மஞ்சள் நிற கட்டில் விரிப்பை எடுத்துவிட்டு பச்சை நிற விரிப்பை விரித்துவிட்டு தலையணையுறைகளையும் மஞ்சளிலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள் யாத்ரா.
மாதம் இரு முறை வீட்டின் நிறத்தை மாற்றுவாள். கட்டில் விரிப்பு, தலையணை உறை, போர்வை மற்றும் கதவு, ஜன்னல்களின் கேர்டன் இப்படி அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் பதினைந்து நாட்களும் பச்சை நிறத்தில் பதினைந்து நாட்களும் வைத்திருப்பாள். இவ்விரு நிறங்களுக்கும் பொருத்தமாகத்தான் சுவருக்கு வெள்ளை நிறத்தை தெரிவுச்செய்திருந்தாள். அவள் இரசனைக்கேற்ப வீட்டை மிக நேர்த்தியாக பேணுவாள்.
வீட்டின் சாலையில் விநாயகர் சிலை, குட்டி வாசிகசாலை, அங்கே ஒரு புத்தர் சிலை.
போடிபோவில் பெரிய மீன் தொட்டில், சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள், முற்றத்தில் ஓர் ஊஞ்சல், அணிலுக்கும் ஏனைய பறவைகளுக்கும் உணவுதட்டுகள்... இதுதான் ஔவியன் யாத்ரா வாழ்வகம்.
வீட்டு முற்றத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மல்லிகைப் பந்தல் எப்போதும் வெண்மை நிறத்தில் மனம் வீசிக் கொண்டிருக்கும். இன்னுமொரு பக்கத்தில் செவ்வந்தி கூட்டம் மஞ்சள் நிறத்தில் நிறைந்திருக்கும். துளசித்தோட்டம் எப்போதும் வாசம் நிறைந்து பிரதேசமாக இருக்கும். இன்னும் சில தாவரங்களுக்கு மத்தியில் மா மரமும் றம்புட்டான் மரமும் விரலு மரமும் இராஜாக்களாக நிற்க, மூன்று தென்னை மரங்கள் காவலாளிகள் போல் அசைந்துக்கொண்டிருப்பர். வீட்டின் இரு பக்கங்களிலும் முருங்கை , கறிவேப்பிலை எப்போதும் காற்றோடு பேசிக்கொண்டிருக்க அகத்தி மாலையோடு தூங்கிடும். வீட்டின் பின் புறம் ஊற்று நீர் கசிந்து ஓடிக்கொண்டே இருக்கும். அங்கே ரம்பையும் ,கங்குன் கீரையும் நீரில் விளையாடிக்கொண்டிருப்பர். "நம் வீட்டில் ஓரிடம் அலுத்துப்போனால் இன்னொரு இடத்தில் சுவாரஸ்யம் தேடலாம் . நம் வீட்டில் ஒவ்வொரு இடமும் புதுப்புது விதமாய் வித்தியாசமாய் இருக்க வேண்டும். " என்று ஔவியனிடம் அடிக்கடி சொல்லுவாள் யாத்ரா.
அனைத்தையும் மாற்றி விட்டு அகற்றிய துணிகளை துவைப்பதற்காக அள்ளி எடுத்தாள். பெரிய மூட்டையாகக் கட்டிக்கொண்டு முகத்தையும் மறைத்தப்படி பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறி வந்தவள் சாலையில் "தொப்" என விழுந்தாள். "நல்ல வேளையாக ஔவியன் பார்க்கவில்லை " என நினைத்து சட்டென எழ நினைக்கையில், தூரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மீண்டும் விழுந்தாள். "ஹா....ஹா....ஹா...ஹா...." சத்தமாய் விழுந்து விழுந்து சிரித்தான் ஔவியன்.
யாத்ரா " ஓ......." என பொய்யாய் அழுதாள். உண்மையாகத்தான் அழுகுறாளோ...? சந்தேகத்தில் "அடி பலமா பட்டுருச்சோ..?" என்றபடி வந்து அவளை தூக்கினான். இவள் அழுகையை நிறுத்தியப்பாடில்லை. காலில் சுளுக்கு விழுந்தது போல் அடி எடுத்து வைக்க முடியாது தடுமாறினாள். "ஐயையோ.... பாத்து வரமாட்டியா நீ?" என கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் கதிரையில் அமர்த்தினான்.
"இப்ப எப்படி இந்த துணியெல்லாம் கழுவுறது..." அவள் அழுதழுது சொல்ல, " இன்னைக்கு கழுவ வேணாம், நாளைக்கு கழுவலாம்." என்றான்.
"ஐயோ.... இன்னைக்குத்தான் நல்ல வெயில். நாளைக்கு மழ வந்துரும். எப்படி காய வைக்கிறது? சரி விடுங்க. நா போய் கழுவி காய போட்றன். " என்று சொல்லி காலை ஊன்றி ஊன்றி சிறிது தூரம் நடந்து விழபோனாள்.
" ஹேய் யாத்ரா, நீ பேசாமல் உட்காரு. வயித்துல குழந்தைய வச்சிகிட்டு கொஞ்சம் கூட கவனம் இல்ல நீ. "
"துணியெல்லாம் கழுவனும்ல்ல.... கழுவாமல் அலுமாரிக்குள்ள எடுத்து வைக்க முடியாதே... நாளைக்கு மழைல நனஞ்சி நனஞ்சி காய்ந்தா நாற்றம் அடிக்கும். அதுக்கு கழுவாமலேயே எடுத்து வச்சிரலாம். இன்னைக்குத்தான் நல்ல வெயில். ம்..." தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு வெளியே வெயில் அடிப்பதை பார்த்தாள். சூரியன் பல்லை காட்டிக்கொண்டு தான் இருந்தான்.
"சரி சரி....நீ உட்கார்ந்து வேடிக்க பாரு. நா தொவக்கிறன். " என துனி மூட்டையை அள்ளிக்கொண்டுப்போய் பேசனில் போட்டுவிட்டு வெளியே ஒரு கதிரையை வைத்து அதில் அவளை அமரவைத்துவிட்டு துணிகளை துவைக்கலானான்.
யாத்ரா அவன் துவைக்கும் அழகை பார்த்து இரசித்துக்கொண்டும் மனதுள் சிரித்துக்கொண்டும் இருந்தாள்.
" ஔவியா... நீ ரொம்ப நல்வன் ....."
திரும்பி பார்தவன் " அவள் சொல்லும் தினுசு சரில்லையே.... " என சந்தேகமாய் பார்த்துவிட்டு " சீக்கிரம் வேலைய முடிக்கணுமே " என்று துவைப்பதை தொடங்கினான்.
"ஔவியா..... ஏன்டா நீ இவ்ளோ அப்பாவியா இருக்க.... ?" அவன் முறைத்தான். " சொரி சொரி ஏன் நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கிங்க...." அவன் "டா" சொன்னதுக்கா முறைத்தான். அதற்காகத்தான் முறைத்தது போல் மாற்றிவிட்டாளே.
"உன் பேச்சு சரில்லடி....ம்..." என ஏதோ புலம்புபவன் போல வாய்க்குள்ளேயே சொல்லிவிட்டு மீண்டும் துவைக்கலானான்.
"நா வேணும்னா அலசி போட ஹெல்ப் பண்ணவா?"
"ம்.....கால நொண்டிகிட்டு எப்படி செய்வ? பேசாமல் இரு. நானே பாதுக்குறேன். "
"ஹா... சரி சரி... நீங்களே செய்ங்க... யே கால் ரொம்ப வலிக்குதுதான்."
அப்பாவி ஔவியன் விவரமில்லாதவனாய் கட்டில் விரிப்பை சலவைத்தூளில் போட்டு முக்கியெடுத்து கும்மிக்கொண்டிருந்தான்.
யாத்ராவிற்கு பாவமாய் இருந்ததுதான். ஆனால் அவனது இந்த அக்கறை, "நமக்காக செய்கிறானே" என்னும் பாசம் அவளுக்குத் தேவையாக இருந்தது. ஒரு விழியில் பாவமாயும் ஒரு விழியில் இரசித்தும்கொண்டிருந்தாள்.
தொலைபேசி ரிங் செய்தது. நாடகத்தில் தனது கதாபாத்திரத்தை மறந்து " டப் " என எழுந்தவள் "ஐயையோ" என நினைவு வந்து ஔவியன் பார்க்காதவாறு "கப்ச்சுப்பென" அமர்ந்துவிடலாம் என நினைக்க ஔவியன் ஆந்தைவிழியால் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஔவியா.... அங்க போன் ரிங் ஆகுது பாருங்க... உங்க கையெல்லாம் ஈரம் .... அதான் நா எடுத்துட்டு வரலாம்னு பாத்தேன். " என நொண்டி நொண்டி செல்வதுபோல் நடித்தாள்.
"ஹேய் ஹேய்... பொறு பொறு...நானே போய் எடுத்துக்குறேன்." சாரத்தில் கையை துடைத்துக்கொண்டு உள்ளேச் சென்றவன்,
" ஆ...அப்படியா! ஐயோ....! இந்த நேரம் பார்த்து யாத்ராவுக்கு வேற கால்ல சுளுக்கு... அவள இந்த நிலைல விட்டுட்டு எப்படி வாரது? அவன்கள சும்மா விடாதடா...நீ கவனம் ... " என சீரியசாக கதைத்துக்கொண்டே யாத்ரா முன் வந்தான்.
இவள் உடனே..." ஔவியா... என்ன யாருக்கு என்னாச்சி? நீங்க போங்க. " என்றபடி சாதாரணமாக எழுந்து நடந்து வந்தாள்.
"அடி கள்ளி..." என மனதுக்குள் சொல்லிக்கொண்டு ,
"கால் சுளுக்கு.... மறந்துட்டியா..? இல்ல? "
"அதெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க போங்க." எனாறாள் சாதாரணமாக.
இவன் போனை அவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு கைகளை கட்டிக்கொண்டு யாத்ராவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"இந்த பாடல் கோலர் டியுனாக வைக்க விருப்பமென்றால் என் ஒன்றை அழுத்தவும். " என போன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தது.
யாத்ராவிற்கு வெட்கம் தாங்காது...குளைந்துக்கொண்டே வந்து ஔவியனின் நெஞ்சில் சாய்ந்து " சும்மா வெளயாட்டுக்கு...." என்றாள்.
"போ...போய் மீதி துணிய தொவ. நா வேடிக்கை பாக்குறன்" என்றுச் சொல்லிவிட்டு கதிரையில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டான். யாத்ரா வாயடைத்து குணட்டிக்கொண்டு துவைத்தாள். சிறிது நேரத்தில் ஔவியனுக்கு பாவமாக இருக்க, " சரி சரி..நீ தொவச்சி தோவச்சி போடு நா அலசி போட்ரெ. "
" ஓகே...டன்"
துவைத்து அலசி பிழிந்து காய போட்டுவிட்டு முற்றத்து வட்ட கதிரைகளில் அமர்ந்தார்கள். கொடித்தோடைகள் கொடியோடு ஒளிந்துக்கொண்டிருந்தன. இரு பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டே இளம் காற்றை நயந்தப்படி இருக்கையில்,
" நாம எப்ப நம்ம நிலத்து வேலைய தொடங்குறது? இப்படியே இருக்கிங்களே..."
"என்னோட அம்மா அப்பாவுட்டு மொத்த ஈ.பி.எப் பணத்தையும் போட்டுத்தானே அந்த நிலத்த வாங்கினம். அதுவும் அந்த உச்சி மலைலத்தான் ஒரு நிலம் கெடச்சிச்சி. நல்ல பெரிய நிலம் என்றபடியால யோசிக்காமல் மொத்த காசையும் நிலத்துக்கே போட்டுட்டன். நிலத்துல வேல தொடங்குறதுக்கு இன்னும் காசு வேணும்டி..."
"இலங்கோ அண்ணாவும் எங்க அம்மா அப்பாவுட்டு காச எடுக்க அழஞ்சிகிட்டுத்தான் இருக்காரு... "
"க்கும்... உங்க அண்ணே காச எடுக்கவா அழஞ்சிகிட்டுருக்காரு?"
"அப்பறம்...?
"அந்த புள்ள பின்னாடில்ல அழைராரு..."
"ஹா...ஹா... அப்படியாவது ஒருத்தி செட் ஆனா நல்லதுதானே...ஹா..."
"இன்னும் கொஞ்சத்துல படிக்கிறதுக்கு பிள்ளைகள் வந்துருவாங்க. போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க. நானும் சமச்சிட்டு குளிக்கணும். "
....
மாலை வகுப்பு ஆரம்பமானது. வயது எல்லையற்ற வகுப்பு அது. ஔவியன் பல்கலைக்கழக படிப்பை தொடர்ந்துக்கொண்டிருந்தப் போது விடுமுறைக்காலங்களில் சாதாரண தர,உயர்தர மாணவர்களுக்கு வகுப்பு நடாத்தினான். அந்த மாணவர்களோடு அதன் பின்னரான இன்றைய நாள் வரையான சாதாரண தர உயர் தர மாணவர்கள் சிலரும் ஔவியனிடம் வருவதுண்டு. இந்த வகுப்பில் பாடத்திட்டத்தையும் தாண்டிய வரலாறு, அரசியல் கலந்துரையாடப்படுவதால் மாணவர்கள் விருப்பத்தோடு வருவார்கள். மாணவர்களே நிறைய பேசுவார்கள். பேசுவதற்காகவே நிறைய தகவல்களை தேடிக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் ஔவியனும் மாணவனாக மாறும் சந்தர்ப்பங்களும் உண்டு. யாத்ராவும் இணைந்துக்கொள்வாள். சில நேரங்களில் கருத்துமோதல்களினால் கைகலப்பு ஏற்படுவதுமுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் ஔவியனும் யாத்ராவும் அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போல் மாற்றிக்கொள்ள மாணவர்கள் அமைதியாகிவிடுவார்கள். இது மாணவர்கள் அறியாத வண்ணம் அவர்களை சமநிலை படுத்த இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் ஒரு யுக்தி.
இன்று வந்திருப்பதோ ஔவியனிடம் ஆரம்பத்தில் கற்ற அந்த ஐந்து பேரே. இவர்கள்தான் ஔவியனின் முதல் தொகுதி மாணவர்கள்.
இந்த வகுப்பில் இப்படித்தான் அமரவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர்கள் வீடு போல் அவரவர் விருப்பப்படி ஆங்காங்கே அமர்ந்துக் கொள்வார்கள். இன்றும் அப்படித்தான் அமர்ந்துக்கொண்டார்கள். யாத்ராவும் வந்து சேர்ந்தாள்.
"யாத்ராக்கா... கொறிச்சிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்களேன்." என்றான் வினோத்.
" டேய் டேய்.... எப்பவும் அக்காவுக்கே செலவு வைக்தாடா. இந்தா நா எடுத்துட்டு வந்துருக்கென். இத கொறிச்சிக்க. " என்றாள் சாருரூபினி
யாத்ராவும் பொறித்து வைத்திருந்த மிட்டாய் டப்பாவை கொண்டுவந்து "இந்தாடா வினோத்... இதுக்குதானே நீ இங்க வாறனு எனக்குத் தெரியும்." என்று சிரித்துக்கொண்டே கொடுத்தாள்.
"ஆமாக்கா...ஆமா, சரியா சொன்னிங்க. "
ஏனையோர் சொன்னார்கள்.
எதையும் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ,
" சாரு, அதையும் கொண்டு வா." என கையை நீட்டினான் வினோத். அனைவரும் சிரித்தார்கள். வினோத் கண்டுகொள்ளாமல் இரண்டையும் மாறி மாறி கொறித்தான்.
அங்கே எதையும் கண்டுகொள்ளாத இன்னொரு ஜீவனும் இருந்தான். அதை ஔவியனும் யாத்ராவும் கவனித்தார்கள்.
" என்ன சேர் ஆழ்ந்த யோசனைல இருக்கிங்க போல" என கிருபாவின் அருகிற்கு சென்று அமர்ந்தாள் யாத்ரா. அவர்களுக்கெதிரேதான் ஔவியன் அமர்ந்திருந்தான்.
" யாத்ரா அக்கா, இந்த வீட்டு விலாசம் கொஞ்சம் சொல்லுங்களேன். " போனை நோண்டிக்கொண்டே கேட்டாள்.
"விலாசமா அது எதுக்கு சாரு?"
" ஓன்லைன்ல ஓடர் ஒன்னு கொடுக்கத்தான்"
" சாருவுக்குதான் எவ்வளோ பெரிய மனசு. அக்காவுக்கு தானே... சப்ரைஸ் கிப்டா? பெருசா ஓடர் பண்ணு சரியா."
"ஐயோ அக்கா, எங்க அம்மாவுக்கு தெரியாமல் ஓடர் பண்றன். தெரிஞ்சா காச கரியாக்குறன்னு ஏசுவாங்க. அதுதான்க்கா. உங்களுக்கும் சேர்த்தே ஓடர் பண்ணிட்டா போச்சி. பட் நீங்க விரும்புவிங்களானு தெரியல"
" ஆ... என்னன்னு சொல்லு முதல்ல."
" வேறென்ன நைட் கிறீம்தான் அக்கா." அஸ்ணி போட்டுடைத்தாள்.
"அம்மா தாயே... எனக்கு இந்த நிறமே போதும். வேணாம் சாமி..."
"அண்ணா நீங்க விலாசத்த சொல்லுங்க அண்ணா. நா வெள்ளையாகுறதுல பொறாம இவங்களுக்கெல்லாம்." என்று ஔவியனை தனக்கு ஆதராவாய் எடுத்துக்கொண்டாள்.
"பிரிவு - 3 , தெற்கு வாசல், வின்சட் தோட்டம், ......." என ஔவியன் விலாசத்தைச் சொல்ல சொல்ல சாரு டைப் செய்தாள்.
" இப்படி உம்முனு இருக்கத்தான் இங்க வந்தியா நீ? கொஞ்சம் சிரியேண்டா. " கிருபாவின் தலையிலிருந்த தொப்பியை கழற்றிக்கொண்டோடினாள் அஸ்ணி.
" அண்ணா, கிருபாவுட்டு அப்பாவுட்டு தோட்டத்துல இருந்த மரங்களயெல்லாம் தோட்டத்தால வந்து வெட்டிபோட்டுட்டு போய்டாங்க. அதுதான் தொர அப்படி இருக்காப்ல" சொன்னான் ருத்ரன்.
",அட இது எப்போ நடந்துச்சி? "
",இன்னைக்கு காலைலதான் அண்ணா. இதோ யூடியூப்ல கூட போட்டுருக்காங்களே... பார்க்கலாயா நீங்க." தொலைபேசியை தூக்கிக்கொண்டு வந்தாள் சாரு. யாத்ராவோடு சேர்த்து மற்ற நால்வரும் குவிந்து கொண்டு தொலைபேசிக்குள் நுழைந்தார்கள்.
விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்.....
மாதம் இரு முறை வீட்டின் நிறத்தை மாற்றுவாள். கட்டில் விரிப்பு, தலையணை உறை, போர்வை மற்றும் கதவு, ஜன்னல்களின் கேர்டன் இப்படி அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் பதினைந்து நாட்களும் பச்சை நிறத்தில் பதினைந்து நாட்களும் வைத்திருப்பாள். இவ்விரு நிறங்களுக்கும் பொருத்தமாகத்தான் சுவருக்கு வெள்ளை நிறத்தை தெரிவுச்செய்திருந்தாள். அவள் இரசனைக்கேற்ப வீட்டை மிக நேர்த்தியாக பேணுவாள்.
வீட்டின் சாலையில் விநாயகர் சிலை, குட்டி வாசிகசாலை, அங்கே ஒரு புத்தர் சிலை.
போடிபோவில் பெரிய மீன் தொட்டில், சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள், முற்றத்தில் ஓர் ஊஞ்சல், அணிலுக்கும் ஏனைய பறவைகளுக்கும் உணவுதட்டுகள்... இதுதான் ஔவியன் யாத்ரா வாழ்வகம்.
வீட்டு முற்றத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மல்லிகைப் பந்தல் எப்போதும் வெண்மை நிறத்தில் மனம் வீசிக் கொண்டிருக்கும். இன்னுமொரு பக்கத்தில் செவ்வந்தி கூட்டம் மஞ்சள் நிறத்தில் நிறைந்திருக்கும். துளசித்தோட்டம் எப்போதும் வாசம் நிறைந்து பிரதேசமாக இருக்கும். இன்னும் சில தாவரங்களுக்கு மத்தியில் மா மரமும் றம்புட்டான் மரமும் விரலு மரமும் இராஜாக்களாக நிற்க, மூன்று தென்னை மரங்கள் காவலாளிகள் போல் அசைந்துக்கொண்டிருப்பர். வீட்டின் இரு பக்கங்களிலும் முருங்கை , கறிவேப்பிலை எப்போதும் காற்றோடு பேசிக்கொண்டிருக்க அகத்தி மாலையோடு தூங்கிடும். வீட்டின் பின் புறம் ஊற்று நீர் கசிந்து ஓடிக்கொண்டே இருக்கும். அங்கே ரம்பையும் ,கங்குன் கீரையும் நீரில் விளையாடிக்கொண்டிருப்பர். "நம் வீட்டில் ஓரிடம் அலுத்துப்போனால் இன்னொரு இடத்தில் சுவாரஸ்யம் தேடலாம் . நம் வீட்டில் ஒவ்வொரு இடமும் புதுப்புது விதமாய் வித்தியாசமாய் இருக்க வேண்டும். " என்று ஔவியனிடம் அடிக்கடி சொல்லுவாள் யாத்ரா.
அனைத்தையும் மாற்றி விட்டு அகற்றிய துணிகளை துவைப்பதற்காக அள்ளி எடுத்தாள். பெரிய மூட்டையாகக் கட்டிக்கொண்டு முகத்தையும் மறைத்தப்படி பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறி வந்தவள் சாலையில் "தொப்" என விழுந்தாள். "நல்ல வேளையாக ஔவியன் பார்க்கவில்லை " என நினைத்து சட்டென எழ நினைக்கையில், தூரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மீண்டும் விழுந்தாள். "ஹா....ஹா....ஹா...ஹா...." சத்தமாய் விழுந்து விழுந்து சிரித்தான் ஔவியன்.
யாத்ரா " ஓ......." என பொய்யாய் அழுதாள். உண்மையாகத்தான் அழுகுறாளோ...? சந்தேகத்தில் "அடி பலமா பட்டுருச்சோ..?" என்றபடி வந்து அவளை தூக்கினான். இவள் அழுகையை நிறுத்தியப்பாடில்லை. காலில் சுளுக்கு விழுந்தது போல் அடி எடுத்து வைக்க முடியாது தடுமாறினாள். "ஐயையோ.... பாத்து வரமாட்டியா நீ?" என கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் கதிரையில் அமர்த்தினான்.
"இப்ப எப்படி இந்த துணியெல்லாம் கழுவுறது..." அவள் அழுதழுது சொல்ல, " இன்னைக்கு கழுவ வேணாம், நாளைக்கு கழுவலாம்." என்றான்.
"ஐயோ.... இன்னைக்குத்தான் நல்ல வெயில். நாளைக்கு மழ வந்துரும். எப்படி காய வைக்கிறது? சரி விடுங்க. நா போய் கழுவி காய போட்றன். " என்று சொல்லி காலை ஊன்றி ஊன்றி சிறிது தூரம் நடந்து விழபோனாள்.
" ஹேய் யாத்ரா, நீ பேசாமல் உட்காரு. வயித்துல குழந்தைய வச்சிகிட்டு கொஞ்சம் கூட கவனம் இல்ல நீ. "
"துணியெல்லாம் கழுவனும்ல்ல.... கழுவாமல் அலுமாரிக்குள்ள எடுத்து வைக்க முடியாதே... நாளைக்கு மழைல நனஞ்சி நனஞ்சி காய்ந்தா நாற்றம் அடிக்கும். அதுக்கு கழுவாமலேயே எடுத்து வச்சிரலாம். இன்னைக்குத்தான் நல்ல வெயில். ம்..." தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு வெளியே வெயில் அடிப்பதை பார்த்தாள். சூரியன் பல்லை காட்டிக்கொண்டு தான் இருந்தான்.
"சரி சரி....நீ உட்கார்ந்து வேடிக்க பாரு. நா தொவக்கிறன். " என துனி மூட்டையை அள்ளிக்கொண்டுப்போய் பேசனில் போட்டுவிட்டு வெளியே ஒரு கதிரையை வைத்து அதில் அவளை அமரவைத்துவிட்டு துணிகளை துவைக்கலானான்.
யாத்ரா அவன் துவைக்கும் அழகை பார்த்து இரசித்துக்கொண்டும் மனதுள் சிரித்துக்கொண்டும் இருந்தாள்.
" ஔவியா... நீ ரொம்ப நல்வன் ....."
திரும்பி பார்தவன் " அவள் சொல்லும் தினுசு சரில்லையே.... " என சந்தேகமாய் பார்த்துவிட்டு " சீக்கிரம் வேலைய முடிக்கணுமே " என்று துவைப்பதை தொடங்கினான்.
"ஔவியா..... ஏன்டா நீ இவ்ளோ அப்பாவியா இருக்க.... ?" அவன் முறைத்தான். " சொரி சொரி ஏன் நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கிங்க...." அவன் "டா" சொன்னதுக்கா முறைத்தான். அதற்காகத்தான் முறைத்தது போல் மாற்றிவிட்டாளே.
"உன் பேச்சு சரில்லடி....ம்..." என ஏதோ புலம்புபவன் போல வாய்க்குள்ளேயே சொல்லிவிட்டு மீண்டும் துவைக்கலானான்.
"நா வேணும்னா அலசி போட ஹெல்ப் பண்ணவா?"
"ம்.....கால நொண்டிகிட்டு எப்படி செய்வ? பேசாமல் இரு. நானே பாதுக்குறேன். "
"ஹா... சரி சரி... நீங்களே செய்ங்க... யே கால் ரொம்ப வலிக்குதுதான்."
அப்பாவி ஔவியன் விவரமில்லாதவனாய் கட்டில் விரிப்பை சலவைத்தூளில் போட்டு முக்கியெடுத்து கும்மிக்கொண்டிருந்தான்.
யாத்ராவிற்கு பாவமாய் இருந்ததுதான். ஆனால் அவனது இந்த அக்கறை, "நமக்காக செய்கிறானே" என்னும் பாசம் அவளுக்குத் தேவையாக இருந்தது. ஒரு விழியில் பாவமாயும் ஒரு விழியில் இரசித்தும்கொண்டிருந்தாள்.
தொலைபேசி ரிங் செய்தது. நாடகத்தில் தனது கதாபாத்திரத்தை மறந்து " டப் " என எழுந்தவள் "ஐயையோ" என நினைவு வந்து ஔவியன் பார்க்காதவாறு "கப்ச்சுப்பென" அமர்ந்துவிடலாம் என நினைக்க ஔவியன் ஆந்தைவிழியால் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஔவியா.... அங்க போன் ரிங் ஆகுது பாருங்க... உங்க கையெல்லாம் ஈரம் .... அதான் நா எடுத்துட்டு வரலாம்னு பாத்தேன். " என நொண்டி நொண்டி செல்வதுபோல் நடித்தாள்.
"ஹேய் ஹேய்... பொறு பொறு...நானே போய் எடுத்துக்குறேன்." சாரத்தில் கையை துடைத்துக்கொண்டு உள்ளேச் சென்றவன்,
" ஆ...அப்படியா! ஐயோ....! இந்த நேரம் பார்த்து யாத்ராவுக்கு வேற கால்ல சுளுக்கு... அவள இந்த நிலைல விட்டுட்டு எப்படி வாரது? அவன்கள சும்மா விடாதடா...நீ கவனம் ... " என சீரியசாக கதைத்துக்கொண்டே யாத்ரா முன் வந்தான்.
இவள் உடனே..." ஔவியா... என்ன யாருக்கு என்னாச்சி? நீங்க போங்க. " என்றபடி சாதாரணமாக எழுந்து நடந்து வந்தாள்.
"அடி கள்ளி..." என மனதுக்குள் சொல்லிக்கொண்டு ,
"கால் சுளுக்கு.... மறந்துட்டியா..? இல்ல? "
"அதெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க போங்க." எனாறாள் சாதாரணமாக.
இவன் போனை அவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு கைகளை கட்டிக்கொண்டு யாத்ராவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"இந்த பாடல் கோலர் டியுனாக வைக்க விருப்பமென்றால் என் ஒன்றை அழுத்தவும். " என போன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தது.
யாத்ராவிற்கு வெட்கம் தாங்காது...குளைந்துக்கொண்டே வந்து ஔவியனின் நெஞ்சில் சாய்ந்து " சும்மா வெளயாட்டுக்கு...." என்றாள்.
"போ...போய் மீதி துணிய தொவ. நா வேடிக்கை பாக்குறன்" என்றுச் சொல்லிவிட்டு கதிரையில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டான். யாத்ரா வாயடைத்து குணட்டிக்கொண்டு துவைத்தாள். சிறிது நேரத்தில் ஔவியனுக்கு பாவமாக இருக்க, " சரி சரி..நீ தொவச்சி தோவச்சி போடு நா அலசி போட்ரெ. "
" ஓகே...டன்"
துவைத்து அலசி பிழிந்து காய போட்டுவிட்டு முற்றத்து வட்ட கதிரைகளில் அமர்ந்தார்கள். கொடித்தோடைகள் கொடியோடு ஒளிந்துக்கொண்டிருந்தன. இரு பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டே இளம் காற்றை நயந்தப்படி இருக்கையில்,
" நாம எப்ப நம்ம நிலத்து வேலைய தொடங்குறது? இப்படியே இருக்கிங்களே..."
"என்னோட அம்மா அப்பாவுட்டு மொத்த ஈ.பி.எப் பணத்தையும் போட்டுத்தானே அந்த நிலத்த வாங்கினம். அதுவும் அந்த உச்சி மலைலத்தான் ஒரு நிலம் கெடச்சிச்சி. நல்ல பெரிய நிலம் என்றபடியால யோசிக்காமல் மொத்த காசையும் நிலத்துக்கே போட்டுட்டன். நிலத்துல வேல தொடங்குறதுக்கு இன்னும் காசு வேணும்டி..."
"இலங்கோ அண்ணாவும் எங்க அம்மா அப்பாவுட்டு காச எடுக்க அழஞ்சிகிட்டுத்தான் இருக்காரு... "
"க்கும்... உங்க அண்ணே காச எடுக்கவா அழஞ்சிகிட்டுருக்காரு?"
"அப்பறம்...?
"அந்த புள்ள பின்னாடில்ல அழைராரு..."
"ஹா...ஹா... அப்படியாவது ஒருத்தி செட் ஆனா நல்லதுதானே...ஹா..."
"இன்னும் கொஞ்சத்துல படிக்கிறதுக்கு பிள்ளைகள் வந்துருவாங்க. போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க. நானும் சமச்சிட்டு குளிக்கணும். "
....
மாலை வகுப்பு ஆரம்பமானது. வயது எல்லையற்ற வகுப்பு அது. ஔவியன் பல்கலைக்கழக படிப்பை தொடர்ந்துக்கொண்டிருந்தப் போது விடுமுறைக்காலங்களில் சாதாரண தர,உயர்தர மாணவர்களுக்கு வகுப்பு நடாத்தினான். அந்த மாணவர்களோடு அதன் பின்னரான இன்றைய நாள் வரையான சாதாரண தர உயர் தர மாணவர்கள் சிலரும் ஔவியனிடம் வருவதுண்டு. இந்த வகுப்பில் பாடத்திட்டத்தையும் தாண்டிய வரலாறு, அரசியல் கலந்துரையாடப்படுவதால் மாணவர்கள் விருப்பத்தோடு வருவார்கள். மாணவர்களே நிறைய பேசுவார்கள். பேசுவதற்காகவே நிறைய தகவல்களை தேடிக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் ஔவியனும் மாணவனாக மாறும் சந்தர்ப்பங்களும் உண்டு. யாத்ராவும் இணைந்துக்கொள்வாள். சில நேரங்களில் கருத்துமோதல்களினால் கைகலப்பு ஏற்படுவதுமுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் ஔவியனும் யாத்ராவும் அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போல் மாற்றிக்கொள்ள மாணவர்கள் அமைதியாகிவிடுவார்கள். இது மாணவர்கள் அறியாத வண்ணம் அவர்களை சமநிலை படுத்த இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் ஒரு யுக்தி.
இன்று வந்திருப்பதோ ஔவியனிடம் ஆரம்பத்தில் கற்ற அந்த ஐந்து பேரே. இவர்கள்தான் ஔவியனின் முதல் தொகுதி மாணவர்கள்.
இந்த வகுப்பில் இப்படித்தான் அமரவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர்கள் வீடு போல் அவரவர் விருப்பப்படி ஆங்காங்கே அமர்ந்துக் கொள்வார்கள். இன்றும் அப்படித்தான் அமர்ந்துக்கொண்டார்கள். யாத்ராவும் வந்து சேர்ந்தாள்.
"யாத்ராக்கா... கொறிச்சிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்களேன்." என்றான் வினோத்.
" டேய் டேய்.... எப்பவும் அக்காவுக்கே செலவு வைக்தாடா. இந்தா நா எடுத்துட்டு வந்துருக்கென். இத கொறிச்சிக்க. " என்றாள் சாருரூபினி
யாத்ராவும் பொறித்து வைத்திருந்த மிட்டாய் டப்பாவை கொண்டுவந்து "இந்தாடா வினோத்... இதுக்குதானே நீ இங்க வாறனு எனக்குத் தெரியும்." என்று சிரித்துக்கொண்டே கொடுத்தாள்.
"ஆமாக்கா...ஆமா, சரியா சொன்னிங்க. "
ஏனையோர் சொன்னார்கள்.
எதையும் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ,
" சாரு, அதையும் கொண்டு வா." என கையை நீட்டினான் வினோத். அனைவரும் சிரித்தார்கள். வினோத் கண்டுகொள்ளாமல் இரண்டையும் மாறி மாறி கொறித்தான்.
அங்கே எதையும் கண்டுகொள்ளாத இன்னொரு ஜீவனும் இருந்தான். அதை ஔவியனும் யாத்ராவும் கவனித்தார்கள்.
" என்ன சேர் ஆழ்ந்த யோசனைல இருக்கிங்க போல" என கிருபாவின் அருகிற்கு சென்று அமர்ந்தாள் யாத்ரா. அவர்களுக்கெதிரேதான் ஔவியன் அமர்ந்திருந்தான்.
" யாத்ரா அக்கா, இந்த வீட்டு விலாசம் கொஞ்சம் சொல்லுங்களேன். " போனை நோண்டிக்கொண்டே கேட்டாள்.
"விலாசமா அது எதுக்கு சாரு?"
" ஓன்லைன்ல ஓடர் ஒன்னு கொடுக்கத்தான்"
" சாருவுக்குதான் எவ்வளோ பெரிய மனசு. அக்காவுக்கு தானே... சப்ரைஸ் கிப்டா? பெருசா ஓடர் பண்ணு சரியா."
"ஐயோ அக்கா, எங்க அம்மாவுக்கு தெரியாமல் ஓடர் பண்றன். தெரிஞ்சா காச கரியாக்குறன்னு ஏசுவாங்க. அதுதான்க்கா. உங்களுக்கும் சேர்த்தே ஓடர் பண்ணிட்டா போச்சி. பட் நீங்க விரும்புவிங்களானு தெரியல"
" ஆ... என்னன்னு சொல்லு முதல்ல."
" வேறென்ன நைட் கிறீம்தான் அக்கா." அஸ்ணி போட்டுடைத்தாள்.
"அம்மா தாயே... எனக்கு இந்த நிறமே போதும். வேணாம் சாமி..."
"அண்ணா நீங்க விலாசத்த சொல்லுங்க அண்ணா. நா வெள்ளையாகுறதுல பொறாம இவங்களுக்கெல்லாம்." என்று ஔவியனை தனக்கு ஆதராவாய் எடுத்துக்கொண்டாள்.
"பிரிவு - 3 , தெற்கு வாசல், வின்சட் தோட்டம், ......." என ஔவியன் விலாசத்தைச் சொல்ல சொல்ல சாரு டைப் செய்தாள்.
" இப்படி உம்முனு இருக்கத்தான் இங்க வந்தியா நீ? கொஞ்சம் சிரியேண்டா. " கிருபாவின் தலையிலிருந்த தொப்பியை கழற்றிக்கொண்டோடினாள் அஸ்ணி.
" அண்ணா, கிருபாவுட்டு அப்பாவுட்டு தோட்டத்துல இருந்த மரங்களயெல்லாம் தோட்டத்தால வந்து வெட்டிபோட்டுட்டு போய்டாங்க. அதுதான் தொர அப்படி இருக்காப்ல" சொன்னான் ருத்ரன்.
",அட இது எப்போ நடந்துச்சி? "
",இன்னைக்கு காலைலதான் அண்ணா. இதோ யூடியூப்ல கூட போட்டுருக்காங்களே... பார்க்கலாயா நீங்க." தொலைபேசியை தூக்கிக்கொண்டு வந்தாள் சாரு. யாத்ராவோடு சேர்த்து மற்ற நால்வரும் குவிந்து கொண்டு தொலைபேசிக்குள் நுழைந்தார்கள்.
விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்.....
Last edited: