• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
அருமையான பதிவு. காதலர்களுக்குள் கோபமில்லை. ஊடல் மட்டுமே. ஆனால் ரகுவீர்.

இந்த கதை பற்றி சில கெஸ் இருக்கு. பார்ப்போம்...
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
அருமையான பதிவு. காதலர்களுக்குள் கோபமில்லை. ஊடல் மட்டுமே. ஆனால் ரகுவீர்.

இந்த கதை பற்றி சில கெஸ் இருக்கு. பார்ப்போம்...
ரகுவீருக்கும் அவனுக்கும் தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன் சிஸ்... பார்க்கலாம் உங்க கெஸ் சரியா இருக்கான்னு...
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
தவிப்பு - 11 :



மறுநாள் காலை...



கழுத்தில் அணிந்திருந்த டையை சரி செய்தபடி படியில் இறங்கி வந்த ரகுவீர் அங்கே சோபாவை துடைத்து கொண்டிருந்த வேலைக்காரனிடம் "அம்மு தூங்கிகிட்டு இருக்கா... அவ எழுந்ததும் சத்துமாவு கஞ்சி கொடுத்துடுங்க... இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு காபி, டீ கொடுக்காதீங்க... நான் எங்கேன்னு கேட்டா பிரேம் கூட ப்ராஜெக்ட் விஷயமா வெளிய போயிருக்கறதா சொல்லிடுங்க" என்றான்.



"சரிங்க ஐயா" என்று வேலைக்காரன் சொன்னதும் ரகுவீர் தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.



அதேநேரம் சங்கமித்ரா சந்தோஷமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே?



நேற்று அவள் முதலாளியே போன் செய்து ரகுவீர் மற்றும் ஆத்விக்கை புத்திசாலித்தனமாக சமாளித்து ஒரு பெண் பாடகரை தேர்ந்தெடுக்கச் செய்ததை பாராட்டினார்.



வேலைக்கு சேர்ந்த முதல் நாளே முதலாளியிடம் இருந்து பாராட்டு கிடைத்ததில் மேடம் கால்கள் தரையில் படாமல் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.



தன் ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டவள் செருப்பை மாட்டிக் கொண்டு "அம்மா நான் போயிட்டு வரேன்" என்று குரல் கொடுத்தபடி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தாள்.



சமையலறையில் அவளுக்காக தோசை சுட்டுக் கொண்டிருந்த அவள் அம்மா கஸ்தூரி "ஏய் சாப்பிட்டு போ" என்றபடி வெளியே வந்தார்.



"இல்லைம்மா... இன்னைக்கு என்ன சீக்கிரமே வர சொல்லி இருக்காங்க... பசிச்சா நான் ஹோட்டல்ல சாப்பிடுகிறேன்" என்றவள் ஸ்கூட்டியை கிளம்பினாள்.



அப்போதுதான் இன்று காலையில் காய்கறி வாங்க அவள் பர்ஸில் இருந்த ஐநூறு ரூபாயை எடுத்தது கஸ்தூரிக்கு நினைவிற்கு வந்தது. காய்கறி வாங்கிவிட்டு மீதி பணத்தை மீண்டும் அவள் பர்ஸில் வைக்க மறந்துவிட்டார்.



"ஏய் மித்ரா... நில்லு... காசு எடுத்துட்டு போ" என்று அவர் சொல்வதை கேட்க அவள் அங்கே இருந்தாள் தானே?



சங்கமித்ரா எப்போதோ தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.



"ஐயோ பாவம் என் பொண்ணு... பசிச்சா சாப்பிட கூட அவகிட்ட பணம் இல்லையே" என்று அவர் கவலையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கண்ணம்மா "என்ன விஷயம் கஸ்தூரி? உன் முகம் ஏன் வாடிக் கிடக்கு?" என்று கேட்டார்.


கஸ்தூரி நடந்ததை அவரிடம் சொன்னார்.



"என்ன கஸ்தூரி... உனக்கு எப்போதும் இதே வேலையா போச்சு... அப்படி என்ன இந்த வயதில் உனக்கு மறதியோ? இத்தனை நாள் பரவாயில்லை... அவகிட்ட காசு இல்லைனு தெரிஞ்சா வீட்டுக்கு வந்து சாப்பிடுவா... ஆனா இப்போ வேலைக்கு போறா... வேலை முடிந்து தான் வீட்டுக்கு வர முடியும்... அதுவும் இப்போதான் புதிதாக வேலையில் சேர்ந்திருக்கா... யார்கிட்டயாவது பணம் கடன் கூட வாங்க முடியாது..." என்று தன் மருமகளை கடிந்து கொண்டவர் "போ... சீக்கிரம் அவளுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு... இப்படி கவலைப்பட்டுக்கிட்டே இருந்தா எதுக்கும் பிரயோஜனமில்லை" என்றார்.



கஸ்தூரி உடனே தன் மகளுக்கு போன் செய்தார். ஆனால் அவள் போனை சைலெண்டில் போட்டு வைத்திருந்ததால் போனை எடுக்கவில்லை.



மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவர் அவள் போனை எடுக்காததால் "போனை எடுக்க மாட்றா அத்தை" என்று பாவமாக சொன்னார்.



"போனை சைலெண்ட்ல வச்சிருப்பாளா இருக்கும்... மிஸ்ட் கால் பார்த்துட்டு அவளே கூப்பிடுவா... அப்போ விஷயத்தை சொல்லிடு... இப்போ போய் வேலையை பாரு" என்று சொன்னார்.



மறுபுறம் காரில் சென்று கொண்டிருந்த போதே ரகுவீர் பிரேமிற்கு போன் செய்தான்.



அவன் போனை எடுத்ததும் "பிரேம் நான் உன் வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்... ரெடியா இரு" என்றான்.



"மச்சான் நான் ஆல்ரெடி ரெடியாகி விஸ்வநாதன் அங்கிள் கூட அவர் ஆபிஸ் வந்துட்டேன்... நீ நேரா இங்க வந்துடு... இங்க இருந்து நாம எல்லாரும் சேர்ந்து போய்டலாம்" என்றான்.



"ஓகே" என்ற ரகுவீர் காரை விஸ்வநாதனின் அலுவலகத்தை நோக்கி செலுத்தினான்.



அவன் விஸ்வநாதனின் அலுவலகத்தை அடையவிருந்த போது அவனுக்கு போன் செய்த பிரேம் "மச்சான் நீ ஆபிஸ் போக வேண்டாம்... விஸ்வநாதன் அங்கிளுக்கு அர்ஜெண்டா ஒரு ஒர்க் வந்துடிச்சி... அதை முடிச்சிட்டு அப்படியே வந்து நம்மளோட வந்து ஜாயின் பண்ணிக்கறதா சொல்லிட்டாரு... நான் அவர் ஆபிஸ் பக்கத்துல இருக்க சரவண பவன்ல இருக்கேன்... நீயும் அங்க வந்துடு... சாப்பிட்டுட்டு போய்டலாம்" என்றான்.



"ப்ச்... இப்படினு தெரிந்திருந்தா நான் அம்மு எழுந்த பிறகு அவளோட சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்டா"



"சரி விடு... இப்படி நடக்கும்னு யாருக்கு தெரியும்? இன்னைக்கு நீ என்னோட தான் சாப்பிடணும்னு விதி இருக்கு... சீக்கிரம் வந்து சேரு" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.



அடுத்த பத்து நிமிடத்தில் ரகுவீர் சரவண பவனில் இருந்தான். சங்கமித்ராவும் அதே ஹோட்டலில் தான் இருந்தாள். பொதுவாக அவள் இதுபோன்ற பெரிய ஹோட்டலுக்கு வர மாட்டாள். ஆனால் இன்று பசி அவள் வயிற்றை கிள்ளியது. அந்த ஏரியாவில் இருந்த அனைத்து ஹோட்டலுமே இதுபோன்ற பெரிய ஹோட்டல்கள் தான் என்பதால் வேறு வழியில்லாமல் அவள் அந்த ஹோட்டலுக்கு வந்தாள்.



வெயிட்டரிடம் ஒரு மசால் தோசையை ஆர்டர் செய்தவள் "இந்த சார் மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்பே அவசர வேலையா வெளிய கிளம்பறதை இன்போர்ம் பண்ணியிருந்தா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். இப்போ தொன்னூறு ரூபா வேஸ்ட்" என்று புலம்பினாள்.



இவளும் அதே ஹோட்டலில் இருப்பது பற்றி தெரியாமல் ரகுவீர் மற்றும் பிரேம் இருவரும் தங்கள் பிசினஸை பற்றி பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.



தோசை வந்ததும் சாப்பிட்டு முடித்த சங்கமித்ரா பில்லுக்காக காத்திருந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.



"மச்சான் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்... நீ பில் பே பண்ணிடு" என்று ரகுவீரிடம் சொல்லிவிட்டு பிரேம் எழுந்து சென்றான்.



ரகுவீரும் தன்னுடைய பில்லுக்காக காத்திருந்தான்.



அப்போது சங்கமித்ராவிடம் வந்த வெயிட்டர் "மேடம் உங்க பில்" என்றார்.



பில்லை வாங்கி பார்த்த சங்கமித்ரா "என்னது நானூறு ரூபாயா? ஒரு மசால் தோசை நானூறு ரூபாயா? எப்போ அண்ணா உங்க ஹோட்டல்ல இவ்வளவு விலை ஏத்தினீங்க?" என்று கேட்டாள்.



"மசால் தோசை தொண்ணூறு ரூபாய் தான் மேடம்... ஒரு நிமிஷம் பில்லை கொடுங்க" என்றவர் அதை வாங்கி பார்த்தார்.



"சாரி மேடம்... பில் மாறி போச்சு... இந்தாங்க உங்க பில்... இது உங்களுக்கு பின்னாடி இருக்க டேபிள் பில்" என்றவர் அவள் பில்லை அவளிடம் கொடுத்துவிட்டு மற்றொரு பில்லை கொண்டு சென்று ரகுவீரிடம் கொடுத்தார்.



பில்லை பார்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றிய சங்கமித்ரா தன் பர்ஸை திறந்து ஐநூறு ரூபாயை தேடினாள். ஆனால் அதில் பணம் இல்லை.



"ஐயோ கடவுளே இருந்த பசியில பர்ஸ்ல வச்ச பணம் இருக்கா இல்லையான்னு செக் பண்ண மறந்து சாப்பிட்டுவிட்டோமே... இப்போ என்ன பண்றது? எல்லாம் இந்த சுபத்ராவால தான்... இப்போ மட்டும் என் கையில சிக்கின சுபத்ரா... உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று பல்லை கடித்தபடி நினைத்தவள் "ஐயோ இப்போ சுபத்ராவை திட்டி ஒன்னும் ஆகப் போறதில்லை... முதல்ல பில் செட்டில் பண்ற வழியை பார்க்கணும்" என்று முனகியவள் தன் பர்ஸில் இருந்த பத்து, இருபது நோட்டுகளை எண்ண ஆரம்பித்தாள்.



எல்லாம் சேர்த்து எழுபது ரூபாய் இருந்தது. மீதி இருபது ரூபாய்க்கு என்ன பண்றது என்று அவள் யோசிக்கும் போதே அவள் பர்ஸில் இருந்த சில்லறைகள் அவள் பார்வையில் விழுந்தது.



'பில் அமௌண்ட்டை சில்லறையா கொடுத்தா அந்த வெயிட்டர் என்ன பத்தி என்ன நினைப்பான்?' என்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் இப்போது அவளிடம் வேறு வழியில்லை.



எனவே அந்த சில்லறைகள் மற்றும் நோட்டுகளை அவள் பில் புக்கிற்குள் வைத்தாள். அவள் பணத்தை வைத்துவிட்டு எழுவதற்கும் அந்த வெயிட்டர் பில் புக்கை எடுப்பதற்கும் சரியாக இருந்தது.



அதில் சில்லறைகள் இருக்கும் என்பதை எதிர்பார்க்காத வெயிட்டர் அசால்ட்டாக அதை எடுத்ததால் அதில் இருந்த சில்லறைகள் அங்குமிங்கும் தெறித்து விழுந்தன.



அதை பார்த்து அந்த வெயிட்டர் திகைப்புடன் சங்கமித்ராவை பார்த்தார் என்றால் மற்ற அனைவரும் சிரித்தனர்.



"அட... இந்த பொண்ணு பில்லுக்கு சில்லறையை கொடுத்திருக்கா பாருங்களேன்"



"பணம் இல்லாம எதுக்காக இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு வரணும்... ஏதாவது ரோட்டு கடையில சாப்பிட்டு இருக்கலாமே" என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளத்தை சேர்ந்தவர்கள் கிண்டலாக சொன்னார்கள்.



அவர்கள் சொன்னதை கேட்ட சங்கமித்ராவிற்கு அப்படியே பூமிக்குள் புதைந்து விட்டாள் தேவலாம் என்று தோன்றியது.



அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த ரகுவீர் "ஷட் அப்" என்றான்.



சங்கமித்ரா அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததால் அவள் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை.



சிரிப்பவர்கள் அனைவரையும் கோபத்துடன் பார்த்தவன் "ஹலோ அந்த பொண்ணுகிட்ட அவ சாப்பிடத்துக்கான பணத்தை கொடுக்க சில்லறையாவது இருக்கு... சில பார் மாதிரி அவ ஒன்னும் பிரெண்ட்ஸ் பணத்துல சாப்பிடலையே... பர்ஸ்ட் உங்க முதுகுல இருக்க அழுக்கை பாருங்க... அதுக்கு பிறகு அடுத்தவங்களை பத்தி பேசலாம்" என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்தபடி சொன்னான்.



அவன் பேச்சை கேட்ட சங்கமித்ரா திரும்பி பார்த்தவள் அங்கு சத்தியமாக ரகுவீரை எதிர்பார்க்கவில்லை. ரகுவீரும் அவளை எதிர்பார்க்கவில்லை.



ஆனால் அவன் திகைத்து நின்றது ஒரு கணமே... அடுத்த நொடி அவன் அவளை கண்டுகொள்ளாமல் அவளை கடந்து சென்றான்.



அப்போது சங்கமித்ரா "தேங்க்ஸ்" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.



"உன் தேங்க்ஸை நீயே வச்சிக்கோ... என்கிட்ட மட்டும் அந்த வாயடிக்கிற... இப்போ ஏன் அமைதியா இருந்த? எப்போதும் உனக்காக நீதான் சண்டையிடணும்... அது யார்கிட்டயா இருந்தாலும்... புரிஞ்சிதா?" என்று சிடுசிடுத்தவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.



அதேநேரம் தூங்கி எழுந்து சாப்பிட்டு முடித்த அமிர்தாவிற்கு அப்போதுதான் தன் பர்ஸ் மிஸ்ஸானது தெரிந்தது.



'பர்ஸ் எங்க மிஸ் ஆச்சு' என்று அவள் யோசித்த போது தான் நேற்று ஆத்விக்கின் கையில் அதை பார்த்தது நினைவிற்கு வந்தது.



"ஐயோ கடவுளே... அந்த பர்ஸை ஆது திறந்து பார்த்துடக்கூடாதே" என்று பதற்றத்துடன் நினைத்தவள் உடனே ஆத்விக்கின் வீட்டை நோக்கி சென்றாள்.



மறுபுறம் விஸ்வநாதன் அனுப்பிய முகவரிக்கு பிரேம் மற்றும் ரகுவீர் சென்றனர்.
 
Last edited:

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
சங்கமித்ரா அருமையான பாத்திரம். அமிர்தா சூப்பர். ரன்வீர் போடா. ஆத்விக் தான் பிடிச்சிருக்கு.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
சங்கமித்ரா அருமையான பாத்திரம். அமிர்தா சூப்பர். ரன்வீர் போடா. ஆத்விக் தான் பிடிச்சிருக்கு.
அப்போ உங்களுக்கு ஆத்விக் தான் பிடிச்சிருக்கு... ஆனா அவன் முன்கோபக்காரனாச்சே சிஸ்...
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 12 :



காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்ட ஆத்விக் சென்று கதவை திறந்த போது அமிர்தா அங்கே நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.



கைகளை கட்டியபடி கதவில் சாய்ந்து நின்றவன் "இவ்வளவு காலையில மேடம்க்கு இங்க என்ன வேலைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான்.



"ஹ்ம்ம் காலையிலேயே உன்னை பார்த்து பேசி என்னோட மூடை கெடுத்துக்க வந்தேன்... போதுமா"



"ஓஹ் அப்படியா... ஆனா பாரு நான் இப்போ பிஸி... நீ கிளம்பு" என்றவன் அவள் எதிர்பாராத தருணம் கதவை அடைத்தான்.



அவன் செய்கையில் பல்லை கடித்த அமிர்தா கதவை உடைத்துவிட விரும்புபவளை போல வேகமாக தட்டினாள்.



கதவை திறந்த ஆத்விக் "அதான் போன்னு சொல்லிட்டேன் இல்ல... இன்னும் எதுக்காக இங்கேயே இருக்க?" என்று சிடுசிடுத்தான்.



அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள் நேற்று அவள் படுத்திருந்த அறையை நோக்கி சென்றாள்.



கதவை மூடிவிட்டு அவள் பின்னே வந்த ஆத்விக் "ஹேய் அமிர்தா... நான் சொல்றது உன் காதுல விழலையா? நான் சொல்றதை தான் ஒருமுறை கேட்டு தொலையேன்... இப்போ நீ இங்க இருக்கறது நல்லதில்ல... கிளம்பு" என்றான்.



திரும்பி அவனை பார்த்து முறைத்தவள் "என் இருப்பை விரும்பாதவன் வீட்ல இருக்கணும்னு எனக்கும் அவசியம் இல்ல... நான் என் பர்ஸை மிஸ் பண்ணிட்டேன்... அதை எடுத்துக்கிட்டு போக தான் வந்தேன்" என்றாள்.



"ஓஹ்" என்றவன் "இரு... அது இங்கதான் இருக்கு..." என்றபடி அருகே இருந்த மேஜை டிராயரில் இருந்து அதை எடுத்துக் கொடுத்துவிட்டு "அதான் உன் பர்ஸ் கிடைச்சிடிச்சி இல்ல... கிளம்பு" என்றான்.



"ரொம்ப ஓவரா தான் பண்றடா... இருக்கு உனக்கு ஒருநாள்" என்று முணுமுணுத்த அமிர்தா அவனை முறைத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.



அப்போது மீண்டும் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.



அந்த சத்தம் கேட்டதும் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன் "பிரஸ் பீப்பிள்னு நினைக்கிறேன்... நீ கொஞ்ச நேரம் அவங்க கண்ணுல படாம ஒளிஞ்சிக்கோ" என்று பதற்றத்துடன் சொன்னான்.



அவன் பிடியில் இருந்த தன் கையை உதறியவள் "இவ்வளவு நேரம் போ, போன்னு விரட்டின... இப்போ ஒளிஞ்சிக்க சொல்ற... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?" என்று கோபமாக கேட்டாள்.



"ஏய் லூசு கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா? அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்தா எப்படியெப்படி எல்லாம் எழுதுவாங்கன்னு நான் சொல்லித் தான் உனக்கு தெரியணுமா? அவங்க என்ன எழுதினாலும் அதனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா உனக்கு அப்படி இல்ல... ஒருவேளை உனக்கு அதுதான் வேணும்னா போ... போய் அவங்களுக்கு அடுத்த பத்து நாளுக்கு வேண்டிய கண்டெண்ட் கொடு"



அவன் சொன்னதை கேட்ட அமிர்தாவிற்கு அப்போதுதான் உண்மை உறைத்தது. அவள் பயத்துடன் அவனை பார்த்தாள்.



அவளை கனிவுடன் பார்த்தவன் "போ... போய் எங்கேயாவது ஒளிஞ்சிக்கோ" என்று சொல்லிவிட்டு கதவை திறக்க சென்றான்.



இருந்த பதற்றத்தில் எங்கே சென்று ஒளிவது என்று தெரியாமல் தடுமாறியவள் வராண்டாவை தாண்டி இருந்த சமையலறையில் சென்று ஒளிந்து கொண்டாள்.



அதேநேரம் சாதாரணமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு புன்னகையுடன் கதவை திறந்த ஆத்விக்கின் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று மறைந்தது.



"என் வீட்ல உங்களுக்கு என்ன வேலை?" என்று அவன் ரகுவீரை பார்க்காமல் அவன் அருகே நின்றிருந்த பிரேமை பார்த்து கேட்டான்.



விஸ்வநாதன் கொடுத்த முகவரி ஆத்விக்கின் வீடு என்பதை அறிந்த பிரேம் மற்றும் ரகுவீர் இருவரும் ஒருகணம் திகைத்தனர்.



பின்னர் பிரேமை முறைத்து பார்த்த ரகுவீர் "டேய் அவர் எதுக்காகடா இந்த அட்ரஸ் கொடுத்தார்? இது இவனோட வீடுன்னு உனக்கு முன்பே தெரியுமா?" என்று கேட்டான்.



'அய்யயோ முறைக்கிறானே... முறைக்கிறானே... இப்போ என்ன சொல்லி இவனை சமாளிக்க... இப்படி இவனுங்க கிட்ட என்ன மாட்டி விட்டுடீங்களே அங்கிள்' என்று உள்ளுக்குள் புலம்பிய பிரேம் வெளியே பாவமாக முகத்தை வைத்தபடி "இல்ல மச்சான்... சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது" என்றவன் "சரி வா... சீக்கிரம் உள்ள போய்டலாம்... வெளியில சில பிரஸ் பீப்பிள்ஸ் நிக்கிறதை பார்த்தேன்... அவங்க கண்ணுல நாம எல்லாரும் ஒன்னா இருக்கறது விழுந்துட்டா நம்ம ப்ராஜெக்ட் பத்தி ஸ்மெல் பண்ணிடுவாங்க... ப்ராஜெக்ட் பத்தி அவரா சொல்ற வரைக்கும் இதை ரகசியமா வச்சிக்க சொல்லி அங்கிள் என்கிட்ட சொன்னாரு" என்றான்.



"இல்லை நான் வரலை" என்று ரகுவீர் சொன்னான்.



"நிலைமை புரியாம அடம் பிடிக்காத மச்சான்" என்ற பிரேம் ரகுவீரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.



கதவை மூடிவிட்டு உள்ளே வந்த ஆத்விக் அவர்கள் இருவரையும் உட்காருமாறு சைகை செய்தவன் அவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவர சமையலறைக்கு சென்றான்.



அங்கே ஒளிந்திருந்த அமிர்தாவை பார்த்தவன் "எனக்கு மட்டும் எப்படித்தான் ஒரு பிரச்சனை முடிஞ்சதும் இன்னொரு பிரச்சனை கதவை தட்டுதோ தெரியல" என்று கேலியாக சொன்னான்.



அவன் சொன்னதை கேட்டு பல்லை கடித்த அமிர்தா "என்னையும் என் அண்ணனையும் பார்த்தா உனக்கு பிரச்சனைங்க மாதிரி தெரியுதா?" என்றாள்.



"இல்லையா பின்ன?"



"நீதான் தைரியசாலியாச்சே... பிரச்சனையை சமாளிக்காம ஏன் எங்கேயோ ஓடி ஒளிஞ்ச?"



"எதிர்ல இருக்கறவன் எதிரியா இருந்தா சமாளிக்கலாம்... ஆனா துரோகியா இருந்தா? துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு ஒரு பழமொழி இருக்கே... அது உனக்கு தெரியாதா?" என்று அவன் உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.



அவன் சொன்னதை கேட்ட அமிர்தா தன் கீழுதட்டை கடித்தாள். தன் அண்ணன் துரோகியல்ல என்று கத்தவேண்டும் போல தோன்றியது. அவன் தரப்பு நியாயத்தை ஆத்விக்கிடம் சொல்லிவிட அவள் மனம் துடித்தது.



ஆனால் அவள் ரகுவீருக்கு செய்து கொடுத்த சத்தியம் அவள் வாயை கட்டிப் போட்டது.



'இவனுங்களும் இவனுங்க சண்டையும்' என்று கடுப்பாக நினைத்தவளின் பார்வையில் அவன் கையில் இருந்த ஸ்னாக்ஸில் விழுந்தது.



"துரோகிக்கு தான் விரும்தோம்பல் நடக்குது போல" என்று அமிர்தா கிண்டலாக கேட்டாள்.



"இது எனக்கும் என் பிரெண்ட் ப்ரேமுக்கும் மட்டும்தான்"



"ஏன் இதுல இருந்து என் அண்ணன் கொஞ்சம் எடுத்துக்கிட்டா பிடுங்கிக்கிவியா என்ன?" என்று அவள் எரிச்சலுடன் கேட்டாள்.



அவளை முறைத்து பார்த்தவன் பதில் சொல்வதற்காக வாயைத் திறந்தான். அதற்குள் வெளியே இருந்து பிரேம் அழைக்கும் குரல் கேட்கவே அவன் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.



ஆத்விக் ஸ்னாக்ஸை கொண்டு வந்து டீப்பாயின் மீது வைத்ததும் "இதை எடுக்கத் தான் உள்ள போனியா?" என்று கேட்ட பிரேம் ஒரு சிப்ஸை எடுத்து சாப்பிட்டான்.



"ஆமா" என்று தலையசைத்த ஆத்விக்கின் பார்வை ரகுவீரின் மீது விழுந்தது.



அதை கவனித்த பிரேம் "ரகு நீயும் சாப்பிடு" என்றான்.



"நான் தெரியாதவங்க வீட்ல எல்லாம் சாப்பிடறது இல்லை" என்று முகத்தில் அடித்தது போல சொன்னான்.



அவன் சொன்னதை கேட்டதும் ஆத்விக்கிற்கு கோபம் தலைக்கேறியது.



தன் கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன் "கீப் இட் அப்... குட் மேனர்ஸ்" என்று நக்கலாக சொன்னவன் "அப்புறம் நான் இதை என் ப்ரெண்ட் பிரேம்காக மட்டும்தான் கொண்டு வந்தேன்" என்றான்.



அவர்களின் சண்டையை பார்த்து கடுப்பான பிரேம் "அடேய் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயை மூடிகிட்டு சும்மா இருங்கடா" என்றான்.



"இங்க பாரு பிரேம்... விஸ்வநாதன் சார் காமன் பிளேஸ்ல மீட்டிங் அரேஞ் பண்ணா மட்டும்தான் நான் அதுல கலந்துப்பேன்... கண்டவங்க வீட்டுக்கு எல்லாம் என்னை வரவழைக்கிற வேலை வச்சிக்க வேண்டாம்னு சொல்லிடு... இப்போ வா கிளம்பலாம்" என்று ரகுவீர் சிடுசிடுத்தான்.



"அப்படி ஒன்னும் சலிச்சிக்கிட்டு யாரும் என் வீட்ல இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ஆத்விக் சொன்னான்.



அவன் சொன்னதை கேட்ட ரகுவீர் உடனே எழுந்து நின்றான்.



"டேய் மச்சான்... கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா... பிரஸ் பீப்பிள்ஸ் போன பின்னாடி போய்டலாம்..." என்று பிரேம் அவனை சமாதானப்படுத்த முயன்றான்.



ரகுவீர் அவனுக்கு பதில் சொல்வதற்குள் "அட அதுக்காக வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லை... என் வீட்டு பின்னாடி கூட ஒரு கதவிருக்கு... போகணும்னு நினைக்கிறவங்க அந்த வழியா போகலாம்" என்றவன் கதவிருக்கும் திசையை கண்களால் சுட்டிக் காட்டினான்.



"இந்த விஷயத்தை சொல்ல நீ இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணாம இருந்திருக்கலாம்" என்று கிண்டலாக சொன்ன ரகுவீர் பின்கதவை நோக்கி செல்ல தொடங்கினான்.



சமையலறையை கடந்து தான் அந்த கதவிடம் செல்ல முடியும். அப்போதுதான் அமிர்தா சமையலறையில் மறைந்திருப்பது ஆத்விக்கிற்கு நினைவுக்கு வந்தது.



வேகமாக சென்று ரகுவீரின் முன்பு நின்றவன் "அது அதுவந்து நீ இந்த வழியா போக வேண்டாம்" என்றான்.



அவனை எரிச்சலுடன் பார்த்த ரகுவீர் "ஏன்னு கேளுடா" என்று பிரேமிடம் சொன்னான்.



'ஏன் அதை நீயே கேட்க வேண்டியது தானே' என்று முணுமுணுத்த பிரேம் கண்களில் கேள்வியுடன் ஆத்விக்கை பார்த்தான்.



"அது அது... ஆம்பளைங்க எப்போதும் தலைநிமிர்த்தி முன்கதவு வழியா தான் போகணும்" என்று வாய்க்கு வந்ததை சொன்னான்.



"டேய் இப்படி லூசு மாதிரி பேசறதை நிறுத்திட்டு அவனை வழி விட சொல்லு" என்று ரகுவீர் கடுப்புடன் சொன்னான்.



"இல்லை... முடியாது... இந்த கிட்சன் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்... இங்க என்னை தவிர வேற யார் நுழையறதையும் என்னால அனுமதிக்க முடியாது"



"ஆத்விக் என்ன இது? நீ பேசறது சரின்னு உனக்கு தோணுதா?" என்று பிரேம் கேட்டான்.



"இப்போ சரி, தப்பையெல்லாம் பார்க்கற நிலைமையில நான் இல்ல... நான் சொன்னா சொன்னதுதான்... போறவங்க முன்கதவு வழியா வெளிய போகலாம்" என்று ஆத்விக் சொன்னதும் "ஹெல் வித் பிரஸ் அண்ட் ஹெல் வித் விஸ்வநாதன்" என்று கத்திய ரகுவீர் எதை பற்றியும் கவலைப்படாமல் முன்கதவை நோக்கி சென்றான்.



"நீ இவ்வளவு ரூடா நடந்துக்க வேண்டிய அவசியமில்லை ஆத்விக்" என்ற பிரேம் ரகுவீரை பின்தொடர்ந்து வெளியே சென்றான்.



அவர்கள் வெளியே சென்றதும் அமிர்தா சமையலறையை விட்டு வெளியே வந்தாள். எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள் அவனிடம் வம்பு

வளர்க்காமல் செல்வதே நல்லது என்று நினைத்தாள்.



"நான் கிளம்பறேன்... பை"



"ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பற... இங்கேயே இருந்து என் உயிரை வாங்கிட்டு போயேன்"



அவன் சொன்னதை கேட்ட அமிர்தா அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினாள்.



அவளின் பார்வையும் அமைதியும் ஆத்விக்கின் மனதை பிசைய செய்தது. எப்போதும் போல அவள் பதிலடி கொடுத்திருந்தால் அவனுக்கு எதுவும் தோன்றியிருக்காதோ என்னவோ? ஆனால் அவளின் அமைதி அவன் மன அமைதியை கெடுக்க ஆரம்பித்தது.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
தவிப்பு - 13 :



அரண்மனை போல காட்சியளித்த அந்த வீடு முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்ந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டிற்கு விஸ்வநாதன் தான் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். ஆனால் இன்னும் அவர் வரவில்லை.



அவர் வரும்வரை அனைவரும் அந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ரகுவீர் கீழ்தளத்தில் இருந்த பெயிண்டிங்கை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் இடத்தில் இருக்க விரும்பாத ஆத்விக் முதல் தளத்தை சுற்றி பார்க்கச் சென்றுவிட்டான். பிரேம் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.



ஒருபுறம் மாட்டியிருந்த பெயிண்டிங்கை பார்த்து முடித்ததும் ரகுவீர் மறுபுறம் செல்ல திரும்பிய போது யாரோ அவன் மீது வந்து விழுந்தனர்.



தன்னையறியால் அந்த நபரை தாங்கிப் பிடித்த ரகுவீர் அதான் பிறகே அது சங்கமித்ரா என்பதை அறிந்தான்.



அவளை நேராக நிறுத்தியவன் "உனக்கு கண்ணு தெரியும் தானே... இல்லைனா போய் ஒரு நல்ல டாக்டரை பாரு... இப்படி சும்மா நின்னுகிட்டு இருக்கவங்க மேல விழுந்து அவங்க எலும்பை உடைச்சிடாத... யம்மா என்னா வலி" என்றபடி வேண்டுமென்றே அவளை தாங்கிப் பிடித்த கையை தேய்த்து விட்டான்.



"சாரி... சார் வந்துட்டாராம்... அவரை வெல்கம் பண்ண போனேன்... வேகமா போகும்போது கால் ஸ்லிப் ஆகிடிச்சு" என்றவள் விஸ்வநாதனை அழைக்க வெளியே சென்றாள்.



அவள் பேசியதை கேட்ட ரகுவீர் ஆச்சர்யமடைந்தான்.



"என்னடா இது... நாம பேசினதுக்கு படபட பட்டாசா பொரிவான்னு பார்த்தா விளக்கம் சொல்லிட்டு போறா" என்று திகைப்புடன் நினைத்தான்.



நேற்று ரகுவீர் ஹோட்டலில் தனக்காக பேசியதில் இருந்து சங்கமித்ரா அவனை பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அதனால்தான் இப்போது அவனிடம் அமைதியாக பதில் சொல்லிவிட்டு சென்றாள்.



'சே... இப்படியா அவர் மேல போய் விழுவ... நல்லவேளை முன்ன மாதிரி என்னை மயக்க என்மேல வந்து விழுந்தியான்னு கேட்காம கண்ணு தெரியலையான்னு மட்டும் கேட்டாரு... ஒருவேளை அப்படி மட்டும் கேட்டிருந்தா அவர் உதவி பண்ணதையெல்லாம் மறந்துட்டு பதிலுக்கு பதில் கொடுத்திருப்பேன்' என்று முனகியவளுக்கு அப்போதுதான் அவன் செய்த உதவிக்கு தான் ஒழுங்காக நன்றி சொல்லிவில்லை என்று தோன்றியது.



'எப்படியாவது இன்னைக்குள்ள அவர்கிட்ட தேங்க்ஸ் சொல்லிடணும்... முடிஞ்சா எங்களுக்குள்ள இருக்க சண்டையை மறந்துட்டு ஒழுங்கா பேச ட்ரை பண்ணனும்... அப்போதான் இந்த ப்ரொஜெக்ட்டை நல்லபடியா முடிக்க முடியும்... ' என்று மனதிற்குள் கணக்கிட்டவள் வெளியே சென்று விஸ்வநாதனை அழைத்து வந்தாள்.



உள்ளே வந்த விஸ்வநாதன் "ஹாய் ரகு... வீடு எப்படி இருக்கு?" என்று ஆர்பாட்டத்துடன் கேட்டார்.



"வீடெல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா எங்களை எதுக்காக இங்க வரச் சொன்னீங்க?" என்று ரகுவீர் கேட்டான்.



அவன் அதை கேட்டுக் கொண்டிருந்த போதே விஸ்வநாதனின் குரல் கேட்டு ஆத்விக் கீழே வந்தான். பிரேமும் போன் பேசி முடித்துவிட்டு உள்ளே வந்தான்.



'இந்த மாதிரி ஒரு இடத்துல இருந்தாதான் நீயும் ஆத்விக்கும் நல்லா பழக முடியும்... உங்க பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்க முடியும்... அதுக்காகத்தான் உங்களை இங்க வரவழைத்தேன்' என்றா அவனிடம் சொல்ல முடியும்?



"இது என்னோட வீடுதான் ரகு... நீங்க ரிகசெல் பண்ண இந்த இடத்தை யூஸ் பண்ணிக்கோங்க... என்னோட ஸ்டூடியோல பண்ணா இந்த விஷயம் எப்படியாவது பிரெஸ்க்கு லீக் ஆகிடும்... அதான் நீங்க இங்க ரிகசெல் பண்ணா நல்லா இருக்கும்னு தோணிச்சு... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... உங்களுக்கு ஏதாவது தேவைன்னா சங்கமித்ரா கிட்ட சொல்லுங்க... அவ பண்ணி கொடுப்பா... பை காய்ஸ்" என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.



அவர் சென்றதும் ஆத்விக் யாரையும் கண்டு கொள்ளாமல் டீப்பாயின் மீதிருந்த மேகசினை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ரகுவீர் ப்ளூடூத்தை மாட்டியபடி யாரிடமோ போன் பேச சென்றுவிட்டான்.



இருவரும் இரு திசையில் நின்றிருப்பதை பார்த்த பிரேம் 'இவனுங்களை வச்சிக்கிட்டு இந்த ப்ரொஜெக்ட்டை முடிச்ச மாதிரிதான்' என்று முணுமுணுத்தபடி பெருமூச்சை வெளியேற்றியவன் அருகே நின்றிருந்த சங்கமித்ராவிடம் "நீ போய் ரகுவை கூட்டிட்டு ரிகசெல் பண்ற ரூமுக்கு வந்துடு... நான் இவனை கூட்டிட்டு போறேன்" என்றான்.



"நானா?" என்று ஒருகணம் தயங்கிய சங்கமித்ரா பின்னர் ரகுவீர் தனியே இருப்பதை பார்த்தவள் 'அவர்கிட்ட தேங்க்ஸ் சொல்ல இதுதான் நல்ல சந்தர்ப்பம்... ' என்று நினைத்தவள் அவனை நோக்கி சென்றாள்.



ரகுவீர் அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி யாரிடமோ வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.



அது தெரியாமல் அவன் பின்னே சென்று நின்றவள் "சார் நேத்து ஹோட்டல்ல என்னை மத்தவங்க கேவலமா பேசும் போது நீங்கதான் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினீங்க..." என்று சொல்லிக் கொண்டிருந்த போது "ஐ கால் யூ பேக்" என்று சொல்லிவிட்டு போனை அணைத்தவன் திரும்பி அவளை எரிச்சலுடன் பார்த்து "கண்ணுன்னு ஒன்னை ஆண்டவன் கொடுத்தது பாக்கறதுக்கு தான்... அதை ஒழுங்கா யூஸ் பண்ணு... முக்கியமா என்கூட இருக்கும் போது" என்று கோபமாக சொன்னான்.



அப்போதுதான் அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை அவள் புரிந்து கொண்டாள்.



நாக்கை கடித்தவள் "சாரி அது வந்து" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே அவளை கண்டு கொள்ளாமல் அவன் ரிகசெல் செய்யும் அறைக்கு சென்றான்.



'சே... எப்போ பார்த்தாலும் அவன்கிட்ட மொக்கை வாங்கறோமே' என்று நொந்து கொண்ட சங்கமித்ரா அவனை பின்தொடர்ந்து சென்றாள்.



சிறிது நேரத்தில் ஒருவாறு வேலையை ஆரம்பித்தனர். முதலில் ரகுவீர் தான் மியூசிக் போட வேண்டும். அதற்கு ஏற்றது போல ஆத்விக் பாடலை எழுதி பாடுவான். ஆனால் அந்த மியூசிக் அவர்கள் மூன்று பேருக்குமே பிடித்தது போல இருக்க வேண்டும்.



அவர்கள் வழக்கப்படி முதலில் ரகுவீர் மியூசிக் போட ஆரம்பித்தான். இரண்டு வருட இடைவெளியின் காரணமாக அவனால் உடனடியாக நல்ல டியூனை போட முடியவில்லை. முதலில் போட்ட சில டியூன்கள் சொதப்பலாக இருந்தன. அதை அவனே உணர்ந்தான்.



அதற்குள் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.



பொறுத்துப் பொறுத்து பார்த்த ஆத்விக் "மச்சான் இதுக்கு மேல என்னால முடியாது... போய் அவனை பிரேக் எடுத்துக்கிட்டு வந்து திரும்ப வேலையை ஆரம்பிக்க சொல்லு" என்று பிரேமிடம் சொன்னான்.



ரகுவீருக்கு ஒரு சின்ன இடைவேளை தேவை என்பது பிரேமிற்கும் புரிந்தது.



"ரகு... நீ ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு உன்னை ஆசுவாசப்படுத்திக்கிட்டு வா மச்சான்.. ஆல்ரெடி டூ ஹவர்ஸ் ஆகிடிச்சி... உனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே பிரேக் தேவைதான்" என்று பிரேம் சொன்னான்.



ரகுவீரும் சற்று களைப்பாக உணரவே அதற்கு சம்மதித்தான்.



அந்த அறைக்குள் மூச்சடைப்பது போல உணர்ந்த ரகுவீர் "பிரேம் நான் அப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா தோட்டத்துல இருந்துட்டு வரேன்" என்றவன் தன் போனை எடுத்துக் கொண்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.



தாகமெடுப்பது போல இருந்ததால் சமையலறைக்கு சென்றவன் அங்கிருந்த மேடையில் போனை வைத்துவிட்டு தண்ணீரை எடுத்துக் குடித்தான். எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்தப்படியே இருந்தவன் போனை மறந்துவிட்டு தோட்டத்திற்கு சென்றான்.



அதேநேரம் ரிகசெல் அறையில் இருந்த பிரேமிற்கு போன் வந்தது.



போனை எடுத்துப் பேசியவன் "ஓகே... நான் உடனே வரேன்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.



பின்னர் ஆத்விக்கிடம் "மச்சான்... கம்பெனியில ஒரு சின்ன ப்ரோப்ளம்... நான் உடனே போகணும்... ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்திடுவேன்னு ரகுகிட்ட சொல்லிடு" என்றான்.



"எது அவன்கிட்ட நான் சொல்லணுமா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... உனக்கு வேணும்னா நீயே போய் சொல்லிட்டு போ"



'இவன்கிட்ட போய் சொன்ன என் புத்தியை தான் செருப்பால அடிச்சிக்கணும்' என்று முணுமுணுத்தவன் போனை நோண்டிக் கொண்டிருந்த சங்கமித்ராவிடம் "சங்கமித்ரா நான் ஒரு அவசர வேலையா வெளியே போயிருக்கேன்னு ரகுகிட்ட சொல்லிடுங்க" என்றான்.



அவன் சொன்னதை கேட்டவள் தலையசைத்தாள்.



அவன் சென்றதும் நெற்றியை அழுந்த தடவிய ஆத்விக் "மித்ரா உனக்கு ஆட்சேபனை இல்லைனா ஒரு காபி போட்டு கொண்டு வரியா? செமயா தலைவலிக்குது... இல்லைனா நானே போட்டுக்குவேன்" என்று தயக்கத்துடன் கேட்டான்.



"இதுக்கு எதுக்காக தயங்கறீங்க ஆத்விக்... ஒரு ப்ரெண்டுக்கு இந்த ஹெல்ப் கூடவா நான் பண்ண மாட்டேன்" என்று புன்னகையுடன் சொன்னவள் காபி போட சமையலறைக்கு சென்றாள்.



பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தவள் அவர்கள் மூவரையும் பற்றி யோசிக்க தொடங்கினாள். அவர்கள் மூவரும் ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். பிறகு ஏதோ பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அதை அப்போது அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.



ஆனால் இப்போது அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள அவள் ஆவலாக இருந்தாள்.



அவள் அவர்கள் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போதே பால் பொங்கியது. பால் பொங்கும் சத்தத்தில் தன்னிலைக்கி திரும்பியவள் வேகமாக அடுப்பை அணைத்துவிட்டு ஏதோ யோசனையுடன் மேடையின் மீதிருந்த காபி கோப்பையை இழுத்தாள். அப்போது அவள் காபி கோப்பைக்கு முன்பிருந்த போனை கவனிக்கவில்லை. அவள் கோப்பையை இழுத்ததில் போன் நழுவி கீழே விழுந்தது.



அந்த சத்தத்தில் பதறியவள் கைகளால் வாயை பொத்தியபடி திகைத்து நின்றாள்.



'ஐயையோ... யாரோட போன்னு தெரியலையே' என்று பயத்துடன் சொன்னபடி அதை எடுக்க கீழே குனிந்தவளின் பார்வையில் சமையலறைக்குள் நுழைந்த ரகுவீர் விழுந்தான்.



'ஐயோ கடவுளே... இது இவன் போனா... இன்னைக்கு நான் தொலைந்தேன்' என்று நினைத்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.



அவள் செய்வதறியாது நின்றது ஒருகணம் தான். அடுத்த கணம் அவன் கண்ணில் சிக்காமல் தப்பிக்க சட்டென்று அவள் மேடையின் கீழே ஒளிந்து கொண்டாள்.



தான் போனை மறந்து வைத்துவிட்ட இடத்திற்கு வந்த ரகுவீர் போன் கீழே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ந்தவன் "ஷிட்... யார் இப்படி பண்ணதுன்னு தெரியலையே' என்றபடி போனை எடுத்து அதை பொறுத்தினான்.



பின்னர் அருகே இருந்த துணியை எடுத்து போனை துடைத்துவிட்டு அதை விசிறி எறிந்தான். அவன் விசிறி எறிந்த துணி நேராக சங்கமித்ராவின் முகத்தில் சென்று விழுந்தது. அது விழுந்த வேகத்தில் அதில் இருந்த தூசி அவள் மூக்கில் ஏறியதால் அவள் அச் அச்சென்று தும்மினாள்.



அந்த சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த ரகுவீர் "ஏய்... என் போனை உடைத்தது நீதானா?" என்று உறுமினான்.



முகத்தை பாவமாக வைத்தபடி வெளியே வந்த சங்கமித்ரா "அது வந்து சார்... நான் வேணும்னு இப்படி பண்ணல... தெரியாம நடந்துடிச்சு" என்றாள்.



கைகளை அவள் முன்பு நீட்டி மேலே பேச வேண்டாம் என்று சைகை செய்தவன் "உன்னை பார்க்கும் போதெல்லாம்... உன்கிட்ட பேசும் போதெல்லாம் எனக்கு டென்ஷன் தான் அதிகமாகுது... இத்தனை நாள் போனா போகுது பொண்ணாச்சேன்னு உன்னை சும்மா விட்டது தப்பாகிடிச்சி.. .அதான் நீ எப்போதும் என் வழியில வந்து என்னை டென்ஷன் பண்ற... இன்னைக்கு நான் உனக்கு கொடுக்கப் போற தண்டனையில நீ இனி என் பக்கமே தலைவைத்து படுக்க மாட்ட" என்றான்.