பகுதி – 18.
சென்னையில் வைஷாலியின் வில்லா ரணகளமாக இருந்தது. முத்துப்பாண்டியின் கை முறிக்கப்பட்டு சரியாக ஒரு வாரம் கடந்திருக்க, அவனுக்கு கை எலும்புகள் முறிந்து போயிருக்க, அதற்கான ஆப்பரேஷன் முடிந்து அவனது கரம் தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்தது.
அங்கே அவர்களைப் பார்த்தவாறு நடுநாயகமாக நின்றிருந்தான் சர்வஜித். அவனுக்குப் பின்னால் வைஷாலி நின்றுகொண்டிருக்க, முத்துப்பாண்டியைப் பார்த்தவனின் ரத்தம் கொதித்தது. ‘எனக்கு அவனோட அந்த கையும் வேணும்...’ எண்ணியவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.
பைரவன் மகளைப் பார்த்துவிட்டு அவள் அருகே வர முயல, கோபால் அவரைப் பார்த்த ஒற்றைப் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். அவர் கண்களில் மகளின் நலத்தை அறியும் தவிப்பிருக்க, அவளுக்குமே தகப்பனின் தோள் சாய மனம் தவித்தது.
‘எப்படிம்மா இருக்க?’ என்பதுபோல் மகளைப் பார்த்தவர், சர்வஜித்தை கோபமா, ஆற்றாமையா... இன்னதெனப் புரியாத பார்வை பார்த்தார். அதைப் பார்த்த சர்வஜித் பைரவனைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
அவனுக்கு இவர்களோடு தானே பகை, பைரவன் மேல் அவனுக்கு அளவிட முடியாத நன்றிப்பெருக்கு இருக்கிறது. ஆனால் கௌரவர்கள் பக்கம் இருக்கும் பீஷ்மரைபோல் அவர் இருக்க, பாண்டவர்கள் பக்கம் நிற்கும் அவனால் எதுவும் செய்ய இயலாத நிலை.
“டேய்... இவன்தான்... இவன் கையைக் காலை எல்லாம் வெட்டிப் போடுங்கடா” முத்துப்பாண்டி குதிக்க, அவனை சர்வஜித் பார்த்த பார்வையில் அவனைப் பெற்றவருக்கு புருவம் இடுங்கியது. தன் ஆட்கள் இத்தனைபேரைப் பார்த்தும் சர்வஜித் அசையாமல் இருப்பது கோபாலுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“முத்துப்பாண்டி... கொஞ்சம் அமைதியா இரு” மகனை அடக்கினார். சர்வஜித்தின் குளிர் கண்ணாடி அவன் கண்களை மறைத்திருக்க, அவன் என்ன நினைக்கிறான் என அவரால் கணிக்க முடியவில்லை.
“என்னப்பா என்னை அடக்குறீங்க? உங்க பையன் கையை உடைச்சவன் உங்க எதிர்ல திமிரா நிக்கறான்ப்பா. இந்த நேரம் நீங்க அவனை வெட்டிப் போட்டிருக்க வேண்டாமா?” தன் தகப்பனா இது என அவனுக்கு கோபம்.
ஆனால் கோபால் சாணக்யன் என்பது அவரது செய்கையிலே சர்வஜித்துக்குப் புரிய, அவனது இதழ்கள் முத்துப்பாண்டியைப் பார்த்து ஏளனமாக வளைந்தது.
கோபாலோ சர்வஜித்தை எடைபோட்டுக் கொண்டே இருந்தார். தங்கள் கோட்டைக்குள் அவன் ஊடுருவி இருக்கிறான். தங்கள் தீம் பார்க்கை இன்னுமே அவரால் முழுதாக ஓபன் செய்ய முடியவில்லை. கார்ப்பரேஷன் வாட்டர் சப்ளை அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது.
அதனால் வாட்டர் ரைட் எதுவும் இல்லாமல் போனதால் கூட்டம் எதுவும் வருவதே இல்லை. அங்கே மால் துவங்கி இருக்கிறான், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறான். இவை எல்லாம் ஒரு சாதாரனமானவனால் முடியாது என அவரது புத்திக்குப் புரிந்தது. அவருக்குப் புரிந்தது அவரது மகன்களுக்கும் புரிய வேண்டுமே.
சர்வஜித்துக்குப் பின்னால் இருந்த ஹரீஷையும், அவனுக்குப் பின்னால் கறுப்பு உடையில் மிகவும் அமைதியாக நின்ற அந்த மூன்று பேரையும் அவரது கண்கள் அலசியது. நிச்சயம் அவர்களிடம் துப்பாக்கி இருக்கும் என அவரது உள்ளுணர்வு சொன்னது.
சர்வஜித் கோபாலையும், அவரது மூன்று மகன்களையும் இமை கொட்டாமல் பார்த்தான். அவனது கை கடிகாரம் ‘பீப்...பீப்...பீப்...’ என்று விடாமல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. ஹரீஷோ ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என கலவரமாக நின்றிருந்தான்.
அந்த ஒலியை அப்பொழுதுதான் முதல்முறையாகக் கேட்ட வைஷாலி, தன் அருகே நின்று இருந்த ஹரீஷைப் பார்த்தாள். “என்ன சத்தம் அது? இவர்கிட்டே இருந்துதான் வருது” அவனிடம் கேட்டாள்.
“ஷ்... அவரோட பிபி கொதிக்குது...” என்றவாறே சர்வஜித் கையில் கட்டியிருந்த வாட்சை கண்களால் காட்டினான்.
“என்ன?” என்றவளுக்கு அந்த வாட்சின் ஒலி அந்த இடத்தையே நிறைக்க, உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.
“ஏய்... இன்னும் என்னடி அங்கே நிக்கற? ஒரு வாரமா அவனோட கூத்தடிச்சது உனக்குப் பத்தலையா? நீ எவன் கூடப் போனாலும் நீ எனக்குத்தான்டி. உன்னை அனுபவிக்காமல் அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன். இங்கே வாடி...” முத்துப்பாண்டி வேகமாக அவள் பக்கம் வரப் போனான்.
தகப்பனின் முன்னால் வைத்து அவனது அந்த பேச்சைக் கேட்டவளுக்கு தேகம் மொத்தமும் எரியும் உணர்வு. எந்தப் பெண்ணும் பெற்றவர் முன்னால் வைத்து கேட்கக் கூடாத வார்த்தைகள் அல்லவா அது.
அதைவிட, இப்படிப் பேசும் அவனது நாவை வெட்டி எறிய முடியாமல், கைகள் கட்டப்பட்ட பைரவனின் நிலை அந்தோ பரிதாபம் தான். அவர் ஒரு மாதிரி குறுகிப் போய் நின்றார். அந்த நிலை வேறு அவள் நெஞ்சறுத்தது.
முத்துப்பாண்டியின் கண்களில் இருந்த அவள்மீதான அந்த வெறி... சர்வஜித் அதை மிகச் சரியாக இனம் கண்டான். அத்தனை வேகமாக சர்வஜித்தின் மூளைக்குள் பல கணக்குகள் உலா போனது.
தன்னைத் தாண்டிச் செல்ல முயன்றவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தவன், “உன்னோட இன்னொரு கையும் எனக்குத்தான்” அவனுக்கு மட்டும் கேட்குமாறு இதழ் பிரியாமலே சொன்னான். சர்வஜித் பேசியது சற்று தூரத்தில் இருந்த மற்றவர்களுக்கு கேட்காமல் போனாலும், பின்னால் நின்ற இவர்களுக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது.
“என்னடா சொன்ன?” என்றவாறு முத்துப்பாண்டி அடிக்கப் போக, அவனது இடக்கரத்தைப் பிடித்து பின்னால் வளைத்தான் சர்வஜித். அவனது தோள்ப்பட்டையில் என்னவோ செய்ய, அவனது மூட்டு விலகி வலியில் அலறத் துவங்கினான்.
“ஏய்...” என்றவாறு அவன்மேல் முத்துப்பாண்டியின் அண்ணன்மார் பாய முயல, மூன்று துப்பாக்கிகள் அவர்களை குறி பார்த்தது.
“விநாயகம், வேலவா... தூரப் போங்க...” அவர் சொல்ல, முத்துப்பாண்டியோ வலியில் இன்னும் கதறிக் கொண்டிருந்தான். வைஷாலிக்கு என்னவோ கேங்க்ஸ்டர் படம் பார்க்கும் உணர்வு.
சர்வஜித்தோ, “எதிர்ல நிக்கறது யாரு? அவன் பலம் என்ன? இது எல்லாம் தெரிஞ்சு மோதணும். இல்லன்னா இப்படித்தான்” என்றவன் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். அந்த இடமே அமைதியில் இருக்க, முத்துப்பாண்டியில் அரற்றல் மட்டுமே அங்கே இருந்தது.
“சர்வஜித்தோ, ஆழமாக சிகரெட்டைப் புகைத்து, புகையை நுரையீரலுக்கு அனுப்பியவன், அதை நிதானமாக வெளியேற்றினான். “இது அவனா கேட்டு வாங்கினது. பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும். அது உங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லது” காலை அகட்டி நின்றவன், கைநீட்டி எச்சரிப்பதுபோல் சொன்னான்.
“நீ உன் ரூமுக்குப் போ...” சர்வஜித் கட்டளை பிறப்பிக்க, வைஷாலி அங்கே நிற்கவே இல்லை. அடுத்த நிமிடம் தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள். அவள் பின்னாலேயே பைரவனும் செல்ல, அவள் சாற்றிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.
“பாப்பா...” அவர் அழைக்க,
“அப்பா...” என்றவள் தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள்.
“உனக்கு ஒன்றும் இல்லையே பாப்பா... நீ... நீ... பத்திரமா இருக்க தானே?” அதைக் கேட்பதற்குள் அவரது மொத்த தேகமும் பதறிக் கொண்டு இருந்தது. தகப்பன் எதற்காக பயப்படுகிறார் எனப் புரிய, மறுப்பாக தலை அசைத்தாள்.
“எனக்கு ஒன்றும் இல்லைப்பா... நான் நல்லாத்தான் இருக்கேன். இந்த ஒரு வாரமும் அவரோட அம்மாகூடத்தான் இருந்தேன். அவங்க என்னை நல்லபடியா பார்த்துகிட்டாங்கப்பா” அவள் சொல்ல அவரது கண்கள் கசிந்தது.
“அவரோட அம்மா கூடவா?” என்றவருக்கு அத்தனை ஆசுவாசம். கூடவே சர்வஜித்தின் மீது ஒரு பெரிய அபிமானமே எழுந்தது.
“நல்ல வேளைம்மா... இந்த ஒரு வாரமா நீ அவங்க கண்ணில் படலை. நீ மட்டும் அவங்க கையில் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பாங்க என்றே தெரியலை. இந்த ஒரு வாரத்தில் அவங்க கோபம் எல்லாம் எவ்வளவோ குறைஞ்சுடுச்சு” என்றவருக்கு மகள் பத்திரமாக இருக்கிறாள் என்பதில் அத்தனை நிம்மதி.
அவர் அழுவதைப் பார்த்தவள், “அழாதீங்கப்பா” என்றாள்.
“இப்படி ஒரு கையாலாகாத அப்பாவா இருக்கேனேன்னு நினைச்சால் எனக்கே என்னைப் பிடிக்கலைம்மா” மனம் வெதும்பினார். தான் பெற்ற மகளைப் பாதுகாக்க முடியாத ஒரு தகப்பனின் தவிப்பு அது.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா... இங்கே நீங்க மட்டும்தான் எனக்கு ஒரே ஆறுதல்” என்றவள், வெளியே கேட்ட சத்தத்தில் கலைந்தாள்.
முத்துப்பாண்டி இன்னுமே வலியில் அலற, “ஹரீஷ்...” என்றவன் விரலை அசைக்க, வேகமாகச் சென்று அவனது கக்கத்தில் தன் கரத்தை நுழைத்தான்.
‘எப்படியோ அவர் நினைத்த மாதிரி அடுத்த கையையும் உடைச்சுட்டார். அவனுகளுக்கே தெரியாமல் விஷயத்தை செய்ததுதான் சிறப்பே’ ஹரீஷ் நினைத்தான்.
முத்துப்பாண்டியிடம், “கையை ரிலாக்ஸா விடு...” என்றவன், தன் தோளை நெம்ப, முத்துப்பாண்டியின் விலகிய தோள் மூட்டு, சரியாகப் பொருந்தியது.
அப்பொழுது சட்டென அவனது வலியும் நின்று போக, அப்படியே தரையில் சில பல நிமிடங்கள் அமர்ந்துவிட்டான்.
சர்வஜித்தோ மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டவன், “வெல்... உங்களோட நான் சண்டை போட வரலை... என் கம்பெனி எம்ப்ளாயி கிட்டே இவன் தப்பா நடந்துக்கப் பார்த்தான். அதை நான் தடுத்தேன் அவ்வளவுதான். என்கிட்டே வேலைக்கு வரும் எல்லோருக்கும் நான்தான் பாதுகாப்பு.
“அதுக்கு மேலே வர்றவங்களுக்கு என்ன உறவு, பகை இதெல்லாம் நான் பார்க்கறது இல்லை. இவங்களுக்குள் என்ன உறவு என்றும் எனக்குத் தெரியாது. நடந்த விஷயம், என் எம்ப்ளாயியை காப்பாற்ற நான் எடுத்த நடவடிக்கை மட்டும்தான்.
“அது உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால், அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. அவங்க அவங்க செய்கையைப் பொறுத்துதான் என்னோட நடவடிக்கையும் இருக்கும்” ஒரு மாதிரி தெனாவெட்டாகவே சொன்னான்.
அவனது பேச்சை அறைக்குள் இருந்து கேட்ட வைஷாலி திகைத்துப் போனாள். ‘அடப்பாவி... பச்சை பொய் பேசறாரே. நான் இவங்களுக்கு என்ன உறவுன்னு இவருக்குத் தெரியாதமா? அவ்வா...அவ்வா...’ மானசீகமாக தன் வாயிலேயே அடித்துக் கொண்டாள்.
வெளியே... “அப்பா பொய்ப்பா... பொய்...” முத்துப்பாண்டி கத்தினான். கோபாலின் கண்களோ இன்னுமே பின்னால் இறக்காத ‘கன்’களோடு இருந்த அவர்களிடமே நிலைத்து இருந்தது. தாங்கள் எப்படிப் பட்டவனோடு மோதுகிறோம் எனத் தெரியாமல் மோதக் கூடாது என அவர் நிதானமாகவே இருந்தார்.
“சரிங்க... இப்போ என்ன நான் மன்னிப்புக் கேட்டால் உங்களுக்குப் போதுமா?” சர்வஜித் கேட்க, வைஷாலி தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.
‘என்னது மன்னிப்பா இவரா? வாய்ப்பே இல்லை’ என்றுதான் எண்ணிக் கொண்டாள்.
“இங்கே பாருங்க... நான் சொல்றதை எல்லாம் சொல்லிடறேன். பிறகு நீங்க முடிவெடுத்துக்கோங்க. வைஷாலிக்கு கான்ட்ராக்ட் முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு. அந்த மூணு மாசமும் அவ என்கிட்டே வேலைக்கு வந்தாகணும்.
சென்னையில் வைஷாலியின் வில்லா ரணகளமாக இருந்தது. முத்துப்பாண்டியின் கை முறிக்கப்பட்டு சரியாக ஒரு வாரம் கடந்திருக்க, அவனுக்கு கை எலும்புகள் முறிந்து போயிருக்க, அதற்கான ஆப்பரேஷன் முடிந்து அவனது கரம் தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்தது.
அங்கே அவர்களைப் பார்த்தவாறு நடுநாயகமாக நின்றிருந்தான் சர்வஜித். அவனுக்குப் பின்னால் வைஷாலி நின்றுகொண்டிருக்க, முத்துப்பாண்டியைப் பார்த்தவனின் ரத்தம் கொதித்தது. ‘எனக்கு அவனோட அந்த கையும் வேணும்...’ எண்ணியவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.
பைரவன் மகளைப் பார்த்துவிட்டு அவள் அருகே வர முயல, கோபால் அவரைப் பார்த்த ஒற்றைப் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். அவர் கண்களில் மகளின் நலத்தை அறியும் தவிப்பிருக்க, அவளுக்குமே தகப்பனின் தோள் சாய மனம் தவித்தது.
‘எப்படிம்மா இருக்க?’ என்பதுபோல் மகளைப் பார்த்தவர், சர்வஜித்தை கோபமா, ஆற்றாமையா... இன்னதெனப் புரியாத பார்வை பார்த்தார். அதைப் பார்த்த சர்வஜித் பைரவனைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
அவனுக்கு இவர்களோடு தானே பகை, பைரவன் மேல் அவனுக்கு அளவிட முடியாத நன்றிப்பெருக்கு இருக்கிறது. ஆனால் கௌரவர்கள் பக்கம் இருக்கும் பீஷ்மரைபோல் அவர் இருக்க, பாண்டவர்கள் பக்கம் நிற்கும் அவனால் எதுவும் செய்ய இயலாத நிலை.
“டேய்... இவன்தான்... இவன் கையைக் காலை எல்லாம் வெட்டிப் போடுங்கடா” முத்துப்பாண்டி குதிக்க, அவனை சர்வஜித் பார்த்த பார்வையில் அவனைப் பெற்றவருக்கு புருவம் இடுங்கியது. தன் ஆட்கள் இத்தனைபேரைப் பார்த்தும் சர்வஜித் அசையாமல் இருப்பது கோபாலுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“முத்துப்பாண்டி... கொஞ்சம் அமைதியா இரு” மகனை அடக்கினார். சர்வஜித்தின் குளிர் கண்ணாடி அவன் கண்களை மறைத்திருக்க, அவன் என்ன நினைக்கிறான் என அவரால் கணிக்க முடியவில்லை.
“என்னப்பா என்னை அடக்குறீங்க? உங்க பையன் கையை உடைச்சவன் உங்க எதிர்ல திமிரா நிக்கறான்ப்பா. இந்த நேரம் நீங்க அவனை வெட்டிப் போட்டிருக்க வேண்டாமா?” தன் தகப்பனா இது என அவனுக்கு கோபம்.
ஆனால் கோபால் சாணக்யன் என்பது அவரது செய்கையிலே சர்வஜித்துக்குப் புரிய, அவனது இதழ்கள் முத்துப்பாண்டியைப் பார்த்து ஏளனமாக வளைந்தது.
கோபாலோ சர்வஜித்தை எடைபோட்டுக் கொண்டே இருந்தார். தங்கள் கோட்டைக்குள் அவன் ஊடுருவி இருக்கிறான். தங்கள் தீம் பார்க்கை இன்னுமே அவரால் முழுதாக ஓபன் செய்ய முடியவில்லை. கார்ப்பரேஷன் வாட்டர் சப்ளை அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது.
அதனால் வாட்டர் ரைட் எதுவும் இல்லாமல் போனதால் கூட்டம் எதுவும் வருவதே இல்லை. அங்கே மால் துவங்கி இருக்கிறான், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறான். இவை எல்லாம் ஒரு சாதாரனமானவனால் முடியாது என அவரது புத்திக்குப் புரிந்தது. அவருக்குப் புரிந்தது அவரது மகன்களுக்கும் புரிய வேண்டுமே.
சர்வஜித்துக்குப் பின்னால் இருந்த ஹரீஷையும், அவனுக்குப் பின்னால் கறுப்பு உடையில் மிகவும் அமைதியாக நின்ற அந்த மூன்று பேரையும் அவரது கண்கள் அலசியது. நிச்சயம் அவர்களிடம் துப்பாக்கி இருக்கும் என அவரது உள்ளுணர்வு சொன்னது.
சர்வஜித் கோபாலையும், அவரது மூன்று மகன்களையும் இமை கொட்டாமல் பார்த்தான். அவனது கை கடிகாரம் ‘பீப்...பீப்...பீப்...’ என்று விடாமல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. ஹரீஷோ ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என கலவரமாக நின்றிருந்தான்.
அந்த ஒலியை அப்பொழுதுதான் முதல்முறையாகக் கேட்ட வைஷாலி, தன் அருகே நின்று இருந்த ஹரீஷைப் பார்த்தாள். “என்ன சத்தம் அது? இவர்கிட்டே இருந்துதான் வருது” அவனிடம் கேட்டாள்.
“ஷ்... அவரோட பிபி கொதிக்குது...” என்றவாறே சர்வஜித் கையில் கட்டியிருந்த வாட்சை கண்களால் காட்டினான்.
“என்ன?” என்றவளுக்கு அந்த வாட்சின் ஒலி அந்த இடத்தையே நிறைக்க, உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.
“ஏய்... இன்னும் என்னடி அங்கே நிக்கற? ஒரு வாரமா அவனோட கூத்தடிச்சது உனக்குப் பத்தலையா? நீ எவன் கூடப் போனாலும் நீ எனக்குத்தான்டி. உன்னை அனுபவிக்காமல் அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன். இங்கே வாடி...” முத்துப்பாண்டி வேகமாக அவள் பக்கம் வரப் போனான்.
தகப்பனின் முன்னால் வைத்து அவனது அந்த பேச்சைக் கேட்டவளுக்கு தேகம் மொத்தமும் எரியும் உணர்வு. எந்தப் பெண்ணும் பெற்றவர் முன்னால் வைத்து கேட்கக் கூடாத வார்த்தைகள் அல்லவா அது.
அதைவிட, இப்படிப் பேசும் அவனது நாவை வெட்டி எறிய முடியாமல், கைகள் கட்டப்பட்ட பைரவனின் நிலை அந்தோ பரிதாபம் தான். அவர் ஒரு மாதிரி குறுகிப் போய் நின்றார். அந்த நிலை வேறு அவள் நெஞ்சறுத்தது.
முத்துப்பாண்டியின் கண்களில் இருந்த அவள்மீதான அந்த வெறி... சர்வஜித் அதை மிகச் சரியாக இனம் கண்டான். அத்தனை வேகமாக சர்வஜித்தின் மூளைக்குள் பல கணக்குகள் உலா போனது.
தன்னைத் தாண்டிச் செல்ல முயன்றவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தவன், “உன்னோட இன்னொரு கையும் எனக்குத்தான்” அவனுக்கு மட்டும் கேட்குமாறு இதழ் பிரியாமலே சொன்னான். சர்வஜித் பேசியது சற்று தூரத்தில் இருந்த மற்றவர்களுக்கு கேட்காமல் போனாலும், பின்னால் நின்ற இவர்களுக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது.
“என்னடா சொன்ன?” என்றவாறு முத்துப்பாண்டி அடிக்கப் போக, அவனது இடக்கரத்தைப் பிடித்து பின்னால் வளைத்தான் சர்வஜித். அவனது தோள்ப்பட்டையில் என்னவோ செய்ய, அவனது மூட்டு விலகி வலியில் அலறத் துவங்கினான்.
“ஏய்...” என்றவாறு அவன்மேல் முத்துப்பாண்டியின் அண்ணன்மார் பாய முயல, மூன்று துப்பாக்கிகள் அவர்களை குறி பார்த்தது.
“விநாயகம், வேலவா... தூரப் போங்க...” அவர் சொல்ல, முத்துப்பாண்டியோ வலியில் இன்னும் கதறிக் கொண்டிருந்தான். வைஷாலிக்கு என்னவோ கேங்க்ஸ்டர் படம் பார்க்கும் உணர்வு.
சர்வஜித்தோ, “எதிர்ல நிக்கறது யாரு? அவன் பலம் என்ன? இது எல்லாம் தெரிஞ்சு மோதணும். இல்லன்னா இப்படித்தான்” என்றவன் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். அந்த இடமே அமைதியில் இருக்க, முத்துப்பாண்டியில் அரற்றல் மட்டுமே அங்கே இருந்தது.
“சர்வஜித்தோ, ஆழமாக சிகரெட்டைப் புகைத்து, புகையை நுரையீரலுக்கு அனுப்பியவன், அதை நிதானமாக வெளியேற்றினான். “இது அவனா கேட்டு வாங்கினது. பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும். அது உங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லது” காலை அகட்டி நின்றவன், கைநீட்டி எச்சரிப்பதுபோல் சொன்னான்.
“நீ உன் ரூமுக்குப் போ...” சர்வஜித் கட்டளை பிறப்பிக்க, வைஷாலி அங்கே நிற்கவே இல்லை. அடுத்த நிமிடம் தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள். அவள் பின்னாலேயே பைரவனும் செல்ல, அவள் சாற்றிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.
“பாப்பா...” அவர் அழைக்க,
“அப்பா...” என்றவள் தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள்.
“உனக்கு ஒன்றும் இல்லையே பாப்பா... நீ... நீ... பத்திரமா இருக்க தானே?” அதைக் கேட்பதற்குள் அவரது மொத்த தேகமும் பதறிக் கொண்டு இருந்தது. தகப்பன் எதற்காக பயப்படுகிறார் எனப் புரிய, மறுப்பாக தலை அசைத்தாள்.
“எனக்கு ஒன்றும் இல்லைப்பா... நான் நல்லாத்தான் இருக்கேன். இந்த ஒரு வாரமும் அவரோட அம்மாகூடத்தான் இருந்தேன். அவங்க என்னை நல்லபடியா பார்த்துகிட்டாங்கப்பா” அவள் சொல்ல அவரது கண்கள் கசிந்தது.
“அவரோட அம்மா கூடவா?” என்றவருக்கு அத்தனை ஆசுவாசம். கூடவே சர்வஜித்தின் மீது ஒரு பெரிய அபிமானமே எழுந்தது.
“நல்ல வேளைம்மா... இந்த ஒரு வாரமா நீ அவங்க கண்ணில் படலை. நீ மட்டும் அவங்க கையில் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பாங்க என்றே தெரியலை. இந்த ஒரு வாரத்தில் அவங்க கோபம் எல்லாம் எவ்வளவோ குறைஞ்சுடுச்சு” என்றவருக்கு மகள் பத்திரமாக இருக்கிறாள் என்பதில் அத்தனை நிம்மதி.
அவர் அழுவதைப் பார்த்தவள், “அழாதீங்கப்பா” என்றாள்.
“இப்படி ஒரு கையாலாகாத அப்பாவா இருக்கேனேன்னு நினைச்சால் எனக்கே என்னைப் பிடிக்கலைம்மா” மனம் வெதும்பினார். தான் பெற்ற மகளைப் பாதுகாக்க முடியாத ஒரு தகப்பனின் தவிப்பு அது.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா... இங்கே நீங்க மட்டும்தான் எனக்கு ஒரே ஆறுதல்” என்றவள், வெளியே கேட்ட சத்தத்தில் கலைந்தாள்.
முத்துப்பாண்டி இன்னுமே வலியில் அலற, “ஹரீஷ்...” என்றவன் விரலை அசைக்க, வேகமாகச் சென்று அவனது கக்கத்தில் தன் கரத்தை நுழைத்தான்.
‘எப்படியோ அவர் நினைத்த மாதிரி அடுத்த கையையும் உடைச்சுட்டார். அவனுகளுக்கே தெரியாமல் விஷயத்தை செய்ததுதான் சிறப்பே’ ஹரீஷ் நினைத்தான்.
முத்துப்பாண்டியிடம், “கையை ரிலாக்ஸா விடு...” என்றவன், தன் தோளை நெம்ப, முத்துப்பாண்டியின் விலகிய தோள் மூட்டு, சரியாகப் பொருந்தியது.
அப்பொழுது சட்டென அவனது வலியும் நின்று போக, அப்படியே தரையில் சில பல நிமிடங்கள் அமர்ந்துவிட்டான்.
சர்வஜித்தோ மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டவன், “வெல்... உங்களோட நான் சண்டை போட வரலை... என் கம்பெனி எம்ப்ளாயி கிட்டே இவன் தப்பா நடந்துக்கப் பார்த்தான். அதை நான் தடுத்தேன் அவ்வளவுதான். என்கிட்டே வேலைக்கு வரும் எல்லோருக்கும் நான்தான் பாதுகாப்பு.
“அதுக்கு மேலே வர்றவங்களுக்கு என்ன உறவு, பகை இதெல்லாம் நான் பார்க்கறது இல்லை. இவங்களுக்குள் என்ன உறவு என்றும் எனக்குத் தெரியாது. நடந்த விஷயம், என் எம்ப்ளாயியை காப்பாற்ற நான் எடுத்த நடவடிக்கை மட்டும்தான்.
“அது உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால், அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. அவங்க அவங்க செய்கையைப் பொறுத்துதான் என்னோட நடவடிக்கையும் இருக்கும்” ஒரு மாதிரி தெனாவெட்டாகவே சொன்னான்.
அவனது பேச்சை அறைக்குள் இருந்து கேட்ட வைஷாலி திகைத்துப் போனாள். ‘அடப்பாவி... பச்சை பொய் பேசறாரே. நான் இவங்களுக்கு என்ன உறவுன்னு இவருக்குத் தெரியாதமா? அவ்வா...அவ்வா...’ மானசீகமாக தன் வாயிலேயே அடித்துக் கொண்டாள்.
வெளியே... “அப்பா பொய்ப்பா... பொய்...” முத்துப்பாண்டி கத்தினான். கோபாலின் கண்களோ இன்னுமே பின்னால் இறக்காத ‘கன்’களோடு இருந்த அவர்களிடமே நிலைத்து இருந்தது. தாங்கள் எப்படிப் பட்டவனோடு மோதுகிறோம் எனத் தெரியாமல் மோதக் கூடாது என அவர் நிதானமாகவே இருந்தார்.
“சரிங்க... இப்போ என்ன நான் மன்னிப்புக் கேட்டால் உங்களுக்குப் போதுமா?” சர்வஜித் கேட்க, வைஷாலி தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.
‘என்னது மன்னிப்பா இவரா? வாய்ப்பே இல்லை’ என்றுதான் எண்ணிக் கொண்டாள்.
“இங்கே பாருங்க... நான் சொல்றதை எல்லாம் சொல்லிடறேன். பிறகு நீங்க முடிவெடுத்துக்கோங்க. வைஷாலிக்கு கான்ட்ராக்ட் முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு. அந்த மூணு மாசமும் அவ என்கிட்டே வேலைக்கு வந்தாகணும்.