பகுதி – 18.
தென்றலுக்கு அன்று அலுவலகம் வந்தது முதல், இதயம் கிடந்து அடித்துக் கொண்டது. கடந்த இரண்டு நாட்களாக அவள் இங்கே இருக்கிறாள் தான்... அப்பொழுது அங்கே பிரபஞ்சன் இருக்கவில்லை. இன்று அவன் ஊரில் இருந்து வருகிறான்... அவனை எதிர்கொள்ளத்தான் முடியாமல் நடுங்கினாள்.
அவளது தயக்கத்தைப் பார்த்த பார்வதி, “இன்னைக்கு வேண்ணா லீவ் போட்டுடேன்” அவளிடம் சொல்ல, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளது தகப்பனோ, “அங்கே வேலைக்குப் போகணும்னு என்ன அவசியம் வந்தது? உன் கம்பெனி இருக்கு... வா... வந்து வேலையை கத்துக்கோ, எனக்கும் உதவியா இருக்கும்” அவர் சொல்ல, அதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
‘இவருக்கு இன்னும் புத்தி வரலையே... எப்போ வரப் போகுதோ?’ எண்ணிய பார்வதி மகளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.
பத்து மணி அலுவலகத்துக்கு, ஒன்பதுமணிக்கே அவள் வந்து சேர, அங்கே இருந்த வாட்ச்மேன் அவளை வித்தியாசமாகப் பார்த்தவாறு, அலுவலகத்தின் கதவைத் திறந்து விட்டார்.
அங்கே தியாகு, தக்ஷன், தன்யஸ்ரீ என மூவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். உடன்... பிரபஞ்சன், ஷீபாவும் இருக்க, தென்றல் அங்கே புதியவள். அப்படி இருக்கையில், அவள் சீக்கிரம் வந்திருக்கவே செக்யூரிட்டிக்கு வியப்பு.
அவர்களது அலுவலகம், ஒரு தனி வில்லாவை விலைக்கு வாங்கி, கீழ்த்தளம் முழுமைக்கும் கண்ணாடித் தடுப்புகள், பார்ட்டிஷன் மட்டுமே செய்திருந்தான். ஒரு வரவேற்பறை, ஒரு உள் அறை அங்கேதான் பிரபஞ்சனும், ஷீபாவும் இருப்பார்கள்.
சிறியதாக ஒரு காபி அறை, அதை ஒட்டி... ஃபயில்களை எல்லாம் வைக்கும் அறையும் இருந்தது. மேலே மாடியில் என்ன இருக்கிறது என அவளுக்கு இன்று வரைக்கும் தெரியாது.
தன் சீட்டில் சென்று அமர்ந்தவள், கணினியை இயக்கி... சில கணக்கு வழக்குகளைப் பார்க்கத் துவங்கினாள்.
திடுமென அவளது அலைபேசி இசைக்கவே, தூக்கி வாரிப் போட அதிர்ந்தவள், பிறகு தெளிந்து அழைப்பை ஏற்றாள்.
“அண்ணி... சொல்லுங்க...” அவள் குரல் கொடுக்கவே,
“ரஞ்சன் வந்துட்டான் தென்றல்... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன். நீ ஆபீஸ்க்கு கிளம்பிட்டியா?”.
“நான் ஆபீஸ்லதான் அண்ணி இருக்கேன்...”.
“ஓ... இவ்வளவு சீக்கிரமாவா? டென்ஷனா இருக்கறியா என்ன?” அவளது குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டுகொண்டாள்.
“ஆமா அண்ணி, கொஞ்சம்...” அவள் சொன்ன விதத்தில் நிவேதிதாவுக்குப் பாவமாக இருந்தது.
“அட, இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்கலாமா? நாங்களே அவன்கிட்டே பேசலாம்ன்னா, அதுக்கு அவன் விடவே மாட்டேங்கறான். கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா பேசறேன்” அவளுக்கு தைரியம் சொன்னாள்.
“இல்ல அண்ணி, நீங்க சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கறேன்... என்னால் முடியலன்னா கண்டிப்பா உங்ககிட்டே கேட்கறேன்”.
“அப்படின்னா சரி, அவன் கொஞ்சம் கோபமா இருக்கான் அவ்வளவுதான். மற்றபடி அவனால் உன்னை வெறுக்க முடியாது”.
“ம்... புரியுது அண்ணி... ஆனாலும் ரொம்ப கோபமா இருக்காங்களா?” அவளுக்கு அதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தடுமாறினாள்.
“தென்றல்... கல்யாணம் ஆனதுக்குப் பிறகு, புருஷனோட கோபத்துக்கெல்லாம் பயப்படக் கூடாது. நாமளும் சரியான நேரம் பதிலடி கொடுக்க கத்துக்கணும்... விடு, இதெல்லாம் நீயும் சீக்கிரமே கத்துப்ப” சொன்னவள், மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள்.
நேரம் கடந்துகொண்டே இருக்க, முக்கால்மணி நேரம் கடந்த பிறகு அங்கே வந்தான் தியாகு.
“ஹாய் தென்றல்... என்ன சீக்கிரமே வந்துட்டீங்க போல? அப்படி என்ன வேலை இருக்கு?” கேட்டவன் அவள் அருகே வந்து நிற்க, இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“அட, என்ன இது... எதுக்கு இவ்வளவு மரியாதை? சும்மா உக்காந்துட்டே பதில் சொல்லுங்க” அவன் சொல்ல, அவளது பார்வையோ, அவனைக் கடந்து, அவன் முதுகின் பின்னால் பாய்ந்தது.
“நான் கேட்டா, எனக்கு பதில் சொல்லாமல் அங்கே யாரைப் பார்க்கறீங்க?” கேட்டவன், அங்கே பிரபஞ்சனைப் பார்த்துவிட்டு,
“குட் மார்னிங் சார்...” அவன் வேகமாக சொல்ல, அவனுக்கு தலையை அசைத்தவனின் பார்வை மொத்தமும் தென்றல் மீதுதான்.
“என்னசார் அப்படிப் பார்க்கறீங்க? புதுசா நம்ம ஷீபா மேடம் தான் அப்பாயின்மென்ட் பண்ணாங்க. ரிசப்ஷன் ப்ளஸ் டேட்டா என்ட்ரி எல்லாம் பார்க்கறதுக்கு. பேர் தென்றல்...” அவன் சொல்ல, தென்றலோ விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“ஓ... உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா?” அவன் அவளிடம் நின்று பேசியது அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
“இதோ கிளம்பிட்டேன் சார்...” அவன் வேகமாக அங்கிருந்து செல்ல, தென்றல் அவனையே பார்த்திருக்க, அவளைக் கடந்து தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
உள்ளே கார்பன் பேப்பர் ஒட்டியிருக்க, அவனது பார்வையோ அவளைத்தான் தழுவிக் கொண்டிருந்தது.
‘இவ இங்கே என்ன பண்றா? ஷீபா எதுவும் சொல்லவே இல்லை?’ எண்ணியவன் அவளுக்கு அழைக்க நினைத்து, அவள் வந்துகொண்டிருப்பாள் என்பதால் அதைக் கைவிட்டான்.
‘அவ வரட்டும் கேப்போம்.... என்ன எல்லாரும் சேர்ந்து ப்ளே பண்றாங்களா?’ தென்றல் இங்கே வேலைக்கு வருகிறாள் என்றால், ஷீபாவுக்கு அவளை நேரடியாகத் தெரியாது. நிச்சயம் நிவேதிதா கேட்டு, அப்படித்தான் இது நடந்திருக்கும் என அவனுக்கு நொடியில் புரிந்து போனது.
‘அவன்கிட்டே அவளுக்கு என்ன பேச்சு?’ ஒரு அலுவலகத்தில், ஒன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில் பேச்சு என்பது வெகு இயல்பான விஷயம் என்றாலும், அவனிடம் அவள் பேசவில்லை என்ற கோபத்தில் நினைப்புகள் எல்லாம் அபாயம் தான்.
ஒரு ஜீன்ஸ், குர்தாவில் வெகு சாதாரணமாக நின்றவளை அவனது கண்கள் ரசித்துப் பார்த்தது. அவளது சுருட்டை முடி, ஒரு பேண்டுக்குள் அடங்கி இருக்க, அந்த குண்டு கண்களோ அவனது அறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
தென்றலுக்கோ, உடனடியாக அவனிடம் பேச ஆசை உந்தித் தள்ளியது. அவன் வந்தவுடன் எப்படி அங்கே சென்று நிற்பது என அவளுக்குப் புரியவில்லை.
அவள் தன் அறையைப் பார்ப்பதும், கணினித் திரையை வெறிப்பதுமாக இருக்க, அவனுக்குள் ஒரு உற்சாக ஊற்றும், சிறு கோபமும் ஒருங்கே எழுந்தது.
‘என்னைத் தேடி வந்திருக்கா... அவ அப்பனை தாண்டி வந்திருக்கா’ அந்த நினைப்பே பெரும் சந்தோஷத்தை அளிக்க, ‘இன்னும் வெளியே நிக்கறா...’ அவள் விலகி நிற்பது அவனுக்கு கோபத்தை அளித்தது.
அவள் கையைப் பிசைந்தவாறு இருக்க, ஷீபா அங்கே வந்தாள்.
“ஷீபா...” உள்ளே செல்லப் போனவளை அழைக்க, அவள் அருகே வந்தாள்.
“காலையிலேயே ஷீபாவுக்கு என்ன வச்சிருக்க? அவன் வந்துட்டானா? பேசினியா? பேசினானா?” அவளிடம் கேட்க,
“அவங்க வந்த உடனே ரூமுக்குள்ளே போய்ட்டாங்க”.
“ரூம் என்ன அண்டார்ட்டிக்காவிலேயா இருக்கு, இதோ இருக்கு, விஷ் பண்ற சாக்கில் போய், கரெக்ட் பண்றது தான?” அவள் கேட்க,
“ஆமா... இது ஏன் எனக்குத் தோணலை?” அவள் வருத்தமாக கேட்க, “சுத்தம்...” ஷீபா சத்தமாக சலித்தவள்,
“எது... கரெக்ட் பண்றதா?” ஷீபா சற்று கடுப்பாக கேட்க,
“ம்ஹும்... விஷ் பண்றது...” அவள் வேகமாக சொல்லவே, பக்கென சிரித்தாள்.
“கிழிஞ்சுது... நான் கரெக்ட் பண்ண ஐடியா கொடுத்தா, இவ விஷ் பண்றதுக்கு எடுக்கறா பார்... நீ தேற மாட்ட... சரி, நான் போய் அவன்கிட்டே வாங்கிக் கட்டிக்கறேன்” சொன்னவள், தன் லேப்ட்டாப் பேகை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
“குட் மார்னிங் பாஸ்...” ஷீபா விஷ் செய்தவாறே உள்ளே வர, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“விஷ் பண்ணா, பதிலுக்கு விஷ் பண்ணணும்... இப்படி முறைச்சா?” கேட்டவாறே, அவனைத் தாண்டிச் சென்றவள், அவனுக்கு பக்கத்தில், இடப்பக்கம் அவனைப் பார்த்துப் போட்டிருந்த சைட் டேபிளில் சென்று அமர்ந்தாள்.
“என்ன பண்ணி வச்சிருக்கங்க? எதுக்கு இப்போ அவளை வேலைக்கு எடுத்த? எனக்குப் பிடிக்கலை....” அவன் கத்த, அதை அவள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.
“புடிக்கலை... இங்கே நீதானே பாஸ்... நீயே அவளைப் போகச் சொல்லிடு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” சொன்னவள், தன் லேப்ட்டாப்பை எடுத்து, டேபிள்மேல் வைத்து அதை ஆன் செய்ய, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன போகல?” அவள் அவனைச் சீண்ட, டேபிள்மேல் இருந்த பிளாஸ்டிக் பேப்பர் வெயிட்டை தூக்கி அவள்மேல் வீசினான்.
அதை சரியாக கேட்ச் பிடித்தவள், “அதான் அவமேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கல்ல, பிறகு எதுக்கு இந்த கோபம்? போ... போய் பேசு...” அவள் சொல்ல, தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“நான் பேசவேண்டியது எல்லாம் பேசியாச்சு... இனிமேல் அவ பேசட்டும்” சொன்னவனது குரல் இறுகிக் கிடக்க, அதற்கு மேலே ஷீபா எதையும் பேசவில்லை.
சில பல நிமிடங்கள் அமைதியில் கழிய, “இப்போ கூட அவ வரலை பார்...” அவன் குறைபட,
“அவதான் வந்திருக்கா... உனக்கு அது தெரியல?” அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவள் சொல்ல, அவனோ, தென்றலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அப்படி அவளை நான் என்ன பண்ணிடுவேனாம்?” அவனிடம் தென்றல் பேச வராமல் போக, புலம்பித் தள்ளினான். அவளைப் பார்த்தவுடன், அவள்மேல் இருந்த கோபமெல்லாம் எங்கே சென்று ஒளிந்துகொண்டது என்றே அவனுக்குத் தெரியவில்லை.
“அதெப்படி எனக்குத் தெரியும்?” அவள் குறும்பாக பதில் கொடுக்க, அவளை முறைக்க முயன்று தோற்றான்.
“என்னை இப்படி புலம்ப விடத்தான் அவளை இங்கே கூட்டி வந்தியா?”.
“மூணு மாசமா நீ எப்படி இருக்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தன்னா, இப்படி என்கிட்டே கேட்க மாட்ட” சொன்னவள் அவனை அத்தனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“மூணு மாசத்துக்குப் பிறகு இப்போதான் நீ பேசற... அது தெரியுமா?” கேட்டவள், அவனையே பார்த்திருக்க, அவன் எங்கே அவளைப் பார்த்தானாம்?
அவன் பார்வையைக் கண்டவள், “டேய்... நான் பாவம்டா... பேச ஆசையா இருக்குன்னா போய் பேசு. மாடிக்கு கூட கூட்டி போ, உன்னை யார் வேண்டாம்னு சொன்னா?” அவன் இப்படி மருகுவது அவளுக்குப் பாவமாக இருந்தது.
“இதுக்கு பதில் நான் அப்போவே சொல்லிட்டேன்” சொன்னவன், தன் வேலைக்குத் திரும்பினான்.
‘இந்த தென்றல் ஏன் இப்படி இருக்கா?’ அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது. அன்று முழுவதும், அவள் தன்னிடம் வந்து பேசுவாள் என அவன் காத்திருக்க, அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
அலுவலக விஷயமாக அங்கிருந்த மற்றவர்களை அழைத்துப் பேசுவதும், வேலை வாங்குவதுமாக அவன் இருக்க, தென்றலுக்கு அவனை எப்படி அணுகுவது என சுத்தமாகத் தெரியவில்லை.
மதியம் கிச்சனில் அமர்ந்து அனைவரும் ஒன்றாக உண்ண, பிரபஞ்சன் மட்டும் அங்கே வரவில்லை.
தன் அருகே அமர்ந்திருந்த ஷீபாவிடம், “அவங்க சாப்பிட வரலையா?” அவளிடம் கேட்க,
“அவன் வீட்டுக்கு போய் சாப்ட்டுட்டு, அப்படியே கொஞ்சம் வெளியே போய்ட்டு வருவான். நீ சாப்பிடு...” அவள் சொல்ல, அமைதியாக தன் உணவைக் கொறித்தாள்.
அவனிடம் பேசச் சொல்லி, மனம் உந்தித் தள்ளிக் கொண்டிருக்க, அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இவள் சாப்பிட்டுவிட்டு வரும் முன்னர், அவன் கிளம்பிச் சென்றிருக்க, சற்று சோர்ந்தாள்.
மாலையில் அனைவரும் கிளம்பிச் செல்கையில் அவன் மீண்டும் அலுவலகம் வர, அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
தென்றலும் தன் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, “உன்னை யார் இங்கே வரச் சொன்னா? எதுக்கு வேண்டி வந்த?” அவன் கோபமாக கத்த, கையில் இருந்த ஃபயில் எல்லாம் சிதறி கீழே விழ, அவன் கோபத்தில் மிரண்டாள்.
“அது... நான்...” காலைமுதல் அவனிடம் பேசத் தவித்தவளுக்கு, அவனது கோபம் கண்டு வார்த்தை தடுமாறியது.
“என் உயிரை வாங்கன்னே அந்த ஆண்டவன் உன்னைப் படைச்சான் போல...” அவள் தன்னிடம் பேசாத கோபத்தை, அவன் இப்படியாக கொட்டிக் கவிழ்க்க, அவளுக்கோ கண்ணீர் கடகடவென கன்னத்தில் இறங்கியது.
அவளது கண்ணீர் அவனை என்னவோ செய்ய, “ச்சே...” அதற்கு மேலே அவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
அவனது கோபக்குரலைக் கேட்டவாறு வெளியே வந்த ஷீபா, தென்றல் அழுவதைப் பார்த்துவிட்டு அவள் அருகே விரைந்தாள்.
“இவனோட... இப்போ எதுக்கு அழற தென்றல்?” சற்று சலிப்பும், கோபமும் கலந்து கேட்டாள்.
“அவங்க என்னைத் திட்டிட்டாங்க... எதுக்கு இங்கே வந்தன்னு கேட்கறாங்க” சொல்லிவிட்டு அவள் அழ,
தென்றலுக்கு அன்று அலுவலகம் வந்தது முதல், இதயம் கிடந்து அடித்துக் கொண்டது. கடந்த இரண்டு நாட்களாக அவள் இங்கே இருக்கிறாள் தான்... அப்பொழுது அங்கே பிரபஞ்சன் இருக்கவில்லை. இன்று அவன் ஊரில் இருந்து வருகிறான்... அவனை எதிர்கொள்ளத்தான் முடியாமல் நடுங்கினாள்.
அவளது தயக்கத்தைப் பார்த்த பார்வதி, “இன்னைக்கு வேண்ணா லீவ் போட்டுடேன்” அவளிடம் சொல்ல, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளது தகப்பனோ, “அங்கே வேலைக்குப் போகணும்னு என்ன அவசியம் வந்தது? உன் கம்பெனி இருக்கு... வா... வந்து வேலையை கத்துக்கோ, எனக்கும் உதவியா இருக்கும்” அவர் சொல்ல, அதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
‘இவருக்கு இன்னும் புத்தி வரலையே... எப்போ வரப் போகுதோ?’ எண்ணிய பார்வதி மகளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.
பத்து மணி அலுவலகத்துக்கு, ஒன்பதுமணிக்கே அவள் வந்து சேர, அங்கே இருந்த வாட்ச்மேன் அவளை வித்தியாசமாகப் பார்த்தவாறு, அலுவலகத்தின் கதவைத் திறந்து விட்டார்.
அங்கே தியாகு, தக்ஷன், தன்யஸ்ரீ என மூவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். உடன்... பிரபஞ்சன், ஷீபாவும் இருக்க, தென்றல் அங்கே புதியவள். அப்படி இருக்கையில், அவள் சீக்கிரம் வந்திருக்கவே செக்யூரிட்டிக்கு வியப்பு.
அவர்களது அலுவலகம், ஒரு தனி வில்லாவை விலைக்கு வாங்கி, கீழ்த்தளம் முழுமைக்கும் கண்ணாடித் தடுப்புகள், பார்ட்டிஷன் மட்டுமே செய்திருந்தான். ஒரு வரவேற்பறை, ஒரு உள் அறை அங்கேதான் பிரபஞ்சனும், ஷீபாவும் இருப்பார்கள்.
சிறியதாக ஒரு காபி அறை, அதை ஒட்டி... ஃபயில்களை எல்லாம் வைக்கும் அறையும் இருந்தது. மேலே மாடியில் என்ன இருக்கிறது என அவளுக்கு இன்று வரைக்கும் தெரியாது.
தன் சீட்டில் சென்று அமர்ந்தவள், கணினியை இயக்கி... சில கணக்கு வழக்குகளைப் பார்க்கத் துவங்கினாள்.
திடுமென அவளது அலைபேசி இசைக்கவே, தூக்கி வாரிப் போட அதிர்ந்தவள், பிறகு தெளிந்து அழைப்பை ஏற்றாள்.
“அண்ணி... சொல்லுங்க...” அவள் குரல் கொடுக்கவே,
“ரஞ்சன் வந்துட்டான் தென்றல்... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன். நீ ஆபீஸ்க்கு கிளம்பிட்டியா?”.
“நான் ஆபீஸ்லதான் அண்ணி இருக்கேன்...”.
“ஓ... இவ்வளவு சீக்கிரமாவா? டென்ஷனா இருக்கறியா என்ன?” அவளது குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டுகொண்டாள்.
“ஆமா அண்ணி, கொஞ்சம்...” அவள் சொன்ன விதத்தில் நிவேதிதாவுக்குப் பாவமாக இருந்தது.
“அட, இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்கலாமா? நாங்களே அவன்கிட்டே பேசலாம்ன்னா, அதுக்கு அவன் விடவே மாட்டேங்கறான். கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா பேசறேன்” அவளுக்கு தைரியம் சொன்னாள்.
“இல்ல அண்ணி, நீங்க சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கறேன்... என்னால் முடியலன்னா கண்டிப்பா உங்ககிட்டே கேட்கறேன்”.
“அப்படின்னா சரி, அவன் கொஞ்சம் கோபமா இருக்கான் அவ்வளவுதான். மற்றபடி அவனால் உன்னை வெறுக்க முடியாது”.
“ம்... புரியுது அண்ணி... ஆனாலும் ரொம்ப கோபமா இருக்காங்களா?” அவளுக்கு அதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தடுமாறினாள்.
“தென்றல்... கல்யாணம் ஆனதுக்குப் பிறகு, புருஷனோட கோபத்துக்கெல்லாம் பயப்படக் கூடாது. நாமளும் சரியான நேரம் பதிலடி கொடுக்க கத்துக்கணும்... விடு, இதெல்லாம் நீயும் சீக்கிரமே கத்துப்ப” சொன்னவள், மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள்.
நேரம் கடந்துகொண்டே இருக்க, முக்கால்மணி நேரம் கடந்த பிறகு அங்கே வந்தான் தியாகு.
“ஹாய் தென்றல்... என்ன சீக்கிரமே வந்துட்டீங்க போல? அப்படி என்ன வேலை இருக்கு?” கேட்டவன் அவள் அருகே வந்து நிற்க, இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“அட, என்ன இது... எதுக்கு இவ்வளவு மரியாதை? சும்மா உக்காந்துட்டே பதில் சொல்லுங்க” அவன் சொல்ல, அவளது பார்வையோ, அவனைக் கடந்து, அவன் முதுகின் பின்னால் பாய்ந்தது.
“நான் கேட்டா, எனக்கு பதில் சொல்லாமல் அங்கே யாரைப் பார்க்கறீங்க?” கேட்டவன், அங்கே பிரபஞ்சனைப் பார்த்துவிட்டு,
“குட் மார்னிங் சார்...” அவன் வேகமாக சொல்ல, அவனுக்கு தலையை அசைத்தவனின் பார்வை மொத்தமும் தென்றல் மீதுதான்.
“என்னசார் அப்படிப் பார்க்கறீங்க? புதுசா நம்ம ஷீபா மேடம் தான் அப்பாயின்மென்ட் பண்ணாங்க. ரிசப்ஷன் ப்ளஸ் டேட்டா என்ட்ரி எல்லாம் பார்க்கறதுக்கு. பேர் தென்றல்...” அவன் சொல்ல, தென்றலோ விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“ஓ... உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா?” அவன் அவளிடம் நின்று பேசியது அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
“இதோ கிளம்பிட்டேன் சார்...” அவன் வேகமாக அங்கிருந்து செல்ல, தென்றல் அவனையே பார்த்திருக்க, அவளைக் கடந்து தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
உள்ளே கார்பன் பேப்பர் ஒட்டியிருக்க, அவனது பார்வையோ அவளைத்தான் தழுவிக் கொண்டிருந்தது.
‘இவ இங்கே என்ன பண்றா? ஷீபா எதுவும் சொல்லவே இல்லை?’ எண்ணியவன் அவளுக்கு அழைக்க நினைத்து, அவள் வந்துகொண்டிருப்பாள் என்பதால் அதைக் கைவிட்டான்.
‘அவ வரட்டும் கேப்போம்.... என்ன எல்லாரும் சேர்ந்து ப்ளே பண்றாங்களா?’ தென்றல் இங்கே வேலைக்கு வருகிறாள் என்றால், ஷீபாவுக்கு அவளை நேரடியாகத் தெரியாது. நிச்சயம் நிவேதிதா கேட்டு, அப்படித்தான் இது நடந்திருக்கும் என அவனுக்கு நொடியில் புரிந்து போனது.
‘அவன்கிட்டே அவளுக்கு என்ன பேச்சு?’ ஒரு அலுவலகத்தில், ஒன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில் பேச்சு என்பது வெகு இயல்பான விஷயம் என்றாலும், அவனிடம் அவள் பேசவில்லை என்ற கோபத்தில் நினைப்புகள் எல்லாம் அபாயம் தான்.
ஒரு ஜீன்ஸ், குர்தாவில் வெகு சாதாரணமாக நின்றவளை அவனது கண்கள் ரசித்துப் பார்த்தது. அவளது சுருட்டை முடி, ஒரு பேண்டுக்குள் அடங்கி இருக்க, அந்த குண்டு கண்களோ அவனது அறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
தென்றலுக்கோ, உடனடியாக அவனிடம் பேச ஆசை உந்தித் தள்ளியது. அவன் வந்தவுடன் எப்படி அங்கே சென்று நிற்பது என அவளுக்குப் புரியவில்லை.
அவள் தன் அறையைப் பார்ப்பதும், கணினித் திரையை வெறிப்பதுமாக இருக்க, அவனுக்குள் ஒரு உற்சாக ஊற்றும், சிறு கோபமும் ஒருங்கே எழுந்தது.
‘என்னைத் தேடி வந்திருக்கா... அவ அப்பனை தாண்டி வந்திருக்கா’ அந்த நினைப்பே பெரும் சந்தோஷத்தை அளிக்க, ‘இன்னும் வெளியே நிக்கறா...’ அவள் விலகி நிற்பது அவனுக்கு கோபத்தை அளித்தது.
அவள் கையைப் பிசைந்தவாறு இருக்க, ஷீபா அங்கே வந்தாள்.
“ஷீபா...” உள்ளே செல்லப் போனவளை அழைக்க, அவள் அருகே வந்தாள்.
“காலையிலேயே ஷீபாவுக்கு என்ன வச்சிருக்க? அவன் வந்துட்டானா? பேசினியா? பேசினானா?” அவளிடம் கேட்க,
“அவங்க வந்த உடனே ரூமுக்குள்ளே போய்ட்டாங்க”.
“ரூம் என்ன அண்டார்ட்டிக்காவிலேயா இருக்கு, இதோ இருக்கு, விஷ் பண்ற சாக்கில் போய், கரெக்ட் பண்றது தான?” அவள் கேட்க,
“ஆமா... இது ஏன் எனக்குத் தோணலை?” அவள் வருத்தமாக கேட்க, “சுத்தம்...” ஷீபா சத்தமாக சலித்தவள்,
“எது... கரெக்ட் பண்றதா?” ஷீபா சற்று கடுப்பாக கேட்க,
“ம்ஹும்... விஷ் பண்றது...” அவள் வேகமாக சொல்லவே, பக்கென சிரித்தாள்.
“கிழிஞ்சுது... நான் கரெக்ட் பண்ண ஐடியா கொடுத்தா, இவ விஷ் பண்றதுக்கு எடுக்கறா பார்... நீ தேற மாட்ட... சரி, நான் போய் அவன்கிட்டே வாங்கிக் கட்டிக்கறேன்” சொன்னவள், தன் லேப்ட்டாப் பேகை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
“குட் மார்னிங் பாஸ்...” ஷீபா விஷ் செய்தவாறே உள்ளே வர, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“விஷ் பண்ணா, பதிலுக்கு விஷ் பண்ணணும்... இப்படி முறைச்சா?” கேட்டவாறே, அவனைத் தாண்டிச் சென்றவள், அவனுக்கு பக்கத்தில், இடப்பக்கம் அவனைப் பார்த்துப் போட்டிருந்த சைட் டேபிளில் சென்று அமர்ந்தாள்.
“என்ன பண்ணி வச்சிருக்கங்க? எதுக்கு இப்போ அவளை வேலைக்கு எடுத்த? எனக்குப் பிடிக்கலை....” அவன் கத்த, அதை அவள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.
“புடிக்கலை... இங்கே நீதானே பாஸ்... நீயே அவளைப் போகச் சொல்லிடு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” சொன்னவள், தன் லேப்ட்டாப்பை எடுத்து, டேபிள்மேல் வைத்து அதை ஆன் செய்ய, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன போகல?” அவள் அவனைச் சீண்ட, டேபிள்மேல் இருந்த பிளாஸ்டிக் பேப்பர் வெயிட்டை தூக்கி அவள்மேல் வீசினான்.
அதை சரியாக கேட்ச் பிடித்தவள், “அதான் அவமேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கல்ல, பிறகு எதுக்கு இந்த கோபம்? போ... போய் பேசு...” அவள் சொல்ல, தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“நான் பேசவேண்டியது எல்லாம் பேசியாச்சு... இனிமேல் அவ பேசட்டும்” சொன்னவனது குரல் இறுகிக் கிடக்க, அதற்கு மேலே ஷீபா எதையும் பேசவில்லை.
சில பல நிமிடங்கள் அமைதியில் கழிய, “இப்போ கூட அவ வரலை பார்...” அவன் குறைபட,
“அவதான் வந்திருக்கா... உனக்கு அது தெரியல?” அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவள் சொல்ல, அவனோ, தென்றலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அப்படி அவளை நான் என்ன பண்ணிடுவேனாம்?” அவனிடம் தென்றல் பேச வராமல் போக, புலம்பித் தள்ளினான். அவளைப் பார்த்தவுடன், அவள்மேல் இருந்த கோபமெல்லாம் எங்கே சென்று ஒளிந்துகொண்டது என்றே அவனுக்குத் தெரியவில்லை.
“அதெப்படி எனக்குத் தெரியும்?” அவள் குறும்பாக பதில் கொடுக்க, அவளை முறைக்க முயன்று தோற்றான்.
“என்னை இப்படி புலம்ப விடத்தான் அவளை இங்கே கூட்டி வந்தியா?”.
“மூணு மாசமா நீ எப்படி இருக்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தன்னா, இப்படி என்கிட்டே கேட்க மாட்ட” சொன்னவள் அவனை அத்தனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“மூணு மாசத்துக்குப் பிறகு இப்போதான் நீ பேசற... அது தெரியுமா?” கேட்டவள், அவனையே பார்த்திருக்க, அவன் எங்கே அவளைப் பார்த்தானாம்?
அவன் பார்வையைக் கண்டவள், “டேய்... நான் பாவம்டா... பேச ஆசையா இருக்குன்னா போய் பேசு. மாடிக்கு கூட கூட்டி போ, உன்னை யார் வேண்டாம்னு சொன்னா?” அவன் இப்படி மருகுவது அவளுக்குப் பாவமாக இருந்தது.
“இதுக்கு பதில் நான் அப்போவே சொல்லிட்டேன்” சொன்னவன், தன் வேலைக்குத் திரும்பினான்.
‘இந்த தென்றல் ஏன் இப்படி இருக்கா?’ அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது. அன்று முழுவதும், அவள் தன்னிடம் வந்து பேசுவாள் என அவன் காத்திருக்க, அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
அலுவலக விஷயமாக அங்கிருந்த மற்றவர்களை அழைத்துப் பேசுவதும், வேலை வாங்குவதுமாக அவன் இருக்க, தென்றலுக்கு அவனை எப்படி அணுகுவது என சுத்தமாகத் தெரியவில்லை.
மதியம் கிச்சனில் அமர்ந்து அனைவரும் ஒன்றாக உண்ண, பிரபஞ்சன் மட்டும் அங்கே வரவில்லை.
தன் அருகே அமர்ந்திருந்த ஷீபாவிடம், “அவங்க சாப்பிட வரலையா?” அவளிடம் கேட்க,
“அவன் வீட்டுக்கு போய் சாப்ட்டுட்டு, அப்படியே கொஞ்சம் வெளியே போய்ட்டு வருவான். நீ சாப்பிடு...” அவள் சொல்ல, அமைதியாக தன் உணவைக் கொறித்தாள்.
அவனிடம் பேசச் சொல்லி, மனம் உந்தித் தள்ளிக் கொண்டிருக்க, அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இவள் சாப்பிட்டுவிட்டு வரும் முன்னர், அவன் கிளம்பிச் சென்றிருக்க, சற்று சோர்ந்தாள்.
மாலையில் அனைவரும் கிளம்பிச் செல்கையில் அவன் மீண்டும் அலுவலகம் வர, அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
தென்றலும் தன் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, “உன்னை யார் இங்கே வரச் சொன்னா? எதுக்கு வேண்டி வந்த?” அவன் கோபமாக கத்த, கையில் இருந்த ஃபயில் எல்லாம் சிதறி கீழே விழ, அவன் கோபத்தில் மிரண்டாள்.
“அது... நான்...” காலைமுதல் அவனிடம் பேசத் தவித்தவளுக்கு, அவனது கோபம் கண்டு வார்த்தை தடுமாறியது.
“என் உயிரை வாங்கன்னே அந்த ஆண்டவன் உன்னைப் படைச்சான் போல...” அவள் தன்னிடம் பேசாத கோபத்தை, அவன் இப்படியாக கொட்டிக் கவிழ்க்க, அவளுக்கோ கண்ணீர் கடகடவென கன்னத்தில் இறங்கியது.
அவளது கண்ணீர் அவனை என்னவோ செய்ய, “ச்சே...” அதற்கு மேலே அவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
அவனது கோபக்குரலைக் கேட்டவாறு வெளியே வந்த ஷீபா, தென்றல் அழுவதைப் பார்த்துவிட்டு அவள் அருகே விரைந்தாள்.
“இவனோட... இப்போ எதுக்கு அழற தென்றல்?” சற்று சலிப்பும், கோபமும் கலந்து கேட்டாள்.
“அவங்க என்னைத் திட்டிட்டாங்க... எதுக்கு இங்கே வந்தன்னு கேட்கறாங்க” சொல்லிவிட்டு அவள் அழ,