பகுதி – 12.
வைஷாலி தன் வீட்டில் அமர்ந்து அத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். சர்வஜித்தைப் பற்றி யோசிக்கையிலேயே மண்டைக்குள் குடைந்தது. ‘அது சர்வா தான்...’ மனம் அத்தனை உறுதியாகச் சொல்ல, அவளது நகங்கள் அவளது யோசனைக்கு இலக்காகிக் கொண்டிருந்தது.
‘அவரோட முகம் மாறலாம்... ஆனால் அந்த உடல்மொழி, குரல் எல்லாம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்ததே. அது என்ன பொய்யா?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
மீண்டுமாக தன் அலைபேசியை எடுத்தவள், யூடியூபில் அந்த லான்ச் வீடியோவை ஓடவிட்டாள். ‘அவனது கம்பெனி சிம் வேண்டும் அனைவருக்கும் இலவச சிம். அன்லிமிட்டட் கால் வசதி, தினமும் மூன்று ஜிபி டேட்டா இலவசம்’ என அவன் சொல்லிக் கொண்டே போனான்.
அந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாள் எனக் கேட்டால் அவளுக்கே தெரியாது. குறைந்தது நூறு முறைக்கு மேலாவது அதைப் பார்த்திருப்பாள். அவளது கண்களும் புலன்களும் பொய் சொல்லவில்லை என அவளுக்கு சத்தியம் செய்து கொண்டு இருந்தன.
‘எனக்கு அப்பட்டமா தெரியற விஷயம், அந்த ரூபிக்கு எப்படிப் புரியாமல் போகுது? நான் அத்தனை முறை சொல்லியும் அவ கேட்கவே இல்லையே...’ யோசனையோடு அந்த வீடியோவைப் பார்த்தாள்.
அவனது கண்ணீர் என்ற குரல், அந்த ஆங்கில உச்சரிப்பு, ஆறடிக்கும் குறையாத அவனது உயரம். அவன் அணிந்திருந்த அந்த இங்க் வர்ண சூட்... அவனது கம்பீரத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
ஜெல் போட்டு படிய வைத்திருந்த அவனது கேசம், அப்படியும் அடங்காமல் நெற்றியில் புரண்டு கொண்டிருந்தது. ட்ரிம் செய்த தாடியும், மீசையுமாக கொஞ்சம் நல்ல கலராகவே இருந்தான். அவன் அன்று சிகரெட் பிடித்த விதம் நினைவுக்கு வர, அவள் விழிகள் மூடிக் கொண்டது.
‘ரஜினியை விட சூப்பரா சிகரெட் பிடிச்சாரே...’ அந்த வாசனை இப்பொழுதும் தன்னைச் சுற்றி இருப்பது போன்ற பிரம்மை. பொதுவாகவே பெண்களுக்கு அந்த வாடையே ஆகாது. ஆனால் வைஷாலிக்கு சின்ன வயதில் இருந்தே அந்த சிகரெட் வாசனை அவ்வளவு பிடிக்கும்.
அவளது அம்மாவின் அப்பா சுருட்டு பிடிப்பார்... அந்த வாசனையும் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அது ஏன் என அவளுக்குத் தெரியாது. ரூபி கூட அதைச் சொல்லி அவளை கேலி செய்வாள். “எப்படித்தான் இந்த நாத்தம் உனக்குப் புடிக்குதோ? எனக்கு குடலைப் புரட்டும்” என்பாள்.
சில பல நொடிகள் அவன் புகைத்த விதமே அவள் நினைவில் நிற்க, தன்னை மீறி அதை மனக் கண்முன் கண்டிருந்தாள். ‘அப்படி என்ன கோபம் வருது? என் மாமனையே ஓட விட்டிருக்காரே’ அதுதான், அந்த விஷயம்தான் அவள் யோசனையில் அவன் நிற்கக் காரணமாக இருந்தது.
‘அவர் என்னைப் பார்த்தார் தானே? நான் அந்தப் படிகளில் ஏறும்போது என்னையவே பார்த்துக் கொண்டு இருந்தார். அதுவும் நானும் ரூபியும் பேசும்போது, விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்’ அவள் சன்னமாக முனகினாள்.
“அந்த கண்ணாடிக் கருமத்தை புடுங்கி தூரப் போடணும். எப்போ பார் ராப்பிச்சைக்காரன் மாதிரி ஒரு கண்ணாடி” சற்று குரல் உயர்த்தியே சொன்னாள்.
‘இப்போ உனக்கு அவன் கண்ணாடி போட்டிருப்பது பிரச்சனையா? இல்லையென்றால் அவன் கண்களைப் பார்த்து, உணர்வுகளைப் படிக்க முடியவில்லையே என்பது பிரச்சனையா?’ அவளது மனசாட்சி கேட்டு வைத்தது.
“என்ன? அப்படியெல்லாம்...” எனத் துவங்கியவள், “ஆமா... அதுக்கு இப்போ என்ன?” தனக்குத் தானே பேசிக் கொண்டாள். அவனைப் பார்த்த அத்தனை முறையும் அவன் கண்களை அந்த குளிர் கண்ணாடி மறைத்து இருந்தது புரிந்தது.
“ச்சே...” அவள் சலித்துக் கொள்ள, “கூப்ட்டியா பாப்பா? பசிக்குதா?” என்றவாறு அருணா அங்கே வந்தாள்.
“ஹாங்... இல்லக்கா... நீங்க போங்க” என்றவள், அவள் செல்லவே தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியாடி?” தனக்குத் தானே சொல்லியும் கொண்டாள். ரூபி அவளிடம் அவளது பிரச்சனையைப் பற்றி கேட்டிருக்க, அவளிடம் சொல்ல மறுத்தாள்.
“இப்போதான் அதைக் கொஞ்சம் மறந்துட்டு இருக்கேன். அதை மறுபடியும் ஞாபகப்படுத்தாதே ரூபி. எனக்கு எப்போ சொல்ல முடியும்னு தோணுதோ அப்போ சொல்றேன்” அவள் சொல்லிவிட, ரூபி அதற்கு மேலே எதையும் கேட்கவில்லை.
ஆனால் அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தவளாக, “உனக்கு அந்த ஹரீஷை முன்னாடியே தெரியுமா?” வைஷாலி கேட்க, ரூபியிடம் சட்டென ஒரு தடுமாற்றம்.
“அது... அப்படியெல்லாம் எதுவும் இல்லையே...” அவள் சொன்ன விதமே அவள் பொய் சொல்கிறாள் எனச் சொல்ல வைஷாலி அதைத் தோண்டி துருவவில்லை.
“உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு...” அவள் சொல்ல,
“அதையெல்லாம் நான் மறக்கணும்னு நினைக்கறேன் ஷாலு” அவள் ஒரு மாதிரி குரலில் சொல்ல, அதை அப்படியே விட்டுவிட்டாள்.
ஆனால் அந்த நேரம் ரூபி ஹரீஷைப் பற்றிதான் யோசித்துக் கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்து, பேசி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டாலும், ஹரீஷை அவளால் மறக்க முடியவில்லை.
அது ரூபி கல்லூரியில் முதல் வருடம் முடித்த பொழுது நடந்தது. அவளது தகப்பன் ராமராஜனுக்கு திடுமென மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
குடும்பமே நிலை குலைந்து போனது. அவருக்கோ தன் இளைய மகளை கட்டிக் கொடுக்காமல் போய்விட்டால், தன் மனைவி எப்படி சமாளித்து இருப்பாள் என்ற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது.
அவள் அப்போழுதுதுதான் இருபதுவயதின் துவக்கத்தில் இருந்தாள். டிச்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், தன் கவலையைச் சொல்லி கண் கலங்கிவிட்டார். எப்பொழுதும் தைரியமாக, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் தன் அப்பா கண் கலங்கினால் எந்தப் பெண்ணால்தான் அதைத் தாங்க முடியும்?
“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்ப்பா. இப்படி அழாதீங்க” அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னாள். அப்பொழுது சென்னையில் அவர்கள் வேறு ஏரியாவில் இருந்தார்கள்.
உடனடியாக தரகரிடம் சொல்லி மாப்பிள்ளை பார்க்க, அவர் கொண்டு வந்த வரன் தான் ஹரீஷ். அந்த மிலிட்டரி உடையில், அத்தனை கம்பீரமாக, முறுக்கிய மீசையும் கூர்மையான விழிகளுமாக இருந்த அவனைப் பார்த்த உடனே அவளுக்குப் பிடித்தது.
முதல் பார்வையிலேயே ஹரீஷ் அவளைப் பாதித்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை, அம்மா மட்டும்தான்... வேறு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை எனவும் ராமராஜனுக்கு மகளை அவனுக்கு கொடுக்க அத்தனை விருப்பம். அதுவும் அவ்வளவு சின்ன வயதிலேயே உயர் பதவியிலும் இருக்க அதைச் சொல்லியே பூரித்துப் போனார்.
அவருக்குத் தெரிந்த தன் மிலிட்டரி நண்பர்கள் மூலமாக அவனைப் பற்றி விசாரித்தார். அவனது திறமையைப்பற்றி அவர்கள் சிலாகிக்க, ஒவ்வொன்றும் ரூபியின் கவனத்துக்கும் வந்தது. அவனைப்பற்றி கேட்க அவ்வளவு பிடித்தது. அவனது நினைப்பை தனக்குள் வளர்த்துக் கொண்டாள்.
அவன் வந்து பார்க்கும் முன்பாக, அவனது தாய் அவளை வந்துப் பார்த்தார். “என் மகனை நீ பார்த்துகிட்டா போதும்னு சொல்ல மாட்டேன். நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா அவன் உன்னைப் பார்த்துப்பான். அவ்வளவு பாசக்காரன்... லீவுக்கு வீட்டுக்கு வந்தால், என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டான்” அவர் சொல்லிக் கொண்டே போக, அவள் மனதில் அவன் வேர்விட்டான்.
“என் மகன் வந்த உடனே நிச்சயம் பண்ணி கல்யாணத்தையும் வச்சுடலாம். எங்க பக்கம் பெருசா சொந்தங்கள் கிடையாது, அதனால் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படித்தான்” இப்படி வெள்ளையாக பேசிய அந்த மனுஷியை அனைவருக்கும் பிடித்தது.
இங்கே பேச்சுவார்த்தை துவங்கி, அவனது தாய் ரமணி இவளைத் தன் மருமகளாகவே எண்ணி பேசத் துவங்கி இருந்தார். தன் மகனிடமும் சொல்லிவிட்டதாக அவர் சொல்ல, ‘அவன் தன்னை எப்பொழுது வந்து பார்ப்பான்? தன்னிடம் எப்பொழுது பேசுவான்?’ என ரூபி வெகுவாக எதிர்பார்க்கத் துவங்கி இருந்தாள்.
“அவனுக்கு இப்போ உடனே லீவ் கிடைக்கலையாம். கிடைச்ச உடனே வந்து பார்க்கறேன்னு சொன்னான்” ரமணி சொல்ல, ரூபிக்கு சற்று ஏமாற்றம்தான். திருமணக் கனவுகள் அவளுக்குள் முளை விட்டிருக்க, அவன்மீதான நேசமும் துளிர் விட்டிருக்க, அவளுக்கு அவனை எப்பொழுது நேரில் காண்போம் என்ற ஏக்கம் பிறந்தது.
அது அந்த வயதுக்கே உரிய குணம்... அவளது ஆசையும், எதிர்பார்ப்பும் தவறு என யார் சொல்ல முடியும்? திருமணக் கனவுகளோடு, அவனோடான வாழ்க்கையையும் அவள் கற்பனையிலும், கனவிலும் காணத் துவங்கி இருந்தாள். தன் பாடப் புத்தகத்துக்குள் அவனது புகைப்படத்தை உடன் வைத்துக் கொண்டாள்.
ரகசியமாக அதை எடுத்துப் பார்ப்பதும், புகைப்படத்தில் இருந்த அவனை முத்தமிடுவதும் கூட அவளது அன்றாட விஷயமாகிப் போனது. இங்கே தன்னை நினைத்து ஒருத்தி ஏங்கித் தவிப்பது தெரியாமலேயே ஹரீஷ் இருந்தான்.
ரமணி அவனிடம் விஷயத்தைச் சொல்லி இருந்தார்தான். அவளது புகைப்படத்தையும் அவனுக்கு அனுப்பி இருந்தார். அதை ஒரு பார்வை பார்த்தவன், அந்த புகைப்படத்தை எங்கே வைத்தான் எனக் கேட்டால் கூட அவனுக்குத் தெரியாது.
“நான் வந்த பிறகு பார்த்துக்கலாம்மா... இப்போ உடனே அவசரப்பட்டு எதையும் செய்யாதீங்க?” அவன் சொல்லி இருக்க, அதையெல்லாம் ரமணி பெரிதாக எடுக்கவே இல்லை. தன் மகன் தான் சொன்னால் எதையும் கேட்பான் என்ற அவரது நம்பிக்கை அவரை அப்படி நினைக்க வைத்ததோ என்னவோ?
வைஷாலி தன் வீட்டில் அமர்ந்து அத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். சர்வஜித்தைப் பற்றி யோசிக்கையிலேயே மண்டைக்குள் குடைந்தது. ‘அது சர்வா தான்...’ மனம் அத்தனை உறுதியாகச் சொல்ல, அவளது நகங்கள் அவளது யோசனைக்கு இலக்காகிக் கொண்டிருந்தது.
‘அவரோட முகம் மாறலாம்... ஆனால் அந்த உடல்மொழி, குரல் எல்லாம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்ததே. அது என்ன பொய்யா?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
மீண்டுமாக தன் அலைபேசியை எடுத்தவள், யூடியூபில் அந்த லான்ச் வீடியோவை ஓடவிட்டாள். ‘அவனது கம்பெனி சிம் வேண்டும் அனைவருக்கும் இலவச சிம். அன்லிமிட்டட் கால் வசதி, தினமும் மூன்று ஜிபி டேட்டா இலவசம்’ என அவன் சொல்லிக் கொண்டே போனான்.
அந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாள் எனக் கேட்டால் அவளுக்கே தெரியாது. குறைந்தது நூறு முறைக்கு மேலாவது அதைப் பார்த்திருப்பாள். அவளது கண்களும் புலன்களும் பொய் சொல்லவில்லை என அவளுக்கு சத்தியம் செய்து கொண்டு இருந்தன.
‘எனக்கு அப்பட்டமா தெரியற விஷயம், அந்த ரூபிக்கு எப்படிப் புரியாமல் போகுது? நான் அத்தனை முறை சொல்லியும் அவ கேட்கவே இல்லையே...’ யோசனையோடு அந்த வீடியோவைப் பார்த்தாள்.
அவனது கண்ணீர் என்ற குரல், அந்த ஆங்கில உச்சரிப்பு, ஆறடிக்கும் குறையாத அவனது உயரம். அவன் அணிந்திருந்த அந்த இங்க் வர்ண சூட்... அவனது கம்பீரத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
ஜெல் போட்டு படிய வைத்திருந்த அவனது கேசம், அப்படியும் அடங்காமல் நெற்றியில் புரண்டு கொண்டிருந்தது. ட்ரிம் செய்த தாடியும், மீசையுமாக கொஞ்சம் நல்ல கலராகவே இருந்தான். அவன் அன்று சிகரெட் பிடித்த விதம் நினைவுக்கு வர, அவள் விழிகள் மூடிக் கொண்டது.
‘ரஜினியை விட சூப்பரா சிகரெட் பிடிச்சாரே...’ அந்த வாசனை இப்பொழுதும் தன்னைச் சுற்றி இருப்பது போன்ற பிரம்மை. பொதுவாகவே பெண்களுக்கு அந்த வாடையே ஆகாது. ஆனால் வைஷாலிக்கு சின்ன வயதில் இருந்தே அந்த சிகரெட் வாசனை அவ்வளவு பிடிக்கும்.
அவளது அம்மாவின் அப்பா சுருட்டு பிடிப்பார்... அந்த வாசனையும் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அது ஏன் என அவளுக்குத் தெரியாது. ரூபி கூட அதைச் சொல்லி அவளை கேலி செய்வாள். “எப்படித்தான் இந்த நாத்தம் உனக்குப் புடிக்குதோ? எனக்கு குடலைப் புரட்டும்” என்பாள்.
சில பல நொடிகள் அவன் புகைத்த விதமே அவள் நினைவில் நிற்க, தன்னை மீறி அதை மனக் கண்முன் கண்டிருந்தாள். ‘அப்படி என்ன கோபம் வருது? என் மாமனையே ஓட விட்டிருக்காரே’ அதுதான், அந்த விஷயம்தான் அவள் யோசனையில் அவன் நிற்கக் காரணமாக இருந்தது.
‘அவர் என்னைப் பார்த்தார் தானே? நான் அந்தப் படிகளில் ஏறும்போது என்னையவே பார்த்துக் கொண்டு இருந்தார். அதுவும் நானும் ரூபியும் பேசும்போது, விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்’ அவள் சன்னமாக முனகினாள்.
“அந்த கண்ணாடிக் கருமத்தை புடுங்கி தூரப் போடணும். எப்போ பார் ராப்பிச்சைக்காரன் மாதிரி ஒரு கண்ணாடி” சற்று குரல் உயர்த்தியே சொன்னாள்.
‘இப்போ உனக்கு அவன் கண்ணாடி போட்டிருப்பது பிரச்சனையா? இல்லையென்றால் அவன் கண்களைப் பார்த்து, உணர்வுகளைப் படிக்க முடியவில்லையே என்பது பிரச்சனையா?’ அவளது மனசாட்சி கேட்டு வைத்தது.
“என்ன? அப்படியெல்லாம்...” எனத் துவங்கியவள், “ஆமா... அதுக்கு இப்போ என்ன?” தனக்குத் தானே பேசிக் கொண்டாள். அவனைப் பார்த்த அத்தனை முறையும் அவன் கண்களை அந்த குளிர் கண்ணாடி மறைத்து இருந்தது புரிந்தது.
“ச்சே...” அவள் சலித்துக் கொள்ள, “கூப்ட்டியா பாப்பா? பசிக்குதா?” என்றவாறு அருணா அங்கே வந்தாள்.
“ஹாங்... இல்லக்கா... நீங்க போங்க” என்றவள், அவள் செல்லவே தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியாடி?” தனக்குத் தானே சொல்லியும் கொண்டாள். ரூபி அவளிடம் அவளது பிரச்சனையைப் பற்றி கேட்டிருக்க, அவளிடம் சொல்ல மறுத்தாள்.
“இப்போதான் அதைக் கொஞ்சம் மறந்துட்டு இருக்கேன். அதை மறுபடியும் ஞாபகப்படுத்தாதே ரூபி. எனக்கு எப்போ சொல்ல முடியும்னு தோணுதோ அப்போ சொல்றேன்” அவள் சொல்லிவிட, ரூபி அதற்கு மேலே எதையும் கேட்கவில்லை.
ஆனால் அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தவளாக, “உனக்கு அந்த ஹரீஷை முன்னாடியே தெரியுமா?” வைஷாலி கேட்க, ரூபியிடம் சட்டென ஒரு தடுமாற்றம்.
“அது... அப்படியெல்லாம் எதுவும் இல்லையே...” அவள் சொன்ன விதமே அவள் பொய் சொல்கிறாள் எனச் சொல்ல வைஷாலி அதைத் தோண்டி துருவவில்லை.
“உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு...” அவள் சொல்ல,
“அதையெல்லாம் நான் மறக்கணும்னு நினைக்கறேன் ஷாலு” அவள் ஒரு மாதிரி குரலில் சொல்ல, அதை அப்படியே விட்டுவிட்டாள்.
ஆனால் அந்த நேரம் ரூபி ஹரீஷைப் பற்றிதான் யோசித்துக் கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்து, பேசி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டாலும், ஹரீஷை அவளால் மறக்க முடியவில்லை.
அது ரூபி கல்லூரியில் முதல் வருடம் முடித்த பொழுது நடந்தது. அவளது தகப்பன் ராமராஜனுக்கு திடுமென மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
குடும்பமே நிலை குலைந்து போனது. அவருக்கோ தன் இளைய மகளை கட்டிக் கொடுக்காமல் போய்விட்டால், தன் மனைவி எப்படி சமாளித்து இருப்பாள் என்ற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது.
அவள் அப்போழுதுதுதான் இருபதுவயதின் துவக்கத்தில் இருந்தாள். டிச்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், தன் கவலையைச் சொல்லி கண் கலங்கிவிட்டார். எப்பொழுதும் தைரியமாக, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் தன் அப்பா கண் கலங்கினால் எந்தப் பெண்ணால்தான் அதைத் தாங்க முடியும்?
“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்ப்பா. இப்படி அழாதீங்க” அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னாள். அப்பொழுது சென்னையில் அவர்கள் வேறு ஏரியாவில் இருந்தார்கள்.
உடனடியாக தரகரிடம் சொல்லி மாப்பிள்ளை பார்க்க, அவர் கொண்டு வந்த வரன் தான் ஹரீஷ். அந்த மிலிட்டரி உடையில், அத்தனை கம்பீரமாக, முறுக்கிய மீசையும் கூர்மையான விழிகளுமாக இருந்த அவனைப் பார்த்த உடனே அவளுக்குப் பிடித்தது.
முதல் பார்வையிலேயே ஹரீஷ் அவளைப் பாதித்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை, அம்மா மட்டும்தான்... வேறு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை எனவும் ராமராஜனுக்கு மகளை அவனுக்கு கொடுக்க அத்தனை விருப்பம். அதுவும் அவ்வளவு சின்ன வயதிலேயே உயர் பதவியிலும் இருக்க அதைச் சொல்லியே பூரித்துப் போனார்.
அவருக்குத் தெரிந்த தன் மிலிட்டரி நண்பர்கள் மூலமாக அவனைப் பற்றி விசாரித்தார். அவனது திறமையைப்பற்றி அவர்கள் சிலாகிக்க, ஒவ்வொன்றும் ரூபியின் கவனத்துக்கும் வந்தது. அவனைப்பற்றி கேட்க அவ்வளவு பிடித்தது. அவனது நினைப்பை தனக்குள் வளர்த்துக் கொண்டாள்.
அவன் வந்து பார்க்கும் முன்பாக, அவனது தாய் அவளை வந்துப் பார்த்தார். “என் மகனை நீ பார்த்துகிட்டா போதும்னு சொல்ல மாட்டேன். நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா அவன் உன்னைப் பார்த்துப்பான். அவ்வளவு பாசக்காரன்... லீவுக்கு வீட்டுக்கு வந்தால், என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டான்” அவர் சொல்லிக் கொண்டே போக, அவள் மனதில் அவன் வேர்விட்டான்.
“என் மகன் வந்த உடனே நிச்சயம் பண்ணி கல்யாணத்தையும் வச்சுடலாம். எங்க பக்கம் பெருசா சொந்தங்கள் கிடையாது, அதனால் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படித்தான்” இப்படி வெள்ளையாக பேசிய அந்த மனுஷியை அனைவருக்கும் பிடித்தது.
இங்கே பேச்சுவார்த்தை துவங்கி, அவனது தாய் ரமணி இவளைத் தன் மருமகளாகவே எண்ணி பேசத் துவங்கி இருந்தார். தன் மகனிடமும் சொல்லிவிட்டதாக அவர் சொல்ல, ‘அவன் தன்னை எப்பொழுது வந்து பார்ப்பான்? தன்னிடம் எப்பொழுது பேசுவான்?’ என ரூபி வெகுவாக எதிர்பார்க்கத் துவங்கி இருந்தாள்.
“அவனுக்கு இப்போ உடனே லீவ் கிடைக்கலையாம். கிடைச்ச உடனே வந்து பார்க்கறேன்னு சொன்னான்” ரமணி சொல்ல, ரூபிக்கு சற்று ஏமாற்றம்தான். திருமணக் கனவுகள் அவளுக்குள் முளை விட்டிருக்க, அவன்மீதான நேசமும் துளிர் விட்டிருக்க, அவளுக்கு அவனை எப்பொழுது நேரில் காண்போம் என்ற ஏக்கம் பிறந்தது.
அது அந்த வயதுக்கே உரிய குணம்... அவளது ஆசையும், எதிர்பார்ப்பும் தவறு என யார் சொல்ல முடியும்? திருமணக் கனவுகளோடு, அவனோடான வாழ்க்கையையும் அவள் கற்பனையிலும், கனவிலும் காணத் துவங்கி இருந்தாள். தன் பாடப் புத்தகத்துக்குள் அவனது புகைப்படத்தை உடன் வைத்துக் கொண்டாள்.
ரகசியமாக அதை எடுத்துப் பார்ப்பதும், புகைப்படத்தில் இருந்த அவனை முத்தமிடுவதும் கூட அவளது அன்றாட விஷயமாகிப் போனது. இங்கே தன்னை நினைத்து ஒருத்தி ஏங்கித் தவிப்பது தெரியாமலேயே ஹரீஷ் இருந்தான்.
ரமணி அவனிடம் விஷயத்தைச் சொல்லி இருந்தார்தான். அவளது புகைப்படத்தையும் அவனுக்கு அனுப்பி இருந்தார். அதை ஒரு பார்வை பார்த்தவன், அந்த புகைப்படத்தை எங்கே வைத்தான் எனக் கேட்டால் கூட அவனுக்குத் தெரியாது.
“நான் வந்த பிறகு பார்த்துக்கலாம்மா... இப்போ உடனே அவசரப்பட்டு எதையும் செய்யாதீங்க?” அவன் சொல்லி இருக்க, அதையெல்லாம் ரமணி பெரிதாக எடுக்கவே இல்லை. தன் மகன் தான் சொன்னால் எதையும் கேட்பான் என்ற அவரது நம்பிக்கை அவரை அப்படி நினைக்க வைத்ததோ என்னவோ?