பகுதி – 5.
கார் சாலையில் விருட்டென பாய்ந்து கொண்டிருக்க, ஹரீஷுக்கு சர்வஜித்தை திரும்பிப் பார்க்க கூட சற்று நடுக்கமாக இருந்தது. அவனுடனே இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறான்தான். அவனது உள்ளும் புறமும் அவனுக்கு நன்றாகவே தெரியும்தான்.
ஆனாலும் கடந்த வாரத்தில் அவன் அரபு நாட்டில் ஆடிய ருத்ர தாண்டவம், அவன் கொஞ்சம் கூட எதிர்பாராதது. அதைவிட ‘இவருக்கு எத்தனை முகங்கள்? இதில் எது நிஜமான முகம்?’ என்றே அவன் குழம்பிப் போனான்.
‘சர்வஜித் என்கையில் ஒரு முகமும், சர்வா என்கையில் வேறு முகமும், ‘உஸ்தாத்’ என்கையில் முற்றிலும் வேறாக அவன் உருவம், உடல்மொழி என அனைத்தும் மாறும் விதம் கண்டு மலைத்தான்.
மும்பை உலகில் ‘சர்வஜித்’ சென்னையில் ‘சர்வா’ அரபு நாட்டில் ‘உஸ்தாத்’ ஹரீஷ் அப்படியே அசைய மறுத்து அமர்ந்து இருந்தான்.
சர்வஜித் தன்னிடம் இருக்கும் தனி ஜெட் விமானமும், அவனிடம் இருக்கும் ஐந்து நாட்டு பாஸ்போர்ட். அது ஒவ்வொன்றிலும் அவனது முகம் முதல் அங்க அடையாளம் துவங்கி, பெயர் வரைக்கும் வேறாக இருக்க அவனை ஹரீஷால் கணிக்க முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அது... தன் அருகே இருப்பவன் இரக்கமற்ற அரக்கன் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. மும்பையில் இருப்பவன், சென்னையில் தன் கிளைகளைப் பரப்புவதும், வேறு எதையோ குறி வைப்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதுவும் ‘உஸ்தாத்’ என்ற அடையாளத்தில், அரபு நாட்டிலும், சர்வதேச கடல் பரப்பிலும் அவன் கொன்று குவித்த மனிதர்களை நினைத்தால் அடி மனதே சில்லிட்டது. அன்றைக்கு தன் தனி விமானத்தை உடனே எடுக்கச் சொன்ன பொழுதே சற்று உஷார் ஆனான்.
‘எதுவோ பெரிதாக நடக்கப் போகிறது’ என அவனது உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. ஹரீஷ் உள்ளுக்குள் இப்படி எண்ணிக் கொண்டிருக்க, சர்வஜித்தோ கையில் இருந்த சிகரெட்டை ஆழ்ந்து புகைத்துக் கொண்டிருந்தான்.
அவன் அதன் புகையை உள்ளிழுத்து, அந்த நிக்கோட்டினின் விறுவிறுப்பை ரத்த நாளங்களில் எல்லாம் கலக்கவிட்டு திளைத்தான். அதைப் பார்க்கையிலேயே சர்வஜித் அந்த சிகரெட்டை எத்தனையாக சுவைக்கிறான் எனத் தெரிந்தது.
‘இந்த புகையில் நமக்கு நாத்தம் மட்டும்தான் தெரியுது. இவருக்கு என்னன்னா அதுதான் உலகமேங்கற மாதிரி பண்றார். ரெண்டு பாட்டில் சரக்கு உள்ளே விட்டு போதையில் மிதக்கறதை விட்டு, இது இதில் என்ன இருக்கோ?’ ஹரீஷ் நினைக்க, சர்வஜித்துக்கோ அந்த புகை நிக்கோட்டின் வாசம் அவனைக் கட்டி வைத்தது.
நிஜத்தில் அவன் இப்படியாக புகைக்கும் நேரங்களில் எல்லாம் ஒன்று தன்னையே மறப்பான். அடுத்தது என்ன என்று தீவிரமாக சிந்திப்பான். இப்பொழுதும் அவனுக்குள் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது.
சர்வஜித் தன் நிழல் உலக வாழ்க்கையான ‘உஸ்தாத்’ அடையாளத்தை துறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. சொல்லப்போனால் இம்ரானிடம் தான் அவன் இருந்தான். ஆனால் இம்ரானால் அவன் வளர்ந்ததை விட, ‘உஸ்தாத்’ மூலமாக இம்ரான் வளர்ந்தான் என்பதுதான் உண்மை.
‘உஸ்தாத்’ என்ற ஒருவன் மட்டுமே புத்தி கூர்மையும், திட்டமிடலும், சாதுர்யமும் கொண்டவனாக இருந்தான். இம்ரான் ஆயுதக்கடத்தல் செய்வதுதான் அவனது முக்கியமான வேலையே. நாடுகளுக்கு இடையே ஆயுதங்களை பரிவர்த்தனை செய்வதுதான் அவனது வேலை.
அரசாங்கத்துக்குத் தெரியாமல் அதைச் செய்வதில் ‘உஸ்தாத்’ கை தேர்ந்தவனாக இருந்தான். ஆயுதங்களோடு தங்கக் கட்டிகளை கடத்துவதும் அவர்களது அடுத்த வேலையாக இருந்தது. கடல் கடந்து, அவனை வந்து செர்கியிலேயே தன் இலக்கு எதுவென சர்வஜித் குறித்து வைத்திருந்தான்.
அவனோடு பல வருடங்கள் பயணித்த பொழுதே, அவனுக்கே தெரியாமல் தன் வேலைகளை இந்தியாவில் அவன் செய்யத் துவங்கி இருந்தான். ஆனால் அது இம்ரானுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
தன் அடையாளத்தை மாற்றுவது, மறைந்து போவது என அனைத்தையும் இம்ரானிடமிருந்துதான் அவன் கற்றுக் கொண்டான். ஆனால் அவனைவிட அதில் மேலாக அவன் சிறந்து விளங்க, இம்ரானின் வலக்கரமாக சீக்கிரமே மாறிவிட்டான்.
தன் வேரை அவன் இந்தியாவில் நிலையாக ஊன்றிய பிறகு இம்ரானிடமிருந்து நிரந்தரமாக விலக முடிவெடுத்தான். ஆனால் அது அவனுக்குத் தெரிய வந்தால் நிச்சயமாக தன்னை உயிரோடு விட மாட்டான் என அவனுக்கு நன்கு தெரியும்.
எனவே அவனிடமிருந்து விலக முடிவெடுத்த பிறகும், பொறுமையாக இரண்டு வருடங்கள் காத்திருந்தான். அதற்குள் அவனுக்கென அவன் பதுக்கி இருந்த தங்கக் கட்டிகள் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அனைத்தையும் சுவிஸ் வங்கிக்கு இடம் மாற்றினான்.
அப்படி இடம் மாற்ற அவன் தனக்கென உள்ளவர்களை அவன் கண்டு வைத்திருந்தான். யாரின் கற்பனைக்கும் எட்டாதவாறு பணமும், தங்கமும் அவனிடம் சேர்ந்திருக்க இம்ரானிடம் இருந்து வெளியேற தக்க தருணத்துக்காக காத்திருந்தான்.
அது சரியான நேரத்தில் அவனுக்கு வாய்க்கப்பெற, அவர்களது ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அவனும் இறந்துவிட்டதாக அவனை நம்ப வைத்து தப்பிவிட்டான். அப்படி (உஸ்தாத்) சர்வஜித் இறந்துவிட்டான் என உடனே நம்பிவிட்டால் அது இம்ரான் இல்லையே.
ஆனால் அவனையும் நம்ப வைக்க, அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அவன் தயாராகிவிட்டான் என இம்ரானுக்கே தெரியாது. அது பரம ரகசியமாக சர்வஜித்துக்குள் இன்னும் புதைந்து கிடந்தது.
அப்படி மட்டும் இல்லையென்றால் இம்ரானின் கண்ணில் அவன் மண்ணைத் தூவி இருக்க முடியுமா என்ன? ‘இப்பொழுது இம்ரானுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் யாரால், எப்படி வந்தது?’ என சர்வஜித்துக்கு தெளிவாகத் தெரியும்.
‘அவனை விட்டு வைத்தது நான் செய்த தவறு. அந்த தவறையும் திருத்தி விடுகிறேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவனாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் சென்று இறங்க வேண்டிய இடம் வரவே, சர்வஜித் எழுந்து கொண்டான்.
சர்வஜித் எத்தனையோ விதமாக இந்த பயணத்தை தவிர்க்க நினைத்தான். தான் இருக்கும் இடத்திலேயே இருந்து இம்ரானை அவனால் அழிக்க முடியும். ஆனால் தான் அவன் முன்னால் சென்று நிற்காமல் போனால், இம்ரான் எந்த எல்லைக்கும் செல்வான் என அவனுக்குத் தெரியும்.
சர்வஜித்துக்கு இனிமேல் அந்த நிழல் உலக தொடர்புகள் தன்மேல் விழுவதை அவன் சுத்தமாக விரும்பவில்லை. இம்ரானுக்கு தான் உயிரோடு இருப்பது மட்டுமே தெரிந்திருக்கிறது. எங்கே இருக்கிறோம் எனத் தெரியவில்லை. அவன் தன்னை தேடத் துவங்கி இருப்பான். தன் படையையே அனுப்பி இருப்பான். அப்படி இருக்கையில், வெறுமே கையைக் கட்டிக்கொண்டு இருக்க அவனால் முடியாது.
அவன் முன்னால் சென்று நின்று, தான் அவனை வேரோடு சாய்க்க செய்துவைத்த அனைத்தையும் செய்ய தான் அங்கே இருந்தே ஆக வேண்டும். இம்ரானின் கூட்டத்துக்குள் அவனுக்கு நெருக்கமாக, விசுவாசமாக இருந்த யாரையும் கூட அவன் நம்பத் தயாராக இல்லை.
தன் உயிரைக் காக்க உதவியவன் என்ற ஒரே காரணத்துக்காக இரக்கம் காட்டியவனே தன்னை ஒற்றிக் கொடுத்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தையும் முடித்தாக வேண்டிய கட்டாயத்தினாலேயே அவன் இறங்கிவிட்டான்.
ஹரீஷும் அவன் பின்னால் செல்லப் போக, அவனைத் தடுத்தவன் அங்கே இருந்த வேறு இருவரைப் பார்த்தான். “இதுக்குள்ளே நீ இல்லை...” என்றவன் பக்கத்தில் இருந்த ஒரு ஹெலிகாப்ட்டரை கை காட்டினான்.
“அதில் போய் ஏறிக்கோ...” என்றவன் சென்றுவிட, ஹரீஷுக்கு எதுவும் புரியவில்லை. நிஜத்தில் அந்த ‘நிழல் உலகுக்குள் தானும் நுழைந்துவிட்டால் என்ன ஆகுமோ?’ என அவன் பயப்படவே செய்தான்.
‘தன்னை இதற்குள் இழுக்க மாட்டேன் எனச் சொன்னாரே?’ என்றும் யோசித்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பொழுதும் அவனோடு வர மாட்டேன் என ஹர்ஷாவால் சொல்ல முடியவில்லை.
அப்படியெல்லாம் சர்வஜித்திடம் மறுத்துப் பேசிவிட முடியாது என அவனுக்குத் தெரியாதா என்ன? மறுத்துப் பேசி தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. தன் உயிர் இப்படிப் போவதில் அவனுக்கு விருப்பமும் இல்லை.
ஆனால் தான் சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக அவன் தன்னை விட்டுச் செல்ல, ஹரீஷுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. ‘இதற்கு என்னை அங்கேயே விட்டு வந்திருக்கலாமே’ என எண்ணியவனுக்கு அப்பொழுதுதான் இதில் வேறு விஷயம் இருக்கிறது எனப் புரிந்தது.
ஹரீஷ் ஹெலிகாப்டரில் கிளம்பிச் செல்ல, சர்வஜித் அங்கே இருந்த கறுப்பு நிற சபாரி காரில் சென்று ஏறிக் கொண்டான். கிட்டத்தட்ட ஆறு கார்கள் வரிசையாக கிளம்பிச் செல்ல, அதைப் பார்த்த ஹரீஷுக்கே ஒரு நொடி உதறல் எடுத்தது.
அதில் இருந்த ஆட்களும், அவர்கள் சுமந்திருந்த ஆயுதமும், ‘சரியான கொலைகாரக் கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்’ நிஜத்தில் அவனுக்கு அந்த நொடி அப்படித்தான் இருந்தது. கொஞ்சம் விட்டால், ‘என்னை யாராச்சும் காப்பாத்துங்க’ எனக் கதறிவிடும் நிலையில் இருந்தான்.
அவன் தைரியமானவன்தான்... பல கலைகள் கற்றவன், பத்துபேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் திறன் கொண்டவன். அதற்குள் எல்லாம் இந்த ‘நிழல் உலக வாழ்க்கை’ வரவே செய்யாது. ஒரு சர்வதேச குற்றவாளி ஆவதிலோ, வேறு நாட்டில் என்ன, தன் நாட்டு ஜெயிலில் கைதியாக இருக்க கூட அவன் விரும்பவில்லை.
உடல்பலமும், தைரியமும் ஒரு பக்கம் இருந்தாலும், ‘பயம் அது வேறு டிப்பார்ட்மென்ட்’ என்றுதான் தனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வான். அப்படி இருக்கையில் இங்கே தன்னையும் இழுத்து வந்துவிட்டானே’ அவன் நினைக்கையில் அவன் விட்டுச் சென்றது அவன்மேல் ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்தது.
‘உன்னை நான் அதற்குள் இழுக்க மாட்டேன்’ என அவன் கொடுத்த வாக்கை அவன் நிறைவேற்றுவதில் அவன்மீதான அபிமானம் கூடியது. ஹரீஷின் உடைமைகளை ஹெலிகாப்ட்டரில் ஏற்றியவர்கள், அவனையும் அழைக்க அதில் தயங்காமல் சென்று ஏறிக் கொண்டான்.
அடுத்த அரைமணி நேரப் பயணத்தில் அவனை ஒரு மிகப் பிரம்மாண்டமான சரக்கு கப்பலில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள். அது சர்வதேச கடல் பரப்பில் நிற்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
கப்பலில் வேலை செய்யும் ஆட்கள் கூட அவன் கண்களுக்குத் தெரியவில்லை. கப்பல் கேப்டன் அவரது முழு சீருடையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“படேல்... சர்தார் படேல்...” அவன் தன்னை அறிமுகப்படுத்த, “ஹரீஷ்...” தானும் சொன்னவன் அவனிடம் கை குலுக்கினான். அவனது உடமைகள் அடங்கிய பை முன்னால் செல்ல, அதைப் பார்த்தவன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
“இப்படி வாங்க...” என அழைத்துச் சென்ற படேல், அவனுக்கென அங்கே ஒரு சொகுசு அறையைக் கை காட்டினான்.
“டேக் ரெஸ்ட்... ஏதாவது வேணும்ன்னா அங்கே ப்ளூ பிரிண்ட் இருக்கு பார்த்துக்கோங்க. அப்படியே இன்டர்காம், தேவைக்கு அழைக்க வேண்டிய நம்பர்கள் எல்லாம் அங்கேயே இருக்கு” அவன் ஹிந்தியில் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.
“தேங்க்ஸ்...” அவன் சொல்ல, “சுக்ரியா...” என்றவாறு அவன் சென்றுவிட்டான்.
அவன் செல்லவே ‘கப்பல் எல்லாம் நான் கடல்லேயும், படத்திலேயும் மட்டும்தான்டா பார்த்திருக்கேன். இதிலே கொண்டு வந்து இறக்கி விட்டானுக, எனக்கு இது ஆடுறதில் வாந்தி வேற வர்ற மாதிரி இருக்கே’ தனக்குள் புலம்பியவன் அப்படியே நின்று இருந்தான்.
கார் சாலையில் விருட்டென பாய்ந்து கொண்டிருக்க, ஹரீஷுக்கு சர்வஜித்தை திரும்பிப் பார்க்க கூட சற்று நடுக்கமாக இருந்தது. அவனுடனே இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறான்தான். அவனது உள்ளும் புறமும் அவனுக்கு நன்றாகவே தெரியும்தான்.
ஆனாலும் கடந்த வாரத்தில் அவன் அரபு நாட்டில் ஆடிய ருத்ர தாண்டவம், அவன் கொஞ்சம் கூட எதிர்பாராதது. அதைவிட ‘இவருக்கு எத்தனை முகங்கள்? இதில் எது நிஜமான முகம்?’ என்றே அவன் குழம்பிப் போனான்.
‘சர்வஜித் என்கையில் ஒரு முகமும், சர்வா என்கையில் வேறு முகமும், ‘உஸ்தாத்’ என்கையில் முற்றிலும் வேறாக அவன் உருவம், உடல்மொழி என அனைத்தும் மாறும் விதம் கண்டு மலைத்தான்.
மும்பை உலகில் ‘சர்வஜித்’ சென்னையில் ‘சர்வா’ அரபு நாட்டில் ‘உஸ்தாத்’ ஹரீஷ் அப்படியே அசைய மறுத்து அமர்ந்து இருந்தான்.
சர்வஜித் தன்னிடம் இருக்கும் தனி ஜெட் விமானமும், அவனிடம் இருக்கும் ஐந்து நாட்டு பாஸ்போர்ட். அது ஒவ்வொன்றிலும் அவனது முகம் முதல் அங்க அடையாளம் துவங்கி, பெயர் வரைக்கும் வேறாக இருக்க அவனை ஹரீஷால் கணிக்க முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அது... தன் அருகே இருப்பவன் இரக்கமற்ற அரக்கன் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. மும்பையில் இருப்பவன், சென்னையில் தன் கிளைகளைப் பரப்புவதும், வேறு எதையோ குறி வைப்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதுவும் ‘உஸ்தாத்’ என்ற அடையாளத்தில், அரபு நாட்டிலும், சர்வதேச கடல் பரப்பிலும் அவன் கொன்று குவித்த மனிதர்களை நினைத்தால் அடி மனதே சில்லிட்டது. அன்றைக்கு தன் தனி விமானத்தை உடனே எடுக்கச் சொன்ன பொழுதே சற்று உஷார் ஆனான்.
‘எதுவோ பெரிதாக நடக்கப் போகிறது’ என அவனது உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. ஹரீஷ் உள்ளுக்குள் இப்படி எண்ணிக் கொண்டிருக்க, சர்வஜித்தோ கையில் இருந்த சிகரெட்டை ஆழ்ந்து புகைத்துக் கொண்டிருந்தான்.
அவன் அதன் புகையை உள்ளிழுத்து, அந்த நிக்கோட்டினின் விறுவிறுப்பை ரத்த நாளங்களில் எல்லாம் கலக்கவிட்டு திளைத்தான். அதைப் பார்க்கையிலேயே சர்வஜித் அந்த சிகரெட்டை எத்தனையாக சுவைக்கிறான் எனத் தெரிந்தது.
‘இந்த புகையில் நமக்கு நாத்தம் மட்டும்தான் தெரியுது. இவருக்கு என்னன்னா அதுதான் உலகமேங்கற மாதிரி பண்றார். ரெண்டு பாட்டில் சரக்கு உள்ளே விட்டு போதையில் மிதக்கறதை விட்டு, இது இதில் என்ன இருக்கோ?’ ஹரீஷ் நினைக்க, சர்வஜித்துக்கோ அந்த புகை நிக்கோட்டின் வாசம் அவனைக் கட்டி வைத்தது.
நிஜத்தில் அவன் இப்படியாக புகைக்கும் நேரங்களில் எல்லாம் ஒன்று தன்னையே மறப்பான். அடுத்தது என்ன என்று தீவிரமாக சிந்திப்பான். இப்பொழுதும் அவனுக்குள் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது.
சர்வஜித் தன் நிழல் உலக வாழ்க்கையான ‘உஸ்தாத்’ அடையாளத்தை துறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. சொல்லப்போனால் இம்ரானிடம் தான் அவன் இருந்தான். ஆனால் இம்ரானால் அவன் வளர்ந்ததை விட, ‘உஸ்தாத்’ மூலமாக இம்ரான் வளர்ந்தான் என்பதுதான் உண்மை.
‘உஸ்தாத்’ என்ற ஒருவன் மட்டுமே புத்தி கூர்மையும், திட்டமிடலும், சாதுர்யமும் கொண்டவனாக இருந்தான். இம்ரான் ஆயுதக்கடத்தல் செய்வதுதான் அவனது முக்கியமான வேலையே. நாடுகளுக்கு இடையே ஆயுதங்களை பரிவர்த்தனை செய்வதுதான் அவனது வேலை.
அரசாங்கத்துக்குத் தெரியாமல் அதைச் செய்வதில் ‘உஸ்தாத்’ கை தேர்ந்தவனாக இருந்தான். ஆயுதங்களோடு தங்கக் கட்டிகளை கடத்துவதும் அவர்களது அடுத்த வேலையாக இருந்தது. கடல் கடந்து, அவனை வந்து செர்கியிலேயே தன் இலக்கு எதுவென சர்வஜித் குறித்து வைத்திருந்தான்.
அவனோடு பல வருடங்கள் பயணித்த பொழுதே, அவனுக்கே தெரியாமல் தன் வேலைகளை இந்தியாவில் அவன் செய்யத் துவங்கி இருந்தான். ஆனால் அது இம்ரானுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
தன் அடையாளத்தை மாற்றுவது, மறைந்து போவது என அனைத்தையும் இம்ரானிடமிருந்துதான் அவன் கற்றுக் கொண்டான். ஆனால் அவனைவிட அதில் மேலாக அவன் சிறந்து விளங்க, இம்ரானின் வலக்கரமாக சீக்கிரமே மாறிவிட்டான்.
தன் வேரை அவன் இந்தியாவில் நிலையாக ஊன்றிய பிறகு இம்ரானிடமிருந்து நிரந்தரமாக விலக முடிவெடுத்தான். ஆனால் அது அவனுக்குத் தெரிய வந்தால் நிச்சயமாக தன்னை உயிரோடு விட மாட்டான் என அவனுக்கு நன்கு தெரியும்.
எனவே அவனிடமிருந்து விலக முடிவெடுத்த பிறகும், பொறுமையாக இரண்டு வருடங்கள் காத்திருந்தான். அதற்குள் அவனுக்கென அவன் பதுக்கி இருந்த தங்கக் கட்டிகள் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அனைத்தையும் சுவிஸ் வங்கிக்கு இடம் மாற்றினான்.
அப்படி இடம் மாற்ற அவன் தனக்கென உள்ளவர்களை அவன் கண்டு வைத்திருந்தான். யாரின் கற்பனைக்கும் எட்டாதவாறு பணமும், தங்கமும் அவனிடம் சேர்ந்திருக்க இம்ரானிடம் இருந்து வெளியேற தக்க தருணத்துக்காக காத்திருந்தான்.
அது சரியான நேரத்தில் அவனுக்கு வாய்க்கப்பெற, அவர்களது ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அவனும் இறந்துவிட்டதாக அவனை நம்ப வைத்து தப்பிவிட்டான். அப்படி (உஸ்தாத்) சர்வஜித் இறந்துவிட்டான் என உடனே நம்பிவிட்டால் அது இம்ரான் இல்லையே.
ஆனால் அவனையும் நம்ப வைக்க, அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அவன் தயாராகிவிட்டான் என இம்ரானுக்கே தெரியாது. அது பரம ரகசியமாக சர்வஜித்துக்குள் இன்னும் புதைந்து கிடந்தது.
அப்படி மட்டும் இல்லையென்றால் இம்ரானின் கண்ணில் அவன் மண்ணைத் தூவி இருக்க முடியுமா என்ன? ‘இப்பொழுது இம்ரானுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் யாரால், எப்படி வந்தது?’ என சர்வஜித்துக்கு தெளிவாகத் தெரியும்.
‘அவனை விட்டு வைத்தது நான் செய்த தவறு. அந்த தவறையும் திருத்தி விடுகிறேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவனாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் சென்று இறங்க வேண்டிய இடம் வரவே, சர்வஜித் எழுந்து கொண்டான்.
சர்வஜித் எத்தனையோ விதமாக இந்த பயணத்தை தவிர்க்க நினைத்தான். தான் இருக்கும் இடத்திலேயே இருந்து இம்ரானை அவனால் அழிக்க முடியும். ஆனால் தான் அவன் முன்னால் சென்று நிற்காமல் போனால், இம்ரான் எந்த எல்லைக்கும் செல்வான் என அவனுக்குத் தெரியும்.
சர்வஜித்துக்கு இனிமேல் அந்த நிழல் உலக தொடர்புகள் தன்மேல் விழுவதை அவன் சுத்தமாக விரும்பவில்லை. இம்ரானுக்கு தான் உயிரோடு இருப்பது மட்டுமே தெரிந்திருக்கிறது. எங்கே இருக்கிறோம் எனத் தெரியவில்லை. அவன் தன்னை தேடத் துவங்கி இருப்பான். தன் படையையே அனுப்பி இருப்பான். அப்படி இருக்கையில், வெறுமே கையைக் கட்டிக்கொண்டு இருக்க அவனால் முடியாது.
அவன் முன்னால் சென்று நின்று, தான் அவனை வேரோடு சாய்க்க செய்துவைத்த அனைத்தையும் செய்ய தான் அங்கே இருந்தே ஆக வேண்டும். இம்ரானின் கூட்டத்துக்குள் அவனுக்கு நெருக்கமாக, விசுவாசமாக இருந்த யாரையும் கூட அவன் நம்பத் தயாராக இல்லை.
தன் உயிரைக் காக்க உதவியவன் என்ற ஒரே காரணத்துக்காக இரக்கம் காட்டியவனே தன்னை ஒற்றிக் கொடுத்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தையும் முடித்தாக வேண்டிய கட்டாயத்தினாலேயே அவன் இறங்கிவிட்டான்.
ஹரீஷும் அவன் பின்னால் செல்லப் போக, அவனைத் தடுத்தவன் அங்கே இருந்த வேறு இருவரைப் பார்த்தான். “இதுக்குள்ளே நீ இல்லை...” என்றவன் பக்கத்தில் இருந்த ஒரு ஹெலிகாப்ட்டரை கை காட்டினான்.
“அதில் போய் ஏறிக்கோ...” என்றவன் சென்றுவிட, ஹரீஷுக்கு எதுவும் புரியவில்லை. நிஜத்தில் அந்த ‘நிழல் உலகுக்குள் தானும் நுழைந்துவிட்டால் என்ன ஆகுமோ?’ என அவன் பயப்படவே செய்தான்.
‘தன்னை இதற்குள் இழுக்க மாட்டேன் எனச் சொன்னாரே?’ என்றும் யோசித்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பொழுதும் அவனோடு வர மாட்டேன் என ஹர்ஷாவால் சொல்ல முடியவில்லை.
அப்படியெல்லாம் சர்வஜித்திடம் மறுத்துப் பேசிவிட முடியாது என அவனுக்குத் தெரியாதா என்ன? மறுத்துப் பேசி தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. தன் உயிர் இப்படிப் போவதில் அவனுக்கு விருப்பமும் இல்லை.
ஆனால் தான் சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக அவன் தன்னை விட்டுச் செல்ல, ஹரீஷுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. ‘இதற்கு என்னை அங்கேயே விட்டு வந்திருக்கலாமே’ என எண்ணியவனுக்கு அப்பொழுதுதான் இதில் வேறு விஷயம் இருக்கிறது எனப் புரிந்தது.
ஹரீஷ் ஹெலிகாப்டரில் கிளம்பிச் செல்ல, சர்வஜித் அங்கே இருந்த கறுப்பு நிற சபாரி காரில் சென்று ஏறிக் கொண்டான். கிட்டத்தட்ட ஆறு கார்கள் வரிசையாக கிளம்பிச் செல்ல, அதைப் பார்த்த ஹரீஷுக்கே ஒரு நொடி உதறல் எடுத்தது.
அதில் இருந்த ஆட்களும், அவர்கள் சுமந்திருந்த ஆயுதமும், ‘சரியான கொலைகாரக் கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்’ நிஜத்தில் அவனுக்கு அந்த நொடி அப்படித்தான் இருந்தது. கொஞ்சம் விட்டால், ‘என்னை யாராச்சும் காப்பாத்துங்க’ எனக் கதறிவிடும் நிலையில் இருந்தான்.
அவன் தைரியமானவன்தான்... பல கலைகள் கற்றவன், பத்துபேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் திறன் கொண்டவன். அதற்குள் எல்லாம் இந்த ‘நிழல் உலக வாழ்க்கை’ வரவே செய்யாது. ஒரு சர்வதேச குற்றவாளி ஆவதிலோ, வேறு நாட்டில் என்ன, தன் நாட்டு ஜெயிலில் கைதியாக இருக்க கூட அவன் விரும்பவில்லை.
உடல்பலமும், தைரியமும் ஒரு பக்கம் இருந்தாலும், ‘பயம் அது வேறு டிப்பார்ட்மென்ட்’ என்றுதான் தனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வான். அப்படி இருக்கையில் இங்கே தன்னையும் இழுத்து வந்துவிட்டானே’ அவன் நினைக்கையில் அவன் விட்டுச் சென்றது அவன்மேல் ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்தது.
‘உன்னை நான் அதற்குள் இழுக்க மாட்டேன்’ என அவன் கொடுத்த வாக்கை அவன் நிறைவேற்றுவதில் அவன்மீதான அபிமானம் கூடியது. ஹரீஷின் உடைமைகளை ஹெலிகாப்ட்டரில் ஏற்றியவர்கள், அவனையும் அழைக்க அதில் தயங்காமல் சென்று ஏறிக் கொண்டான்.
அடுத்த அரைமணி நேரப் பயணத்தில் அவனை ஒரு மிகப் பிரம்மாண்டமான சரக்கு கப்பலில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள். அது சர்வதேச கடல் பரப்பில் நிற்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
கப்பலில் வேலை செய்யும் ஆட்கள் கூட அவன் கண்களுக்குத் தெரியவில்லை. கப்பல் கேப்டன் அவரது முழு சீருடையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“படேல்... சர்தார் படேல்...” அவன் தன்னை அறிமுகப்படுத்த, “ஹரீஷ்...” தானும் சொன்னவன் அவனிடம் கை குலுக்கினான். அவனது உடமைகள் அடங்கிய பை முன்னால் செல்ல, அதைப் பார்த்தவன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
“இப்படி வாங்க...” என அழைத்துச் சென்ற படேல், அவனுக்கென அங்கே ஒரு சொகுசு அறையைக் கை காட்டினான்.
“டேக் ரெஸ்ட்... ஏதாவது வேணும்ன்னா அங்கே ப்ளூ பிரிண்ட் இருக்கு பார்த்துக்கோங்க. அப்படியே இன்டர்காம், தேவைக்கு அழைக்க வேண்டிய நம்பர்கள் எல்லாம் அங்கேயே இருக்கு” அவன் ஹிந்தியில் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.
“தேங்க்ஸ்...” அவன் சொல்ல, “சுக்ரியா...” என்றவாறு அவன் சென்றுவிட்டான்.
அவன் செல்லவே ‘கப்பல் எல்லாம் நான் கடல்லேயும், படத்திலேயும் மட்டும்தான்டா பார்த்திருக்கேன். இதிலே கொண்டு வந்து இறக்கி விட்டானுக, எனக்கு இது ஆடுறதில் வாந்தி வேற வர்ற மாதிரி இருக்கே’ தனக்குள் புலம்பியவன் அப்படியே நின்று இருந்தான்.