இதழ்:- 1
பூவினி ....... ஏய் …. பூவினி ..........
எங்கே இருக்கிறாய் ... என்று சத்தமாக அழைத்தபடி கையில் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்தாள் செம்பூவினியின் தோழி மற்றும் அவளுடன் அந்த அறையை பங்கு போடும் சிந்து.
இருவரும் அந்நிய தேசத்தில் படிக்க வந்தவர்கள். நாம் இருவரும் தமிழ் என்ற ஒரு உணர்வே அவர்களை முதலில் இணைத்தது.பின் பூவினியுடன் பழக பழக அவளின் ஒவ்வொரு குணமும் பண்பும் சிந்துவை வசீகரித்து அவள் பால் ஈர்த்தது.செம்பூவினியின் நட்பு மட்டும் அந்த சமயத்தில் அவளுக்கு கிடைத்திராவிடில்......எண்ணி பார்க்கவே இப்போதும் உடல் நடுங்குகிறது.
சிந்து மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.வெளியில் ஒரு காலனி வாங்க வேண்டும் என்றால் கூட அப்பாவுடனோ அம்மாவுடனோ தான் செல்ல வேண்டும்.அப்படி பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள். இவ்வாறு மிகவும் அடங்கி வளர்ந்த சிந்து வெளிநாட்டுக்கு தனியே படிக்க வந்தவுடன் அவளுக்கு அதுவரை கிடைத்திராத சுதந்திரம் கிடைத்தது. (அந்த வெளிநாட்டு படிப்பை பெற அவள் பட்டபாடு அவளுக்கு தான் தெரியும்.)
வீட்டுப்பறவையாய் வளர்ந்த அவளுக்கு திடீரென கிடைத்த அந்த சுதந்திரத்தை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்று தெரியவில்லை.மனம் போன போக்கில் சென்றாள்.மேலைநாட்டுக் கலாசாரத்தில் கெட்டுப்போக வழியா இல்லை????
அதற்கேற்றாற் போல அவளுக்கு சில மேலை நாட்டு நண்பர்களும் கிடைத்தார்கள்.நினைத்தபடி உடை அணிந்தாள்.நேரம் காலம் பார்க்காமல் நண்பர்கள் கூட வெளியே சுத்தினாள்.ஏன் ஒரு சில தடவை மது கூட அருந்தி இருக்கிறாள்.அதே நிலையில் சென்றிருந்தால் என்ன ஆகி இருப்பாளோ???
கடவுளே அவளுக்கு நல்வழி காட்ட அனுப்பிய தேவதை என அச் சமயத்தில் தான் செம்பூவினி அவள் வாழ்வில் நுழைந்தாள்.அவளை முதன் முதலில் பார்த்தவுடன் அவள் கண்களில் இருந்த வெறுமை தான் இவளை தானாகவே அவளிடம் சென்று பேச வைத்தது.
அவளது மனநிலைக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவைப்பட்டதோ.என்னவோ இருவரும் நல்ல தோழிகளாய் இணைந்தனர்.அதன் பின் செம்பூவினியின் வழிகாட்டுதலில் அறிவுரையில் சிந்துவின் வாழ்வு சீராகிற்று.செம்பூவினியின் நட்பு கிடைத்த பின்னரே தான் விழ இருந்த படுகுழி எப்படிப் பட்டது என்று அவளுக்கு புரிந்தது. அவள் வாழ்க்கையையே காத்து அழகாக்கிய செம்பூவினி அவளின் உயிர்த்தோழி ஆகிவிட்டாள்.
செம்பூவினி .....பெயருக்கு ஏற்றாற் போல அவள் ஒரு செம் பூ தான். வெளுத்த பாலின் வெண்ணிறம் இல்லை அவள்.சற்றே குங்குமப்பூ கலந்து சுண்டக்காய்ச்சிய பாலின் இளஞ்சிவப்பு நிறம் அவள். அந்த நிறத்தைப் பார்த்து தான் அவளின் பெற்றோர் இந்த பெயரை சூட்டினார்கள் போல!!!! அவளின் பூ முகத்தில் இரு கருவண்டுகளாய் இங்கும் அங்கும் உருண்டோடும் குறும்பு விழிகளே தனி அழகு தான்.
அந்த விழிகளை நினைத்த உடனேயே தான் அவளை முதன் முதலில் சந்தித்த போது அந்த விழிகளில் இருந்த வெறுமையும் வலியும் நினைவு வந்தது சிந்துவுக்கு.அந்த வெறுமையின் காரணமும் கூட ...... ஹ்ம்ம் என்று ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவள் மீண்டும் தோழியை தேடியபடி உள்ளே சென்றாள்.
அங்கே அவள் தோழியோ ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து கட்டிடக்காடுகளை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
அருகில் சென்று அவள் தோள் மேல் கை போட்டாள்.அதில் கலைந்தவள்.
ஏய் வந்தாச்சா?? நான் சொல்லிவிட்ட சாமான்கள் கிடைச்சுதா??
ம்ம்ம்.. வாங்கியாச்சு இந்தா...
ரொம்ப நன்றி டி ..
சரி தான் போடி... ..
ஹே ..... ரொம்ப மகிழ்ச்சியா இருக்க போல தெரியுதே?? ஹ்ம்ம் ?? ஹ்ம்ம் ?? என்றாள் அவள் தோளை அணைத்தபடி.
சட்டென அவள் முகத்தில் ஒரு சலனம் வந்து போனது.அதை மறைத்து மெல்ல முறுவலித்தவள்..
ம்ம்ம் ... ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு போறேன்.சந்தோசம் இருக்காதா??? நாலு வருஷம் கழிச்சு என்னோட குடும்பத்தினரை எல்லாம் பாக்க போறேன்னு சந்தோஷம் தான்.
ஹே ஹே ..உண்மைய சொல்லு.அது மட்டும் தான் காரணமா ஹ? என்றாள் சிந்து கண்களில் இருந்த ஆராய்ச்சியை மறைத்து குறும்பாக கண்ணை சிமிட்டியபடி.
அதுவரை பெயருக்கேற்றாற் போல பூவாய் மலர்ந்திருந்த செம்பூவினியின் முகமலர் சட்டென இருண்டது.
தோழியின் கண்களை சந்தித்தவள் உளறாதே என்றாள். அவளின் குரலின் இறுக்கமே அவள் கோபத்தை பறை சாற்றியது.அது கண்ட சிந்துவின் முகத்தில் இனம் புரியாத ஒரு திருப்தி தென்பட்டது.சட்டென முக பாவத்தை மாற்றியவள் ..
ம்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும்.நீ உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வைச்சுட்டியா??? என்றாள் இயல்பாக. அதை உணர்ந்தவளும் அவளின் கேள்விக்கு இயல்பாக பதில் சொன்னாள்.
இல்லடி கொஞ்சம் எடுத்து வைத்தேன்.மீதியை நீ வந்தபின் செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.என்றாள் சிறு சிரிப்புடன். அந்த சிரிப்பில் லயித்த சிந்து.ஏய் நீ நிஜமாவே செம்பூ தாண்டி. பொருத்தமா தான் பேரு வைச்சிருக்காங்க உனக்கு.
அச்ஹூம் ...... அச்ச்சூம்.... என்னடி ஐஸ் வைக்கிறாயா??? ஹா??
சரி சரி நான் எதுவுமே சொல்லலப்பா. நீ வா நாங்கள் உன் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலாம்.
ம்ம்ம் ...சரி என்றவாறே அவளுடன் நடந்தாள் பூவினி
எல்லாவற்றையும் அடுக்கி முடித்து பெட்டியை மூடியபடி ...
பூவினி ......என்றாள் சிந்து
ம்ம்ம் ........
நான் ஒண்ணு சொல்லவா??
என்னை கோபப்படுத்தாத விடயம் என்றால் சொல்லு.
மெல்ல சிரித்த சிந்து
ம்ம்ஹும் நான் பேசும் விஷயம் நிச்சயம் உன்னை கோபப்படுத்தும்.உன் கோபத்தின் காரணத்தாலேயே இவ்வளவு நாளும் நான் எதுவும் பேசவில்லை.இது தான் கடைசி வாய்ப்பு இப்போதாவது நான் சொல்லுவதை காது கொடுத்து கேள்.தயவு செய்து ...... என்றாள்.
அவளின் குரலில் இருந்த கெஞ்சல் பூவினியை மௌனமாக்க.அதையே சாதகமாக கொண்டு சிந்து தொடர்ந்தாள்.
இதோ பார் பூவினி ....
இனிமேலும் முட்டாள் தனமாக உன் வாழ்வை வீணடிக்காமல்.உன் பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் ஒழுங்காக நல்ல முடிவை எடு.சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்.என்ன?? என்றாள்.
அதற்கு பூவினியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. லேசான உதட்டு சுழிப்பை தவிர ..
அதை பார்த்த சிந்துவுக்கு கோபம் தலைக்கேறியது.
பைத்தியமாடி நீ?? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்?? உன்னை வேண்டாம் என்று கூறி உன் காதலை புறக்கணித்தவனை நினைத்துக் கொண்டு உன் வாழ்கையை வீணடிக்கிறாயே இது உனக்கே முட்டாள்த்தனமாக தெரியவில்லை??? அல்லது அவனுக்கு தான் இன்னும் கல்யாணம் முடியவில்லையே இன்னொரு வாய்ப்பிருக்குமோ என்று எண்ணுகிறாயா??? என்றாள் கோபமாகவே.அவள் எண்ணியது போலவே சிந்துவின் கடைசி வாக்கியம் அவள் தன் மானத்தை தட்டி எழுப்பிவிட வெறி கொண்ட வேங்கையாய் சீறினாள் பூவினி.
சிந்துதுதுது........... உன் உளறலை கொஞ்சம் நிறுத்துகிறாயா?? இதற்கு மேல் ஏதாவது கதைத்தாய் என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்ன சொன்னாய் நான் இன்னொரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேனா?? ஹ்ம்ம்.... எனக்கு சிறுவயதில் இருந்து ஒவ்வொரு விடயத்திற்கும் முன்னுதாரணமாக இருந்தது அவன் தான்.கூடவே அவனது திமிரும் எனக்கு இருக்கிறது அவனைவிட அதிகமாகவே .....
என்று என்னை என் காதலை அவன் புறக்கணித்தானோ அன்றே அவனை நான் வெறுத்துவிட்டேன்.இனி ஒருவேளை அவனே என்னை விரும்பினால் கூட நான் அவனை ஏற்கப் போவது இல்லை.இது உறுதி. நான் திருமணம் செய்வதும் செய்யாமல் விடுவதும் என் சொந்த விடயம். அதனால் இதற்கு மேல் தேவை இல்லாமல் எதுவும் கதைக்காதே என்று கோபமாக கத்தியவள் தோழியின் ஆராய்ச்சி பார்வையைக் கூட கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று கதவை அறைந்து மூடினாள்.
ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது சிந்துவுக்கு.ஊப்ஸ் ......... என்று மூச்சை இழுத்து விட்டவள் தொப் என்று இருக்கையில் விழுந்தாள். அவளின் சிந்தனை முழுதும் பூவினியையே சுற்றி வந்தது.
தான் அப்படி பேசியதும் பூவினி கொதித்தெழுந்து நான் எதுக்கு திருமணம் செய்யாமல் இருக்க போகிறேன். அவனை நினைத்து என் வாழ்வை பாழாக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை.நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விடுவாள் என்று எதிர்பார்த்தாள்.ஆனால்............????
அவள் கொதித்தாள் தான்.ஆனால் சிந்து எதிர்பார்த்த வார்த்தைகளை அவள் கூறவில்லை.
வேறு ஒருத்தனை திருமணம் செய்வேன் என்று வெறும் வாய் வார்த்தையாக கூறுவதற்கு கூட அவளுக்கு மனம் வரவில்லை என்றால் இதுக்கு என்ன அர்த்தம்.அப்படியானால் இன்னும் அவள் அவனை மனதில் இருந்து தூக்கி போடவில்லையா??? அப்படியாயின் பூவினியின் வாழ்வு????
கடவுளே ..... அவளுடைய இனிய தோழியின் வாழ்வு என்னவாகும்?? அவளுக்கு பூவினியின் வாழ்வு முக்கியம். மிக மிக முக்கியம்.அவளை அவள் வாழ்வை நல்வழிப்படுத்திய அவள் தோழியுடைய வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும்.அவளுக்கு பூவினியுடைய கடந்தகாலம் தெரியும். அதில் அவனால் அவள் பட்ட மனவலியும் தெரியும்.அதனாலேயே அவனை பூவினி மறக்க வேண்டும் என்று விரும்பினாள்.ஏன் அவனை மறந்துவிட்டாள் என்று கூட நினைத்தாளே. சற்று முன்பு கூட வேண்டுமென்றே லேசாக பேச்சு எடுத்தாள்.அதற்கு பூவினி கோபம் கொண்ட போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது நிஜம்.தோழி அவனை வெறுக்கிறாள் என்று...
பூவினி ....... ஏய் …. பூவினி ..........
எங்கே இருக்கிறாய் ... என்று சத்தமாக அழைத்தபடி கையில் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்தாள் செம்பூவினியின் தோழி மற்றும் அவளுடன் அந்த அறையை பங்கு போடும் சிந்து.
இருவரும் அந்நிய தேசத்தில் படிக்க வந்தவர்கள். நாம் இருவரும் தமிழ் என்ற ஒரு உணர்வே அவர்களை முதலில் இணைத்தது.பின் பூவினியுடன் பழக பழக அவளின் ஒவ்வொரு குணமும் பண்பும் சிந்துவை வசீகரித்து அவள் பால் ஈர்த்தது.செம்பூவினியின் நட்பு மட்டும் அந்த சமயத்தில் அவளுக்கு கிடைத்திராவிடில்......எண்ணி பார்க்கவே இப்போதும் உடல் நடுங்குகிறது.
சிந்து மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.வெளியில் ஒரு காலனி வாங்க வேண்டும் என்றால் கூட அப்பாவுடனோ அம்மாவுடனோ தான் செல்ல வேண்டும்.அப்படி பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள். இவ்வாறு மிகவும் அடங்கி வளர்ந்த சிந்து வெளிநாட்டுக்கு தனியே படிக்க வந்தவுடன் அவளுக்கு அதுவரை கிடைத்திராத சுதந்திரம் கிடைத்தது. (அந்த வெளிநாட்டு படிப்பை பெற அவள் பட்டபாடு அவளுக்கு தான் தெரியும்.)
வீட்டுப்பறவையாய் வளர்ந்த அவளுக்கு திடீரென கிடைத்த அந்த சுதந்திரத்தை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்று தெரியவில்லை.மனம் போன போக்கில் சென்றாள்.மேலைநாட்டுக் கலாசாரத்தில் கெட்டுப்போக வழியா இல்லை????
அதற்கேற்றாற் போல அவளுக்கு சில மேலை நாட்டு நண்பர்களும் கிடைத்தார்கள்.நினைத்தபடி உடை அணிந்தாள்.நேரம் காலம் பார்க்காமல் நண்பர்கள் கூட வெளியே சுத்தினாள்.ஏன் ஒரு சில தடவை மது கூட அருந்தி இருக்கிறாள்.அதே நிலையில் சென்றிருந்தால் என்ன ஆகி இருப்பாளோ???
கடவுளே அவளுக்கு நல்வழி காட்ட அனுப்பிய தேவதை என அச் சமயத்தில் தான் செம்பூவினி அவள் வாழ்வில் நுழைந்தாள்.அவளை முதன் முதலில் பார்த்தவுடன் அவள் கண்களில் இருந்த வெறுமை தான் இவளை தானாகவே அவளிடம் சென்று பேச வைத்தது.
அவளது மனநிலைக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவைப்பட்டதோ.என்னவோ இருவரும் நல்ல தோழிகளாய் இணைந்தனர்.அதன் பின் செம்பூவினியின் வழிகாட்டுதலில் அறிவுரையில் சிந்துவின் வாழ்வு சீராகிற்று.செம்பூவினியின் நட்பு கிடைத்த பின்னரே தான் விழ இருந்த படுகுழி எப்படிப் பட்டது என்று அவளுக்கு புரிந்தது. அவள் வாழ்க்கையையே காத்து அழகாக்கிய செம்பூவினி அவளின் உயிர்த்தோழி ஆகிவிட்டாள்.
செம்பூவினி .....பெயருக்கு ஏற்றாற் போல அவள் ஒரு செம் பூ தான். வெளுத்த பாலின் வெண்ணிறம் இல்லை அவள்.சற்றே குங்குமப்பூ கலந்து சுண்டக்காய்ச்சிய பாலின் இளஞ்சிவப்பு நிறம் அவள். அந்த நிறத்தைப் பார்த்து தான் அவளின் பெற்றோர் இந்த பெயரை சூட்டினார்கள் போல!!!! அவளின் பூ முகத்தில் இரு கருவண்டுகளாய் இங்கும் அங்கும் உருண்டோடும் குறும்பு விழிகளே தனி அழகு தான்.
அந்த விழிகளை நினைத்த உடனேயே தான் அவளை முதன் முதலில் சந்தித்த போது அந்த விழிகளில் இருந்த வெறுமையும் வலியும் நினைவு வந்தது சிந்துவுக்கு.அந்த வெறுமையின் காரணமும் கூட ...... ஹ்ம்ம் என்று ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவள் மீண்டும் தோழியை தேடியபடி உள்ளே சென்றாள்.
அங்கே அவள் தோழியோ ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து கட்டிடக்காடுகளை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
அருகில் சென்று அவள் தோள் மேல் கை போட்டாள்.அதில் கலைந்தவள்.
ஏய் வந்தாச்சா?? நான் சொல்லிவிட்ட சாமான்கள் கிடைச்சுதா??
ம்ம்ம்.. வாங்கியாச்சு இந்தா...
ரொம்ப நன்றி டி ..
சரி தான் போடி... ..
ஹே ..... ரொம்ப மகிழ்ச்சியா இருக்க போல தெரியுதே?? ஹ்ம்ம் ?? ஹ்ம்ம் ?? என்றாள் அவள் தோளை அணைத்தபடி.
சட்டென அவள் முகத்தில் ஒரு சலனம் வந்து போனது.அதை மறைத்து மெல்ல முறுவலித்தவள்..
ம்ம்ம் ... ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு போறேன்.சந்தோசம் இருக்காதா??? நாலு வருஷம் கழிச்சு என்னோட குடும்பத்தினரை எல்லாம் பாக்க போறேன்னு சந்தோஷம் தான்.
ஹே ஹே ..உண்மைய சொல்லு.அது மட்டும் தான் காரணமா ஹ? என்றாள் சிந்து கண்களில் இருந்த ஆராய்ச்சியை மறைத்து குறும்பாக கண்ணை சிமிட்டியபடி.
அதுவரை பெயருக்கேற்றாற் போல பூவாய் மலர்ந்திருந்த செம்பூவினியின் முகமலர் சட்டென இருண்டது.
தோழியின் கண்களை சந்தித்தவள் உளறாதே என்றாள். அவளின் குரலின் இறுக்கமே அவள் கோபத்தை பறை சாற்றியது.அது கண்ட சிந்துவின் முகத்தில் இனம் புரியாத ஒரு திருப்தி தென்பட்டது.சட்டென முக பாவத்தை மாற்றியவள் ..
ம்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும்.நீ உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வைச்சுட்டியா??? என்றாள் இயல்பாக. அதை உணர்ந்தவளும் அவளின் கேள்விக்கு இயல்பாக பதில் சொன்னாள்.
இல்லடி கொஞ்சம் எடுத்து வைத்தேன்.மீதியை நீ வந்தபின் செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.என்றாள் சிறு சிரிப்புடன். அந்த சிரிப்பில் லயித்த சிந்து.ஏய் நீ நிஜமாவே செம்பூ தாண்டி. பொருத்தமா தான் பேரு வைச்சிருக்காங்க உனக்கு.
அச்ஹூம் ...... அச்ச்சூம்.... என்னடி ஐஸ் வைக்கிறாயா??? ஹா??
சரி சரி நான் எதுவுமே சொல்லலப்பா. நீ வா நாங்கள் உன் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலாம்.
ம்ம்ம் ...சரி என்றவாறே அவளுடன் நடந்தாள் பூவினி
எல்லாவற்றையும் அடுக்கி முடித்து பெட்டியை மூடியபடி ...
பூவினி ......என்றாள் சிந்து
ம்ம்ம் ........
நான் ஒண்ணு சொல்லவா??
என்னை கோபப்படுத்தாத விடயம் என்றால் சொல்லு.
மெல்ல சிரித்த சிந்து
ம்ம்ஹும் நான் பேசும் விஷயம் நிச்சயம் உன்னை கோபப்படுத்தும்.உன் கோபத்தின் காரணத்தாலேயே இவ்வளவு நாளும் நான் எதுவும் பேசவில்லை.இது தான் கடைசி வாய்ப்பு இப்போதாவது நான் சொல்லுவதை காது கொடுத்து கேள்.தயவு செய்து ...... என்றாள்.
அவளின் குரலில் இருந்த கெஞ்சல் பூவினியை மௌனமாக்க.அதையே சாதகமாக கொண்டு சிந்து தொடர்ந்தாள்.
இதோ பார் பூவினி ....
இனிமேலும் முட்டாள் தனமாக உன் வாழ்வை வீணடிக்காமல்.உன் பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் ஒழுங்காக நல்ல முடிவை எடு.சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்.என்ன?? என்றாள்.
அதற்கு பூவினியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. லேசான உதட்டு சுழிப்பை தவிர ..
அதை பார்த்த சிந்துவுக்கு கோபம் தலைக்கேறியது.
பைத்தியமாடி நீ?? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்?? உன்னை வேண்டாம் என்று கூறி உன் காதலை புறக்கணித்தவனை நினைத்துக் கொண்டு உன் வாழ்கையை வீணடிக்கிறாயே இது உனக்கே முட்டாள்த்தனமாக தெரியவில்லை??? அல்லது அவனுக்கு தான் இன்னும் கல்யாணம் முடியவில்லையே இன்னொரு வாய்ப்பிருக்குமோ என்று எண்ணுகிறாயா??? என்றாள் கோபமாகவே.அவள் எண்ணியது போலவே சிந்துவின் கடைசி வாக்கியம் அவள் தன் மானத்தை தட்டி எழுப்பிவிட வெறி கொண்ட வேங்கையாய் சீறினாள் பூவினி.
சிந்துதுதுது........... உன் உளறலை கொஞ்சம் நிறுத்துகிறாயா?? இதற்கு மேல் ஏதாவது கதைத்தாய் என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்ன சொன்னாய் நான் இன்னொரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேனா?? ஹ்ம்ம்.... எனக்கு சிறுவயதில் இருந்து ஒவ்வொரு விடயத்திற்கும் முன்னுதாரணமாக இருந்தது அவன் தான்.கூடவே அவனது திமிரும் எனக்கு இருக்கிறது அவனைவிட அதிகமாகவே .....
என்று என்னை என் காதலை அவன் புறக்கணித்தானோ அன்றே அவனை நான் வெறுத்துவிட்டேன்.இனி ஒருவேளை அவனே என்னை விரும்பினால் கூட நான் அவனை ஏற்கப் போவது இல்லை.இது உறுதி. நான் திருமணம் செய்வதும் செய்யாமல் விடுவதும் என் சொந்த விடயம். அதனால் இதற்கு மேல் தேவை இல்லாமல் எதுவும் கதைக்காதே என்று கோபமாக கத்தியவள் தோழியின் ஆராய்ச்சி பார்வையைக் கூட கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று கதவை அறைந்து மூடினாள்.
ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது சிந்துவுக்கு.ஊப்ஸ் ......... என்று மூச்சை இழுத்து விட்டவள் தொப் என்று இருக்கையில் விழுந்தாள். அவளின் சிந்தனை முழுதும் பூவினியையே சுற்றி வந்தது.
தான் அப்படி பேசியதும் பூவினி கொதித்தெழுந்து நான் எதுக்கு திருமணம் செய்யாமல் இருக்க போகிறேன். அவனை நினைத்து என் வாழ்வை பாழாக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை.நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விடுவாள் என்று எதிர்பார்த்தாள்.ஆனால்............????
அவள் கொதித்தாள் தான்.ஆனால் சிந்து எதிர்பார்த்த வார்த்தைகளை அவள் கூறவில்லை.
வேறு ஒருத்தனை திருமணம் செய்வேன் என்று வெறும் வாய் வார்த்தையாக கூறுவதற்கு கூட அவளுக்கு மனம் வரவில்லை என்றால் இதுக்கு என்ன அர்த்தம்.அப்படியானால் இன்னும் அவள் அவனை மனதில் இருந்து தூக்கி போடவில்லையா??? அப்படியாயின் பூவினியின் வாழ்வு????
கடவுளே ..... அவளுடைய இனிய தோழியின் வாழ்வு என்னவாகும்?? அவளுக்கு பூவினியின் வாழ்வு முக்கியம். மிக மிக முக்கியம்.அவளை அவள் வாழ்வை நல்வழிப்படுத்திய அவள் தோழியுடைய வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும்.அவளுக்கு பூவினியுடைய கடந்தகாலம் தெரியும். அதில் அவனால் அவள் பட்ட மனவலியும் தெரியும்.அதனாலேயே அவனை பூவினி மறக்க வேண்டும் என்று விரும்பினாள்.ஏன் அவனை மறந்துவிட்டாள் என்று கூட நினைத்தாளே. சற்று முன்பு கூட வேண்டுமென்றே லேசாக பேச்சு எடுத்தாள்.அதற்கு பூவினி கோபம் கொண்ட போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது நிஜம்.தோழி அவனை வெறுக்கிறாள் என்று...