பகுதி – 24.
சர்வஜித்துக்கும், வைஷாலிக்கும் திருமணம் முடிந்து முழுதாக மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருந்தது. வைஷாலியும், விசாலாட்சியும் இப்பொழுது கன்னியாகுமரி பங்களாவில்தான் இருந்தார்கள். அங்கே இருந்த ‘மால்’லை முழுதாக வைஷாலியின் பொறுப்பில் விட்டிருந்தான்.
அவளுக்குத் துணையாக ரூபியும், அவளது கணவன் ஹரீஷும் எப்பொழுதும் அவளுடனே இருந்தார்கள். ரூபி, ஹரீஷின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. அதுவும் வைஷாலியின் முயற்சியால் மட்டுமே அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகி இருந்தது.
சர்வஜித் தன்னவளை தேனிலவுப் பயணத்துக்கு என அழைத்துச் சென்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் பல நாடுகளை அவளுக்கு சுற்றிக் காட்டினான். அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டான்.
“உனக்கு எந்த நாட்டுக்குப் போகணும்?” அவன் கேட்டு வைக்க,
“நீங்கதான் ரொம்ப வித்தியாசமான ஆள் ஆச்சே... என்னை சர்ப்ரைஸ் பண்ணுங்க. உங்களுக்கு என்னை அவ்வளவு தூரம் சர்ப்ரைஸ் பண்ண முடியுதுன்னு நானும் பார்க்கறேன்” அவள் அவனைச் சீண்டவென்றே சொன்னாள்.
அதற்குப் பின் நடந்தவை எல்லாம்... அவள் யோசிக்கையிலேயே அங்கே வந்தாள் ரூபி. “ஷாலு... மால்’க்கு கிளம்பலாமா?” இருவருக்கும் இந்த அட்மின் வேலை புதியது என்றாலும், சீக்கிரமே பழகிக் கொண்டார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யத்தான் பலர் இருந்தார்களே. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வேலை பழக கடினமா என்ன? நூற்றைம்பது கடைகள், ஐந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள். ஒரு தளம் முழுக்கவே ப்ளே ஏரியா என அவர்கள் கவனிக்க நிறையவே இருந்தது.
கடைகளில் வரும் பிரச்சனைகளை அவர்கள் சமாளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும், தியேட்டர் அனைத்தும் சர்வஜித்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதை கவனிக்க மேனேஜர், சூப்பர்வைசர், கார்ட்ஸ் என இருந்தாலும், சில நேரம் இவர்களே நேரடியாக தலையிட வேண்டிய அவசியமும் இருந்தது.
“கிளம்பலாம் ரூபி... இன்னைக்கு காலையிலேயே ஒரு கம்ப்ளெயின்ட்” புலம்பலாகச் சொன்னாள்.
“இப்போவா? என்னவாம்?” ரூபி சலிப்பாக கேட்டாள். அங்கே வரும் நிறைய பிரச்சனைகள் கோபாலின் கையாட்களால் மட்டுமே வந்தது. அதையும் ஹரீஷ் அங்கே இருப்பதால் வெகு சுலபமாகவே கையாண்டு கொண்டிருந்தார்கள்.
“சீட்டுக்கு அடியில் எலி ஓடுச்சாம்?” வைஷாலி சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.
“அதுக்கு ஏன்டி இப்படி சிரிக்கற?” புரியாமல் கேட்டாள்.
“இல்ல அந்த ஃபோன் வரும்போது ஹரீஷ் இங்கேதான் இருந்தாங்களா, அவங்ககிட்டே ஃபோனைக் கொடுத்துட்டேன். அவர் டீல் பண்ணார் பார்... செம ‘ஏ’ யா போச்சு” அவள் கண்ணடிக்க, ரூபி அவனை சூடாகப் பார்த்தாள்.
“உன் முன்னாடியேவா பேசினார்?” சின்னக் குரலில் கேட்டவள், அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள். ஹரீஷ் புருவம் நெரிய அவளைப் பார்த்தவன், குழப்பமாக வைஷாலியையும் ஒரு பார்வை பார்த்தான்.
“லூசே என் முன்னாடி அப்படி பேசுவாரா? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவர் மறைவாகத்தான் போய் பேசினார், நான்தான் அவங்களை இவர் எப்படி டீல் பண்றார்ன்னு தெரிஞ்சுக்க வேண்டி மறைந்து இருந்து ஒட்டுக் கேட்டேன். ஆனால் என் காதே கூசிப் போச்சுன்னா பார்த்துக்கோ” சின்னக் குரலில் சொல்லி இன்னுமே சிரித்தாள்.
“என் மானத்தை வாங்கணும்னே இவர் இதெல்லாம் பண்றார்” கடுகடுவென சொன்னாள்.
“அவர் உன் மானத்தை வாங்கறாரா?” வைஷாலி ஒரு மாதிரி குரலில் கேட்டு கண்ணடிக்க, குப்பென சிவந்து போனாள்.
“ஷாலு... ப்ளீஸ்டி... அதை எல்லாம் மறந்துடு” கெஞ்சினாள்.
“எதை மறக்கச் சொல்ற? நாங்க ஹனிமூன் போயிட்டு வந்த மறு நாள் என்னைப் பார்க்க வந்தவ செய்யற வேலையாடி அது?” அடிக்குரலில் கேட்டாள்.
“கர்த்தரே... அது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு...” சொல்லிக் கொண்டே வந்தவள், வைஷாலி பார்த்த பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
“ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்ட தான்” அவள் இன்னுமே பேச, அவள் இடுப்பில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஸ்... ஆ...” இடுப்பை தேய்த்துக் கொண்டவாறே அவள் அலற, விசாலாட்சி அங்கே வந்துவிட்டார்.
“அடடா... ரெண்டுபேரும் சேர்ந்தால் சின்னப்பிள்ளைகள் மாதிரி அடிச்சுக்க வேண்டியது. ஆளுக்கு ரெண்டு பிள்ளை பெத்துக்கற வயசாவுது, இன்னும் என்ன கிள்ளி விளையாடிகிட்டு இருக்கீங்க?” கோபமே இல்லாத குரலில் கோபம் காட்டினார்.
அவரது பேச்சில் இரு பெண்களுமே ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். “அத்த, எனக்கு சீனியர் இவ இருக்கா. நீங்க என்ன என்னையும் இவ கூட கூட்டு சேர்க்கறீங்க?” ரூபி சொல்ல, இப்பொழுது அவள் இடுப்பை வைஷாலி கிள்ளி வைத்தாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது... ரெண்டுபேரும் சீக்கிரமே பேரன் பேத்தியை பெத்துத் தர்ற வழியைப் பாருங்க. இப்போ உங்களுக்கு நேரமாகல? கிளம்பிப் போங்க...” அவர்களை விரட்டினார்.
ஹரீஷும், ரூபியும் கூட ஒன்றாக அவர்கள் வீட்டிலேயே தனிப் போர்ஷனில்தான் இருந்தார்கள். அந்த பங்களாவின் பக்கவாட்டில் விருந்தினர் அறைகள் என தனியாக இருக்க, அங்கேதான் இவர்கள் இருந்தார்கள்.
ஹரீஷ் தான் தனியாக வீடு பார்த்துக் கொள்வதாகச் சொன்ன பொழுது விசாலாட்சி தான் அதை அனுமதிக்கவில்லை. “உனக்கு இருபத்திநாலு மணி நேரமும் இவங்களோட இங்கேதான் வேலை. உன் பொண்டாட்டி வைஷாலி கூட வேலை பார்க்கப் போறா. இதில் தனியா எங்கே போற? எதுவும் வேண்டாம்...” அவர் முடிவாகச் சொல்லிவிட்டார்.
ஹரீஷும், ரூபியும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அனுமதிக்கவே இல்லை. “உனக்கு தனியா வாழ்க்கையை அனுபவிக்கணும், எங்க கூட இருந்தால் அது டிஸ்டப் ஆகும்னு நீ நினைச்சா தாராளமா போ, நான் உன்னைத் தடுக்கலை” என்றவர் சென்றுவிட, அதற்கு மேலே அவர்கள் எங்கே போக? அதுவும் பெற்ற தாய்க்கு இணையாக அவர் பாசம் காட்ட, ஹரீஷ் அவரைவிட்டுச் செல்ல நினைக்கவே இல்லை.
பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஹரீஷ் கிளம்ப முயல, “அச்சோ... ஃபோனை ரூமிலேயே விட்டுட்டேன். எடுத்துட்டு வர்றேன்” என்றவள் செல்ல, தன்னவளை ஹரீஷ் பிடித்துக் கொண்டான்.
“என்னை எதுக்கு முறைச்ச?” என்றவாறே காரின் மறுபக்கம் அவளை இழுத்துச் சென்றான்.
“ஃபோன்ல பேசும்போது அக்கம் பக்கம் பார்த்து பேச மாட்டீங்க? அதுவும் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி இருக்கீங்க?” அவள் கோபமாக கேட்க, அவனோ அவள் இதழில் பட்டென முத்தம் வைத்தான்.
“வெளியே வச்சு என்ன காரியம் பண்றீங்க?” ரூபி பதற, அவனோ மீண்டும் முத்தமிட, இந்தமுறை அவன் அவளைவிட்டு விலக மறுத்தான்.
“போகலாம்...” என்ற அவளது குரலில் பதறி அவனைத் தள்ளிவிட்டவள், தோழியின் அருகே வந்தாள். அவர்கள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். ஹரீஷின் பார்வை தன்னவளை தொட்டு மீள, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என்பதுபோல் அவளோ விழிகளை உருட்டினாள்.
அவனோ அதைக் கண்டு கண்களால் சிரிக்க, ரூபி வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அங்க அருகில் இருந்த வைஷாலி அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, இவளோ பிடிபட்ட உணர்வில் விழித்தாள்.
“நீயாடி இது?” வைஷாலி தோழியிடம் கேட்டாள்.
‘மறுபடியும் இவகிட்டேயா சிக்கணும்?’ என நொந்து போனாள். அதே நேரம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்தது அவள் நினைவுக்கு வந்தது. வைஷாலியின் திருமணத்திற்குப் பிறகு, அவள் தேனிலவு சென்றுவிட ரூபி கொஞ்சம் தனிமையில் தவித்துப் போனாள்.
கூடவே சர்வஜித் ஹரீஷை தன் கண் முன்னால் வைத்து அடித்த பிறகு, ஹரீஷ் அவளை விட்டு கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டான். வைஷாலி ஊருக்குச் சென்றுவிட்ட பிறகு, அந்த பதினைந்து நாட்களில் ஹரீஷிடம் பேச எவ்வளவோ முயன்றாள்.
ஆனால் அதற்கு அவன் சந்தர்ப்பம் வழங்கவே இல்லை. இதற்கு இடையில் அவளுக்கு திருமணத்தை முடித்தே ஆகவேண்டும் என அவளது அப்பா ராமராஜன் சொல்லத் துவங்கி இருந்தார். கூடவே அவர் வரன்களை வேறு பார்க்க, தவித்துப் போனாள்.
அவள் ஹரீஷைக் காணாமலே போயிருந்தால் எப்படியோ? கண்டுவிட்ட பிறகும் அவன் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் எப்படியோ? ஆனால் அவன் தன்னிடம் நெருங்கி வருவதுபோல் இருக்க, அவள் மனதுக்குள் அத்தனை சலனம்.
அவன் தன்னிடம் எதையோ பேச நினைத்தானே, அது என்னவென்று முழுதாக கேட்டுவிடுவது என முடிவெடுத்தாள். வைஷாலியும் இங்கே இருந்து செல்லும் முன்னர் அவளிடம் அதைத்தான் அழுத்திச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
“உன்னால் அவரை மறக்க முடியாது ரூபி. அவரை மறந்துட்டேன்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க. அப்படி மறந்திருந்தால் உங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கிறேன் எனச் சொன்ன உடனேயே அதற்கு நீ சம்மதம் சொல்லி இருப்ப. இப்படி தவிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்க மாட்ட.
“அவரோட அத்தியாயத்துக்கு முழுசா ஒரு முடிவைக் கட்டாமல், மேலோட்டமா இருக்கும் இந்த கோபத்தை புடிச்சு வச்சுட்டு வாழ்க்கை முழுக்க கஷ்டப்படாத ரூபி. ஒருத்தர் மேலே நம்ம மனசு போயிடுச்சுன்னா, அந்த நினைப்பு நம்ம உயிர் உள்ள வரைக்கும் மறையாது.
சர்வஜித்துக்கும், வைஷாலிக்கும் திருமணம் முடிந்து முழுதாக மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருந்தது. வைஷாலியும், விசாலாட்சியும் இப்பொழுது கன்னியாகுமரி பங்களாவில்தான் இருந்தார்கள். அங்கே இருந்த ‘மால்’லை முழுதாக வைஷாலியின் பொறுப்பில் விட்டிருந்தான்.
அவளுக்குத் துணையாக ரூபியும், அவளது கணவன் ஹரீஷும் எப்பொழுதும் அவளுடனே இருந்தார்கள். ரூபி, ஹரீஷின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. அதுவும் வைஷாலியின் முயற்சியால் மட்டுமே அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகி இருந்தது.
சர்வஜித் தன்னவளை தேனிலவுப் பயணத்துக்கு என அழைத்துச் சென்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் பல நாடுகளை அவளுக்கு சுற்றிக் காட்டினான். அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டான்.
“உனக்கு எந்த நாட்டுக்குப் போகணும்?” அவன் கேட்டு வைக்க,
“நீங்கதான் ரொம்ப வித்தியாசமான ஆள் ஆச்சே... என்னை சர்ப்ரைஸ் பண்ணுங்க. உங்களுக்கு என்னை அவ்வளவு தூரம் சர்ப்ரைஸ் பண்ண முடியுதுன்னு நானும் பார்க்கறேன்” அவள் அவனைச் சீண்டவென்றே சொன்னாள்.
அதற்குப் பின் நடந்தவை எல்லாம்... அவள் யோசிக்கையிலேயே அங்கே வந்தாள் ரூபி. “ஷாலு... மால்’க்கு கிளம்பலாமா?” இருவருக்கும் இந்த அட்மின் வேலை புதியது என்றாலும், சீக்கிரமே பழகிக் கொண்டார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யத்தான் பலர் இருந்தார்களே. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வேலை பழக கடினமா என்ன? நூற்றைம்பது கடைகள், ஐந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள். ஒரு தளம் முழுக்கவே ப்ளே ஏரியா என அவர்கள் கவனிக்க நிறையவே இருந்தது.
கடைகளில் வரும் பிரச்சனைகளை அவர்கள் சமாளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும், தியேட்டர் அனைத்தும் சர்வஜித்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதை கவனிக்க மேனேஜர், சூப்பர்வைசர், கார்ட்ஸ் என இருந்தாலும், சில நேரம் இவர்களே நேரடியாக தலையிட வேண்டிய அவசியமும் இருந்தது.
“கிளம்பலாம் ரூபி... இன்னைக்கு காலையிலேயே ஒரு கம்ப்ளெயின்ட்” புலம்பலாகச் சொன்னாள்.
“இப்போவா? என்னவாம்?” ரூபி சலிப்பாக கேட்டாள். அங்கே வரும் நிறைய பிரச்சனைகள் கோபாலின் கையாட்களால் மட்டுமே வந்தது. அதையும் ஹரீஷ் அங்கே இருப்பதால் வெகு சுலபமாகவே கையாண்டு கொண்டிருந்தார்கள்.
“சீட்டுக்கு அடியில் எலி ஓடுச்சாம்?” வைஷாலி சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.
“அதுக்கு ஏன்டி இப்படி சிரிக்கற?” புரியாமல் கேட்டாள்.
“இல்ல அந்த ஃபோன் வரும்போது ஹரீஷ் இங்கேதான் இருந்தாங்களா, அவங்ககிட்டே ஃபோனைக் கொடுத்துட்டேன். அவர் டீல் பண்ணார் பார்... செம ‘ஏ’ யா போச்சு” அவள் கண்ணடிக்க, ரூபி அவனை சூடாகப் பார்த்தாள்.
“உன் முன்னாடியேவா பேசினார்?” சின்னக் குரலில் கேட்டவள், அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள். ஹரீஷ் புருவம் நெரிய அவளைப் பார்த்தவன், குழப்பமாக வைஷாலியையும் ஒரு பார்வை பார்த்தான்.
“லூசே என் முன்னாடி அப்படி பேசுவாரா? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவர் மறைவாகத்தான் போய் பேசினார், நான்தான் அவங்களை இவர் எப்படி டீல் பண்றார்ன்னு தெரிஞ்சுக்க வேண்டி மறைந்து இருந்து ஒட்டுக் கேட்டேன். ஆனால் என் காதே கூசிப் போச்சுன்னா பார்த்துக்கோ” சின்னக் குரலில் சொல்லி இன்னுமே சிரித்தாள்.
“என் மானத்தை வாங்கணும்னே இவர் இதெல்லாம் பண்றார்” கடுகடுவென சொன்னாள்.
“அவர் உன் மானத்தை வாங்கறாரா?” வைஷாலி ஒரு மாதிரி குரலில் கேட்டு கண்ணடிக்க, குப்பென சிவந்து போனாள்.
“ஷாலு... ப்ளீஸ்டி... அதை எல்லாம் மறந்துடு” கெஞ்சினாள்.
“எதை மறக்கச் சொல்ற? நாங்க ஹனிமூன் போயிட்டு வந்த மறு நாள் என்னைப் பார்க்க வந்தவ செய்யற வேலையாடி அது?” அடிக்குரலில் கேட்டாள்.
“கர்த்தரே... அது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு...” சொல்லிக் கொண்டே வந்தவள், வைஷாலி பார்த்த பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
“ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்ட தான்” அவள் இன்னுமே பேச, அவள் இடுப்பில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஸ்... ஆ...” இடுப்பை தேய்த்துக் கொண்டவாறே அவள் அலற, விசாலாட்சி அங்கே வந்துவிட்டார்.
“அடடா... ரெண்டுபேரும் சேர்ந்தால் சின்னப்பிள்ளைகள் மாதிரி அடிச்சுக்க வேண்டியது. ஆளுக்கு ரெண்டு பிள்ளை பெத்துக்கற வயசாவுது, இன்னும் என்ன கிள்ளி விளையாடிகிட்டு இருக்கீங்க?” கோபமே இல்லாத குரலில் கோபம் காட்டினார்.
அவரது பேச்சில் இரு பெண்களுமே ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். “அத்த, எனக்கு சீனியர் இவ இருக்கா. நீங்க என்ன என்னையும் இவ கூட கூட்டு சேர்க்கறீங்க?” ரூபி சொல்ல, இப்பொழுது அவள் இடுப்பை வைஷாலி கிள்ளி வைத்தாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது... ரெண்டுபேரும் சீக்கிரமே பேரன் பேத்தியை பெத்துத் தர்ற வழியைப் பாருங்க. இப்போ உங்களுக்கு நேரமாகல? கிளம்பிப் போங்க...” அவர்களை விரட்டினார்.
ஹரீஷும், ரூபியும் கூட ஒன்றாக அவர்கள் வீட்டிலேயே தனிப் போர்ஷனில்தான் இருந்தார்கள். அந்த பங்களாவின் பக்கவாட்டில் விருந்தினர் அறைகள் என தனியாக இருக்க, அங்கேதான் இவர்கள் இருந்தார்கள்.
ஹரீஷ் தான் தனியாக வீடு பார்த்துக் கொள்வதாகச் சொன்ன பொழுது விசாலாட்சி தான் அதை அனுமதிக்கவில்லை. “உனக்கு இருபத்திநாலு மணி நேரமும் இவங்களோட இங்கேதான் வேலை. உன் பொண்டாட்டி வைஷாலி கூட வேலை பார்க்கப் போறா. இதில் தனியா எங்கே போற? எதுவும் வேண்டாம்...” அவர் முடிவாகச் சொல்லிவிட்டார்.
ஹரீஷும், ரூபியும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அனுமதிக்கவே இல்லை. “உனக்கு தனியா வாழ்க்கையை அனுபவிக்கணும், எங்க கூட இருந்தால் அது டிஸ்டப் ஆகும்னு நீ நினைச்சா தாராளமா போ, நான் உன்னைத் தடுக்கலை” என்றவர் சென்றுவிட, அதற்கு மேலே அவர்கள் எங்கே போக? அதுவும் பெற்ற தாய்க்கு இணையாக அவர் பாசம் காட்ட, ஹரீஷ் அவரைவிட்டுச் செல்ல நினைக்கவே இல்லை.
பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஹரீஷ் கிளம்ப முயல, “அச்சோ... ஃபோனை ரூமிலேயே விட்டுட்டேன். எடுத்துட்டு வர்றேன்” என்றவள் செல்ல, தன்னவளை ஹரீஷ் பிடித்துக் கொண்டான்.
“என்னை எதுக்கு முறைச்ச?” என்றவாறே காரின் மறுபக்கம் அவளை இழுத்துச் சென்றான்.
“ஃபோன்ல பேசும்போது அக்கம் பக்கம் பார்த்து பேச மாட்டீங்க? அதுவும் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி இருக்கீங்க?” அவள் கோபமாக கேட்க, அவனோ அவள் இதழில் பட்டென முத்தம் வைத்தான்.
“வெளியே வச்சு என்ன காரியம் பண்றீங்க?” ரூபி பதற, அவனோ மீண்டும் முத்தமிட, இந்தமுறை அவன் அவளைவிட்டு விலக மறுத்தான்.
“போகலாம்...” என்ற அவளது குரலில் பதறி அவனைத் தள்ளிவிட்டவள், தோழியின் அருகே வந்தாள். அவர்கள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். ஹரீஷின் பார்வை தன்னவளை தொட்டு மீள, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என்பதுபோல் அவளோ விழிகளை உருட்டினாள்.
அவனோ அதைக் கண்டு கண்களால் சிரிக்க, ரூபி வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அங்க அருகில் இருந்த வைஷாலி அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, இவளோ பிடிபட்ட உணர்வில் விழித்தாள்.
“நீயாடி இது?” வைஷாலி தோழியிடம் கேட்டாள்.
‘மறுபடியும் இவகிட்டேயா சிக்கணும்?’ என நொந்து போனாள். அதே நேரம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்தது அவள் நினைவுக்கு வந்தது. வைஷாலியின் திருமணத்திற்குப் பிறகு, அவள் தேனிலவு சென்றுவிட ரூபி கொஞ்சம் தனிமையில் தவித்துப் போனாள்.
கூடவே சர்வஜித் ஹரீஷை தன் கண் முன்னால் வைத்து அடித்த பிறகு, ஹரீஷ் அவளை விட்டு கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டான். வைஷாலி ஊருக்குச் சென்றுவிட்ட பிறகு, அந்த பதினைந்து நாட்களில் ஹரீஷிடம் பேச எவ்வளவோ முயன்றாள்.
ஆனால் அதற்கு அவன் சந்தர்ப்பம் வழங்கவே இல்லை. இதற்கு இடையில் அவளுக்கு திருமணத்தை முடித்தே ஆகவேண்டும் என அவளது அப்பா ராமராஜன் சொல்லத் துவங்கி இருந்தார். கூடவே அவர் வரன்களை வேறு பார்க்க, தவித்துப் போனாள்.
அவள் ஹரீஷைக் காணாமலே போயிருந்தால் எப்படியோ? கண்டுவிட்ட பிறகும் அவன் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் எப்படியோ? ஆனால் அவன் தன்னிடம் நெருங்கி வருவதுபோல் இருக்க, அவள் மனதுக்குள் அத்தனை சலனம்.
அவன் தன்னிடம் எதையோ பேச நினைத்தானே, அது என்னவென்று முழுதாக கேட்டுவிடுவது என முடிவெடுத்தாள். வைஷாலியும் இங்கே இருந்து செல்லும் முன்னர் அவளிடம் அதைத்தான் அழுத்திச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
“உன்னால் அவரை மறக்க முடியாது ரூபி. அவரை மறந்துட்டேன்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க. அப்படி மறந்திருந்தால் உங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கிறேன் எனச் சொன்ன உடனேயே அதற்கு நீ சம்மதம் சொல்லி இருப்ப. இப்படி தவிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்க மாட்ட.
“அவரோட அத்தியாயத்துக்கு முழுசா ஒரு முடிவைக் கட்டாமல், மேலோட்டமா இருக்கும் இந்த கோபத்தை புடிச்சு வச்சுட்டு வாழ்க்கை முழுக்க கஷ்டப்படாத ரூபி. ஒருத்தர் மேலே நம்ம மனசு போயிடுச்சுன்னா, அந்த நினைப்பு நம்ம உயிர் உள்ள வரைக்கும் மறையாது.