மா..." என்று தன் தோழிக்காக அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது... காவ்யாவின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் வீடு போய் சேர்ந்தார்கள்... அவர்களை பார்த்துக் கொள்ளும் கடமை சூரியாவிற்கு இருந்ததால், பெற்றோரிடம் கூறிவிட்டே அவர்கள் வீட்டிலேயே சென்று தங்கினான்...



காவ்யாவை தேடும் படலத்திலும் ஈடுபட்டவன்... அதிதேவ்விடம் அனைத்தையும் கூறி வருண் மித்ரனை போனில் அழைக்க... போனை எடுத்த வருண் மித்ரனோ கோபத்தோடு



"இங்கே பாரு சூர்யா, ப்ளீஸ் சில விஷயத்துக்கு போர்ஸ் பண்ணாதே... ஏதோ தெரியாம மிஸ் ஆக்சிடெண்ட்டா நடந்த விசயத்துக்காக நான் என்ன பண்ண முடியும் " என்று அவன் நியாயத்தை கூற...



"நீ எல்லாம் மனுஷனே கிடையாது... பணம் இருந்து என்ன பிரயோஜனம்... மனுஷனுக்கு பண்பென்ற ஒன்று இல்லையே கண்மூடித்தனமாக குடிச்சிட்டு நீ கூத்தடிச்சதுக்கு ஒரு பெண்ணோட வாழ்க்கையே இங்கே சீரழஞ்சி போச்சு... நீ நல்லவன்னு நினைச்சு உயிருக்கு உயிரா விரும்புறா பாரு அவளை சொல்லணும்…அவளை எப்படி உன்னால ஹர்ட் பண்ண முடிஞ்சது..."



"வாட், லவ் பண்ணாளாமா, நீ என்ன சொல்ற சூர்யா..."



"ஆமாம், அந்த பைத்தியகாரி உன்னை உனக்கே தெரியாம ஒன் சைடா லவ் பண்ணுறா"...



"ஏய்,சூர்யா கொய்ட் இன்ரஸ்ட்டிங் மேன்..." என்று கலகலவென்று சிரிக்க...



"ஸ்டாப்பிட்,வருண்"...என்று கத்திய சூர்யா காவ்யா வருணை ரசித்தது முதல் அவள் வீட்டு அறையிலும், போனிலும், உள்ளத்திலும் வருண் மித்ரன் என்ற ஒருவனை மட்டுமே நிரம்பி இருப்பதை அவன் எடுத்து சொல்ல சொல்ல வருண்மித்ரனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது...



"என்ன மிஸ்டர், ஷாக்கா இருக்கா...? எங்கேயாச்சும் நீ ஏமாற்றபடுவல்ல ...

அப்போ, உன் மேல உண்மையா அன்பு செலுத்துறவங்க கண்ணுக்கு தெரிய ஆரம்பிப்பாங்க... இப்ப அவ எங்கே போனான்னு கூட தெரியல...ப்ளீஸ் வருண் அவளை மேரேஜ் பண்ணிக்கோ... அவளை தவிர உன்னை யாரும் ட்ரூவ்வா லவ் பண்ண முடியாது… சீக்கிரமா ஒரு முடிவை எடு ...ப்ளீஸ் உங்ககிட்ட நான் மடிப்பிச்சை கேட்கிறேன்..."



"நிறுத்து சூர்யா, உன் சினிமாடிக் டைலாக்ஸை... அந்த பொண்ணை நான் பார்த்ததாக கூட ஞாபகம் இல்லை... இதுக்கு மேல எனக்கு நீ போன் பண்ணாதே..."



அதிதேவ்வின் போனையும் தவிர்த்தவனுக்கு உறக்கத்தின் ஆழ்மனதினுள்ளே…



"வரு ப்ளீஸ் லீவ் மீ", வரு வேணாம்", ஐ டோண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃபிரம் யூ வரு..." என்ற மெல்லிய குரல் சத்தம்... ஒரு பெண்ணுடன் அவன் கூடும் வேலையில் அவளின் முனகலும், கதறலும் இவன் காதுகளில் எங்கோ ஒலிக்க... உறக்கத்திலிருந்து எழுந்தவன் உடல் எல்லாம் வியர்த்து இருந்தது...என்னவென்று யோசனை செய்தவனுக்கு "வரு" என்ற அந்த வார்த்தை உயிர் வரை அசைத்து அவனை ஏதோ செய்தது...



'தேவையில்லாம போன் செய்து என் மைண்ட்டையும் கெடுத்துட்டானுங்க...'

என்று நினைத்தவன் புதிதாக கிடைத்திருக்கும் தன் பெண் தோழியான ஓவியாவை தேடி கிளம்பினான்...



அவளோ... "உங்களோடு டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு என்னை ரொம்பவே பிரஷ்ஷா ஃபீல் பண்றேன்..." என்று இவனுடன் நெருக்கமாக இருக்கும் பொழுதெல்லாம் அவனை ஊக்கப்படுத்துபவள்...



இன்றோ அவனுடன் நெருக்கமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் "வாட் மித்ரன், ஏன் ரொம்பவே டல்லா இருக்கீங்க... முன்ன மாதிரி எனர்ஜியாவே நீங்க இல்லையே... ஐ காண்ட் எக்ஸ்பர்ட் ஃப்ரம் யூ மேன்..." என்று அவள் குறை சொல்ல…பட்டென்று அவளை விட்டு விலகி இருந்தான்...



"சாரி, கோச்சிக்கிட்டிங்களா, இல்ல உங்களுக்கு ஏதோ டிஸ்டர்பன்ஸ்..."



"நோ, நான் நார்மலா தான் இருக்கேன்... மூவ் ஓவியா... ப்ளீஸ் இதுக்கு மேல இதை பத்தி பேசாதே... நான் கிளம்புறேன்..." என்று கோபத்தோடு சென்றவன்... ஒரு வாரம் கழித்து தன் அலுவலக வேலைகளில் மிகவும் பிசியானான்... பெரிய அளவில் பணப்புழக்கத்தை உருவாக்கக்கூடிய தொழிலில் எப்படி லாபத்தை ஈட்டலாமென்று மிகவும் கவனத்துடன் இருக்க...



அப்பொழுது அவன் தங்கி இருக்கும் பிளாட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து சென்று திறக்க அங்கே ஓவியா கவர்ச்சிகரமாக உடையலங்காரத்தில் நிற்க …கதவை திறந்து அவளை பார்த்து முதலில் கோபப்பட்டவன்...அமைதியாக திரும்பிச் உள்ளே சென்றவனை பின்பக்கமாக இருந்து அணைத்தவள்...



"ப்ளீஸ் டார்லிங், ஏதோ டென்ஷன்ல தான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்... சாரி டார்லிங்..." என்று அணைத்துக் கொண்டவளை முன்பக்கமாக இழுத்து அவளின் இதழ்களில் தஞ்சம் புகுந்திருந்தான்...



"ப்ளீஸ், மித்ரன் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேனே..."



"ஓகே யூ கோ"...என்றவன் லேப்டாப்பில் விட்ட அலுவலகப் பணியை தொடர வெகுநேரமாக குளியல் அறையிலிருந்து அவள் வெளியே வராததால் பாத்ரூம் கதவைத் தட்ட போக...



"ப்ளீஸ், என்னை நம்புங்க சார் ஏற்கனவே ரெண்டு ப்ராஜெக்ட்டை உங்களுக்கு சக்சஸ் பண்ணியாச்சு... இந்த ப்ராஜெக்ட்டும் உங்களுக்கு தான்... அதுக்கு நான் கேரண்டி... நீங்க அமௌண்ட் என் அக்கௌண்ட்ல கிரெடிட் பண்ணுங்க... அது போதும்..."



வெளியேயிருந்து கேட்ட வருண் மித்ரனுக்கு அதிர்ச்சி... மனம் கொந்தளிக்க... 'துரோகம் பச்சை துரோகம்... 'அதுவும் தன் அந்தரங்கத்தை பலரிடம் இவள் பகிர்ந்து கொண்டிருக்கின்றாள் என்றால், இவள் எவ்வளவு மோசமானவள்...என்று எண்ணி உள்ளம் குமைந்து போனான்...அப்பொழுது அவன் காதில் "வரு ப்ளீஸ்...வரு..." என்று அந்த வார்த்தைகளே காதில் ஒலிக்க முதல் முதலாக காவ்யாவின் பெயரை தன் மனதிற்குள் பதிய செய்தான்...



'தனக்காக ஒருத்தி ஒரு தலையாய் காதலில் உருகிக் கொண்டிருக்க இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்... உலகில் காதலிப்பது பெரிய விஷயமல்ல...மற்ற உயிரால் உண்மையாக காதலிக்கப்படுவது தான் பாக்கியம்'... என்று சிந்தித்தவன்... தன் லேப்டாப்பில் சில மாற்றங்களை செய்து சேமித்து வைத்தான்...



குளியலறையிலிருந்து ஓவியா வெளியே வர... லேப்டாப்பில் பாஸ்வேர்டை போட்டு லாக் செய்தவன் இனி இவளை தீண்டுவது தன் வாழ்வில் மிகப்பெரிய அவமானம் என்று முடிவெடுத்தவன் ...



"இனி நீ என்னை மீட் பண்ண முயற்சி பண்ணாதே…" என்று தனது வலது கையை நீட்டி வாசலை நோக்கி காட்ட, ஓவியா அதிர்ந்து போனாள்... அவளுக்கு அப்போதுதான் புரிந்தது தான் குளியலறையில் இருந்து பேசியதை இவன் கேட்டிருப்பானோயென்று...



"மித்ரன் அது..... நான்..."



"ஷட்டப், என் பெயரை சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லை... அவுட்"... என்றவனை முறைத்து விட்டு வெளியேறிவிட்டாள்... அடுத்து தன் வேலைக்கான அனைத்தையும் செய்து முடித்தவன் சென்னையை நோக்கி கிளம்பி இருந்தான்... அவன் மனம் முழுவதும் வேதனை... இதுவரை அனுபவித்திடாத மனவலி... தன் வாரிசை வயிற்றில் சுமந்து கொண்டு நான் வருவேனா வரமாட்டேனா என்று கூட தெரியாமல் அவள் தன்னை விரும்புகின்றாள் என்றால் அவளுடையது எப்படிப்பட்ட காதலென்று மனம் முழுவதும் அவள் பெயரே நினைத்ததுமே மனம் இதமாக மாறுவதை உணர்ந்தவனின் முகத்திலும் மென்னகை வந்து அமர்ந்து கொண்டது... இனி அவளே என் வாழ்க்கை என்று தீர்மானத்துடன் அவளின் முகவரியை தேடி பயணம் செய்தான்...



தன் தந்தையின் வரவை உணர்ந்த மகவும் உற்சாகமாய் நிறைமாதமாக இருந்த தன் தாயின் வயிற்றில் உலாவிட, பிள்ளையின் அதீத அசைவு ஆச்சரியத்தை தந்தாலும், உண்மையான காதல் ஒரு நாள் வென்றே தீருமென்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு அவன் காதலன் வந்து கொண்டு இருக்கின்றானென்று தெரியாமலேயே தன் பிள்ளையை வருடிய படியே கண்ணயர்ந்தாள்.....

முற்றும்...
 

ரபி ஆதவ்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 1, 2023
Messages
1
கதையின் களமும் பாத்திரங்களும் கதை நகர்வை இதமாக எதிர்பார்ப்போடு கொண்டு செல்கின்றன .. வார்த்தைகளும் அதில் ஊட்டப்பட்ட உணர்வுகளும் கதை களத்துக்குள் கட்டுண்டு கிடக்க வைக்கிறது .. ரசித்தேன் சில இடங்கள் .. அருமை அக்கா ..
 

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
சூர்யா தான் ஸ்கோர் பண்ணிட்டான்😀நட்புக்கு இலக்கணம் இவன் தானோ..😀
ஏன் காவ்யாவும் தனது நட்புக்கு துரோகம் செய்யவில்லை .....இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால்.....?????
அவர்களின் நட்பு சூப்பர் 👏
சூப்பர் ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 

வித்யா கங்கா துரை

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 30, 2023
Messages
7
கதையின் களமும் பாத்திரங்களும் கதை நகர்வை இதமாக எதிர்பார்ப்போடு கொண்டு செல்கின்றன .. வார்த்தைகளும் அதில் ஊட்டப்பட்ட உணர்வுகளும் கதை களத்துக்குள் கட்டுண்டு கிடக்க வைக்கிறது .. ரசித்தேன் சில இடங்கள் .. அருமை அக்கா ..
மிக்க நன்றி சகோ 🙏🏼
 

வித்யா கங்கா துரை

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 30, 2023
Messages
7
சூர்யா தான் ஸ்கோர் பண்ணிட்டான்😀நட்புக்கு இலக்கணம் இவன் தானோ..😀
ஏன் காவ்யாவும் தனது நட்புக்கு துரோகம் செய்யவில்லை .....இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால்.....?????
அவர்களின் நட்பு சூப்பர் 👏
சூப்பர் ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி சகோ 🙏🏼
 

வித்யா கங்கா துரை

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 30, 2023
Messages
7
சூர்யா தான் ஸ்கோர் பண்ணிட்டான்😀நட்புக்கு இலக்கணம் இவன் தானோ..😀
ஏன் காவ்யாவும் தனது நட்புக்கு துரோகம் செய்யவில்லை .....இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால்.....?????
அவர்களின் நட்பு சூப்பர் 👏
சூப்பர் ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி சகோ 🙏🏼
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
கானல் நீரும் காதல் நதியானதே..... வித்யா கங்காதுரை

பக்கத்து வீட்டு
பால்ய சிநேகிதன் சூர்யா
பருவ வயது வந்தாலும்
பாதுகாப்பாய் காவியாவிற்கு பக்கபலமாய் நட்புடன்
பழகும் சூர்யா காவ்யா நட்பு சூப்பர்...

புகைப்படம் பார்த்து வருனை
பதிய வைத்துக் கொள்ளும்
பல நாள் பழகியது போல்
பாவையின் நெஞ்சினுள்
பதியும் காதல்....இருவரும்
பேசாமலே ஒருதலையாய்
பாவி மகள் காதல் கொள்ள...
புத்தி நிதானம் இல்லாமல்
பெண்மையை இழக்க
பரிசாக கரு.... வருண்
பழி சொல்லி தட்டி கழிக்க
பிரிந்து செல்லும் காவ்யா
பிறக்கும் பிள்ளையுடன்
கானல் நீராய் காத்திருக்க....
சில சூழ்நிலையாலும்
சில சூழ்ச்சிகளாலும்
உண்மையான காதலை
உணர்ந்த நொடி _ தன்
சுயம் தெளிந்து காவ்யாவின்
காதலை தேடி செல்லும் நதியாக....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐👏👏👏
 

வித்யா கங்கா துரை

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 30, 2023
Messages
7
கானல் நீரும் காதல் நதியானதே..... வித்யா கங்காதுரை

பக்கத்து வீட்டு
பால்ய சிநேகிதன் சூர்யா
பருவ வயது வந்தாலும்
பாதுகாப்பாய் காவியாவிற்கு பக்கபலமாய் நட்புடன்
பழகும் சூர்யா காவ்யா நட்பு சூப்பர்...

புகைப்படம் பார்த்து வருனை
பதிய வைத்துக் கொள்ளும்
பல நாள் பழகியது போல்
பாவையின் நெஞ்சினுள்
பதியும் காதல்....இருவரும்
பேசாமலே ஒருதலையாய்
பாவி மகள் காதல் கொள்ள...
புத்தி நிதானம் இல்லாமல்
பெண்மையை இழக்க
பரிசாக கரு.... வருண்
பழி சொல்லி தட்டி கழிக்க
பிரிந்து செல்லும் காவ்யா
பிறக்கும் பிள்ளையுடன்
கானல் நீராய் காத்திருக்க....
சில சூழ்நிலையாலும்
சில சூழ்ச்சிகளாலும்
உண்மையான காதலை
உணர்ந்த நொடி _ தன்
சுயம் தெளிந்து காவ்யாவின்
காதலை தேடி செல்லும் நதியாக....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐👏👏👏
உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றிக்க மிகவும் உதவியாக இருந்தது என்றால் அது மிகையில்லை
சகோதரி தரி...உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🏼
Thank you so much sisiter...

💚💚💚💚💚
 

வித்யா கங்கா துரை

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 30, 2023
Messages
7
கதையின் களமும் பாத்திரங்களும் கதை நகர்வை இதமாக எதிர்பார்ப்போடு கொண்டு செல்கின்றன .. வார்த்தைகளும் அதில் ஊட்டப்பட்ட உணர்வுகளும் கதை களத்துக்குள் கட்டுண்டு கிடக்க வைக்கிறது .. ரசித்தேன் சில இடங்கள் .. அருமை அக்கா ..
Thank you so much brother...💚💛🧡💜💙🙏🏼
 

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
வருண் திருந்திவிட்டான் என்றபோதும் அவன் மேல் நல்லெண்ணம் வரவில்லை. இப்போதும் சந்தர்ப்பவாதி மாதிரி தான் தோன்றுகிறது.

சூரியாதான் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான். நட்பிற்கு இலக்கணமாய்...என்ன ஒரு குணம்... வாவ்!

காவ்யா தவறு செய்திருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு வலிகளை அனுபவிக்க தயாரானது அருமை.
 
Top