பகுதி – 3.
சர்வஜித் அன்றைக்கு தன் மருத்துவரைக் காண வேண்டிய நாள். ஆனால் அவரைச் சென்று காணும் அளவுக்கு அவனுக்கு நேரம் ஒத்துழைக்காமல் போனது. அவனது அட்டவணை அனைத்தும் ஹரீஷுக்குத் தெரியும் என்பதால் அவன் முன்னால் வந்து நின்றான்.
“சொல்லு ஹரீஷ்...” என அவன் சொன்னதே இவனுக்கு உறுமலாகத்தான் கேட்டது.
‘இவருக்கு பொறுமையாவே பேசத் தெரியாதா?’ கோடி முறையாக தனக்குள் கேட்டுக் கொண்டவன், அவனைப் பார்த்தான்.
“டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு...” தன் கையில் இருந்த ஐபேடில் பார்வையைச் செலுத்தியவாறே சொன்னான்.
‘சர்வஜித் மருத்துவரைப் பார்க்க செல்ல வேண்டுமே’ என உள்ளுக்குள் மனம் கிடந்தது தவித்தது. ஹரீஷைப் பொறுத்த வரைக்கும் அவன் வெளிப் பார்வைக்கு எத்தனை முரட்டுத் தனமானவனோ அதற்கு எதிராக உள்ளுக்குள் அத்தனை மென்மையானவன்.
ஆனால் சர்வஜித் வெளிப் பார்வைக்கு எத்தனை மென்மையானவனாக, கம்பீரமானவனாக, அழகனாக காட்சி அளிக்கிறானோ அதற்கு மாறாக மனதுக்குள் அத்தனை முரட்டுத் தனமானவன்.
‘இவர் மனதுக்குள் யோசிப்பதை கூட சாதாரணமாக யோசிக்க மாட்டாரோ?’ என தினமும் யோசித்து இருக்கிறான். அந்த அளவுக்கு சர்வஜித் அவனது செய்கைகளால் ஹரீஷை அப்படி யோசிக்க வைத்திருந்தான்.
ஹரீஷ் அவனிடம் வந்து சேர்ந்த கதையைச் சொல்வதாக இருந்தால் அதற்கு இன்னொரு கதையே எழுத வேண்டி வரும். அதை சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், ஹரீஷ் தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டவன். தாயை கண் கலங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சின்ன வயதிலேயே ஆர்மியில் சேர்ந்தவன்.
பதினெட்டாவது வயதில் கடைநிலை BSF சோல்ஜராக இணைந்து, தொலைதூரக் கல்வி வாயிலாக இரண்டு டிகிரி வாங்கியவன். அதோடு மிலிட்டரி பரீட்சையும் தொடர்ந்து எழுதி குறுகிய காலத்திலேயே டபிள் ஸ்டார் ரெஜிமென்ட் கேடருக்கு உயர்ந்தவன்.
எல்லாம் ஒரு நாள் நிறைவுக்கு வந்தது. அவனது தாய் இறந்த அந்த நாளை இன்றைக்கு கூட அவன் நினைத்துப் பார்க்க விரும்புவது இல்லை. அப்பொழுது அவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்து தாயோடு இருந்தான் என்பது மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
ஆனால் ஒரு சின்ன காய்ச்சல் என நினைத்த ஒன்று அவர் மூளையை பாதித்ததை அவன் எப்படி அறியாமல் போனான். நாளே நாள்... எல்லாம் முடிந்து போனது. அதற்குப் பிறகு எதிலும் அவனுக்கு பிடிப்பில்லை.
தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் எதேச்சையாக ஒரு நிறுவனத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்தான்.
அதுவும் நம்பிக்கையான, நேர்மையான, ரகசியம் பாதுகாக்கும், பல கலைகள் தெரிந்த ஒருவனை அவர்கள் தேட, அந்த வித்தியாசமான விளம்பரம்தான் அவனைக் கவர்ந்தது. அதற்கு அவர்கள் அறிவித்த சம்பளத்தொகை அவன் புருவத்தை உயரச் செய்தது.
‘நிச்சயம் அது ஒரு நேர்மையான இடமாக இருக்காது’ என்ற எண்ணம்தான் அவனுக்கு எழுந்தது. நேரடியாக வந்து பார்க்கச் சொல்லி அதில் குறிப்பிடப் பட்டிருக்க, ‘சும்மா சென்று பார்க்கலாம்’ என்ற எண்ணத்தில்தான் அங்கே சென்றான்.
முதல்நாள் அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்துக்குச் சென்ற பொழுது, வந்திருந்தவர்களில் அடையாள அட்டைகளின் நகலை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள். கூடவே அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை மட்டுமே வாங்கினார்கள்.
‘நீங்க செலெக்ட் ஆனால் தகவல் வரும்’ என சொல்லி அனுப்பி விட்டார்கள். சரியாக ஒரு மாதம் கடந்திருக்க, ஹரீஷ் தான் அப்ளை செய்ததையே மறந்தும் விட்டிருந்தான். அந்த நேரம், அவனது அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் மட்டுமே வந்தது.
அதுவும் ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலின் பெயரும், அறை நம்பரும் மட்டுமே இருக்க, ‘மீட் மீ தேர்’ என்றும் இருந்தது. அதைவிட அடுத்த ஒருமணி நேரத்துக்குள் வந்து பார்க்கச் சொல்லி இருக்க, முதலில் அதைப் பார்த்தவன் கொஞ்சம் அசட்டையாகத்தான் விடுத்தான்.
‘இதென்ன இப்படி ஒரு மெஸ்சேஜ்? இது யாரு? எதுக்காக நான் அங்கே போகணும்?’ என்றுதான் நினைத்தான். ஆனால் அடுத்த நொடி அவனுக்கு பொறி தட்ட, செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தான்.
ஆனால் இணைப்பு கிடைக்காமல் போக, ‘செல்வதா? வேண்டாமா? ஏதும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே’ என பலவாறாக யோசித்தவன், ‘எப்படியும் நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது. என்னன்னு போய் பார்த்துடலாம்’ என முடிவெடுத்தவன் அங்கே சென்றான்.
செல்லும் முன்னர் தன் வீட்டுக்குச் சென்று அவன் நடத்திய ஆராய்ச்சியில் சில விஷயங்களை அவன் கண்டறிந்தான்.
அவர்கள் சொன்ன ஹோட்டலின் அறைக்குள் செல்லும் வரைக்கும் அவனுக்கு தயக்கம் தான். ஆனால் எப்பொழுது சர்வஜித்தை நேருக்கு நேராகப் பார்த்தானோ, அந்த நொடி அவனுக்குள் ஒரு எண்ணம் வலுப் பெற்றது.
“ஹரீஷ்... வெல்கம்...” என அழைத்த சர்வஜித், அங்கே தனக்கு எதிராக இருந்த இருக்கையை கை காட்டினான்.
ஹரீஷ் அதில் அமரவே, “ஹரீஷ் வயது இருபத்தி ஏழு, அம்மா சந்தான லட்சுமி, மிலிட்டரி மேன்... சொந்த ஊர், வளர்ந்த ஊர், இப்பொழுது அவன் இருக்கும் விலாசம்” என வரிசையாக அவன் சொல்லிக் கொண்டே போக, ஹரீஷ் அவனையே பார்த்தவாறு அப்படியே இருந்தான்.
“நான் யார்ன்னு தெரியுமா?” சர்வஜித் கேட்க,
“சர்வஜித், விப்ரூத் தீவானோட தத்துப் பிள்ளை. இப்போதைக்கு இந்தியாவையே வளைத்துப்போடும் வல்லமை உள்ள ஒரே ஆள். படைபலம், அரசியல் செல்வாக்கு எல்லாமே கொட்டிக் கிடக்கு” என சொல்லிக் கொண்டே வந்தவன், அவனையே ஆழம் பார்த்தான்.
அவனது மிலிட்டரி மூளை சர்வஜித்தைப் பற்றி வேகமாக ஆராய்ந்தது. அவனைப்பற்றி தனிப்பட்ட விதமான எதுவும் அவனுக்குத் தெரியவில்லை என்றாலும், பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் அவன் மூளைக்குள் படமாகவே ஓடியது.
“குட்...” என்ற சர்வஜித் நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்க, “எனக்கு இந்தப் பழக்கம் இல்லை” அவன் முடித்துவிட தோளைக் குலுக்கிக் கொண்டான்.
“என்கிட்டே வேலைக்குச் சேர்வதில் உங்களுக்கு ஏதும் தயக்கம் இல்லையே?” சர்வஜித் கேட்டு வைக்க, ஹரீஷ் எந்த பதிலையும் சொல்லவில்லை.
“நீங்க இல்லீகல் விஷயம் எல்லாம் செய்யலாம் என்ற கணிப்பு எனக்கு இருக்கு. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு” அவன் நிறுத்த, சர்வஜித் சிகரெட்டின் புகையை ஆழ்ந்து சுவாசித்து நிறுத்தியவாறு அவனைப் பார்த்தான்.
‘நீயே சொல்...’ என்பதுபோல் அவனைப் பார்த்தான்.
“நான் மிலிட்டரிக்காரன், ட்ரக்ஸ், ஆயுதம், மணி லாண்டரிங், கடத்தல் சம்பவங்கள் இப்படி எதையும் நான் செய்ய மாட்டேன். அதற்கு எல்லாம் துணை போகவும் மாட்டேன்” அவன் சொல்ல, சர்வஜித் தன் கையில் இருந்த சிகரெட்டை ஒரு மாதிரி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“குட்... அதையெல்லாம் நான் செய்யச் சொல்லவும் மாட்டேன்” அவன் சொல்ல, அதென்னவோ அவன் குரலில் இருந்த நேர்மையை, உண்மையை அவன் கண்டுகொண்டான்.
“நான் வேற என்ன செய்யணும்?” ஹரீஷ் அவனைப் பார்த்தான்.
“என்னை ப்ரொட்டெக்ட் பண்றதுதான் உங்க வேலை. என் ரகசியங்கள் எல்லாம் காக்கப்பட வேண்டும். நான் செய் எனச் சொல்லும் எதையும் செய்யணும்” அவன் சொல்ல, சில பல நிமிடங்கள் யோசித்தான்.
“நான் இதைச் செய்வேன்னு எப்படி நம்பறீங்க?” அவன் கேட்டு வைத்தான்.
“எனக்கு மனிதர்களைப் படிக்கத் தெரியும் ஹரீஷ்” அவன் சிகரெட்டின் இறுதிப் பகுதியை முழுதாக காலி செய்து நிறுத்த, அங்கே சில பல நிமிடங்கள் அமைதி நிலவியது.
“நான் சேர்ந்துக்கறேன்” அவன் சொல்ல, சர்வஜித் ஒரு சொடக்கு போட, எங்கே இருந்து ஒருவன் முளைத்தான் எனத் தெரியாமலே கையில் ஒரு ஃபயிலோடு அங்கே வந்தான். அதை அவன் ஹரீஷிடம் கொடுத்துவிட்டு மின்னலென மறைந்தும் போனான்.
“என்னைப்பற்றி இந்த உலகுக்குத் தெரியாத சில விஷயங்கள்” எனச் சொல்லி நிறுத்த, ஹரீஷ் அந்த ஃபயிலை நிதானமாகப் பார்வையிட்டான். பார்த்தவனின் கண்கள் விரிந்துகொண்டே செல்ல, ஒரு மாதிரி எச்சில் விழுங்கிக் கொண்டான்.
தான் பிடித்திருப்பது புலிவால் என அவனுக்குப் புரிந்து போனது. அதை இப்பொழுது விட்டால் அது தன்னை அடித்து தின்றுவிடும் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. அதைக் கொன்று தப்பிவிடலாம் என்றால், அந்த புலிக்குத் துணையாக ஒரு புலிக் கூட்டமே துணையிருக்க, கூண்டுக்குள் அடைபட்ட நிலைதான் தன்னுடையது எனப் புரிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க, அந்த ஃபயிலை மூடி அங்கே இருந்த டீபாவின்மேல் வைத்தான். “இத்தனை வருடம் இல்லாமல், திடுமென ஒரு பாடிகார்டின் அவசியம் என்ன வந்தது?” நிஜத்தில் அவனது நிலைக்கு தான் அவசியமே இல்லை என ஒரு எண்ணம்.
“நான் துவங்கப்போகும் யுத்தத்துக்கு எனக்கு படைத்தலைவன் அவசியம்னு தோணிச்சு. என் நிழல் உலகுக்குள் இருட்டில் இருந்து கத்தி வீசினால் கூட எப்படி தப்பிக்க வேண்டும் என எனக்குத் தெரியும்.
“இந்த யுத்தத்துக்காக, வெளிச்சத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக பதினைந்து வருடங்கள் இருட்டில் இருந்தவன் நான். இப்போ நான் இறங்கி செய்யணும்... எனக்கு நிம்மதி வேணும். அதைவிட நான் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்” அவன் பேசப் பேச, நிஜத்தில் ஹரீஷ் உறைந்துதான் போனான்.
அவன் கண்களில் சுடர்விட்ட அந்த ஜுவாலை... அவன் அடிமனதில் ஒரு திகிலைப் பரப்பியது மட்டும் உண்மை.
“வேற ஏதாவது கேட்கணுமா?” சர்வஜித் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.
“நான் எப்போ இருந்து வரணும்?” இருக்கையில் இருந்து எழுந்தவாறு கேட்டான்.
“வந்தாச்சு...” சர்வஜித் அவ்வளவுதான் சொன்னான். அடுத்த விரல் நொடிப்பில், அவனுக்கான உடை, அடையாள அட்டை, பிஸ்டல் துவங்கி அனைத்தும் அவன்முன் வைக்கப் பட்டது. வந்தவன் அங்கே இருந்த ஒரு கதவைக் கைகாட்ட, ஹரீஷ் அவனோடு சென்றான்.
அவன் செல்லும் நேரம், “ஹரீஷ்... நீ கொலை செய்ய மாட்டேன்னு சொல்லலை தானே?” அவனிடம் கேட்டான்.
அதைக் கேட்டவன் மெல்லியதாக புன்னகைத்துவிட்டு, “அது எனக்கு சுலபம்” ஹரீஷ் முடித்துவிட, சர்வஜித்தின் இமைகள் மேலேறி தன் வியப்பைக் காட்டியது. அத்தனை நேரத்தில் சர்வஜித் தன் உணர்வை முதல்முறையாக வெளிக் காட்டியதைக் கண்டான்.
அங்கே இருந்த கதவைத் திறந்துகொண்டு சென்றால், அது பக்கத்து அறையாக இருக்க, மற்றவன் திரும்பி நின்று கொண்டான். ஹரீஷ் உடை மாற்றியவன், பிஸ்டலையும் தன் முதுகின் பின்னால் வைத்துக் கொண்டான்.
அவன் வெளியே வருகையில், சர்வஜித்தும் வேறு உடை மாற்றி இருக்க, அவனது தோற்றம் கூட மாறி இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதைப் பார்த்தவன், ஒரு நொடி தடுமாறிப் போனான்.
சர்வஜித் அன்றைக்கு தன் மருத்துவரைக் காண வேண்டிய நாள். ஆனால் அவரைச் சென்று காணும் அளவுக்கு அவனுக்கு நேரம் ஒத்துழைக்காமல் போனது. அவனது அட்டவணை அனைத்தும் ஹரீஷுக்குத் தெரியும் என்பதால் அவன் முன்னால் வந்து நின்றான்.
“சொல்லு ஹரீஷ்...” என அவன் சொன்னதே இவனுக்கு உறுமலாகத்தான் கேட்டது.
‘இவருக்கு பொறுமையாவே பேசத் தெரியாதா?’ கோடி முறையாக தனக்குள் கேட்டுக் கொண்டவன், அவனைப் பார்த்தான்.
“டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு...” தன் கையில் இருந்த ஐபேடில் பார்வையைச் செலுத்தியவாறே சொன்னான்.
‘சர்வஜித் மருத்துவரைப் பார்க்க செல்ல வேண்டுமே’ என உள்ளுக்குள் மனம் கிடந்தது தவித்தது. ஹரீஷைப் பொறுத்த வரைக்கும் அவன் வெளிப் பார்வைக்கு எத்தனை முரட்டுத் தனமானவனோ அதற்கு எதிராக உள்ளுக்குள் அத்தனை மென்மையானவன்.
ஆனால் சர்வஜித் வெளிப் பார்வைக்கு எத்தனை மென்மையானவனாக, கம்பீரமானவனாக, அழகனாக காட்சி அளிக்கிறானோ அதற்கு மாறாக மனதுக்குள் அத்தனை முரட்டுத் தனமானவன்.
‘இவர் மனதுக்குள் யோசிப்பதை கூட சாதாரணமாக யோசிக்க மாட்டாரோ?’ என தினமும் யோசித்து இருக்கிறான். அந்த அளவுக்கு சர்வஜித் அவனது செய்கைகளால் ஹரீஷை அப்படி யோசிக்க வைத்திருந்தான்.
ஹரீஷ் அவனிடம் வந்து சேர்ந்த கதையைச் சொல்வதாக இருந்தால் அதற்கு இன்னொரு கதையே எழுத வேண்டி வரும். அதை சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், ஹரீஷ் தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டவன். தாயை கண் கலங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சின்ன வயதிலேயே ஆர்மியில் சேர்ந்தவன்.
பதினெட்டாவது வயதில் கடைநிலை BSF சோல்ஜராக இணைந்து, தொலைதூரக் கல்வி வாயிலாக இரண்டு டிகிரி வாங்கியவன். அதோடு மிலிட்டரி பரீட்சையும் தொடர்ந்து எழுதி குறுகிய காலத்திலேயே டபிள் ஸ்டார் ரெஜிமென்ட் கேடருக்கு உயர்ந்தவன்.
எல்லாம் ஒரு நாள் நிறைவுக்கு வந்தது. அவனது தாய் இறந்த அந்த நாளை இன்றைக்கு கூட அவன் நினைத்துப் பார்க்க விரும்புவது இல்லை. அப்பொழுது அவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்து தாயோடு இருந்தான் என்பது மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
ஆனால் ஒரு சின்ன காய்ச்சல் என நினைத்த ஒன்று அவர் மூளையை பாதித்ததை அவன் எப்படி அறியாமல் போனான். நாளே நாள்... எல்லாம் முடிந்து போனது. அதற்குப் பிறகு எதிலும் அவனுக்கு பிடிப்பில்லை.
தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் எதேச்சையாக ஒரு நிறுவனத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்தான்.
அதுவும் நம்பிக்கையான, நேர்மையான, ரகசியம் பாதுகாக்கும், பல கலைகள் தெரிந்த ஒருவனை அவர்கள் தேட, அந்த வித்தியாசமான விளம்பரம்தான் அவனைக் கவர்ந்தது. அதற்கு அவர்கள் அறிவித்த சம்பளத்தொகை அவன் புருவத்தை உயரச் செய்தது.
‘நிச்சயம் அது ஒரு நேர்மையான இடமாக இருக்காது’ என்ற எண்ணம்தான் அவனுக்கு எழுந்தது. நேரடியாக வந்து பார்க்கச் சொல்லி அதில் குறிப்பிடப் பட்டிருக்க, ‘சும்மா சென்று பார்க்கலாம்’ என்ற எண்ணத்தில்தான் அங்கே சென்றான்.
முதல்நாள் அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்துக்குச் சென்ற பொழுது, வந்திருந்தவர்களில் அடையாள அட்டைகளின் நகலை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள். கூடவே அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை மட்டுமே வாங்கினார்கள்.
‘நீங்க செலெக்ட் ஆனால் தகவல் வரும்’ என சொல்லி அனுப்பி விட்டார்கள். சரியாக ஒரு மாதம் கடந்திருக்க, ஹரீஷ் தான் அப்ளை செய்ததையே மறந்தும் விட்டிருந்தான். அந்த நேரம், அவனது அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் மட்டுமே வந்தது.
அதுவும் ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலின் பெயரும், அறை நம்பரும் மட்டுமே இருக்க, ‘மீட் மீ தேர்’ என்றும் இருந்தது. அதைவிட அடுத்த ஒருமணி நேரத்துக்குள் வந்து பார்க்கச் சொல்லி இருக்க, முதலில் அதைப் பார்த்தவன் கொஞ்சம் அசட்டையாகத்தான் விடுத்தான்.
‘இதென்ன இப்படி ஒரு மெஸ்சேஜ்? இது யாரு? எதுக்காக நான் அங்கே போகணும்?’ என்றுதான் நினைத்தான். ஆனால் அடுத்த நொடி அவனுக்கு பொறி தட்ட, செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தான்.
ஆனால் இணைப்பு கிடைக்காமல் போக, ‘செல்வதா? வேண்டாமா? ஏதும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே’ என பலவாறாக யோசித்தவன், ‘எப்படியும் நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது. என்னன்னு போய் பார்த்துடலாம்’ என முடிவெடுத்தவன் அங்கே சென்றான்.
செல்லும் முன்னர் தன் வீட்டுக்குச் சென்று அவன் நடத்திய ஆராய்ச்சியில் சில விஷயங்களை அவன் கண்டறிந்தான்.
அவர்கள் சொன்ன ஹோட்டலின் அறைக்குள் செல்லும் வரைக்கும் அவனுக்கு தயக்கம் தான். ஆனால் எப்பொழுது சர்வஜித்தை நேருக்கு நேராகப் பார்த்தானோ, அந்த நொடி அவனுக்குள் ஒரு எண்ணம் வலுப் பெற்றது.
“ஹரீஷ்... வெல்கம்...” என அழைத்த சர்வஜித், அங்கே தனக்கு எதிராக இருந்த இருக்கையை கை காட்டினான்.
ஹரீஷ் அதில் அமரவே, “ஹரீஷ் வயது இருபத்தி ஏழு, அம்மா சந்தான லட்சுமி, மிலிட்டரி மேன்... சொந்த ஊர், வளர்ந்த ஊர், இப்பொழுது அவன் இருக்கும் விலாசம்” என வரிசையாக அவன் சொல்லிக் கொண்டே போக, ஹரீஷ் அவனையே பார்த்தவாறு அப்படியே இருந்தான்.
“நான் யார்ன்னு தெரியுமா?” சர்வஜித் கேட்க,
“சர்வஜித், விப்ரூத் தீவானோட தத்துப் பிள்ளை. இப்போதைக்கு இந்தியாவையே வளைத்துப்போடும் வல்லமை உள்ள ஒரே ஆள். படைபலம், அரசியல் செல்வாக்கு எல்லாமே கொட்டிக் கிடக்கு” என சொல்லிக் கொண்டே வந்தவன், அவனையே ஆழம் பார்த்தான்.
அவனது மிலிட்டரி மூளை சர்வஜித்தைப் பற்றி வேகமாக ஆராய்ந்தது. அவனைப்பற்றி தனிப்பட்ட விதமான எதுவும் அவனுக்குத் தெரியவில்லை என்றாலும், பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் அவன் மூளைக்குள் படமாகவே ஓடியது.
“குட்...” என்ற சர்வஜித் நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்க, “எனக்கு இந்தப் பழக்கம் இல்லை” அவன் முடித்துவிட தோளைக் குலுக்கிக் கொண்டான்.
“என்கிட்டே வேலைக்குச் சேர்வதில் உங்களுக்கு ஏதும் தயக்கம் இல்லையே?” சர்வஜித் கேட்டு வைக்க, ஹரீஷ் எந்த பதிலையும் சொல்லவில்லை.
“நீங்க இல்லீகல் விஷயம் எல்லாம் செய்யலாம் என்ற கணிப்பு எனக்கு இருக்கு. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு” அவன் நிறுத்த, சர்வஜித் சிகரெட்டின் புகையை ஆழ்ந்து சுவாசித்து நிறுத்தியவாறு அவனைப் பார்த்தான்.
‘நீயே சொல்...’ என்பதுபோல் அவனைப் பார்த்தான்.
“நான் மிலிட்டரிக்காரன், ட்ரக்ஸ், ஆயுதம், மணி லாண்டரிங், கடத்தல் சம்பவங்கள் இப்படி எதையும் நான் செய்ய மாட்டேன். அதற்கு எல்லாம் துணை போகவும் மாட்டேன்” அவன் சொல்ல, சர்வஜித் தன் கையில் இருந்த சிகரெட்டை ஒரு மாதிரி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“குட்... அதையெல்லாம் நான் செய்யச் சொல்லவும் மாட்டேன்” அவன் சொல்ல, அதென்னவோ அவன் குரலில் இருந்த நேர்மையை, உண்மையை அவன் கண்டுகொண்டான்.
“நான் வேற என்ன செய்யணும்?” ஹரீஷ் அவனைப் பார்த்தான்.
“என்னை ப்ரொட்டெக்ட் பண்றதுதான் உங்க வேலை. என் ரகசியங்கள் எல்லாம் காக்கப்பட வேண்டும். நான் செய் எனச் சொல்லும் எதையும் செய்யணும்” அவன் சொல்ல, சில பல நிமிடங்கள் யோசித்தான்.
“நான் இதைச் செய்வேன்னு எப்படி நம்பறீங்க?” அவன் கேட்டு வைத்தான்.
“எனக்கு மனிதர்களைப் படிக்கத் தெரியும் ஹரீஷ்” அவன் சிகரெட்டின் இறுதிப் பகுதியை முழுதாக காலி செய்து நிறுத்த, அங்கே சில பல நிமிடங்கள் அமைதி நிலவியது.
“நான் சேர்ந்துக்கறேன்” அவன் சொல்ல, சர்வஜித் ஒரு சொடக்கு போட, எங்கே இருந்து ஒருவன் முளைத்தான் எனத் தெரியாமலே கையில் ஒரு ஃபயிலோடு அங்கே வந்தான். அதை அவன் ஹரீஷிடம் கொடுத்துவிட்டு மின்னலென மறைந்தும் போனான்.
“என்னைப்பற்றி இந்த உலகுக்குத் தெரியாத சில விஷயங்கள்” எனச் சொல்லி நிறுத்த, ஹரீஷ் அந்த ஃபயிலை நிதானமாகப் பார்வையிட்டான். பார்த்தவனின் கண்கள் விரிந்துகொண்டே செல்ல, ஒரு மாதிரி எச்சில் விழுங்கிக் கொண்டான்.
தான் பிடித்திருப்பது புலிவால் என அவனுக்குப் புரிந்து போனது. அதை இப்பொழுது விட்டால் அது தன்னை அடித்து தின்றுவிடும் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. அதைக் கொன்று தப்பிவிடலாம் என்றால், அந்த புலிக்குத் துணையாக ஒரு புலிக் கூட்டமே துணையிருக்க, கூண்டுக்குள் அடைபட்ட நிலைதான் தன்னுடையது எனப் புரிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க, அந்த ஃபயிலை மூடி அங்கே இருந்த டீபாவின்மேல் வைத்தான். “இத்தனை வருடம் இல்லாமல், திடுமென ஒரு பாடிகார்டின் அவசியம் என்ன வந்தது?” நிஜத்தில் அவனது நிலைக்கு தான் அவசியமே இல்லை என ஒரு எண்ணம்.
“நான் துவங்கப்போகும் யுத்தத்துக்கு எனக்கு படைத்தலைவன் அவசியம்னு தோணிச்சு. என் நிழல் உலகுக்குள் இருட்டில் இருந்து கத்தி வீசினால் கூட எப்படி தப்பிக்க வேண்டும் என எனக்குத் தெரியும்.
“இந்த யுத்தத்துக்காக, வெளிச்சத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக பதினைந்து வருடங்கள் இருட்டில் இருந்தவன் நான். இப்போ நான் இறங்கி செய்யணும்... எனக்கு நிம்மதி வேணும். அதைவிட நான் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்” அவன் பேசப் பேச, நிஜத்தில் ஹரீஷ் உறைந்துதான் போனான்.
அவன் கண்களில் சுடர்விட்ட அந்த ஜுவாலை... அவன் அடிமனதில் ஒரு திகிலைப் பரப்பியது மட்டும் உண்மை.
“வேற ஏதாவது கேட்கணுமா?” சர்வஜித் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.
“நான் எப்போ இருந்து வரணும்?” இருக்கையில் இருந்து எழுந்தவாறு கேட்டான்.
“வந்தாச்சு...” சர்வஜித் அவ்வளவுதான் சொன்னான். அடுத்த விரல் நொடிப்பில், அவனுக்கான உடை, அடையாள அட்டை, பிஸ்டல் துவங்கி அனைத்தும் அவன்முன் வைக்கப் பட்டது. வந்தவன் அங்கே இருந்த ஒரு கதவைக் கைகாட்ட, ஹரீஷ் அவனோடு சென்றான்.
அவன் செல்லும் நேரம், “ஹரீஷ்... நீ கொலை செய்ய மாட்டேன்னு சொல்லலை தானே?” அவனிடம் கேட்டான்.
அதைக் கேட்டவன் மெல்லியதாக புன்னகைத்துவிட்டு, “அது எனக்கு சுலபம்” ஹரீஷ் முடித்துவிட, சர்வஜித்தின் இமைகள் மேலேறி தன் வியப்பைக் காட்டியது. அத்தனை நேரத்தில் சர்வஜித் தன் உணர்வை முதல்முறையாக வெளிக் காட்டியதைக் கண்டான்.
அங்கே இருந்த கதவைத் திறந்துகொண்டு சென்றால், அது பக்கத்து அறையாக இருக்க, மற்றவன் திரும்பி நின்று கொண்டான். ஹரீஷ் உடை மாற்றியவன், பிஸ்டலையும் தன் முதுகின் பின்னால் வைத்துக் கொண்டான்.
அவன் வெளியே வருகையில், சர்வஜித்தும் வேறு உடை மாற்றி இருக்க, அவனது தோற்றம் கூட மாறி இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதைப் பார்த்தவன், ஒரு நொடி தடுமாறிப் போனான்.