பகுதி – 17.
முத்துப்பாண்டி ஒத்தையாக வந்ததாலோ என்னவோ அவனை கேட்டில் யாரும் தடுக்கவில்லை. அதைவிட இப்படி ஒருவன் வருவான் என சர்வஜித் சொல்லி இருந்தானோ என்னவோ?
அவன் உள்ளே வரும் வேகத்தைப் பார்த்தே அவனது கோபத்தைக் கண்டுகொண்டான் சர்வஜித். இதழ்கடையில் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்க்க, திரையையே வெறித்தான்.
அவனது கையில் கட்டி இருந்த கடிகாரம், ‘பீப்... பீப்...’ என்ற ஒலியை எழுப்ப, அருகே இருந்த ஹரீஷ் சற்று கவலையானான்.
‘இவருக்கு இந்த ரத்தக்கொதிப்பு இவ்வளவு அதிகரிப்பது நல்லதுக்கே இல்லை’ நிஜத்தில் அவனுக்கு நடக்கும் முழுக் கதையும் தெரியவில்லை. ஆனாலும் கோபால் குடும்பத்தை வேண்டும் என்றே சண்டைக்கு இழுப்பது அவனுக்குப் புரிந்தது.
இந்த ஐந்து வருடங்களில், அவனைத் தேடி வரும் வம்புச் சண்டைகளைத்தான் அவன் விட்டதில்லை. ஆனால் முதல் முறையாக அவனே தேடிப்போய் வம்பிழுப்பது இதுவே முதல்முறை. அதுவும் அவர்களை டார்கெட் செய்வது இவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
வந்த முத்துப்பாண்டி ரிசப்ஷனில் வைஷாலியைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, “சார்...” ஹரீஷ் அதைப் பார்த்துவிட்டு அவனைக் கலைத்தான்.
“லெட் ஹிம்...” என்றவன் அத்தனை அழுத்தமாக ஹரீஷிடம் சொல்ல, இவனுக்கு மனதுக்குள் ஆயாசம். அந்த வாட்ச் வேறு இப்பொழுது விடாமல் கத்திக் கொண்டிருக்க, ‘எங்கே இருந்துடா வரீங்க?’ உள்ளே புலம்பியவன்,
‘அவனுக எங்கே வராங்க? இவர்தானே இழுத்துட்டு வர்றார்’ என நினைத்தவாறே திரையைப் பார்த்தான். சர்வஜித்தின் முகம் அத்தனை கடுமையாக மாறிப் போயிருந்தது.
‘இன்னைக்கு அவன் கண்டம் ஆகப் போறான். உசுரைக் காப்பாத்திகிட்டு ஓடிப் போயிட்டால் பரவாயில்லை’ முத்துப்பாண்டிக்காக அத்தனை இரக்கப்பட்டான்.
முத்துப்பாண்டியின் கேள்விக்கு பதில் சொன்ன ரிசப்ஷன் பெண், “நீங்க வெயிட்டிங் ஹால்ல வெயிட் பண்ணுங்க சார். நான் அவங்களை வரச் சொல்றேன். யுவர் குட் நேம் ப்ளீஸ்” அவனிடம் கேட்டாள்.
“முத்துப்பாண்டி...” என வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அவள் காட்டிய இடத்தில் சென்று நின்றுகொண்டான். அந்த அறைக்குள் இருந்த இருக்கையில் அமராமல், பொறுமையற்று அவன் நடந்து கொண்டிருக்க, சர்வஜித், அந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே அவனைப் பார்த்தான்.
“ரொம்ப டென்ஷனா இருக்கான் இல்ல?” சர்வஜித் ஹரீஷிடம் கேட்க,
‘நீங்க செய்து வைத்த வேலைக்கு அவன் இப்படி இல்லாமல் போனால்தான் ஆச்சரியம்’ என தான் நினைத்ததை அவன் வெளியே சொல்லவில்லை.
நேற்று இரவில் வைஷாலியின் வீட்டுக்குள் புகுந்து அவளது தாயை மயக்கமடையச் செய்து, அவளுக்கும் மயக்க மருந்து கொடுத்து மிகவும் கச்சிதமாகத் தூக்கி விட்டார்கள். இத்தனைக்கும் அவள் வீட்டை விட்டு எங்கேயும் சென்றுவிடக் கூடாது என வீட்டுக்கு வெளியே காவலுக்கும் ஆட்களை ஏற்பாடு செய்தும் இருந்தார்கள்.
அவர்கள் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டு, வைஷாலியை அத்தனை கச்சிதமாக தூக்குவது என்றால் சுலபமா என்ன? அதைக் காதும் காதும் வைத்த மாதிரி செய்து இருந்தானே. அவளை அங்கே வீட்டில் காணாமல் முத்துப்பாண்டி கொதித்துப் போகாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
இன்று ஜோசியரை வரச் சொல்லி, நாள் குறிக்கலாம் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ரத்னா விடியற்காலையிலேயே மகளைக் காணாமல் திகைத்தாள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், மகளைக் காண அறைக்கு வந்தவள் கண்டது வெறுமையான படுக்கை அறையைத்தான்.
மகளை வீடு முழுக்க தேடி, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்து என எல்லாம் செய்துவிட்டு, பிறகு உடனடியாக கோபாலுக்கு அழைத்துவிட்டாள். உடனடியாக தங்கள் ஆட்களை விட்டு, பேருந்து நிலையம், இரயில் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் ஆட்களை விட்டு தேடினார்கள்.
“ஓடுகாலி மு*** அவளுக்கு இருக்கு...” என்ற முத்துப்பாண்டி உடனே ஒரு வண்டியில் ஆட்களோடு சென்னைக்கு கிளம்பிவிட்டான். அவள் நிச்சயம் தன் சென்னை வீட்டுக்குப் போயிருக்கவே மாட்டாள் என அவன் நினைக்க, அவள் அங்கேதான் சென்றாள் எனத் தெரிய வந்த பொழுது கொதித்துப் போனான்.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், ஓடிப் போனவ அவ வீட்டுக்கே போயிருப்பா. எங்க கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவிட்டு அவளால் எங்கே போய்ட முடியும்? அவளை அங்கே இருந்து இழுத்துட்டு வர்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா என்ன? இதுக்கு மேலே அவளை அங்கே வெறுமே விட்டுவைத்தால் தானே...” அத்தனை வஞ்சினம் கொண்டான்.
நிஜத்தில் முத்துப்பாண்டிக்கு அவளைப் பிடிக்கும். அவளைத் திருமணம் செய்து தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது மிகப்பெரும் அவா. அதனாலேயே அவளை கொஞ்சமே கொஞ்சம் கௌரவமாக நடத்த வேண்டும் என நினைத்தான்.
அப்படி இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ அவளைத் தொட்டிருப்பான். ‘இவ எங்கே போய்டப் போறா?’ என்ற ஒரு நினைப்பும் அதற்குக் காரணம் எனலாம். ஆனால் அவள் இப்படி தனக்கு தண்ணி காட்டுவது அவனை விலங்காகவே மாற்றி இருந்தது.
அவளை இன்றைக்கே கசக்கி முகர்ந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான். அங்கே வீட்டுக்குச் சென்றால், அவள் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாள் எனத் தெரியவர, உடனே இங்கே வந்துவிட்டான்.
அவளைக் கதறக் கதற இழுத்துச் சென்று அவளை அனுபவித்தால் மட்டுமே தன் ஆத்திரம் அடங்கும் எனத் தோன்றியது. இனிமேல் அவள் தன்னைவிட்டு எங்கேயும் செல்ல நினைக்க கூட கூடாது என்ற வேகம் அவனிடம்.
அலுவலக விசிட்டர் அறைக்குள் அவன் அடிபட்ட வேங்கையென உலவிக் கொண்டிருந்தான். அவன் வந்திருக்கிறான் என வரவேற்பு பெண் சொல்லவே, பெரிதாக வைஷாலி அதிர்ந்துவிடவில்லை. எப்படியும் அவன் இங்கே வந்து நிற்பான் என அவளுக்குத் தெரியுமே.
வைஷாலியின் அறைக்குள் இருந்த கேமரா வழியாக சர்வஜித் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு விஷயம் தெரிய வந்த உடனேயே அவள் பயப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. ரூபி எதையோ கேட்பதும், அதற்கு அவளைத் தடுத்துவிட்டு இவள் எழுந்து செல்வதும் அவனுக்குத் தெரிய அவளையே கேமராக்கள் வழியாக தொடர்ந்தான்.
முத்துப்பாண்டியை அவாய்ட் செய்யலாம் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என அவளுக்குத் தெரியுமே. ‘என்ன ஆகப் போகிறதோ?’ என அவளது மனம் கிடந்தது தவித்தது. நடக்கும் வழிகளில் இருந்த கேமராக்களில் எல்லாம் அவளது பார்வை சென்று மீண்டது.
‘காப்பாற்ற சர்வஜித் வந்துவிட மாட்டானா?’ என ஆழ்மனம் ஆசை கொண்டது. அவன்மேல் சாய்ந்த மனது, அவன் படுத்திய பாட்டில் அவள் காதல் கானல் நீராகிப் போயிற்று என அவள் நினைக்க, தனக்கு ஒரு ஆபத்து என்கையில் அவள் மனம் அவனைத்தான் தேடியது.
அறைக்குள் தோழியின் முன்னால் தன் பரிதவிப்பை காட்ட முடியாமல் வந்துவிட்டவள், வராண்டாவின் ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். சுவரில் சாய்ந்து வேக வேகமாக அவள் மூச்சு வாங்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷுக்கே என்னவோ போல் இருந்தது.
சர்வஜித்தோ புகைத்தவாறே அவளைப் பார்த்திருக்க, ‘இவர் மனசென்ன கல்லா?’ என்றுதான் நினைத்தான். கொஞ்சம் கூட இரக்கமே இன்றி அவளை இவன் வாட்டி வதைத்தது எல்லாம் ஹரீஷுக்குத் தெரியுமே.
வைஷாலியைப் பார்க்கவே அப்படி ஒரு ஓய்ந்த தோற்றத்தில் இருந்தாள். ‘இதற்கு மேலே என்னால் முடியாது’ என்ற ஒரு உடல்மொழி. அவள் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கிறாள் எனப் பார்க்கும்போதே தெரிந்தது.
அதற்கு மேலே அதைக் காண முடியாமல் ஹரீஷ் வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான். அவளுக்கு உதவி செய்ய அவனால் முடியும். ஆனால் அதை வைத்து அவளை சர்வஜித் இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்துவான் எனப் புரிய, ஒதுங்கிச் சென்றான்.
ஒருத்தருக்கு உதவி செய்வதை விட, உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மிகவும் நல்லது என புத்தி சொன்னது.
சில பல நிமிடங்கள் கடந்து... தன்னால் அந்த முத்துப்பாண்டியை எதிர்கொள்ள முடியும் எனத் தோன்றிய பிறகு வைஷாலி அங்கிருந்து சென்றாள். அவள் அந்த விசிட்டர்ஸ் அறையின் கதவைத் திறப்பதற்கும், அவளது முடியைக் கொத்தாகப் பற்றிக் கொண்டு அவளது இரு கன்னங்களிலும் முத்துப்பாண்டி மாறி மாறி அறைவதற்கும் சரியாக இருந்தது.
பொதுவாகவே ஒரு ஆண்மகனின் அடியை ஒரு பெண்ணவளின் பூந்தேகம் தாங்கிக் கொள்ளாது. அப்படி இருக்கையில் அவனது உச்ச பட்ச கோபத்தில் அவன் அடித்த அடியில் அவளுக்கு பொறி கலங்கிப் போனது. நிற்க கூட முடியாமல் தலை சுற்றி கால்கள் தள்ளாட, அவனைத் தடுக்க கூட அவளால் முடியவில்லை.
முத்துப்பாண்டி நிச்சயம் மோசமாக எதிர்வினை புரிவான் என அவள் எதிர்பார்த்தேதான் வந்தாள். ஆனால் இந்த அடி... இதை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
“ஓடுகாலி நாயே... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், நாங்க அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே ஓடி வந்திருப்ப? அதுவும் எப்படிடி அத்தனைபேர் கண்ணில் மண்ணைத் தூவிட்டு வந்த? யார் கொடுத்த ட்ரெயினிங் அது...?” என்றவன் மேலும் அடித்தான்.
அதைப் பார்க்கும் எந்த ஒரு ஆண்மகனுமே அந்தப் பெண்ணை காப்பாற்ற நினைப்பான். ஆனால் சர்வஜித் அசைவே இன்றி வெறித்துக் கொண்டிருந்தான். ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே’ என்பதுபோல் ஒரு பாவனை. அவன் அப்படி இருந்தாலும், அந்த வாட்ச் கதறுவது ஏன் என யாராவது விளக்கம் கொடுத்தால் தேவலாம்.
“உன்னை விட்டு வைத்தது என் தப்புதான்... இப்போ இந்த நிமிஷம் உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றவன், அவள் தேகத்தில் தன் கரத்தை இறக்கி அழுத்தினான். ஒரு பெண்ணவளை தொடக் கூடாத பாகங்களில் அவன் கரங்கள் அழுத்தி இருக்க, வலியில் அலறினாள்.
அவன் தன்னை அத்துமீறித் தொடுவான், அதுவும் இங்கே அலுவலகத்தில் வைத்து தொடுவான் என்று எல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அருவருத்துப் போய் அவனை அடக்க முடியாத கையறு நிலை என எல்லாம் சேர, வாய்விட்டே அலறினாள்.
ஆனால் மறு நொடி அவள் தலையில் இருந்த முத்துப்பாண்டியின் கரம் விடுபட, “ஆ... ஆ...” என அலறியவாறு அவளை விட்டு விலகி பின்னால் சென்றான். வைஷாலி அரை மயக்க நிலையில் பார்க்க, அவனைக் கொத்தாக அவளிடமிருந்து பிரித்தான் சர்வஜித். அவளது தேகத்தில் இருந்த அவனது கரத்தைப் பிடித்து முறுக்கி, ஒற்றைக் கையில் தூக்கி சுழற்றி கீழே அடித்தான்.
எப்பொழுது தன் அறையில் இருந்து வெளியேறினான்? எப்பொழுது வைஷாலி இருந்த அறைக்குள் வந்தான். எப்பொழுது முத்துப்பாண்டியை சுழற்றி அடித்தான் என மற்றவர்கள் உணரும் முன்பே, கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் செய்து இருந்தான்.
முத்துப்பாண்டி ஆறடி உயர, கட்டுமஸ்த்தான ஆண்மகன். அவனையே சர்வஜித் தூக்கிச் சுழற்றி தரையில் நச் என விசிறி அடிப்பது என்றால், அவன் எத்தனை பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். என்னவோ படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை ரீவைண்டில் பார்ப்பதுபோல் அவளது மூளை அதை ரீ கிரியேட் செய்து பார்த்தது.
முத்துப்பாண்டியோ வலியில் அலறி, “ஆ...ஆ... யார்ரா நீ...?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே, அவனது வலக்கரத்தை தரையில் வைத்து காலால் அழுத்தினான். முத்துப்பாண்டி வலியில் அலறிக் கொண்டிருக்க, அவன் கை முட்டியில் தன் காலால் அழுத்தி மிதித்தவன், மறு நொடி அவனது கரத்தைப் பின்னால் திருப்பி உடைத்து இருந்தான் சர்வஜித்.
முத்துப்பாண்டி ஒத்தையாக வந்ததாலோ என்னவோ அவனை கேட்டில் யாரும் தடுக்கவில்லை. அதைவிட இப்படி ஒருவன் வருவான் என சர்வஜித் சொல்லி இருந்தானோ என்னவோ?
அவன் உள்ளே வரும் வேகத்தைப் பார்த்தே அவனது கோபத்தைக் கண்டுகொண்டான் சர்வஜித். இதழ்கடையில் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்க்க, திரையையே வெறித்தான்.
அவனது கையில் கட்டி இருந்த கடிகாரம், ‘பீப்... பீப்...’ என்ற ஒலியை எழுப்ப, அருகே இருந்த ஹரீஷ் சற்று கவலையானான்.
‘இவருக்கு இந்த ரத்தக்கொதிப்பு இவ்வளவு அதிகரிப்பது நல்லதுக்கே இல்லை’ நிஜத்தில் அவனுக்கு நடக்கும் முழுக் கதையும் தெரியவில்லை. ஆனாலும் கோபால் குடும்பத்தை வேண்டும் என்றே சண்டைக்கு இழுப்பது அவனுக்குப் புரிந்தது.
இந்த ஐந்து வருடங்களில், அவனைத் தேடி வரும் வம்புச் சண்டைகளைத்தான் அவன் விட்டதில்லை. ஆனால் முதல் முறையாக அவனே தேடிப்போய் வம்பிழுப்பது இதுவே முதல்முறை. அதுவும் அவர்களை டார்கெட் செய்வது இவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
வந்த முத்துப்பாண்டி ரிசப்ஷனில் வைஷாலியைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, “சார்...” ஹரீஷ் அதைப் பார்த்துவிட்டு அவனைக் கலைத்தான்.
“லெட் ஹிம்...” என்றவன் அத்தனை அழுத்தமாக ஹரீஷிடம் சொல்ல, இவனுக்கு மனதுக்குள் ஆயாசம். அந்த வாட்ச் வேறு இப்பொழுது விடாமல் கத்திக் கொண்டிருக்க, ‘எங்கே இருந்துடா வரீங்க?’ உள்ளே புலம்பியவன்,
‘அவனுக எங்கே வராங்க? இவர்தானே இழுத்துட்டு வர்றார்’ என நினைத்தவாறே திரையைப் பார்த்தான். சர்வஜித்தின் முகம் அத்தனை கடுமையாக மாறிப் போயிருந்தது.
‘இன்னைக்கு அவன் கண்டம் ஆகப் போறான். உசுரைக் காப்பாத்திகிட்டு ஓடிப் போயிட்டால் பரவாயில்லை’ முத்துப்பாண்டிக்காக அத்தனை இரக்கப்பட்டான்.
முத்துப்பாண்டியின் கேள்விக்கு பதில் சொன்ன ரிசப்ஷன் பெண், “நீங்க வெயிட்டிங் ஹால்ல வெயிட் பண்ணுங்க சார். நான் அவங்களை வரச் சொல்றேன். யுவர் குட் நேம் ப்ளீஸ்” அவனிடம் கேட்டாள்.
“முத்துப்பாண்டி...” என வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அவள் காட்டிய இடத்தில் சென்று நின்றுகொண்டான். அந்த அறைக்குள் இருந்த இருக்கையில் அமராமல், பொறுமையற்று அவன் நடந்து கொண்டிருக்க, சர்வஜித், அந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே அவனைப் பார்த்தான்.
“ரொம்ப டென்ஷனா இருக்கான் இல்ல?” சர்வஜித் ஹரீஷிடம் கேட்க,
‘நீங்க செய்து வைத்த வேலைக்கு அவன் இப்படி இல்லாமல் போனால்தான் ஆச்சரியம்’ என தான் நினைத்ததை அவன் வெளியே சொல்லவில்லை.
நேற்று இரவில் வைஷாலியின் வீட்டுக்குள் புகுந்து அவளது தாயை மயக்கமடையச் செய்து, அவளுக்கும் மயக்க மருந்து கொடுத்து மிகவும் கச்சிதமாகத் தூக்கி விட்டார்கள். இத்தனைக்கும் அவள் வீட்டை விட்டு எங்கேயும் சென்றுவிடக் கூடாது என வீட்டுக்கு வெளியே காவலுக்கும் ஆட்களை ஏற்பாடு செய்தும் இருந்தார்கள்.
அவர்கள் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டு, வைஷாலியை அத்தனை கச்சிதமாக தூக்குவது என்றால் சுலபமா என்ன? அதைக் காதும் காதும் வைத்த மாதிரி செய்து இருந்தானே. அவளை அங்கே வீட்டில் காணாமல் முத்துப்பாண்டி கொதித்துப் போகாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
இன்று ஜோசியரை வரச் சொல்லி, நாள் குறிக்கலாம் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ரத்னா விடியற்காலையிலேயே மகளைக் காணாமல் திகைத்தாள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், மகளைக் காண அறைக்கு வந்தவள் கண்டது வெறுமையான படுக்கை அறையைத்தான்.
மகளை வீடு முழுக்க தேடி, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்து என எல்லாம் செய்துவிட்டு, பிறகு உடனடியாக கோபாலுக்கு அழைத்துவிட்டாள். உடனடியாக தங்கள் ஆட்களை விட்டு, பேருந்து நிலையம், இரயில் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் ஆட்களை விட்டு தேடினார்கள்.
“ஓடுகாலி மு*** அவளுக்கு இருக்கு...” என்ற முத்துப்பாண்டி உடனே ஒரு வண்டியில் ஆட்களோடு சென்னைக்கு கிளம்பிவிட்டான். அவள் நிச்சயம் தன் சென்னை வீட்டுக்குப் போயிருக்கவே மாட்டாள் என அவன் நினைக்க, அவள் அங்கேதான் சென்றாள் எனத் தெரிய வந்த பொழுது கொதித்துப் போனான்.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், ஓடிப் போனவ அவ வீட்டுக்கே போயிருப்பா. எங்க கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவிட்டு அவளால் எங்கே போய்ட முடியும்? அவளை அங்கே இருந்து இழுத்துட்டு வர்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா என்ன? இதுக்கு மேலே அவளை அங்கே வெறுமே விட்டுவைத்தால் தானே...” அத்தனை வஞ்சினம் கொண்டான்.
நிஜத்தில் முத்துப்பாண்டிக்கு அவளைப் பிடிக்கும். அவளைத் திருமணம் செய்து தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது மிகப்பெரும் அவா. அதனாலேயே அவளை கொஞ்சமே கொஞ்சம் கௌரவமாக நடத்த வேண்டும் என நினைத்தான்.
அப்படி இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ அவளைத் தொட்டிருப்பான். ‘இவ எங்கே போய்டப் போறா?’ என்ற ஒரு நினைப்பும் அதற்குக் காரணம் எனலாம். ஆனால் அவள் இப்படி தனக்கு தண்ணி காட்டுவது அவனை விலங்காகவே மாற்றி இருந்தது.
அவளை இன்றைக்கே கசக்கி முகர்ந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான். அங்கே வீட்டுக்குச் சென்றால், அவள் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாள் எனத் தெரியவர, உடனே இங்கே வந்துவிட்டான்.
அவளைக் கதறக் கதற இழுத்துச் சென்று அவளை அனுபவித்தால் மட்டுமே தன் ஆத்திரம் அடங்கும் எனத் தோன்றியது. இனிமேல் அவள் தன்னைவிட்டு எங்கேயும் செல்ல நினைக்க கூட கூடாது என்ற வேகம் அவனிடம்.
அலுவலக விசிட்டர் அறைக்குள் அவன் அடிபட்ட வேங்கையென உலவிக் கொண்டிருந்தான். அவன் வந்திருக்கிறான் என வரவேற்பு பெண் சொல்லவே, பெரிதாக வைஷாலி அதிர்ந்துவிடவில்லை. எப்படியும் அவன் இங்கே வந்து நிற்பான் என அவளுக்குத் தெரியுமே.
வைஷாலியின் அறைக்குள் இருந்த கேமரா வழியாக சர்வஜித் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு விஷயம் தெரிய வந்த உடனேயே அவள் பயப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. ரூபி எதையோ கேட்பதும், அதற்கு அவளைத் தடுத்துவிட்டு இவள் எழுந்து செல்வதும் அவனுக்குத் தெரிய அவளையே கேமராக்கள் வழியாக தொடர்ந்தான்.
முத்துப்பாண்டியை அவாய்ட் செய்யலாம் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என அவளுக்குத் தெரியுமே. ‘என்ன ஆகப் போகிறதோ?’ என அவளது மனம் கிடந்தது தவித்தது. நடக்கும் வழிகளில் இருந்த கேமராக்களில் எல்லாம் அவளது பார்வை சென்று மீண்டது.
‘காப்பாற்ற சர்வஜித் வந்துவிட மாட்டானா?’ என ஆழ்மனம் ஆசை கொண்டது. அவன்மேல் சாய்ந்த மனது, அவன் படுத்திய பாட்டில் அவள் காதல் கானல் நீராகிப் போயிற்று என அவள் நினைக்க, தனக்கு ஒரு ஆபத்து என்கையில் அவள் மனம் அவனைத்தான் தேடியது.
அறைக்குள் தோழியின் முன்னால் தன் பரிதவிப்பை காட்ட முடியாமல் வந்துவிட்டவள், வராண்டாவின் ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். சுவரில் சாய்ந்து வேக வேகமாக அவள் மூச்சு வாங்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷுக்கே என்னவோ போல் இருந்தது.
சர்வஜித்தோ புகைத்தவாறே அவளைப் பார்த்திருக்க, ‘இவர் மனசென்ன கல்லா?’ என்றுதான் நினைத்தான். கொஞ்சம் கூட இரக்கமே இன்றி அவளை இவன் வாட்டி வதைத்தது எல்லாம் ஹரீஷுக்குத் தெரியுமே.
வைஷாலியைப் பார்க்கவே அப்படி ஒரு ஓய்ந்த தோற்றத்தில் இருந்தாள். ‘இதற்கு மேலே என்னால் முடியாது’ என்ற ஒரு உடல்மொழி. அவள் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கிறாள் எனப் பார்க்கும்போதே தெரிந்தது.
அதற்கு மேலே அதைக் காண முடியாமல் ஹரீஷ் வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான். அவளுக்கு உதவி செய்ய அவனால் முடியும். ஆனால் அதை வைத்து அவளை சர்வஜித் இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்துவான் எனப் புரிய, ஒதுங்கிச் சென்றான்.
ஒருத்தருக்கு உதவி செய்வதை விட, உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மிகவும் நல்லது என புத்தி சொன்னது.
சில பல நிமிடங்கள் கடந்து... தன்னால் அந்த முத்துப்பாண்டியை எதிர்கொள்ள முடியும் எனத் தோன்றிய பிறகு வைஷாலி அங்கிருந்து சென்றாள். அவள் அந்த விசிட்டர்ஸ் அறையின் கதவைத் திறப்பதற்கும், அவளது முடியைக் கொத்தாகப் பற்றிக் கொண்டு அவளது இரு கன்னங்களிலும் முத்துப்பாண்டி மாறி மாறி அறைவதற்கும் சரியாக இருந்தது.
பொதுவாகவே ஒரு ஆண்மகனின் அடியை ஒரு பெண்ணவளின் பூந்தேகம் தாங்கிக் கொள்ளாது. அப்படி இருக்கையில் அவனது உச்ச பட்ச கோபத்தில் அவன் அடித்த அடியில் அவளுக்கு பொறி கலங்கிப் போனது. நிற்க கூட முடியாமல் தலை சுற்றி கால்கள் தள்ளாட, அவனைத் தடுக்க கூட அவளால் முடியவில்லை.
முத்துப்பாண்டி நிச்சயம் மோசமாக எதிர்வினை புரிவான் என அவள் எதிர்பார்த்தேதான் வந்தாள். ஆனால் இந்த அடி... இதை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
“ஓடுகாலி நாயே... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், நாங்க அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே ஓடி வந்திருப்ப? அதுவும் எப்படிடி அத்தனைபேர் கண்ணில் மண்ணைத் தூவிட்டு வந்த? யார் கொடுத்த ட்ரெயினிங் அது...?” என்றவன் மேலும் அடித்தான்.
அதைப் பார்க்கும் எந்த ஒரு ஆண்மகனுமே அந்தப் பெண்ணை காப்பாற்ற நினைப்பான். ஆனால் சர்வஜித் அசைவே இன்றி வெறித்துக் கொண்டிருந்தான். ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே’ என்பதுபோல் ஒரு பாவனை. அவன் அப்படி இருந்தாலும், அந்த வாட்ச் கதறுவது ஏன் என யாராவது விளக்கம் கொடுத்தால் தேவலாம்.
“உன்னை விட்டு வைத்தது என் தப்புதான்... இப்போ இந்த நிமிஷம் உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றவன், அவள் தேகத்தில் தன் கரத்தை இறக்கி அழுத்தினான். ஒரு பெண்ணவளை தொடக் கூடாத பாகங்களில் அவன் கரங்கள் அழுத்தி இருக்க, வலியில் அலறினாள்.
அவன் தன்னை அத்துமீறித் தொடுவான், அதுவும் இங்கே அலுவலகத்தில் வைத்து தொடுவான் என்று எல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அருவருத்துப் போய் அவனை அடக்க முடியாத கையறு நிலை என எல்லாம் சேர, வாய்விட்டே அலறினாள்.
ஆனால் மறு நொடி அவள் தலையில் இருந்த முத்துப்பாண்டியின் கரம் விடுபட, “ஆ... ஆ...” என அலறியவாறு அவளை விட்டு விலகி பின்னால் சென்றான். வைஷாலி அரை மயக்க நிலையில் பார்க்க, அவனைக் கொத்தாக அவளிடமிருந்து பிரித்தான் சர்வஜித். அவளது தேகத்தில் இருந்த அவனது கரத்தைப் பிடித்து முறுக்கி, ஒற்றைக் கையில் தூக்கி சுழற்றி கீழே அடித்தான்.
எப்பொழுது தன் அறையில் இருந்து வெளியேறினான்? எப்பொழுது வைஷாலி இருந்த அறைக்குள் வந்தான். எப்பொழுது முத்துப்பாண்டியை சுழற்றி அடித்தான் என மற்றவர்கள் உணரும் முன்பே, கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் செய்து இருந்தான்.
முத்துப்பாண்டி ஆறடி உயர, கட்டுமஸ்த்தான ஆண்மகன். அவனையே சர்வஜித் தூக்கிச் சுழற்றி தரையில் நச் என விசிறி அடிப்பது என்றால், அவன் எத்தனை பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். என்னவோ படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை ரீவைண்டில் பார்ப்பதுபோல் அவளது மூளை அதை ரீ கிரியேட் செய்து பார்த்தது.
முத்துப்பாண்டியோ வலியில் அலறி, “ஆ...ஆ... யார்ரா நீ...?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே, அவனது வலக்கரத்தை தரையில் வைத்து காலால் அழுத்தினான். முத்துப்பாண்டி வலியில் அலறிக் கொண்டிருக்க, அவன் கை முட்டியில் தன் காலால் அழுத்தி மிதித்தவன், மறு நொடி அவனது கரத்தைப் பின்னால் திருப்பி உடைத்து இருந்தான் சர்வஜித்.