பகுதி – 9.
தென்றலின் அழுது சோர்ந்த முகத்தைப் பார்த்த அனைவருமே அவளிடம் என்னவென கேட்க, “அவங்க அப்பா ஏதோ திட்டிட்டாங்களாம், குழந்தை அழறா... வேற எதுவும் இல்லை” அவன் சொல்லி சம்மாளிக்க, அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
“நீ வா... எப்படி என் மருமகளை உங்க அப்பா திட்டலாம்னு கேக்கறேன்” மேகலை அவளை கைபிடித்து தன் அருகே அமர வைக்க,
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி... நான் அப்பாகிட்டே பேச மாட்டேன்” அவள் சொல்ல, பிரபஞ்சன் பக்கென சிரித்துவிட, நிவேதிதா அவனை முறைக்க, முதியவர்களின் முகங்களிலும் புன்னகை.
அவனின் சிரிப்பு, அவர்களின் புன்னகையைப் பார்த்த பிறகுதான், தான் அவரை பாட்டி எனச் சொல்லிவிட்டது புரிய, “அச்சோ... சாரி அத்த, உங்களை பாட்டி சொல்லிட்டேன்... அச்சோ... மறுபடியும் சொல்லிட்டனே” இப்பொழுது அது பெரிதாகப் போய்விட, அவள் பதற, அவனோ விழுந்து புரண்டு சிரித்தான்.
மற்றவர்கள் யாருமே தென்றல் சொன்னதை பெரிதாக எடுக்கவே இல்லை. மேகலைக்கு தென்றல் என்றால் தன் மகனை காப்பாற்றிக் கொடுக்க வந்த தேவதை... அவளை அவர் கோபித்துக் கொள்வாரா என்ன?
“மாம்ஸு... எதுக்கு இப்படி பேய் மாதிரி சிரிச்சு என்னை எழுப்பி விட்டீங்க?” நைனிகா அவனிடம் கேட்க,
“அதுவா...?” அவன் தன்னவளைப் பார்த்தவாறே இழுத்து நிறுத்த,
“ஹையோ வேண்டாம்... சொல்லாதீங்க... சொல்லாதீங்க...” பதறியவள், அவன் வாயை அடைக்கப் போனாள்.
“மாம்ஸு... சொல்லுங்க... சொல்லுங்க...” நைனிகா அவனை நச்சரிக்க, தென்றல் அவன் வாயை மூடவென அங்கே ஒரே கலாட்டாவாகிப் போனது.
அத்தனை நேரமாக அழுதுகொண்டு இருந்த தென்றல் சிரித்துவிட்டதே போதும் என நினைத்து, மற்றவர்கள் அனைவரும் அவர்கள் விளையாட்டில் தலையிடாமல் விலகிச் செல்ல, இரு பெண்களுக்கு நடுவில் அவன்தான் திண்டாடிப் போனான்.
நைனிகா ‘சொல்’ எனவும், தென்றல் ‘சொல்லாதே’ எனவும் அவனைப் போட்டு ஆட்டி வைக்க,
“பட்டு... உனக்கு நான் நாளைக்கு சொல்றேன்... இப்போ முடியாதுடா” அவன் நைனிகாவை சமாதானப்படுத்த, “ம்ஹும்... நீங்க எப்பவும் சொல்லக் கூடாது. ப்ராமிஸ் பண்ணுங்க...” அவன் கழுத்தை வளைத்திருந்த தென்றல், அவன் முன்னால் கையை நீட்டினாள்.
“சாரிடா பட்டு...” அக்கா மகளிடம் மன்னிப்பை வேண்டியவன், தன்னவளின் கரத்தில் கரத்தை வைக்க, “போங்க மாம்ஸு... நான் அம்மாகிட்டேயே கேட்டுக்கறேன்” நைனிகா கோபித்துக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு எழுந்து சென்றாள்.
“ஐயோ... அண்ணி சொல்லிடப் போறாங்க...” இவள் பதறிக்கொண்டு செல்லப் போக, அவளை கரம்பிடித்து தடுத்தான்.
“அதெல்லாம் அக்கா சொல்ல மாட்டாங்க... நீ பதறாத. காலையில் எழுந்து ப்ரெஷ் கூட பண்ணலையா? முதல்ல அதைப் பண்ணிட்டு, குளிச்சுட்டு வா... போ...” அவளை அனுப்பியவன், தன் அக்காவைக் காணச் சென்றான்.
நைனிகா தன்னோடு விளையாடுவதை தென்றல் பெரிதாக எடுத்துக் கொள்ளாததே அவனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது. நிவேதிதாவுக்கும் அப்படித்தான் என அவன் அங்கே சென்றதும் அவனுக்குப் புரிந்தது.
“தென்றல் ரொம்ப நல்ல பொண்ணுடா... ரொம்ப வெள்ளை மனசு...” அக்கா சொல்ல, தன் அக்காவைக் கட்டிக் கொண்டான்.
“ஆமாக்கா, நானும் அதையேத்தான் நினைச்சேன். அவ மட்டும் கொஞ்சமே கொஞ்சமாவது, ‘இது என் புருஷன், நீ போ’ ன்னு சொல்லி இருந்தா, நம்ம பட்டுவை எப்படி சமாதானம் பண்ணி இருப்பேன்னே தெரியலை” அவன் குரலில் நிஜமான ஒரு விடுதலை உணர்வு தெரிந்தது.
“உண்மைதான் தம்பி...” என்றவள், அந்த நேரம் நைனிகாவை அவள் அங்கிருந்து அனுப்பி இருக்க, இவர்களின் பேச்சை அவள் கேட்டிருக்கவில்லை. தன் அக்காவை விட்டு விலகி, சாப்பாட்டு மேடையின்மேல் ஏறி அமர்ந்தான்.
“பொன்னம்மாக்கா... அந்த மீனை கொஞ்சம் கிளீன் பண்ணி எடுத்துட்டு வாங்க...” அவளை அனுப்பியவள், தம்பியிடம் திரும்பினாள்.
“என்னடா... என்ன பிரச்சனை? உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவளுக்கு ஏன் இவ்வளவு அழுகை?” அவர்களுக்குள் நடப்பதை தன் அக்கா கணித்துக் கேட்க, பிரபஞ்சனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் வெளிப்பட்டது.
“ரஞ்சா.... என்னன்னு சொல்லு....” அவன் கோபம் அதிகரிக்கவே பொறுமையாக கேட்டாள்.
“எங்க பெர்சனல் எல்லாம் அவ அப்பன் அவகிட்டே கேக்கறான்க்கா... என்கூட தனியா இருக்காத, பேசாத... இன்னும்... ச்சே... என்னக்கா இது? இவளை நான் அங்கே அனுப்பப் போறதில்லை” அவன் தன் கோபத்தை அடக்க முடியாமல் திணற, நிவேதிதாவுக்கும் சற்று அதிர்வுதான்.
“பிரபஞ்சா... நீயே பாத்தியே... அவ இன்னும் குழந்தையாட்டம் இருக்காடா. நம்ம பட்டுவை தனியா விட்டா கூட பிழைச்சுப்பா, இவ பயத்திலேயே போய்டுவா. நம்ம பட்டுவுக்கு இப்படி ஆகி இருந்தா நாம விடுவோமா?” அவள் கேட்க,
“அதுக்குன்னு இப்படியெல்லாம் அவகிட்டே பேசுவோமா?” அவன் கேட்க, அதில் இருந்த நியாயம் புரிந்தாலும் அதை விடுத்தவள்,
“நமக்கே அவளைப்பத்தி இவ்வளவு தெரியும்போது, பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் நினைச்சே பாக்காத கல்யாணம்... சின்னப்பொண்ணு, திடீர்ன்னு ஃபேமிலி லைஃப்குள்ள அனுப்ப அவங்களும் யோசிப்பாங்க தானே. அவங்க இடத்துல இருந்து யோசிடா...” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
“எங்களுக்கு நடுவில் அவர் எப்படி வரலாம்?” அவனது நியாயமான ஆதங்கமும், கோபமும் அவளுக்குப் புரிந்தது.
“நாலு வருஷம் கழிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கறதா இருந்த. இப்பவும் அப்படியே நினைச்சுக்கோ...” அவள் சொல்ல,
“அப்போ எனக்கு கல்யாணம் ஆகலை...” அவன் சொன்ன விதத்தில், தம்பியின் மனம் அவளுக்குப் புரிந்தது.
பூனைக்கு பாலையும் ஊற்றிவிட்டு, அதற்கு அதை காவலும் இருக்கச் சொன்னால்... அது எப்படி சாத்தியம்?
“உன் மனசு இந்த அக்காவுக்குப் புரியுதுடா தம்பி... இந்த கோபத்தை எல்லாம் விட்டுட்டு, அவகூட போய் இரு போ. சாயங்காலம் அவ கிளம்பிப் போய்டுவா... அவ்வளவு நேரமாவது அவளோட இரு...” அவன் ஏக்கம் புரியவே சொன்னாள்.
“எங்கே...? அவ கிட்டே போனாலே அப்பா, அப்பான்னு உயிரை வாங்கறா. இங்கே இருந்து போயிட்டான்னா, என் நினைப்பெல்லாம் அவளுக்கு இருக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” அவன் கவலையாக சொல்ல, அவளுக்கு பாவமாக இருந்தது.
“அது... நீ நடந்துக்கற விதத்தில் இருக்கு...” அவன் கன்னம் வருடி, பாசமாக சொன்னாள்.
“அந்த ‘அன்புள்ள அப்பா’ படத்தில் நதியா பண்ற மாதிரி ஆயிட்டா. நான் டோட்டல் ஃபெயிலியர் ஆயிடுவேன்க்கா...” அவன் குரலில் பெரும் கவலையும், பயமும் இருந்தது.
“ரஞ்சா... என்ன இது? அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இதுவரைக்கும் எல்லாம் கொடுத்து பழக்கிட்டார்... முதல்முறையா இது வேண்டாம்னு அவர் மறுக்கும்போது, அதுவும் அது அவளுக்கு கொஞ்சமாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கேட்டுக்க மாட்டா...” அவள் சொல்ல,
“அக்கா... அப்படின்னா அவருக்கு என்னைப் பிடிக்கலைன்னு உனக்கும் தோணுது தானே. நான் எனக்கு மட்டும்தான் அந்த சந்தேகம் இருக்கோன்னு நினைச்சேன். என்கிட்டே அப்படி என்னக்கா குறை?” அவன் ஆதங்கமாக கேட்க, மென்மையாக புன்னகைத்தாள்.
“அவரோட பொண்ணுக்கு புடிச்சவனா இருக்கறியே... அவரோட இடத்தை புடிச்சுப்பியோன்னு பயம்... அதுதான் காரணம்...” அவள் சொல்லச் சொல்ல, அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை உதயமானது.
அதைப் பார்த்தவள், “என்னடா... உன் சிரிப்பே சரியில்லையே...” அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
“அவரை சுத்தல்ல விடணும்க்கா... செய்யறேன்...” அவன் சவாலாக சொல்ல,
“அவசரப்படாமல் நிதானமா செய்... ரிவர்ஸ்ல ஆயிடக் கூடாது” அவனுக்கு பத்திரம் சொன்னாள்.
தென்றல் குளித்து, ப்ரெஷ் செய்துவிட்டு அங்கே வர, “தென்றல், இதென்ன கன்னம் மொத்தமும் இப்படி சிவந்து போயிருக்கு...? ஏதும் அலர்ஜியா? இல்லன்னா பூச்சி எதுவும் கடிச்சுட்டா?” கேட்ட நிவேதிதா, அவள் கன்னத்தை ஆராய முயல, வேகமாக பின்னால் நகர்ந்தாள்.
அடுத்த நொடி, பதட்டமாக தன்னவனைப் பார்த்தவள், கன்னத்தை தன் கையால் மறைத்துக் கொண்டவள், “அது... நைட் ஒரே பக்கமா படுத்திட்டேன் போல, அதான்...
“வேற எதுவும் இல்லை...” அவள் கண்களை ஏறிட முடியாமல் அவள் தடுமாறி சொல்ல, நிமிடத்தில் அவள் பார்வை, பதட்டம் என அனைத்தையும் கவனித்த நிவேதிதா, அதற்குமேல் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை.
“சரி தென்றல்... இந்தா டீ குடி... நேரமாச்சே... டிபன் சாப்பிடறியா?” என்றாள்.
“இல்ல அண்ணி... கொஞ்சம் நேரமாகட்டும், நாம சேர்ந்தே சாப்பிடலாம்... நான் ஏதாவது வேலை செய்யவா?” அங்கே வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் இருப்பது அவளுக்கே ஒரு மாதிரியாக இருக்க கேட்டாள்.
“இங்கே பொன்னம்மாக்கா தான் முழு சமையல், மேல் வேலை எல்லாம் பாப்பாங்க. நான் இங்கே வந்தா, சும்மா அவங்களுக்கு ஏதாவது சப்போட் பண்ணுவேன் அவ்வளவுதான். வேற வேலை எல்லாம் இங்கே இருக்காது” அவள் சொல்ல, நைனிகா அங்கே வந்தாள்.
“அம்மா... இன்னைக்கே நாம கிளம்பணுமா? நாளைக்கு இங்கே இருந்தே ஸ்கூல் போய்க்கறேனே. இன்னைக்கு அப்பா கூட டியூஷன் போறேன், பிளீஸ்ம்மா...” அவள் கெஞ்ச,
“அப்பாகிட்டே கேள்.... அப்பா ஓகே சொன்னா எனக்கு ஓகே தான்”.
“அப்பா அல்ரெடி ஓகே சொல்லிட்டாங்க... உங்ககிட்டே கேக்க சொன்னாங்க, இப்போ நீங்களும் ஓகே சொல்லிட்டீங்க” சொல்லிவிட்டு அவள் குதிக்க, “கேடி... சரி வாங்க சாப்பிடலாம்...” அவர்கள் வெளியே செல்ல, தென்றலின் கன்னத்தை மெல்லியதாக கடித்து சப்பியவன், வேகமாக அவர்கள் பின்னால் சென்றான்.
அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டவள், “அத்த... என்ன அங்கேயே நின்னுட்டீங்க?” நைனிகாவின் குரலில் கலைந்து வேகமாகச் சென்றாள்.
சாப்பாட்டு மேஜையின் முன்னால் அனைவரும் அமர, அவன் அருகே அமர்ந்தவள், “என்னங்க... ஏற்கனவே கன்னம் சிவந்திருக்கு... இதில் மறுபடியும் இப்படிப் பண்றீங்க?” அவனிடம் சின்னக்குரலில் கேட்டாள்.
“நான் கடிச்சதாவது பரவாயில்லை... நீ கடிச்சது எனக்கு காயமே ஆயிட்டு இருக்கு... அது யாருக்கும் தெரியலை அவ்வளவுதான்...” அவன் சொல்ல, அத்தனையாய் படபடத்துப் போனாள்.
தென்றலின் அழுது சோர்ந்த முகத்தைப் பார்த்த அனைவருமே அவளிடம் என்னவென கேட்க, “அவங்க அப்பா ஏதோ திட்டிட்டாங்களாம், குழந்தை அழறா... வேற எதுவும் இல்லை” அவன் சொல்லி சம்மாளிக்க, அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
“நீ வா... எப்படி என் மருமகளை உங்க அப்பா திட்டலாம்னு கேக்கறேன்” மேகலை அவளை கைபிடித்து தன் அருகே அமர வைக்க,
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி... நான் அப்பாகிட்டே பேச மாட்டேன்” அவள் சொல்ல, பிரபஞ்சன் பக்கென சிரித்துவிட, நிவேதிதா அவனை முறைக்க, முதியவர்களின் முகங்களிலும் புன்னகை.
அவனின் சிரிப்பு, அவர்களின் புன்னகையைப் பார்த்த பிறகுதான், தான் அவரை பாட்டி எனச் சொல்லிவிட்டது புரிய, “அச்சோ... சாரி அத்த, உங்களை பாட்டி சொல்லிட்டேன்... அச்சோ... மறுபடியும் சொல்லிட்டனே” இப்பொழுது அது பெரிதாகப் போய்விட, அவள் பதற, அவனோ விழுந்து புரண்டு சிரித்தான்.
மற்றவர்கள் யாருமே தென்றல் சொன்னதை பெரிதாக எடுக்கவே இல்லை. மேகலைக்கு தென்றல் என்றால் தன் மகனை காப்பாற்றிக் கொடுக்க வந்த தேவதை... அவளை அவர் கோபித்துக் கொள்வாரா என்ன?
“மாம்ஸு... எதுக்கு இப்படி பேய் மாதிரி சிரிச்சு என்னை எழுப்பி விட்டீங்க?” நைனிகா அவனிடம் கேட்க,
“அதுவா...?” அவன் தன்னவளைப் பார்த்தவாறே இழுத்து நிறுத்த,
“ஹையோ வேண்டாம்... சொல்லாதீங்க... சொல்லாதீங்க...” பதறியவள், அவன் வாயை அடைக்கப் போனாள்.
“மாம்ஸு... சொல்லுங்க... சொல்லுங்க...” நைனிகா அவனை நச்சரிக்க, தென்றல் அவன் வாயை மூடவென அங்கே ஒரே கலாட்டாவாகிப் போனது.
அத்தனை நேரமாக அழுதுகொண்டு இருந்த தென்றல் சிரித்துவிட்டதே போதும் என நினைத்து, மற்றவர்கள் அனைவரும் அவர்கள் விளையாட்டில் தலையிடாமல் விலகிச் செல்ல, இரு பெண்களுக்கு நடுவில் அவன்தான் திண்டாடிப் போனான்.
நைனிகா ‘சொல்’ எனவும், தென்றல் ‘சொல்லாதே’ எனவும் அவனைப் போட்டு ஆட்டி வைக்க,
“பட்டு... உனக்கு நான் நாளைக்கு சொல்றேன்... இப்போ முடியாதுடா” அவன் நைனிகாவை சமாதானப்படுத்த, “ம்ஹும்... நீங்க எப்பவும் சொல்லக் கூடாது. ப்ராமிஸ் பண்ணுங்க...” அவன் கழுத்தை வளைத்திருந்த தென்றல், அவன் முன்னால் கையை நீட்டினாள்.
“சாரிடா பட்டு...” அக்கா மகளிடம் மன்னிப்பை வேண்டியவன், தன்னவளின் கரத்தில் கரத்தை வைக்க, “போங்க மாம்ஸு... நான் அம்மாகிட்டேயே கேட்டுக்கறேன்” நைனிகா கோபித்துக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு எழுந்து சென்றாள்.
“ஐயோ... அண்ணி சொல்லிடப் போறாங்க...” இவள் பதறிக்கொண்டு செல்லப் போக, அவளை கரம்பிடித்து தடுத்தான்.
“அதெல்லாம் அக்கா சொல்ல மாட்டாங்க... நீ பதறாத. காலையில் எழுந்து ப்ரெஷ் கூட பண்ணலையா? முதல்ல அதைப் பண்ணிட்டு, குளிச்சுட்டு வா... போ...” அவளை அனுப்பியவன், தன் அக்காவைக் காணச் சென்றான்.
நைனிகா தன்னோடு விளையாடுவதை தென்றல் பெரிதாக எடுத்துக் கொள்ளாததே அவனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது. நிவேதிதாவுக்கும் அப்படித்தான் என அவன் அங்கே சென்றதும் அவனுக்குப் புரிந்தது.
“தென்றல் ரொம்ப நல்ல பொண்ணுடா... ரொம்ப வெள்ளை மனசு...” அக்கா சொல்ல, தன் அக்காவைக் கட்டிக் கொண்டான்.
“ஆமாக்கா, நானும் அதையேத்தான் நினைச்சேன். அவ மட்டும் கொஞ்சமே கொஞ்சமாவது, ‘இது என் புருஷன், நீ போ’ ன்னு சொல்லி இருந்தா, நம்ம பட்டுவை எப்படி சமாதானம் பண்ணி இருப்பேன்னே தெரியலை” அவன் குரலில் நிஜமான ஒரு விடுதலை உணர்வு தெரிந்தது.
“உண்மைதான் தம்பி...” என்றவள், அந்த நேரம் நைனிகாவை அவள் அங்கிருந்து அனுப்பி இருக்க, இவர்களின் பேச்சை அவள் கேட்டிருக்கவில்லை. தன் அக்காவை விட்டு விலகி, சாப்பாட்டு மேடையின்மேல் ஏறி அமர்ந்தான்.
“பொன்னம்மாக்கா... அந்த மீனை கொஞ்சம் கிளீன் பண்ணி எடுத்துட்டு வாங்க...” அவளை அனுப்பியவள், தம்பியிடம் திரும்பினாள்.
“என்னடா... என்ன பிரச்சனை? உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவளுக்கு ஏன் இவ்வளவு அழுகை?” அவர்களுக்குள் நடப்பதை தன் அக்கா கணித்துக் கேட்க, பிரபஞ்சனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் வெளிப்பட்டது.
“ரஞ்சா.... என்னன்னு சொல்லு....” அவன் கோபம் அதிகரிக்கவே பொறுமையாக கேட்டாள்.
“எங்க பெர்சனல் எல்லாம் அவ அப்பன் அவகிட்டே கேக்கறான்க்கா... என்கூட தனியா இருக்காத, பேசாத... இன்னும்... ச்சே... என்னக்கா இது? இவளை நான் அங்கே அனுப்பப் போறதில்லை” அவன் தன் கோபத்தை அடக்க முடியாமல் திணற, நிவேதிதாவுக்கும் சற்று அதிர்வுதான்.
“பிரபஞ்சா... நீயே பாத்தியே... அவ இன்னும் குழந்தையாட்டம் இருக்காடா. நம்ம பட்டுவை தனியா விட்டா கூட பிழைச்சுப்பா, இவ பயத்திலேயே போய்டுவா. நம்ம பட்டுவுக்கு இப்படி ஆகி இருந்தா நாம விடுவோமா?” அவள் கேட்க,
“அதுக்குன்னு இப்படியெல்லாம் அவகிட்டே பேசுவோமா?” அவன் கேட்க, அதில் இருந்த நியாயம் புரிந்தாலும் அதை விடுத்தவள்,
“நமக்கே அவளைப்பத்தி இவ்வளவு தெரியும்போது, பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் நினைச்சே பாக்காத கல்யாணம்... சின்னப்பொண்ணு, திடீர்ன்னு ஃபேமிலி லைஃப்குள்ள அனுப்ப அவங்களும் யோசிப்பாங்க தானே. அவங்க இடத்துல இருந்து யோசிடா...” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
“எங்களுக்கு நடுவில் அவர் எப்படி வரலாம்?” அவனது நியாயமான ஆதங்கமும், கோபமும் அவளுக்குப் புரிந்தது.
“நாலு வருஷம் கழிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கறதா இருந்த. இப்பவும் அப்படியே நினைச்சுக்கோ...” அவள் சொல்ல,
“அப்போ எனக்கு கல்யாணம் ஆகலை...” அவன் சொன்ன விதத்தில், தம்பியின் மனம் அவளுக்குப் புரிந்தது.
பூனைக்கு பாலையும் ஊற்றிவிட்டு, அதற்கு அதை காவலும் இருக்கச் சொன்னால்... அது எப்படி சாத்தியம்?
“உன் மனசு இந்த அக்காவுக்குப் புரியுதுடா தம்பி... இந்த கோபத்தை எல்லாம் விட்டுட்டு, அவகூட போய் இரு போ. சாயங்காலம் அவ கிளம்பிப் போய்டுவா... அவ்வளவு நேரமாவது அவளோட இரு...” அவன் ஏக்கம் புரியவே சொன்னாள்.
“எங்கே...? அவ கிட்டே போனாலே அப்பா, அப்பான்னு உயிரை வாங்கறா. இங்கே இருந்து போயிட்டான்னா, என் நினைப்பெல்லாம் அவளுக்கு இருக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” அவன் கவலையாக சொல்ல, அவளுக்கு பாவமாக இருந்தது.
“அது... நீ நடந்துக்கற விதத்தில் இருக்கு...” அவன் கன்னம் வருடி, பாசமாக சொன்னாள்.
“அந்த ‘அன்புள்ள அப்பா’ படத்தில் நதியா பண்ற மாதிரி ஆயிட்டா. நான் டோட்டல் ஃபெயிலியர் ஆயிடுவேன்க்கா...” அவன் குரலில் பெரும் கவலையும், பயமும் இருந்தது.
“ரஞ்சா... என்ன இது? அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இதுவரைக்கும் எல்லாம் கொடுத்து பழக்கிட்டார்... முதல்முறையா இது வேண்டாம்னு அவர் மறுக்கும்போது, அதுவும் அது அவளுக்கு கொஞ்சமாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கேட்டுக்க மாட்டா...” அவள் சொல்ல,
“அக்கா... அப்படின்னா அவருக்கு என்னைப் பிடிக்கலைன்னு உனக்கும் தோணுது தானே. நான் எனக்கு மட்டும்தான் அந்த சந்தேகம் இருக்கோன்னு நினைச்சேன். என்கிட்டே அப்படி என்னக்கா குறை?” அவன் ஆதங்கமாக கேட்க, மென்மையாக புன்னகைத்தாள்.
“அவரோட பொண்ணுக்கு புடிச்சவனா இருக்கறியே... அவரோட இடத்தை புடிச்சுப்பியோன்னு பயம்... அதுதான் காரணம்...” அவள் சொல்லச் சொல்ல, அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை உதயமானது.
அதைப் பார்த்தவள், “என்னடா... உன் சிரிப்பே சரியில்லையே...” அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
“அவரை சுத்தல்ல விடணும்க்கா... செய்யறேன்...” அவன் சவாலாக சொல்ல,
“அவசரப்படாமல் நிதானமா செய்... ரிவர்ஸ்ல ஆயிடக் கூடாது” அவனுக்கு பத்திரம் சொன்னாள்.
தென்றல் குளித்து, ப்ரெஷ் செய்துவிட்டு அங்கே வர, “தென்றல், இதென்ன கன்னம் மொத்தமும் இப்படி சிவந்து போயிருக்கு...? ஏதும் அலர்ஜியா? இல்லன்னா பூச்சி எதுவும் கடிச்சுட்டா?” கேட்ட நிவேதிதா, அவள் கன்னத்தை ஆராய முயல, வேகமாக பின்னால் நகர்ந்தாள்.
அடுத்த நொடி, பதட்டமாக தன்னவனைப் பார்த்தவள், கன்னத்தை தன் கையால் மறைத்துக் கொண்டவள், “அது... நைட் ஒரே பக்கமா படுத்திட்டேன் போல, அதான்...
“வேற எதுவும் இல்லை...” அவள் கண்களை ஏறிட முடியாமல் அவள் தடுமாறி சொல்ல, நிமிடத்தில் அவள் பார்வை, பதட்டம் என அனைத்தையும் கவனித்த நிவேதிதா, அதற்குமேல் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை.
“சரி தென்றல்... இந்தா டீ குடி... நேரமாச்சே... டிபன் சாப்பிடறியா?” என்றாள்.
“இல்ல அண்ணி... கொஞ்சம் நேரமாகட்டும், நாம சேர்ந்தே சாப்பிடலாம்... நான் ஏதாவது வேலை செய்யவா?” அங்கே வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் இருப்பது அவளுக்கே ஒரு மாதிரியாக இருக்க கேட்டாள்.
“இங்கே பொன்னம்மாக்கா தான் முழு சமையல், மேல் வேலை எல்லாம் பாப்பாங்க. நான் இங்கே வந்தா, சும்மா அவங்களுக்கு ஏதாவது சப்போட் பண்ணுவேன் அவ்வளவுதான். வேற வேலை எல்லாம் இங்கே இருக்காது” அவள் சொல்ல, நைனிகா அங்கே வந்தாள்.
“அம்மா... இன்னைக்கே நாம கிளம்பணுமா? நாளைக்கு இங்கே இருந்தே ஸ்கூல் போய்க்கறேனே. இன்னைக்கு அப்பா கூட டியூஷன் போறேன், பிளீஸ்ம்மா...” அவள் கெஞ்ச,
“அப்பாகிட்டே கேள்.... அப்பா ஓகே சொன்னா எனக்கு ஓகே தான்”.
“அப்பா அல்ரெடி ஓகே சொல்லிட்டாங்க... உங்ககிட்டே கேக்க சொன்னாங்க, இப்போ நீங்களும் ஓகே சொல்லிட்டீங்க” சொல்லிவிட்டு அவள் குதிக்க, “கேடி... சரி வாங்க சாப்பிடலாம்...” அவர்கள் வெளியே செல்ல, தென்றலின் கன்னத்தை மெல்லியதாக கடித்து சப்பியவன், வேகமாக அவர்கள் பின்னால் சென்றான்.
அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டவள், “அத்த... என்ன அங்கேயே நின்னுட்டீங்க?” நைனிகாவின் குரலில் கலைந்து வேகமாகச் சென்றாள்.
சாப்பாட்டு மேஜையின் முன்னால் அனைவரும் அமர, அவன் அருகே அமர்ந்தவள், “என்னங்க... ஏற்கனவே கன்னம் சிவந்திருக்கு... இதில் மறுபடியும் இப்படிப் பண்றீங்க?” அவனிடம் சின்னக்குரலில் கேட்டாள்.
“நான் கடிச்சதாவது பரவாயில்லை... நீ கடிச்சது எனக்கு காயமே ஆயிட்டு இருக்கு... அது யாருக்கும் தெரியலை அவ்வளவுதான்...” அவன் சொல்ல, அத்தனையாய் படபடத்துப் போனாள்.