பகுதி – 19.
தென்றல் அலுவலகத்தில் வந்து அமர்ந்தவள், தன் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், தன்னவன் எப்பொழுது வருவான் என புலன்கள் அனைத்தும் காத்துக்கொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்து காத்திருந்த அவனும் அங்கே வந்து சேர, சில பல நிமிடங்கள் காத்திருந்தவள், அவனது அறைக்கு எழுந்து சென்றாள்.
பிரபஞ்சன் அங்கிருந்த அலமாரியில் ஏதோ ஃபயிலை தேடிக் கொண்டிருக்க, “வா தென்றல்... என்ன அங்கேயே நின்னுட்ட?” ஷீபா அவளை அழைத்தாள்.
அவளது குரலில், பிரபஞ்சன் என்னவென திரும்பிப் பார்க்க, அங்கே ஷீபா அமர்ந்திருந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவனை நெருங்கியவள், அவனை சட்டென இறுக அணைத்துக் கொண்டாள்.
“ஏய்... தென்றல்...” தன் தோழியின் முன்னால் அவள் இப்படிச் செய்வாள் என எதிர்பாராத பிரபஞ்சன் சற்று பதறினான். அது அவளுக்கும் புரிந்தாலும், அவனது தென்றல் என்ற அழைப்பு மனதைப் பிசைய, அவனை இன்னும் இறுக்கினாள்.
“என்னை மன்னிச்சுடுங்க... நான் அப்படிப் பண்ணது உங்களை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு இப்போ புரியுது. ஐ’ம் சாரி...” அவள் சொல்ல, வேகமாக அவளை அகற்றி நிறுத்தினான்.
“இப்போ சாரி சொல்லத்தான் வந்தியா?” எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மனது, கோபத்தை கைக்கொண்டது.
“ம்... ஆமா... நான் செஞ்சது பெரிய தப்பு...” அவள் மன்னிப்பை வேண்ட, அவன் முகமோ அத்தனை கோபத்தை வெளிப்படுத்தியது.
“உன் சாரி இங்கே யாருக்கும் வேண்டாம்...”.
“உங்களுக்கு வேண்டாம்... ஆனா சாரி கேட்கலன்னா என்னால் நிம்மதியா இருக்க முடியாது. நான் அப்படிப் பண்ணதுக்கும் ஒரு காரணம் இருந்தது...” அவள் சொல்லிக்கொண்டே போக, கையைக் காட்டி அதை நிறுத்தினான்.
“எனக்கு இப்போ அதைக் கேட்கறதுக்கு நேரமில்லை... சாரி கேட்டுட்டல்ல, போ... போய் வேலையைப் பாரு...” அவன் சொன்ன விதத்திலேயே மிரண்டவள், வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டாள். நிஜத்தில் அவளுக்கு அவன் கோபத்தை எப்படி கையாள என்று தெரியவில்லை.
அவள் பிறந்தது முதலே, கொஞ்சி மட்டுமே வளர்க்கப்பட்டவள். அப்படி இருக்கையில் கோபத்தை முதல் முதலாக எதிர்கொள்கிறாள், மிரள்கிறாள்.
அவள் செல்லவே, “எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்?” ஷீபா அவனை முறைத்தாள்.
“அவ தேறமாட்டான்னு தெரிஞ்சும், அவளை எதிர்பார்க்கற என்னை நினைச்சு, என்மேலதான் எனக்கு கோபம்... வந்து சாரி சொல்றா பாத்தியா... எனக்கு...” அவன் கோபத்தை அடக்க போராட, அவளுக்குப் பாவமாக இருந்தது.
“அவளுக்குத் தெரியலடா... உன் மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு வாயைத் தொறந்துதான் அவகிட்டே சொல்லேன்...” அவள் அறிவுரை வழங்க,
“அவ அப்பன் நினைக்கறது மட்டும் எல்லாம் தெரிஞ்சது...” அவன் பிடிவாதம்பிடிக்கும் குழந்தையென அடம் பிடிக்க, அந்த காதலனின் முரட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
“ஸ்...சப்பா... என்னால உன்னோட போராட முடியாதுடா... எனக்கு ரொம்ப வேலை இருக்கு” சொன்னவள் தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.
‘அவங்களுக்கு அப்படி என்ன கோபம்? கொஞ்சமும் பொறுமையே இல்லை’ தென்றல் இப்படி எண்ண, அவனது பலவருட காத்திருப்பு அவளுக்குத் தெரியவில்லையா? புரியவில்லையா என்று கண்டுகொள்ள முடியவில்லை.
அன்று மதிய உணவுக்குப் பிறகு, ஷீபா வெளியே வேலையாகச் செல்ல, அவனிடம் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமின்றி, ஒரு ஃபயிலைத் தூக்கிக் கொண்டு, சந்தேகம் கேட்பதுபோல் அவனது அறைக்குச் சென்றாள்.
அவனோ, அவளைப் பார்த்தவுடன், இருக்கையில் இருந்து எழுந்து அறைக்கு வெளியே வந்து நிற்க, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“ஏன் இப்படிப் பண்றீங்க?” அவள் கலங்கிபோய் நிற்க,
“உனக்குத்தான் என்னோட தனியா இருக்க பயமாச்சே, அதான்... எல்லாம் நீ கத்து கொடுத்ததுதான்... நான் எதையும் புதுசா செய்யலை” அவன் சொல்ல,
“என் பயம் என்னன்னு நிஜமாவே உங்களுக்குத் தெரியுமா? புரியாமல் பேசாதீங்க” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, தக்ஷன் அங்கே வர, அவள் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.
தான் செய்துவைத்த அனர்த்தங்கள் எல்லாம், பூமராங்காக திரும்பி தன்னைத் தாக்கும் உணர்வு.
“எனக்கு ஒரு ஹால்ஃப் டே லீவ் வேணும்...” அவனிடம் சென்று நிற்க, அமைதியாக தலை அசைத்தான்.
‘அவளுக்கு என்கிட்டே வர இன்னும் என்ன தடை, தயக்கம் இருக்கு?’ அவனுக்கு அதுதான் புரியவில்லை.
அவளுக்குள் ஓடும் எண்ணங்கள் அவனுக்குத் தெரியாதே. அவளோ, தோழியருக்கு அழைத்தவள், அனைவரையும் பீச்சுக்கு வரச் சொல்ல, அவர்களும் கிளம்பி வந்தார்கள்.
“என்னடி அப்படி தலை போற அவசரம்? உடனே வாங்கன்னு சொன்ன?” எலினாவும், ஹதிஜாவும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.
“கொஞ்ச நேரம் எனக்கு எதையும் யோசிக்காமல் இருக்கணும்” அவள் சொல்ல, மற்றவர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.
“தென்றல்... எனக்கு உன்மேலதான் கோபம். உன் அப்பா இவ்வளவு செஞ்ச பிறகும், அவரை விட்டு போக எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? என்னதான் அப்பா செல்லம்ன்னாலும் இப்படியா?” எலினா படபடக்க, தென்றலிடம் ஒரு பெருத்த அமைதி.
“இன்னும் எதுக்குடி இப்படி இருந்து கஷ்டப்படற? எனக்கு சுத்தமா புரியலை. சொல்லப்போனா இப்படி கஷ்டப்பட அவசியமே இல்லைன்னு சொல்வேன்” அவள் பேசப் பேச, அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சார்கிட்டே, நான் உங்களோட வந்துடறேன்னு சொன்னா, எல்லாம் முடிஞ்சு போய்டும். உனக்கும் கஷ்டமில்லை, சாரும் சந்தோஷமா இருப்பாங்க” அவளது பேச்சு காதில் விழுந்தாலும், தென்றல் கடலையே வெறித்தாள்.
“உனக்கு சார்கிட்டே சொல்ல சங்கடமா இருந்தா, உன் அம்மாகிட்டே சொல்லு, இல்லையா உன் அண்ணிகிட்டே சொல்லு... எதுக்குடி இப்படி கஷ்டப்படணும்?” சற்று கோபமாகவே இரைந்தாள்.
“எலி, அவளைப்பத்திதான் உனக்குத் தெரியுமே... பேசி எதுக்கு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற?” ஹதிஜா அவளை அடக்கினாள்.
“நீ என்ன பேசற ஹதி? நான் இவளுக்காகத்தான் பேசறேன்”.
“அது எனக்குப் புரியுது, அவளுக்குப் புரிய வேண்டாமா? விடு... அதான் வேற பேச சொன்னாளே, பேசு...” அவளுக்குமே தென்றலின் செய்கையில் உடன்பாடு இல்லாமல் இருக்க, தன் கோபத்தை இப்படி காட்டினாள்.
“எல்லாம் நிமிஷத்தில் முடிஞ்சுடும் இல்ல... அவர் பட்ட கஷ்டம், பட்ட அவமானம், எல்லாம் நிமிஷத்தில் காணாமல் போய்டும்... அப்படியா?” அவள் பேச, இருவரும் விழித்தார்கள்.
“அவருக்காக நான் என்ன செஞ்சேன்? செஞ்சிருக்கேன்?” அவள் வெறித்த பார்வையாகவே கேட்க, இவர்களுக்குப் புரியவில்லை.
“அதுக்குத்தான்டி உன்னை போகச் சொல்றோம்...” அவர்கள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.
“அப்படிச் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்கலையே...” அவள் குரலில் இருந்த வேதனையில், தோழியர் இருவரும் அவளை அணைத்துக் கொண்டார்கள்.
“இதுக்கு என்னதான் முடிவு தென்றல்?” எலினா கேட்க,
“என் அப்பாவை மீறி, அவரைக் கடந்து அவருக்காக நான் ஏதாவது செய்யணும். அதுதான் நான் அவருக்குச் செய்யற நியாயமா இருக்கும்”.
“நீ சொல்றது புரியலை தென்றல்...”.
“என் அப்பாதான் எனக்கு ரொம்ப உசத்தி, அவருக்கு முன்னால் நான் அவரை ஏத்துக்க மாட்டேன், அவரை மீறி எதையும் செய்ய மாட்டேன்னு இவர் நினைக்கறார்.
“அது அப்படி இல்லை... என் அப்பாவை விட, எனக்கு அவரைத்தான் புடிக்கும்னு நான் அவருக்கு நிரூபிக்கணும். அது இப்படியே நான் அவர்கிட்டே போனா நடக்காது...” அவள் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தில் திகைத்தார்கள்.
“என்னடி சொல்ற? அவருக்கு நிரூபிச்சுத்தான் இந்த உறவை நீ புதுப்பிக்கணுமா? அதுவரைக்கும் உனக்கும் கஷ்டம் தானே...” எலினா வருத்தமானாள்.
“இல்ல... நான் அவர்கிட்டே பேசிடுவேன்...” அவள் நம்பிக்கையாக உரைக்க, அதற்கு மேலே அவளிடம் அவர்கள் எதையும் சொல்லவில்லை.
தோழியரின் கேலியும், அரட்டையும், கடல்நீரில் விளையாடுவதுமாக மீதி நேரத்தை அவர்கள் கழிக்க, இரவு உணவை முடித்த பிறகுதான் அவர்களது வீட்டுக்கே சென்றார்கள்.
சில பல மாதங்களுக்குப் பிறகு, தென்றலின் மனதில் ஒரு நிம்மதி விரவி இருந்தது. மறுநாள் அதே மனநிலையோடு அலுவலகம் வந்தவள், நேராக சென்று நின்றது பிரபஞ்சனிடம் தான்.
அவன் அவளை என்னவென நிமிர்ந்து பார்க்க, அவளோ ஷீபாவைப் பார்த்தாள்.
“டேய்... என்ன செய்வியோ தெரியாது, எனக்கு ஒரு புது ரூம், தனி ரூம் வேணும்... ஆமா...” படபடவென அவள் பொரிய, அவளை முறைத்தவன், தென்றலின் பக்கம் பார்த்தான்.
“அவங்க இருக்கட்டும், எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை” சொன்னவள், “ஐ லவ் யூ...” அவள் சொல்ல, ஷீபா பக்கென சிரித்து வைக்க, பிரபஞ்சனுக்குமே சிரிப்பு வந்து தொலைத்தது.
“ஏய், எழுந்து வெளியே போ...” அவன் ஷீபாவை விரட்ட முயல,
“இல்ல நான் போகலை... இது ரொம்ப சுவாரசியமா இருக்கும் போல...” வாய்விட்டு சிரித்தவாறே அவள் சொல்ல, அவனோ தென்றல் தன் காதலைச் சொன்னதில், அவனுக்குள் ஒரு மாதிரி திணறிப் போய் இருந்தான்.
“என்கிட்டே அடிதான் வாங்கப் போற... ஷீபா...” அவன் தன் தலையை அழுத்தமாக கோதியவாறு, தென்றலை விழுங்கும் பார்வை பார்த்தான்.
‘ஆத்தாடி... காமப் பார்வையாவுல்ல இருக்கு’ என உள்ளே அலறியவள், “நான் வெளியவே போறேன்டா...” ஷீபா சொல்ல,
“இல்ல நான் போறேன்...” என்ற தென்றல் வெளியே சென்றுவிட,
“பாவம்டா... உன்னை ரொம்ப மிஸ் பண்றா...” ஷீபா சொல்ல, அவன் மட்டும் அவளை மிஸ் செய்யவில்லையாமா?
அன்று அவளை எப்படியாவது தனிமையில் நிறுத்தி வைத்து பேசிவிடவேண்டும் என எண்ணியவன், தென்றலுக்கு வேலை கொடுக்க, அன்று தன்யஸ்ரீயும், தியாகுவும் முடிக்க வேண்டிய வேலை இருக்கவே அவர்களும் தாமதித்தார்கள்.
‘ச்சே... இதென்ன இப்படி ஆகுது...’ அவன் தனக்குள் புலம்பியவன், நேரமாகவே இரவு உணவுக்கு ஆர்டர் கொடுக்க எண்ணினான்.
“தியாகு, தன்யா டின்னருக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” அவர்களிடம் கேட்க, அவர்கள் வேண்டியதைச் சொல்லவே, தன்னவளைத் திரும்பிப் பார்த்தான்.
‘அவளுக்கு...’ என யோசிக்கையிலேயே,
“சார்... அவங்களுக்கு ‘நான்’ அண்ட் பன்னீர் கிரேவி சொல்லுங்க... தென்றலுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னாங்க” தியாகு சொல்ல,
“ஓ... அவங்களைப்பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, அதையெல்லாம் அவன் எங்கே கவனித்தானாம்?
தென்றல் அலுவலகத்தில் வந்து அமர்ந்தவள், தன் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், தன்னவன் எப்பொழுது வருவான் என புலன்கள் அனைத்தும் காத்துக்கொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்து காத்திருந்த அவனும் அங்கே வந்து சேர, சில பல நிமிடங்கள் காத்திருந்தவள், அவனது அறைக்கு எழுந்து சென்றாள்.
பிரபஞ்சன் அங்கிருந்த அலமாரியில் ஏதோ ஃபயிலை தேடிக் கொண்டிருக்க, “வா தென்றல்... என்ன அங்கேயே நின்னுட்ட?” ஷீபா அவளை அழைத்தாள்.
அவளது குரலில், பிரபஞ்சன் என்னவென திரும்பிப் பார்க்க, அங்கே ஷீபா அமர்ந்திருந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவனை நெருங்கியவள், அவனை சட்டென இறுக அணைத்துக் கொண்டாள்.
“ஏய்... தென்றல்...” தன் தோழியின் முன்னால் அவள் இப்படிச் செய்வாள் என எதிர்பாராத பிரபஞ்சன் சற்று பதறினான். அது அவளுக்கும் புரிந்தாலும், அவனது தென்றல் என்ற அழைப்பு மனதைப் பிசைய, அவனை இன்னும் இறுக்கினாள்.
“என்னை மன்னிச்சுடுங்க... நான் அப்படிப் பண்ணது உங்களை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு இப்போ புரியுது. ஐ’ம் சாரி...” அவள் சொல்ல, வேகமாக அவளை அகற்றி நிறுத்தினான்.
“இப்போ சாரி சொல்லத்தான் வந்தியா?” எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மனது, கோபத்தை கைக்கொண்டது.
“ம்... ஆமா... நான் செஞ்சது பெரிய தப்பு...” அவள் மன்னிப்பை வேண்ட, அவன் முகமோ அத்தனை கோபத்தை வெளிப்படுத்தியது.
“உன் சாரி இங்கே யாருக்கும் வேண்டாம்...”.
“உங்களுக்கு வேண்டாம்... ஆனா சாரி கேட்கலன்னா என்னால் நிம்மதியா இருக்க முடியாது. நான் அப்படிப் பண்ணதுக்கும் ஒரு காரணம் இருந்தது...” அவள் சொல்லிக்கொண்டே போக, கையைக் காட்டி அதை நிறுத்தினான்.
“எனக்கு இப்போ அதைக் கேட்கறதுக்கு நேரமில்லை... சாரி கேட்டுட்டல்ல, போ... போய் வேலையைப் பாரு...” அவன் சொன்ன விதத்திலேயே மிரண்டவள், வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டாள். நிஜத்தில் அவளுக்கு அவன் கோபத்தை எப்படி கையாள என்று தெரியவில்லை.
அவள் பிறந்தது முதலே, கொஞ்சி மட்டுமே வளர்க்கப்பட்டவள். அப்படி இருக்கையில் கோபத்தை முதல் முதலாக எதிர்கொள்கிறாள், மிரள்கிறாள்.
அவள் செல்லவே, “எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்?” ஷீபா அவனை முறைத்தாள்.
“அவ தேறமாட்டான்னு தெரிஞ்சும், அவளை எதிர்பார்க்கற என்னை நினைச்சு, என்மேலதான் எனக்கு கோபம்... வந்து சாரி சொல்றா பாத்தியா... எனக்கு...” அவன் கோபத்தை அடக்க போராட, அவளுக்குப் பாவமாக இருந்தது.
“அவளுக்குத் தெரியலடா... உன் மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு வாயைத் தொறந்துதான் அவகிட்டே சொல்லேன்...” அவள் அறிவுரை வழங்க,
“அவ அப்பன் நினைக்கறது மட்டும் எல்லாம் தெரிஞ்சது...” அவன் பிடிவாதம்பிடிக்கும் குழந்தையென அடம் பிடிக்க, அந்த காதலனின் முரட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
“ஸ்...சப்பா... என்னால உன்னோட போராட முடியாதுடா... எனக்கு ரொம்ப வேலை இருக்கு” சொன்னவள் தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.
‘அவங்களுக்கு அப்படி என்ன கோபம்? கொஞ்சமும் பொறுமையே இல்லை’ தென்றல் இப்படி எண்ண, அவனது பலவருட காத்திருப்பு அவளுக்குத் தெரியவில்லையா? புரியவில்லையா என்று கண்டுகொள்ள முடியவில்லை.
அன்று மதிய உணவுக்குப் பிறகு, ஷீபா வெளியே வேலையாகச் செல்ல, அவனிடம் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமின்றி, ஒரு ஃபயிலைத் தூக்கிக் கொண்டு, சந்தேகம் கேட்பதுபோல் அவனது அறைக்குச் சென்றாள்.
அவனோ, அவளைப் பார்த்தவுடன், இருக்கையில் இருந்து எழுந்து அறைக்கு வெளியே வந்து நிற்க, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“ஏன் இப்படிப் பண்றீங்க?” அவள் கலங்கிபோய் நிற்க,
“உனக்குத்தான் என்னோட தனியா இருக்க பயமாச்சே, அதான்... எல்லாம் நீ கத்து கொடுத்ததுதான்... நான் எதையும் புதுசா செய்யலை” அவன் சொல்ல,
“என் பயம் என்னன்னு நிஜமாவே உங்களுக்குத் தெரியுமா? புரியாமல் பேசாதீங்க” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, தக்ஷன் அங்கே வர, அவள் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.
தான் செய்துவைத்த அனர்த்தங்கள் எல்லாம், பூமராங்காக திரும்பி தன்னைத் தாக்கும் உணர்வு.
“எனக்கு ஒரு ஹால்ஃப் டே லீவ் வேணும்...” அவனிடம் சென்று நிற்க, அமைதியாக தலை அசைத்தான்.
‘அவளுக்கு என்கிட்டே வர இன்னும் என்ன தடை, தயக்கம் இருக்கு?’ அவனுக்கு அதுதான் புரியவில்லை.
அவளுக்குள் ஓடும் எண்ணங்கள் அவனுக்குத் தெரியாதே. அவளோ, தோழியருக்கு அழைத்தவள், அனைவரையும் பீச்சுக்கு வரச் சொல்ல, அவர்களும் கிளம்பி வந்தார்கள்.
“என்னடி அப்படி தலை போற அவசரம்? உடனே வாங்கன்னு சொன்ன?” எலினாவும், ஹதிஜாவும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.
“கொஞ்ச நேரம் எனக்கு எதையும் யோசிக்காமல் இருக்கணும்” அவள் சொல்ல, மற்றவர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.
“தென்றல்... எனக்கு உன்மேலதான் கோபம். உன் அப்பா இவ்வளவு செஞ்ச பிறகும், அவரை விட்டு போக எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? என்னதான் அப்பா செல்லம்ன்னாலும் இப்படியா?” எலினா படபடக்க, தென்றலிடம் ஒரு பெருத்த அமைதி.
“இன்னும் எதுக்குடி இப்படி இருந்து கஷ்டப்படற? எனக்கு சுத்தமா புரியலை. சொல்லப்போனா இப்படி கஷ்டப்பட அவசியமே இல்லைன்னு சொல்வேன்” அவள் பேசப் பேச, அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சார்கிட்டே, நான் உங்களோட வந்துடறேன்னு சொன்னா, எல்லாம் முடிஞ்சு போய்டும். உனக்கும் கஷ்டமில்லை, சாரும் சந்தோஷமா இருப்பாங்க” அவளது பேச்சு காதில் விழுந்தாலும், தென்றல் கடலையே வெறித்தாள்.
“உனக்கு சார்கிட்டே சொல்ல சங்கடமா இருந்தா, உன் அம்மாகிட்டே சொல்லு, இல்லையா உன் அண்ணிகிட்டே சொல்லு... எதுக்குடி இப்படி கஷ்டப்படணும்?” சற்று கோபமாகவே இரைந்தாள்.
“எலி, அவளைப்பத்திதான் உனக்குத் தெரியுமே... பேசி எதுக்கு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற?” ஹதிஜா அவளை அடக்கினாள்.
“நீ என்ன பேசற ஹதி? நான் இவளுக்காகத்தான் பேசறேன்”.
“அது எனக்குப் புரியுது, அவளுக்குப் புரிய வேண்டாமா? விடு... அதான் வேற பேச சொன்னாளே, பேசு...” அவளுக்குமே தென்றலின் செய்கையில் உடன்பாடு இல்லாமல் இருக்க, தன் கோபத்தை இப்படி காட்டினாள்.
“எல்லாம் நிமிஷத்தில் முடிஞ்சுடும் இல்ல... அவர் பட்ட கஷ்டம், பட்ட அவமானம், எல்லாம் நிமிஷத்தில் காணாமல் போய்டும்... அப்படியா?” அவள் பேச, இருவரும் விழித்தார்கள்.
“அவருக்காக நான் என்ன செஞ்சேன்? செஞ்சிருக்கேன்?” அவள் வெறித்த பார்வையாகவே கேட்க, இவர்களுக்குப் புரியவில்லை.
“அதுக்குத்தான்டி உன்னை போகச் சொல்றோம்...” அவர்கள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.
“அப்படிச் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்கலையே...” அவள் குரலில் இருந்த வேதனையில், தோழியர் இருவரும் அவளை அணைத்துக் கொண்டார்கள்.
“இதுக்கு என்னதான் முடிவு தென்றல்?” எலினா கேட்க,
“என் அப்பாவை மீறி, அவரைக் கடந்து அவருக்காக நான் ஏதாவது செய்யணும். அதுதான் நான் அவருக்குச் செய்யற நியாயமா இருக்கும்”.
“நீ சொல்றது புரியலை தென்றல்...”.
“என் அப்பாதான் எனக்கு ரொம்ப உசத்தி, அவருக்கு முன்னால் நான் அவரை ஏத்துக்க மாட்டேன், அவரை மீறி எதையும் செய்ய மாட்டேன்னு இவர் நினைக்கறார்.
“அது அப்படி இல்லை... என் அப்பாவை விட, எனக்கு அவரைத்தான் புடிக்கும்னு நான் அவருக்கு நிரூபிக்கணும். அது இப்படியே நான் அவர்கிட்டே போனா நடக்காது...” அவள் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தில் திகைத்தார்கள்.
“என்னடி சொல்ற? அவருக்கு நிரூபிச்சுத்தான் இந்த உறவை நீ புதுப்பிக்கணுமா? அதுவரைக்கும் உனக்கும் கஷ்டம் தானே...” எலினா வருத்தமானாள்.
“இல்ல... நான் அவர்கிட்டே பேசிடுவேன்...” அவள் நம்பிக்கையாக உரைக்க, அதற்கு மேலே அவளிடம் அவர்கள் எதையும் சொல்லவில்லை.
தோழியரின் கேலியும், அரட்டையும், கடல்நீரில் விளையாடுவதுமாக மீதி நேரத்தை அவர்கள் கழிக்க, இரவு உணவை முடித்த பிறகுதான் அவர்களது வீட்டுக்கே சென்றார்கள்.
சில பல மாதங்களுக்குப் பிறகு, தென்றலின் மனதில் ஒரு நிம்மதி விரவி இருந்தது. மறுநாள் அதே மனநிலையோடு அலுவலகம் வந்தவள், நேராக சென்று நின்றது பிரபஞ்சனிடம் தான்.
அவன் அவளை என்னவென நிமிர்ந்து பார்க்க, அவளோ ஷீபாவைப் பார்த்தாள்.
“டேய்... என்ன செய்வியோ தெரியாது, எனக்கு ஒரு புது ரூம், தனி ரூம் வேணும்... ஆமா...” படபடவென அவள் பொரிய, அவளை முறைத்தவன், தென்றலின் பக்கம் பார்த்தான்.
“அவங்க இருக்கட்டும், எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை” சொன்னவள், “ஐ லவ் யூ...” அவள் சொல்ல, ஷீபா பக்கென சிரித்து வைக்க, பிரபஞ்சனுக்குமே சிரிப்பு வந்து தொலைத்தது.
“ஏய், எழுந்து வெளியே போ...” அவன் ஷீபாவை விரட்ட முயல,
“இல்ல நான் போகலை... இது ரொம்ப சுவாரசியமா இருக்கும் போல...” வாய்விட்டு சிரித்தவாறே அவள் சொல்ல, அவனோ தென்றல் தன் காதலைச் சொன்னதில், அவனுக்குள் ஒரு மாதிரி திணறிப் போய் இருந்தான்.
“என்கிட்டே அடிதான் வாங்கப் போற... ஷீபா...” அவன் தன் தலையை அழுத்தமாக கோதியவாறு, தென்றலை விழுங்கும் பார்வை பார்த்தான்.
‘ஆத்தாடி... காமப் பார்வையாவுல்ல இருக்கு’ என உள்ளே அலறியவள், “நான் வெளியவே போறேன்டா...” ஷீபா சொல்ல,
“இல்ல நான் போறேன்...” என்ற தென்றல் வெளியே சென்றுவிட,
“பாவம்டா... உன்னை ரொம்ப மிஸ் பண்றா...” ஷீபா சொல்ல, அவன் மட்டும் அவளை மிஸ் செய்யவில்லையாமா?
அன்று அவளை எப்படியாவது தனிமையில் நிறுத்தி வைத்து பேசிவிடவேண்டும் என எண்ணியவன், தென்றலுக்கு வேலை கொடுக்க, அன்று தன்யஸ்ரீயும், தியாகுவும் முடிக்க வேண்டிய வேலை இருக்கவே அவர்களும் தாமதித்தார்கள்.
‘ச்சே... இதென்ன இப்படி ஆகுது...’ அவன் தனக்குள் புலம்பியவன், நேரமாகவே இரவு உணவுக்கு ஆர்டர் கொடுக்க எண்ணினான்.
“தியாகு, தன்யா டின்னருக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” அவர்களிடம் கேட்க, அவர்கள் வேண்டியதைச் சொல்லவே, தன்னவளைத் திரும்பிப் பார்த்தான்.
‘அவளுக்கு...’ என யோசிக்கையிலேயே,
“சார்... அவங்களுக்கு ‘நான்’ அண்ட் பன்னீர் கிரேவி சொல்லுங்க... தென்றலுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னாங்க” தியாகு சொல்ல,
“ஓ... அவங்களைப்பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, அதையெல்லாம் அவன் எங்கே கவனித்தானாம்?