பகுதி – 21.
அடுத்து வந்த இரண்டு மாதங்கள் எப்படிக் கடந்தது எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. வைஷாலி அவள் ஊருக்கே சென்றுவிட்டாள். இன்னும் பதினைந்து நாட்களில் அவளுக்குத் திருமணம் என முடிவாகி இருக்க, அந்த வேலைகள் எல்லாம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது.
வைஷாலி கொஞ்சம் கூட கவலையற்று இருந்தாள். சர்வஜித் தன் சவாலில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவான் என அவளுக்கு மலையளவு நம்பிக்கை இருந்தது. இத்தனைக்கும் அவளை வீட்டுச் சிறையில்தான் வைத்து இருந்தான் அந்த முத்துப்பாண்டி.
அதற்கும் அவள் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. அவளுக்கு உடை வாங்க, ஜேக்கட் தைக்க, நகை வாங்க என ரத்னா அத்தனை அலப்பறைகள் கூட்டினாள். எதற்கும் கொஞ்சம் கூட அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை.
முதலில் எல்லாம் இந்த திருமணமே வேண்டாம் என முரண்டு பிடித்திக் கொண்டிருந்த மகள், இப்பொழுது அமைதியாகிவிட, ரத்னாவை கையில் பிடிக்க முடியவில்லை. அதுவும் தன் பிறந்த வீட்டில் கோபால் அவளுக்கு முழு ஆதரவாக இருக்க, அவள் சொல்வதுதான் அங்கே என்றாகிப் போனது.
“என்னம்மா ரத்னா, மருமக ஏதும் பிரச்சனை பண்றாளா?” கோபால் தங்கையிடம் கேட்டான்.
“அவ வேண்டாம் வேண்டாம்னு சொன்னது எல்லாம் சும்மா அண்ணே. இப்போ புடவை செலெக்ட் பண்றது என்ன? நகை வாங்கறது என்ன? ஜேக்கட்டுக்கு டிஸைன் சொல்றது என்ன? எனக்கே ஆச்சரியம் தான்” அவள் சிலாகிக்க கோபாலுக்குமே அவ்வளவு சந்தோசம்.
ரத்னா பேசுவதைக் கேட்ட கோதை, “அக்கா, நாம எல்லாம் தெரியாமல் இந்த பாழும் கிணற்றில் வந்து விழுந்தோம். ஆனா இந்த பொம்பளை தெரிஞ்சு வச்சுகிட்டே இப்படிச் செய்யுதே. அதுக்கு எப்படிக்கா மனசு வருது? இதுதான் நிஜமாவே வைஷாலியைப் பெத்துதா?” ஆற்றாமையாகக் கேட்டாள்.
“எல்லாம் இந்த அதிகார போதையும், ‘தான்’ என்ற அகங்காரமும் கொடுக்கற திமிர் போதைதான் வேற என்ன? பொண்ணோட வாழ்க்கையோ, அவ சந்தோஷமோ முக்கியம்னு கொஞ்சமாவது நினைப்போ, அக்கறையோ இருந்தா இந்த பொம்பளை இப்படிச் செய்யுமா?” ஜெயந்தியும் புலம்பினாள்.
“ஹையோ அத்த...” கோதை... ருக்மணியைப் பார்த்துவிட்டு தன் வாயை கப்பென மூடிக் கொண்டாள். ருக்மணிக்கும் இந்த திருமணத்தில் அத்தனை விருப்பமில்லை என்றாலும், தன் மகனைப்பற்றி குறைவாக அவர் முன்பே பேசுவதைக் கேட்டால் அவருக்கு வலிக்கத்தானே செய்யும்?
எப்பொழுது முத்துப்பாண்டியோடு வைஷாலியின் திருமணம் முடிவானதோ அப்பொழுதே தன் மகனிடம் பேசினார். கை உடைந்து, அது முழுதாக சரியாகாமல் கொஞ்சம் கஷ்டப்படும் மகனைப் பார்க்க வருத்தமாகவே இருந்தது.
தாயைப் பார்த்தவுடன், “என்னம்மா... என்னைத் தேடி வந்திருக்க? என்ன விஷயம்?” கொஞ்சம் கூட மரியாதையின்றியே கேட்டான். தாய் எதைப்பற்றி தன்னிடம் பேச வந்திருப்பார் என தெரிந்தது போலவே அவனது பேச்சு இருந்தது.
“பாண்டி... நான் பேசப்போற விஷயம் உனக்குப் பிடிக்காதுதான்...” ருக்மணி தயக்கமாகத் துவங்க,
“அப்போ பேசாத...” கத்தரித்து பேசினான்.
“நான் உன்னைப் பெத்தவடா...”.
“அதுக்கு இப்போ உன் கால்ல விழுந்து தொழணுமா? உன் சந்தோஷத்துக்கு நீ பெத்துட்டு, என்னவோ பெரிய தியாகி மாதிரி பேசற? நீ பேசறதை எல்லாம் எனக்கு கேட்க நேரமில்லை. கல்யாண வேலை தலைக்கு மேலே கிடக்கு” எங்கேயோ வெளியே செல்ல கிளம்பியவாறே பேசினான்.
அவனது பேச்சில் அந்த தாயுள்ளம் கொஞ்சம் கூசிப் போனது. ஆனாலும் மகனிடம் பேச வந்ததை சொல்லிவிட முடிவெடுத்தார்.
“வைஷாலி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவளுக்கு வேண்டியாவது நீ கொஞ்சம் மாறணும். உன் கெட்ட சகவாசத்தை எல்லாம் விட்டுடு. இனிமேலாவது அவளுக்கு ஏத்தவனா மாறுப்பா” கெஞ்சலாகவே சொன்னார்.
“இதோ பார்... என் இஷ்டப்படிதான் நான் இருப்பேன். சாப்பாட்டிலேயே வெரைட்டியை எதிர்பார்க்கறவன் நான். என்கிட்டே வந்துட்டு என்ன பேசிகிட்டு இருக்க நீ? அவ நல்லவளா? நீ பாத்தியா? எவன் கூடவோ போய் ஒரு வாரம் இருந்துட்டு வந்தவதான் அந்த நல்லவ. நீ எனக்கு பாடம் எடுத்துகிட்டு இருக்க.
“பெத்தவன்னு கூடப் பார்க்காமல் ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன் போய்டு. அவளை விட்டு வச்சிருக்கறதே அத்தைக்காகத்தான். இல்லன்னா என்னைக்கோ அவளை தூக்கிட்டு போய் சிதைக்க எனக்கு எவ்வளவு நேரமாகி இருக்கும்?
“அதோட அவ மேல கொஞ்சமே கொஞ்சம் ஆசை வச்சிருக்கேன். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவளைக் காலம் முழுக்க கூடவே வச்சிருந்து அனுபவிக்கணும்னு ஆசைப்படறேன். மற்றபடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
“எனக்கு பொண்ணு கொடுக்க எத்தனை MLA, MP வீட்ல இருந்து கேட்கறாங்கன்னு உனக்குத் தெரியுமா? நீ என்னவோ திருந்தணும், மாறணும்னு பாடம் எடுத்துகிட்டு இருக்க? உன் மரியாதையை நீ காப்பாத்திகிட்டா உனக்கு நல்லது... போய்டு...” அவன் பேச வெறுத்துப் போய்விட்டார்.
அதற்கு மேலே அவனிடம் பேசுவதும், பாறாங்கல்லில் முட்டிக் கொள்வதும் ஒன்று எனப் புரிய அங்கிருந்து கிளம்பினார். “எனக்கு எவளையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைப்ப தானே, அது இவ தான்னு நினைச்சுக்கோ...” அவன் சொல்ல, ருக்மணிக்கு மனதே விட்டுப் போனது.
தன் மூத்த இரு மகன்களும்கூட, திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்றுதான் நினைத்தார். திருந்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எல்லாம் கானல் நீராகிப் போனது. தன் கணவனைப் பார்த்துதானே மகன்கள் வளர்ந்தார்கள். அப்படி இருக்கையில், வேப்பமரத்திடம், வாழைப்பழத்தை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் என அவருக்குப் புரிந்தது.
ருக்மணி ஒரு மாதிரி சோர்வாகத் தெரிய, “என்ன ஆச்சு அத்த? உடம்பு எதுவும் சரியில்லையா?” ஜெயந்தி கவலையாகக் கேட்டாள்.
“எனக்கு எதுவும் இல்லை... இந்த உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ?” என்றவருக்கு, ‘வைஷாலிக்காகவாவது அவன் மாறலாம்’ என ஏக்கமாக இருந்தது.
“எதுக்கு அத்த இப்படில்லாம் பேசறீங்க? எங்களுக்கு ஆதரவா, ஆறுதலா இருக்கறது நீங்க மட்டும்தான்” கோதை சொல்ல, ருக்மணிக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. தன் மருமக்களின் நிலைக்கும், அவரது நிலைக்கும் பெரிதாக எந்த மாறுதலும் கிடையாது.
கோபால் வயது மூப்பின் காரணமாக தன் சேட்டைகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டாரே தவிர, தன் மகன்களின் வயதில் கோபால் ஆடாத ஆட்டமா? இப்பொழுதும் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்டம் போடத்தானே செய்கிறார்.
இத்தனை வருடமாகியும் அவரால் எதை மாற்ற முடிந்ததாம்? இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, கோதையின் முகத்திலேயே ஒரு ஸ்கூல் ஷூ வந்து விழுந்தது.
“டேய் குமரா...” ருக்மணி குரல் கொடுக்க,
“வேலைக்காரி வேலையை ஒழுங்கா பார்க்கறாளா? இல்லையான்னு கவனிக்கறதை விட நீ என்ன புடுங்கிட்டு இருக்க? அவ செய்யலையா? நீ செய்... இப்போவே எனக்கு அந்த ஷூவை பாலிஷ் போட்டுக் கொடு...” கோதையின் மகன் குமரன் அத்தனை அதிகாரமாக பேசினான்.
“என்னடா சொன்ன?” என்ற கோதை அவனை அடிக்கப் போக, அவளது கரத்தை தடுத்துப் பிடித்தான்.
“இந்த அடிக்கற வேலை எல்லாம் வச்சுக்காத... சொன்னதை செய்” என்றவன் அலட்சியமாக சொல்லிச் சென்றான். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?
“அத்த... என்ன பேசிட்டுப் போறான் பார்த்தீங்களா? இவனும் இந்த வீட்டு வாரிசாவே மாறிட்டான்” கோதையின் குரலில் அத்தனை வலி, வேதனை. தகப்பன் செய்வதைப் பார்த்தே வளர்பவன், அதைவிட அவன் அடங்காமல் எதையாவது செய்து, அதை வேலவனிடம் சொன்னால், ‘என் மகன், என் வாரிசு அப்படித்தான் இருப்பான். அவன் இஷ்டத்துக்கு விடு’ எனச் சொல்லி உரம் ஏற்றிவிட்டான்.
இப்பொழுது அதன் பலனை எல்லாம் அறுவடை செய்யத் துவங்கி இருந்தார்கள். இந்த பதினான்கு, பதினைந்து வயதுக்கே தன் வகுப்புத் தோழிகளிடம் எல்லாம் தவறாக பேசுகிறான் என புகார் வரத் துவங்கி இருந்தது.
இவன் அடுத்ததாக எதை இழுத்துக்கொண்டு வருவானோ? என்பதுதான் கோதையின் இப்போதைய பயமே. “நாம வாங்கி வந்த வரம் அப்படி. இவங்களை எல்லாம் அடக்கி வைக்க ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்? அவன் வருவான்... வந்து இவங்களை எல்லாம் அடக்குவான்” ருக்மணி ஆவேசமாகச் சொன்னார்.
அந்த நேரம் தேவதைகள் எல்லாம் ‘ததாஸ்து’ எனச் சொல்லிச் சென்றதை அவர் அறியவே இல்லை.
“பிறந்துட்டான் அத்த...” ஜெயந்தி சொல்ல, புரியாமல் அவளைப் பார்த்தார்.
“அதான்... நம்ம தீம் பார்க் விஷயம், எலக்ஷன் விஷயம், அந்த மால் விஷயம்.... கூடவே நம்ம ஏரியாவிலேயே இவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு வீடு வேற வாங்கி இருக்காரே மிஸ்டர் சர்வா, அவரைத்தான் சொல்றேன்” அவள் சொல்ல, மற்ற இரு பெண்களின் கண்களும் ஒளிர்ந்தது.
“நீ நிஜமாத்தான் சொல்றியா? கெட்டவங்கள்ள யார் நல்ல கெட்டவன்னு தேடற நிலையில்தான் நாம இருக்கோம்” கோதை வேதனையாகச் சொன்னாள்.
“நம்ம வைஷாலியைப் பார்க்க நான் அன்னைக்குப் போயிருந்தேனே, அவதான் சொன்னா. அவர் நல்லவரா கெட்டவரான்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு விஷயம் ரொம்ப உறுதியா தெரியும், அது... பெண்கள் விஷயத்தில் அவர் நெருப்பு மாதிரியானவர்.
“இது வரைக்கும் அவரைப்பற்றி ஒரு சின்ன கிசுகிசு கூட வந்தது இல்லை. அதோட அவர் தன்னை நல்லவன்னு இதுவரை சொன்னதே இல்லை. நான் கெட்டவன், ஆனா கேடுகெட்டவன் இல்லைன்னுதான் சொல்லி இருக்கார்” அவள் சொல்ல, இவர்களுக்கு பெருமூச்சு எழுந்தது.
“இவங்களை எல்லாம் நல்லவங்களால் தண்டிக்கவே முடியாதுன்னு நான் சொல்லிட்டு வந்தேன்” ஜெயந்தி சொல்ல, மற்றவர்களுக்கு எல்லாம் நம்பிக்கையே இல்லை.
“அவ இன்னொரு விஷயம் சொன்னா” ஜெயந்தி குரலைத் தழைத்துக் கொள்ள, அனைவரும் ஆர்வமானார்கள்.
“அது என்னன்னா... அந்த சர்வா அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி இருக்கார். முத்துப்பாண்டி கூட அவளோட கல்யாணம் நடக்கவே செய்யாதுன்னு அவ அவ்வளவு உறுதியா சொல்றா. எனக்குத்தான் அதை நம்பறதா வேண்டாமான்னு தெரியலை” ஜெயந்தி தங்களைச் சுற்றிலும் ஒரு பயப்பார்வை பார்த்துக் கொண்டாள்.
தாங்கள் பேசுவது வேலைக்காரர்கள் காதில் விழுந்து, அது பெரிய தலையின் காதுக்குச் சென்றால் தங்கள் நிலை என்னவாகும் என உதறலாக இருந்தது. “எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” ருக்மணி சொல்ல, இவர்கள் ஆச்சரியமானார்கள்.
“எப்படி அத்தை சொல்றீங்க?” மற்றவர்கள் கேட்டார்கள்.
“அவன் இவ்வளவு செய்தும், இவங்களால் அவனை தொடவாவது முடிந்ததா? அதைவிட, வைஷாலியை அவ வீட்டுக்குள் இருந்தே தூக்கி, ஒரு வாரம் அவளை மறைச்சு வச்சு இருந்திருக்கான். இவங்களோட மொத்த படையும் திரண்டும் எதுவும் கண்டு பிடிக்க முடியலையே. நான் அதை வச்சுத்தான் சொல்றேன்” ருக்மணி அழுத்திச் சொல்ல, மற்றவர்களுக்கும் சிறு நம்பிக்கை பிறந்தது.
அடுத்து வந்த இரண்டு மாதங்கள் எப்படிக் கடந்தது எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. வைஷாலி அவள் ஊருக்கே சென்றுவிட்டாள். இன்னும் பதினைந்து நாட்களில் அவளுக்குத் திருமணம் என முடிவாகி இருக்க, அந்த வேலைகள் எல்லாம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது.
வைஷாலி கொஞ்சம் கூட கவலையற்று இருந்தாள். சர்வஜித் தன் சவாலில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவான் என அவளுக்கு மலையளவு நம்பிக்கை இருந்தது. இத்தனைக்கும் அவளை வீட்டுச் சிறையில்தான் வைத்து இருந்தான் அந்த முத்துப்பாண்டி.
அதற்கும் அவள் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. அவளுக்கு உடை வாங்க, ஜேக்கட் தைக்க, நகை வாங்க என ரத்னா அத்தனை அலப்பறைகள் கூட்டினாள். எதற்கும் கொஞ்சம் கூட அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை.
முதலில் எல்லாம் இந்த திருமணமே வேண்டாம் என முரண்டு பிடித்திக் கொண்டிருந்த மகள், இப்பொழுது அமைதியாகிவிட, ரத்னாவை கையில் பிடிக்க முடியவில்லை. அதுவும் தன் பிறந்த வீட்டில் கோபால் அவளுக்கு முழு ஆதரவாக இருக்க, அவள் சொல்வதுதான் அங்கே என்றாகிப் போனது.
“என்னம்மா ரத்னா, மருமக ஏதும் பிரச்சனை பண்றாளா?” கோபால் தங்கையிடம் கேட்டான்.
“அவ வேண்டாம் வேண்டாம்னு சொன்னது எல்லாம் சும்மா அண்ணே. இப்போ புடவை செலெக்ட் பண்றது என்ன? நகை வாங்கறது என்ன? ஜேக்கட்டுக்கு டிஸைன் சொல்றது என்ன? எனக்கே ஆச்சரியம் தான்” அவள் சிலாகிக்க கோபாலுக்குமே அவ்வளவு சந்தோசம்.
ரத்னா பேசுவதைக் கேட்ட கோதை, “அக்கா, நாம எல்லாம் தெரியாமல் இந்த பாழும் கிணற்றில் வந்து விழுந்தோம். ஆனா இந்த பொம்பளை தெரிஞ்சு வச்சுகிட்டே இப்படிச் செய்யுதே. அதுக்கு எப்படிக்கா மனசு வருது? இதுதான் நிஜமாவே வைஷாலியைப் பெத்துதா?” ஆற்றாமையாகக் கேட்டாள்.
“எல்லாம் இந்த அதிகார போதையும், ‘தான்’ என்ற அகங்காரமும் கொடுக்கற திமிர் போதைதான் வேற என்ன? பொண்ணோட வாழ்க்கையோ, அவ சந்தோஷமோ முக்கியம்னு கொஞ்சமாவது நினைப்போ, அக்கறையோ இருந்தா இந்த பொம்பளை இப்படிச் செய்யுமா?” ஜெயந்தியும் புலம்பினாள்.
“ஹையோ அத்த...” கோதை... ருக்மணியைப் பார்த்துவிட்டு தன் வாயை கப்பென மூடிக் கொண்டாள். ருக்மணிக்கும் இந்த திருமணத்தில் அத்தனை விருப்பமில்லை என்றாலும், தன் மகனைப்பற்றி குறைவாக அவர் முன்பே பேசுவதைக் கேட்டால் அவருக்கு வலிக்கத்தானே செய்யும்?
எப்பொழுது முத்துப்பாண்டியோடு வைஷாலியின் திருமணம் முடிவானதோ அப்பொழுதே தன் மகனிடம் பேசினார். கை உடைந்து, அது முழுதாக சரியாகாமல் கொஞ்சம் கஷ்டப்படும் மகனைப் பார்க்க வருத்தமாகவே இருந்தது.
தாயைப் பார்த்தவுடன், “என்னம்மா... என்னைத் தேடி வந்திருக்க? என்ன விஷயம்?” கொஞ்சம் கூட மரியாதையின்றியே கேட்டான். தாய் எதைப்பற்றி தன்னிடம் பேச வந்திருப்பார் என தெரிந்தது போலவே அவனது பேச்சு இருந்தது.
“பாண்டி... நான் பேசப்போற விஷயம் உனக்குப் பிடிக்காதுதான்...” ருக்மணி தயக்கமாகத் துவங்க,
“அப்போ பேசாத...” கத்தரித்து பேசினான்.
“நான் உன்னைப் பெத்தவடா...”.
“அதுக்கு இப்போ உன் கால்ல விழுந்து தொழணுமா? உன் சந்தோஷத்துக்கு நீ பெத்துட்டு, என்னவோ பெரிய தியாகி மாதிரி பேசற? நீ பேசறதை எல்லாம் எனக்கு கேட்க நேரமில்லை. கல்யாண வேலை தலைக்கு மேலே கிடக்கு” எங்கேயோ வெளியே செல்ல கிளம்பியவாறே பேசினான்.
அவனது பேச்சில் அந்த தாயுள்ளம் கொஞ்சம் கூசிப் போனது. ஆனாலும் மகனிடம் பேச வந்ததை சொல்லிவிட முடிவெடுத்தார்.
“வைஷாலி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவளுக்கு வேண்டியாவது நீ கொஞ்சம் மாறணும். உன் கெட்ட சகவாசத்தை எல்லாம் விட்டுடு. இனிமேலாவது அவளுக்கு ஏத்தவனா மாறுப்பா” கெஞ்சலாகவே சொன்னார்.
“இதோ பார்... என் இஷ்டப்படிதான் நான் இருப்பேன். சாப்பாட்டிலேயே வெரைட்டியை எதிர்பார்க்கறவன் நான். என்கிட்டே வந்துட்டு என்ன பேசிகிட்டு இருக்க நீ? அவ நல்லவளா? நீ பாத்தியா? எவன் கூடவோ போய் ஒரு வாரம் இருந்துட்டு வந்தவதான் அந்த நல்லவ. நீ எனக்கு பாடம் எடுத்துகிட்டு இருக்க.
“பெத்தவன்னு கூடப் பார்க்காமல் ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன் போய்டு. அவளை விட்டு வச்சிருக்கறதே அத்தைக்காகத்தான். இல்லன்னா என்னைக்கோ அவளை தூக்கிட்டு போய் சிதைக்க எனக்கு எவ்வளவு நேரமாகி இருக்கும்?
“அதோட அவ மேல கொஞ்சமே கொஞ்சம் ஆசை வச்சிருக்கேன். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவளைக் காலம் முழுக்க கூடவே வச்சிருந்து அனுபவிக்கணும்னு ஆசைப்படறேன். மற்றபடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
“எனக்கு பொண்ணு கொடுக்க எத்தனை MLA, MP வீட்ல இருந்து கேட்கறாங்கன்னு உனக்குத் தெரியுமா? நீ என்னவோ திருந்தணும், மாறணும்னு பாடம் எடுத்துகிட்டு இருக்க? உன் மரியாதையை நீ காப்பாத்திகிட்டா உனக்கு நல்லது... போய்டு...” அவன் பேச வெறுத்துப் போய்விட்டார்.
அதற்கு மேலே அவனிடம் பேசுவதும், பாறாங்கல்லில் முட்டிக் கொள்வதும் ஒன்று எனப் புரிய அங்கிருந்து கிளம்பினார். “எனக்கு எவளையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைப்ப தானே, அது இவ தான்னு நினைச்சுக்கோ...” அவன் சொல்ல, ருக்மணிக்கு மனதே விட்டுப் போனது.
தன் மூத்த இரு மகன்களும்கூட, திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்றுதான் நினைத்தார். திருந்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எல்லாம் கானல் நீராகிப் போனது. தன் கணவனைப் பார்த்துதானே மகன்கள் வளர்ந்தார்கள். அப்படி இருக்கையில், வேப்பமரத்திடம், வாழைப்பழத்தை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் என அவருக்குப் புரிந்தது.
ருக்மணி ஒரு மாதிரி சோர்வாகத் தெரிய, “என்ன ஆச்சு அத்த? உடம்பு எதுவும் சரியில்லையா?” ஜெயந்தி கவலையாகக் கேட்டாள்.
“எனக்கு எதுவும் இல்லை... இந்த உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ?” என்றவருக்கு, ‘வைஷாலிக்காகவாவது அவன் மாறலாம்’ என ஏக்கமாக இருந்தது.
“எதுக்கு அத்த இப்படில்லாம் பேசறீங்க? எங்களுக்கு ஆதரவா, ஆறுதலா இருக்கறது நீங்க மட்டும்தான்” கோதை சொல்ல, ருக்மணிக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. தன் மருமக்களின் நிலைக்கும், அவரது நிலைக்கும் பெரிதாக எந்த மாறுதலும் கிடையாது.
கோபால் வயது மூப்பின் காரணமாக தன் சேட்டைகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டாரே தவிர, தன் மகன்களின் வயதில் கோபால் ஆடாத ஆட்டமா? இப்பொழுதும் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்டம் போடத்தானே செய்கிறார்.
இத்தனை வருடமாகியும் அவரால் எதை மாற்ற முடிந்ததாம்? இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, கோதையின் முகத்திலேயே ஒரு ஸ்கூல் ஷூ வந்து விழுந்தது.
“டேய் குமரா...” ருக்மணி குரல் கொடுக்க,
“வேலைக்காரி வேலையை ஒழுங்கா பார்க்கறாளா? இல்லையான்னு கவனிக்கறதை விட நீ என்ன புடுங்கிட்டு இருக்க? அவ செய்யலையா? நீ செய்... இப்போவே எனக்கு அந்த ஷூவை பாலிஷ் போட்டுக் கொடு...” கோதையின் மகன் குமரன் அத்தனை அதிகாரமாக பேசினான்.
“என்னடா சொன்ன?” என்ற கோதை அவனை அடிக்கப் போக, அவளது கரத்தை தடுத்துப் பிடித்தான்.
“இந்த அடிக்கற வேலை எல்லாம் வச்சுக்காத... சொன்னதை செய்” என்றவன் அலட்சியமாக சொல்லிச் சென்றான். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?
“அத்த... என்ன பேசிட்டுப் போறான் பார்த்தீங்களா? இவனும் இந்த வீட்டு வாரிசாவே மாறிட்டான்” கோதையின் குரலில் அத்தனை வலி, வேதனை. தகப்பன் செய்வதைப் பார்த்தே வளர்பவன், அதைவிட அவன் அடங்காமல் எதையாவது செய்து, அதை வேலவனிடம் சொன்னால், ‘என் மகன், என் வாரிசு அப்படித்தான் இருப்பான். அவன் இஷ்டத்துக்கு விடு’ எனச் சொல்லி உரம் ஏற்றிவிட்டான்.
இப்பொழுது அதன் பலனை எல்லாம் அறுவடை செய்யத் துவங்கி இருந்தார்கள். இந்த பதினான்கு, பதினைந்து வயதுக்கே தன் வகுப்புத் தோழிகளிடம் எல்லாம் தவறாக பேசுகிறான் என புகார் வரத் துவங்கி இருந்தது.
இவன் அடுத்ததாக எதை இழுத்துக்கொண்டு வருவானோ? என்பதுதான் கோதையின் இப்போதைய பயமே. “நாம வாங்கி வந்த வரம் அப்படி. இவங்களை எல்லாம் அடக்கி வைக்க ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்? அவன் வருவான்... வந்து இவங்களை எல்லாம் அடக்குவான்” ருக்மணி ஆவேசமாகச் சொன்னார்.
அந்த நேரம் தேவதைகள் எல்லாம் ‘ததாஸ்து’ எனச் சொல்லிச் சென்றதை அவர் அறியவே இல்லை.
“பிறந்துட்டான் அத்த...” ஜெயந்தி சொல்ல, புரியாமல் அவளைப் பார்த்தார்.
“அதான்... நம்ம தீம் பார்க் விஷயம், எலக்ஷன் விஷயம், அந்த மால் விஷயம்.... கூடவே நம்ம ஏரியாவிலேயே இவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு வீடு வேற வாங்கி இருக்காரே மிஸ்டர் சர்வா, அவரைத்தான் சொல்றேன்” அவள் சொல்ல, மற்ற இரு பெண்களின் கண்களும் ஒளிர்ந்தது.
“நீ நிஜமாத்தான் சொல்றியா? கெட்டவங்கள்ள யார் நல்ல கெட்டவன்னு தேடற நிலையில்தான் நாம இருக்கோம்” கோதை வேதனையாகச் சொன்னாள்.
“நம்ம வைஷாலியைப் பார்க்க நான் அன்னைக்குப் போயிருந்தேனே, அவதான் சொன்னா. அவர் நல்லவரா கெட்டவரான்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு விஷயம் ரொம்ப உறுதியா தெரியும், அது... பெண்கள் விஷயத்தில் அவர் நெருப்பு மாதிரியானவர்.
“இது வரைக்கும் அவரைப்பற்றி ஒரு சின்ன கிசுகிசு கூட வந்தது இல்லை. அதோட அவர் தன்னை நல்லவன்னு இதுவரை சொன்னதே இல்லை. நான் கெட்டவன், ஆனா கேடுகெட்டவன் இல்லைன்னுதான் சொல்லி இருக்கார்” அவள் சொல்ல, இவர்களுக்கு பெருமூச்சு எழுந்தது.
“இவங்களை எல்லாம் நல்லவங்களால் தண்டிக்கவே முடியாதுன்னு நான் சொல்லிட்டு வந்தேன்” ஜெயந்தி சொல்ல, மற்றவர்களுக்கு எல்லாம் நம்பிக்கையே இல்லை.
“அவ இன்னொரு விஷயம் சொன்னா” ஜெயந்தி குரலைத் தழைத்துக் கொள்ள, அனைவரும் ஆர்வமானார்கள்.
“அது என்னன்னா... அந்த சர்வா அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி இருக்கார். முத்துப்பாண்டி கூட அவளோட கல்யாணம் நடக்கவே செய்யாதுன்னு அவ அவ்வளவு உறுதியா சொல்றா. எனக்குத்தான் அதை நம்பறதா வேண்டாமான்னு தெரியலை” ஜெயந்தி தங்களைச் சுற்றிலும் ஒரு பயப்பார்வை பார்த்துக் கொண்டாள்.
தாங்கள் பேசுவது வேலைக்காரர்கள் காதில் விழுந்து, அது பெரிய தலையின் காதுக்குச் சென்றால் தங்கள் நிலை என்னவாகும் என உதறலாக இருந்தது. “எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” ருக்மணி சொல்ல, இவர்கள் ஆச்சரியமானார்கள்.
“எப்படி அத்தை சொல்றீங்க?” மற்றவர்கள் கேட்டார்கள்.
“அவன் இவ்வளவு செய்தும், இவங்களால் அவனை தொடவாவது முடிந்ததா? அதைவிட, வைஷாலியை அவ வீட்டுக்குள் இருந்தே தூக்கி, ஒரு வாரம் அவளை மறைச்சு வச்சு இருந்திருக்கான். இவங்களோட மொத்த படையும் திரண்டும் எதுவும் கண்டு பிடிக்க முடியலையே. நான் அதை வச்சுத்தான் சொல்றேன்” ருக்மணி அழுத்திச் சொல்ல, மற்றவர்களுக்கும் சிறு நம்பிக்கை பிறந்தது.