பகுதி – 9.
வைஷாலி மறுநாள் கண் விழிக்கையிலேயே அவளது அப்பா பைரவனின் குரல் அவள் இருந்த வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. முதலில் கனவு என நினைத்து ஒதுக்கியவள், அது அப்படி இல்லை எனத் தெரியவே அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
அவள் அவ்வளவு பயந்து எழுந்ததன் காரணம் தகப்பனது குரலுக்காக மட்டும் இல்லை. அவருடனே சேர்ந்து ஒலித்த அவளது மாமா கோபால் மற்றும் முத்துப்பாண்டியின் குரலைக் கேட்டும்தான் திடுக்கிட்டுப் போனாள்.
‘அப்பா எதுக்காக வந்திருக்காங்க? அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்க மாட்டாங்களே. கண்டிப்பா அருணா எதையோ சொல்லி இருக்கணும்’ அவளது ஆழ்மனது அடித்துச் சொன்னது.
அவள் அப்படி எழுந்து அமர்ந்த விதத்தில், ரூபியுமே அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.
“ஷாலு... என்னடி? எதுக்கு இப்படி எழுந்து உட்கார்ந்து இருக்க?” அவளிடம் கேட்டாள். அப்படிக் கேட்டவளின் கண்களில் இன்னும் உறக்கம் மிச்சம் இருந்தது.
“ஷ்...ஷ்... சத்தம் போட்டு பேசாதே” என்றவள் வேகமாக தங்கள் ஆடையை சரி பார்த்துக் கொண்டாள். ‘தோழி அவளது ஆடையை சரி பார்த்தாள் சரி, அதென்ன என் ஆடையையும் சரி பார்க்கறா?’ என்ற யோசனையில் அவளைப் பார்த்தாள்.
“என்னதான்டி ஆச்சு? எதுக்கு இப்படியெல்லாம் பண்ற?” குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
“ரூபி... பேசாதே...” என்றவளுக்கு அவளிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
வைஷாலியின் செவிகள் வெளியே கேட்ட குரலில் பதிய, தானும் அதை கவனித்தாள். “அவளுக்கு எப்படி அடி பட்டதுன்னு நீ கேட்கவே இல்லையா?” அவளது மாமா மகன் முத்துப்பாண்டியின் குரல் ஓங்கி ஒலிக்க, கேள்வியாக வைஷாலியைப் பார்த்தாள்.
“யாருடி அது? இப்படிக் கத்தறது?” ரூபிக்கு எதுவும் புரியவில்லை.
“அது... முத்துப்பாண்டி...” என்றவளின் குரலிலும், முகத்திலும் எதற்கு இப்படி ஒரு வெறுப்பு, அருவருப்பு என அவளுக்குப் புரியவே இல்லை.
“கேட்கறது உன் காதில் விழுதா இல்லையா?” முத்துப்பாண்டி கத்த, வெளியே அருணாவுக்கும், உள்ளே வைஷாலிக்கும் உடம்பு ஒருமாதிரி நடுங்கி, தூக்கிப் போட்டது.
அவள் நடுங்குவதைப் பார்த்த ரூபி, “ஏய் ஷாலு...” என்றவாறு தோழியை மென்மையாக தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“ஐயா... நான் கேட்டேன்ங்க...” அருணா மென்று விழுங்கினாள். அருணாவுக்கு ரத்னாவின் அண்ணன் கோபாலைப் பார்த்தாலே கன்னடப் படங்களில் வரும் வில்லன்கள் நினைப்புதான் வரும். கூடவே அவனது மகன்கள் விநாயகம், வேலவன், முத்துப்பாண்டி என இவர்களையும் சேர்த்தால் பத்துப் பொருத்தமும் பக்காவாகப் பொருந்தும்.
கன்னடப்பட அடியாள் வில்லன் கோஷ்டிக்கும் இவர்களுக்கும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் வித்தியாசம் இருக்கும். மற்றபடி குணத்தில், கொடூரத்தில் எல்லாம் ஒன்றுதான். அருணா பைரவனிடம் தகவல் சொன்ன பொழுது, இவர்களும் சேர்ந்து வந்து நிற்பார்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.
“கேட்டேன்னு சொல்ற, அவ என்ன சொன்னான்னு சொல்ல மாட்டேங்கற?” முத்துப்பாண்டி அவளிடம் எகிறினான்.
“முத்துப்பாண்டி, நீ கொஞ்சம் பொறுமையா இரு, நாம என்னன்னு விசாரிக்கலாம். அருணா, நீ போய் அவ எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வா, போ...” கோபாலின் குரல் ஒலிக்க, மறு நிமிடம் அருணா அங்கே இருந்து கிளம்பப் போனாள்.
அது வைஷாலிக்கும் கேட்க அவள் சற்று பரபரப்பானாள். ஆனால் மறு நிமிடம், பைரவனோ... “அருணா, பாப்பா நிம்மதியா தூங்கி எழுந்து வரட்டும். நீ அவளைத் தொல்லை செய்யாதே” தகப்பன் சொல்ல, இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள்.
“என்ன மச்சான், சுரத்தே இல்லாமல் பேசறீங்க? இவன் கட்டிக்கப் போறவ தானே, அந்த தவிப்பு இவனுக்கு இருக்காதா?” கோபால் பைரவனிடம் கேட்க, அவருக்கு பதில் சொல்லவே பிடிக்கவில்லை.
அவர்களது பேச்சைக் கேட்ட ரூபி, தோழியைப் பார்க்க அவளோ ஒரு மாதிரி படபடத்துப் போய் அமர்ந்து இருந்தாள். அந்தப் பேச்சுக்கு தன் அப்பா ஏதாவது மறுப்பு சொல்வார் என வைஷாலி எதிர்பார்த்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
அதை எண்ணி உள்ளுக்குள் அப்படி தவித்துப் போனாள். ‘எல்லாம் அவ்வளவுதானா? முடிந்ததா? ரெண்டே நாளிலா?’ மனம் பிசைந்தது. வெளியே நடந்த பேச்சைக் கேட்ட ரூபியும் தோழியைத்தான் அதிர்வாகப் பார்த்தாள்.
அவளிடம் விஷயம் என்ன எனக் கேட்க ஆவல் பிறந்தாலும், தோழியின் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளாக ஏதாவது சொல்வாளா எனப் பார்க்க, அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
“ரூபி... குளிச்சு சாப்ட்டுட்டு நீ உன் வீட்டுக்கு கிளம்பிடு” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் சொல்லவில்லை. அங்கே சூழல் சரியில்லை என அவளுக்கே புரிகையில் அவளும் மறுத்து எதையும் பேசவில்லை.
“சரி ஷாலு... நீ உன் கையைப் பார்த்துக்கோ. இப்போ வலி, எரிச்சல் எல்லாம் குறைஞ்சு இருக்கா?” அவளது கரத்தைப் பற்றி ஆராய்ந்தவாறே கேட்டாள்.
“அது ரெண்டு நாள்ல சரியாப் போய்டும். உதவிக்கு அருணா அக்கா இருக்காங்களே, நான் பார்த்துக்கறேன்” எப்படியாவது தோழியை முத்துப்பாண்டினின் கண்களில் இருந்து மறைத்து அனுப்பிவிட வேண்டும் என்று இருந்தது.
அவன் கண்ணில் ரூபி பட்டுவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் பயப்பந்தாக அவளது அடிவயிற்றைக் கவ்வியது. “ஷாலு... ஏதும் பிரச்சனையா? நான் உனக்கு துணைக்கு இருக்கவா?” தோழியை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
“இதை நான் பார்த்துக்கறேன் ரூபி... நீ இப்போ கிளம்பியாகணும். உன் வண்டியை நீ பிறகு எடுத்துக்கறியா? கேப் புக் பண்றேன்... பின்னாடி வழியா போய்டு” வைஷாலி சொல்ல, ரூபிக்கு அத்தனை அதிர்வுதான்.
ஆனாலும் தோழி விஷயம் இல்லாமல் இப்படிச் சொல்ல மாட்டாள் எனப் புரிய சம்மதித்தாள். “சரி நான் கிளம்பறேன், நீ டென்ஷன் ஆகாதே...” என்றவள் குளித்துவிட்டு, வைஷாலியின் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள்.
ஒரு நிமிஷம் இரு... என்றவள் தன் அலைபேசியை எடுத்து, “அக்கா ரெண்டு டீ வேணும்” என அருணாவுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவைத்தாள். அந்த நேரம் அவள் அதைப் பார்ப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் அதைச் செய்தாள்.
“அங்கே பிளாஸ்கில் வச்சிருக்கேன் பாப்பா” என பதில் தகவல் வர, பரபரப்பானாள்.
“ரூபி... அதோ பார் டீ இருக்கு... சீக்கிரம் குடி. தெரு முனையில் கால் டேக்சியை நிக்கச் சொல்லி இருக்கேன்... பின்னாடி வழியா போய், அந்த கார்னர்ல போய் ஏறிக்கோ. உன் வண்டியை நானே கொண்டு வந்து தர்றேன்...” அவள் வேகமாகச் சொல்ல ரூபி அவள் சொன்னவாறே செய்தாள்.
அங்கே இருந்தவற்றைப் பார்த்த ரூபி, “எப்படிடி...? அருணா அக்கா உன் மனசைப் படிச்சவங்க மாதிரி செய்து இருக்காங்க” ரூபி சொல்ல, அதற்கு அவள் எந்த பதிலையும் சொல்லவில்லை.
அங்கே ஒரு பிஸ்கட் பேக்கெட்டும் இருக்கவே, அவள் அதையும் உண்டு, டீயையும் குடித்து முடித்தாள். ரூபி தோழியையும் டீயைக் குடிக்க வைக்க, அந்த நேரம் அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.
“நான் இந்த ரூம்ல இருக்கறதும் நல்லதுக்குத்தான் போல. நான் வெளியே போய், அந்தப்பக்கம் போறது வரைக்கும் நீ ரூமை விட்டு வெளியே வராதே. அதற்குப் பிறகு, கிச்சனுக்குள்ளே போயிட்டு, அப்படியே வெளியே போய்டு. நான் சொல்றது புரியுதா?” அவள் கேட்க, தோழியை கூர்மையாகப் பார்த்தாள்.
“என்னடி நடக்குது இங்கே? கேட்டாலும் சொல்ல மாட்ட... நான் கிளம்பறேன். நீ போ... கையைப் பார்த்துக்கோ, தண்ணியில் நனைக்காதே” என்றவள் அமைதியாகிவிட்டாள்.
“எல்லாத்தையும் சொல்றேன், ஆனா இப்போ அதுக்கு நேரமில்லை, சோ ப்ளீஸ்... சொல்லக் கூடிய விஷயமா இருந்தால் நான் எப்போவோ சொல்லி இருப்பேன். இது...” அவள் ஒரு மாதிரி கண் கலங்க, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.
“ஷாலு... நீ அழாதே.... எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்... நீ பார்த்துக்கோ” என்றவள் தன் அலைபேசி அதிரவே அதை எடுத்தாள்.
“கால் டேக்சி தான்...” அவள் சொல்லிவிட்டு டிரைவரிடம் பேசினாள். “நீ சொன்ன மாதிரியே அந்த கார்னர்ல வந்து நிக்கச் சொல்லிட்டேன். இப்போ நான் கிளம்பறேன்...” அவள் சொல்ல, இருவரும் பரபரப்பானார்கள்.
“நேற்று இருந்த அளவுக்கு கை ரொம்ப இதா தெரியலை தானே?” அறையை விட்டு வெளியே செல்லும் முன்னர் தோழியிடம் கேட்டாள்.
“இல்ல ஷாலு... இப்போ கொஞ்சம் காய்ந்து இருக்கு. நேற்று பார்த்த அளவுக்கு ஊறிப் போய் இல்லை. அதனால் அது ரொம்ப பெரிய காயம் மாதிரி தெரியலை. நல்ல வேளை ஹாஸ்பிடல் போனோம், இல்லைன்னா கொஞ்சம் கஷ்டமாகி இருக்கும்” ரூபி சொல்ல வைஷாலி கதவின் அருகே சென்றாள்.
“உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கோ... வீட்டுக்கு போய் சேர்ந்த உடனே எனக்கு ஒரு மெஸ்சேஜ் போட்டு விடு” என்றவள் கதவை மிகவும் மெதுவாகத் திறந்தாள். அப்பொழுது பைரவனும், கோபாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, முத்துப்பாண்டியை அங்கே அப்பொழுது காணவில்லை.
நிம்மதியாக மூச்சு விட்டவள், “ரூபி... நீ வா...” என்றவள் தோழியை அவசரமாக கிச்சன் வழியாக பின்னால் அனுப்பி விட்டவள், பெற்றவரிடம் வந்தாள்.
“அப்பா...” அவள் அழைக்க, அப்பொழுதுதான் இருவரும் அவளைப் பார்த்தார்கள்.
“என்ன மருமகளே, என்னவோ கையில் அடி பட்டுருக்குன்னு அருணா தகவல் கொடுத்தாளாம்? கைக்கு என்ன ஆச்சு?” என்றவாறே கோபால் அவளது கரத்தைப் பார்த்தார். பைரவனும் சிறு பரிதவிப்பாக மகளைப் பார்த்தார்.
‘என்னப்பா இது?’ என்பதுபோல் பார்வையால் மற்றவர்களைக் காட்ட, பைரவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பைரவனும் அமைதியாக கிளம்பி வரத்தான் பார்த்தார். ஆனால் அருணா பேசுகையில் மனைவி உடனிருக்க அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
பைரவன் உடனே சென்னைக்கு கிளம்ப, ரத்னா தன் வேலையைக் காட்டிவிட்டாள். உடனே தன் அண்ணனுக்கு விஷயத்தைச் சொல்ல, அவரும் தன் மகனோடு, மருமகளைக் காணும் சாக்கில் உடன் வந்துவிட்டார்.
பைரவன் தான் மட்டும் கிளம்பிச் செல்வதாகச் சொன்னதை எல்லாம் அங்கே யாரும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கிளம்பிவிட்ட பிறகு, போகவில்லை என மறுக்கவும் முடியாமல் இவர்களோடு வந்தாக வேண்டிய நிலை, வந்தும் விட்டார்.
மகளிடம் ‘என்ன நடந்தது?’ எனக் கேட்கலாம் என்றால் அவர்களை தனிமையில் விட வேண்டுமே. கோபாலின் முன்னால் எதையும் கேட்க பைரவனும் விரும்பவில்லை.
“அது ஒன்றும் இல்லை மாமா...” அவள் சமாளிக்கப் பார்த்தாள். அந்த நேரம் அங்கே வந்தான் முத்துப்பாண்டி. வந்தவன் அவளைத்தான் ஒரு மாதிரியாக நின்று ரசித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவள் அந்த நேரம் ஒரு சாதாரண சுடிதாரில்தான் நின்று இருந்தாள்.
ஒரு சிறு அலங்காரம் கூட செய்யவில்லை, அவ்வளவு ஏன் முகத்துக்கு பௌடர் கூட போடாமல், தலை கூட ஒழுங்காக வாராமல் தான் இருந்தாள். அப்படியும் அவள் அழகி என அவனது புத்தி சொல்ல, அந்த மொத்த அழகையும் எப்பொழுது தன் சொந்தமாக்குவோம் என்றுதான் இருந்தது.
முன்னரே அவளைப் பார்த்தால் சும்மாவே இருக்க மாட்டான். இப்பொழுது அவள் வீட்டில் பேசி, தன் அத்தையின் முழு சம்மதம் கிடைத்துவிட்டது எனத் தெரிந்த பிறகு அவன் சும்மா இருந்தால்தான் ஆச்சரியம்.
அவளை கிட்டத்தட்ட உரசும் விதத்தில் வந்து நிற்க, அவளுக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருந்தது. “அப்பா, அதெல்லாம் இவகிட்டே எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க? நேற்றைக்கு இவ இன்டர்வியூவுக்கு போன இடத்தில்தான் ஏதோ நடந்து இருக்கு. நாமளே பார்த்துக்கலாம்...” அவன் சொல்ல, அவள் அதிர்ந்தாள்.
வைஷாலி விஷயத்தைச் சொல்லாமல் நிற்பதிலேயே ‘என்னவோ இருக்கிறது?’ என் முத்துப்பாண்டியின் குறுக்கு புத்தி சொன்னது.
இவர்கள் அங்கே போய் கேட்டால், தான் அங்கே நேர்முகத் தேர்வுக்கே செல்லவில்லை என்ற விஷயம் இவர்களுக்குத் தெரிய வந்து விடுமே. அப்படித் தெரியவந்தால் விஷயம் இன்னும் சிக்கலாகும் எனப் புரிய அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“அப்பா... நான் என்ன சொல்ல வர்றேன்னா...” அவர்களை எப்படியாவது தடுத்துவிட மாட்டோமா என்று இருந்தது.
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்... அட்ரஸை மட்டும் சொல்லு போதும்” முத்துப்பாண்டி அதிலேயே நின்றான். தகப்பன் தன் துணைக்கு வருவாரா எனப் பார்க்க, அவரும் சூழ்நிலைக் கைதியாக இருப்பது புரிந்தது.
மகளின் முகத்தைப் பார்த்தவர், “இப்படி வந்து உட்காரும்மா” என தன் அருகே கை காட்ட, வேகமாகச் சென்று தகப்பனின் அருகே அமர்ந்துகொண்டாள்.
“இது எப்படிம்மா ஆச்சு? கையெல்லாம் இந்த அளவுக்கு கொப்பளித்து, தோல் வழண்டு போகும் அளவுக்கு போயிருக்குன்னா, என்னம்மா ஆச்சு?” பொறுமையாகக் கேட்டார். தகப்பன் தனியாக இருக்கையில் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பாளோ என்னவோ? ஆனால் தன் மாமனையும், மாமன் மகனையும் வைத்துக்கொண்டு அவர் கேட்க, அவளால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.
வைஷாலி மறுநாள் கண் விழிக்கையிலேயே அவளது அப்பா பைரவனின் குரல் அவள் இருந்த வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. முதலில் கனவு என நினைத்து ஒதுக்கியவள், அது அப்படி இல்லை எனத் தெரியவே அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
அவள் அவ்வளவு பயந்து எழுந்ததன் காரணம் தகப்பனது குரலுக்காக மட்டும் இல்லை. அவருடனே சேர்ந்து ஒலித்த அவளது மாமா கோபால் மற்றும் முத்துப்பாண்டியின் குரலைக் கேட்டும்தான் திடுக்கிட்டுப் போனாள்.
‘அப்பா எதுக்காக வந்திருக்காங்க? அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்க மாட்டாங்களே. கண்டிப்பா அருணா எதையோ சொல்லி இருக்கணும்’ அவளது ஆழ்மனது அடித்துச் சொன்னது.
அவள் அப்படி எழுந்து அமர்ந்த விதத்தில், ரூபியுமே அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.
“ஷாலு... என்னடி? எதுக்கு இப்படி எழுந்து உட்கார்ந்து இருக்க?” அவளிடம் கேட்டாள். அப்படிக் கேட்டவளின் கண்களில் இன்னும் உறக்கம் மிச்சம் இருந்தது.
“ஷ்...ஷ்... சத்தம் போட்டு பேசாதே” என்றவள் வேகமாக தங்கள் ஆடையை சரி பார்த்துக் கொண்டாள். ‘தோழி அவளது ஆடையை சரி பார்த்தாள் சரி, அதென்ன என் ஆடையையும் சரி பார்க்கறா?’ என்ற யோசனையில் அவளைப் பார்த்தாள்.
“என்னதான்டி ஆச்சு? எதுக்கு இப்படியெல்லாம் பண்ற?” குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
“ரூபி... பேசாதே...” என்றவளுக்கு அவளிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
வைஷாலியின் செவிகள் வெளியே கேட்ட குரலில் பதிய, தானும் அதை கவனித்தாள். “அவளுக்கு எப்படி அடி பட்டதுன்னு நீ கேட்கவே இல்லையா?” அவளது மாமா மகன் முத்துப்பாண்டியின் குரல் ஓங்கி ஒலிக்க, கேள்வியாக வைஷாலியைப் பார்த்தாள்.
“யாருடி அது? இப்படிக் கத்தறது?” ரூபிக்கு எதுவும் புரியவில்லை.
“அது... முத்துப்பாண்டி...” என்றவளின் குரலிலும், முகத்திலும் எதற்கு இப்படி ஒரு வெறுப்பு, அருவருப்பு என அவளுக்குப் புரியவே இல்லை.
“கேட்கறது உன் காதில் விழுதா இல்லையா?” முத்துப்பாண்டி கத்த, வெளியே அருணாவுக்கும், உள்ளே வைஷாலிக்கும் உடம்பு ஒருமாதிரி நடுங்கி, தூக்கிப் போட்டது.
அவள் நடுங்குவதைப் பார்த்த ரூபி, “ஏய் ஷாலு...” என்றவாறு தோழியை மென்மையாக தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“ஐயா... நான் கேட்டேன்ங்க...” அருணா மென்று விழுங்கினாள். அருணாவுக்கு ரத்னாவின் அண்ணன் கோபாலைப் பார்த்தாலே கன்னடப் படங்களில் வரும் வில்லன்கள் நினைப்புதான் வரும். கூடவே அவனது மகன்கள் விநாயகம், வேலவன், முத்துப்பாண்டி என இவர்களையும் சேர்த்தால் பத்துப் பொருத்தமும் பக்காவாகப் பொருந்தும்.
கன்னடப்பட அடியாள் வில்லன் கோஷ்டிக்கும் இவர்களுக்கும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் வித்தியாசம் இருக்கும். மற்றபடி குணத்தில், கொடூரத்தில் எல்லாம் ஒன்றுதான். அருணா பைரவனிடம் தகவல் சொன்ன பொழுது, இவர்களும் சேர்ந்து வந்து நிற்பார்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.
“கேட்டேன்னு சொல்ற, அவ என்ன சொன்னான்னு சொல்ல மாட்டேங்கற?” முத்துப்பாண்டி அவளிடம் எகிறினான்.
“முத்துப்பாண்டி, நீ கொஞ்சம் பொறுமையா இரு, நாம என்னன்னு விசாரிக்கலாம். அருணா, நீ போய் அவ எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வா, போ...” கோபாலின் குரல் ஒலிக்க, மறு நிமிடம் அருணா அங்கே இருந்து கிளம்பப் போனாள்.
அது வைஷாலிக்கும் கேட்க அவள் சற்று பரபரப்பானாள். ஆனால் மறு நிமிடம், பைரவனோ... “அருணா, பாப்பா நிம்மதியா தூங்கி எழுந்து வரட்டும். நீ அவளைத் தொல்லை செய்யாதே” தகப்பன் சொல்ல, இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள்.
“என்ன மச்சான், சுரத்தே இல்லாமல் பேசறீங்க? இவன் கட்டிக்கப் போறவ தானே, அந்த தவிப்பு இவனுக்கு இருக்காதா?” கோபால் பைரவனிடம் கேட்க, அவருக்கு பதில் சொல்லவே பிடிக்கவில்லை.
அவர்களது பேச்சைக் கேட்ட ரூபி, தோழியைப் பார்க்க அவளோ ஒரு மாதிரி படபடத்துப் போய் அமர்ந்து இருந்தாள். அந்தப் பேச்சுக்கு தன் அப்பா ஏதாவது மறுப்பு சொல்வார் என வைஷாலி எதிர்பார்த்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
அதை எண்ணி உள்ளுக்குள் அப்படி தவித்துப் போனாள். ‘எல்லாம் அவ்வளவுதானா? முடிந்ததா? ரெண்டே நாளிலா?’ மனம் பிசைந்தது. வெளியே நடந்த பேச்சைக் கேட்ட ரூபியும் தோழியைத்தான் அதிர்வாகப் பார்த்தாள்.
அவளிடம் விஷயம் என்ன எனக் கேட்க ஆவல் பிறந்தாலும், தோழியின் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளாக ஏதாவது சொல்வாளா எனப் பார்க்க, அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
“ரூபி... குளிச்சு சாப்ட்டுட்டு நீ உன் வீட்டுக்கு கிளம்பிடு” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் சொல்லவில்லை. அங்கே சூழல் சரியில்லை என அவளுக்கே புரிகையில் அவளும் மறுத்து எதையும் பேசவில்லை.
“சரி ஷாலு... நீ உன் கையைப் பார்த்துக்கோ. இப்போ வலி, எரிச்சல் எல்லாம் குறைஞ்சு இருக்கா?” அவளது கரத்தைப் பற்றி ஆராய்ந்தவாறே கேட்டாள்.
“அது ரெண்டு நாள்ல சரியாப் போய்டும். உதவிக்கு அருணா அக்கா இருக்காங்களே, நான் பார்த்துக்கறேன்” எப்படியாவது தோழியை முத்துப்பாண்டினின் கண்களில் இருந்து மறைத்து அனுப்பிவிட வேண்டும் என்று இருந்தது.
அவன் கண்ணில் ரூபி பட்டுவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் பயப்பந்தாக அவளது அடிவயிற்றைக் கவ்வியது. “ஷாலு... ஏதும் பிரச்சனையா? நான் உனக்கு துணைக்கு இருக்கவா?” தோழியை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
“இதை நான் பார்த்துக்கறேன் ரூபி... நீ இப்போ கிளம்பியாகணும். உன் வண்டியை நீ பிறகு எடுத்துக்கறியா? கேப் புக் பண்றேன்... பின்னாடி வழியா போய்டு” வைஷாலி சொல்ல, ரூபிக்கு அத்தனை அதிர்வுதான்.
ஆனாலும் தோழி விஷயம் இல்லாமல் இப்படிச் சொல்ல மாட்டாள் எனப் புரிய சம்மதித்தாள். “சரி நான் கிளம்பறேன், நீ டென்ஷன் ஆகாதே...” என்றவள் குளித்துவிட்டு, வைஷாலியின் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள்.
ஒரு நிமிஷம் இரு... என்றவள் தன் அலைபேசியை எடுத்து, “அக்கா ரெண்டு டீ வேணும்” என அருணாவுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவைத்தாள். அந்த நேரம் அவள் அதைப் பார்ப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் அதைச் செய்தாள்.
“அங்கே பிளாஸ்கில் வச்சிருக்கேன் பாப்பா” என பதில் தகவல் வர, பரபரப்பானாள்.
“ரூபி... அதோ பார் டீ இருக்கு... சீக்கிரம் குடி. தெரு முனையில் கால் டேக்சியை நிக்கச் சொல்லி இருக்கேன்... பின்னாடி வழியா போய், அந்த கார்னர்ல போய் ஏறிக்கோ. உன் வண்டியை நானே கொண்டு வந்து தர்றேன்...” அவள் வேகமாகச் சொல்ல ரூபி அவள் சொன்னவாறே செய்தாள்.
அங்கே இருந்தவற்றைப் பார்த்த ரூபி, “எப்படிடி...? அருணா அக்கா உன் மனசைப் படிச்சவங்க மாதிரி செய்து இருக்காங்க” ரூபி சொல்ல, அதற்கு அவள் எந்த பதிலையும் சொல்லவில்லை.
அங்கே ஒரு பிஸ்கட் பேக்கெட்டும் இருக்கவே, அவள் அதையும் உண்டு, டீயையும் குடித்து முடித்தாள். ரூபி தோழியையும் டீயைக் குடிக்க வைக்க, அந்த நேரம் அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.
“நான் இந்த ரூம்ல இருக்கறதும் நல்லதுக்குத்தான் போல. நான் வெளியே போய், அந்தப்பக்கம் போறது வரைக்கும் நீ ரூமை விட்டு வெளியே வராதே. அதற்குப் பிறகு, கிச்சனுக்குள்ளே போயிட்டு, அப்படியே வெளியே போய்டு. நான் சொல்றது புரியுதா?” அவள் கேட்க, தோழியை கூர்மையாகப் பார்த்தாள்.
“என்னடி நடக்குது இங்கே? கேட்டாலும் சொல்ல மாட்ட... நான் கிளம்பறேன். நீ போ... கையைப் பார்த்துக்கோ, தண்ணியில் நனைக்காதே” என்றவள் அமைதியாகிவிட்டாள்.
“எல்லாத்தையும் சொல்றேன், ஆனா இப்போ அதுக்கு நேரமில்லை, சோ ப்ளீஸ்... சொல்லக் கூடிய விஷயமா இருந்தால் நான் எப்போவோ சொல்லி இருப்பேன். இது...” அவள் ஒரு மாதிரி கண் கலங்க, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.
“ஷாலு... நீ அழாதே.... எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்... நீ பார்த்துக்கோ” என்றவள் தன் அலைபேசி அதிரவே அதை எடுத்தாள்.
“கால் டேக்சி தான்...” அவள் சொல்லிவிட்டு டிரைவரிடம் பேசினாள். “நீ சொன்ன மாதிரியே அந்த கார்னர்ல வந்து நிக்கச் சொல்லிட்டேன். இப்போ நான் கிளம்பறேன்...” அவள் சொல்ல, இருவரும் பரபரப்பானார்கள்.
“நேற்று இருந்த அளவுக்கு கை ரொம்ப இதா தெரியலை தானே?” அறையை விட்டு வெளியே செல்லும் முன்னர் தோழியிடம் கேட்டாள்.
“இல்ல ஷாலு... இப்போ கொஞ்சம் காய்ந்து இருக்கு. நேற்று பார்த்த அளவுக்கு ஊறிப் போய் இல்லை. அதனால் அது ரொம்ப பெரிய காயம் மாதிரி தெரியலை. நல்ல வேளை ஹாஸ்பிடல் போனோம், இல்லைன்னா கொஞ்சம் கஷ்டமாகி இருக்கும்” ரூபி சொல்ல வைஷாலி கதவின் அருகே சென்றாள்.
“உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கோ... வீட்டுக்கு போய் சேர்ந்த உடனே எனக்கு ஒரு மெஸ்சேஜ் போட்டு விடு” என்றவள் கதவை மிகவும் மெதுவாகத் திறந்தாள். அப்பொழுது பைரவனும், கோபாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, முத்துப்பாண்டியை அங்கே அப்பொழுது காணவில்லை.
நிம்மதியாக மூச்சு விட்டவள், “ரூபி... நீ வா...” என்றவள் தோழியை அவசரமாக கிச்சன் வழியாக பின்னால் அனுப்பி விட்டவள், பெற்றவரிடம் வந்தாள்.
“அப்பா...” அவள் அழைக்க, அப்பொழுதுதான் இருவரும் அவளைப் பார்த்தார்கள்.
“என்ன மருமகளே, என்னவோ கையில் அடி பட்டுருக்குன்னு அருணா தகவல் கொடுத்தாளாம்? கைக்கு என்ன ஆச்சு?” என்றவாறே கோபால் அவளது கரத்தைப் பார்த்தார். பைரவனும் சிறு பரிதவிப்பாக மகளைப் பார்த்தார்.
‘என்னப்பா இது?’ என்பதுபோல் பார்வையால் மற்றவர்களைக் காட்ட, பைரவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பைரவனும் அமைதியாக கிளம்பி வரத்தான் பார்த்தார். ஆனால் அருணா பேசுகையில் மனைவி உடனிருக்க அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
பைரவன் உடனே சென்னைக்கு கிளம்ப, ரத்னா தன் வேலையைக் காட்டிவிட்டாள். உடனே தன் அண்ணனுக்கு விஷயத்தைச் சொல்ல, அவரும் தன் மகனோடு, மருமகளைக் காணும் சாக்கில் உடன் வந்துவிட்டார்.
பைரவன் தான் மட்டும் கிளம்பிச் செல்வதாகச் சொன்னதை எல்லாம் அங்கே யாரும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கிளம்பிவிட்ட பிறகு, போகவில்லை என மறுக்கவும் முடியாமல் இவர்களோடு வந்தாக வேண்டிய நிலை, வந்தும் விட்டார்.
மகளிடம் ‘என்ன நடந்தது?’ எனக் கேட்கலாம் என்றால் அவர்களை தனிமையில் விட வேண்டுமே. கோபாலின் முன்னால் எதையும் கேட்க பைரவனும் விரும்பவில்லை.
“அது ஒன்றும் இல்லை மாமா...” அவள் சமாளிக்கப் பார்த்தாள். அந்த நேரம் அங்கே வந்தான் முத்துப்பாண்டி. வந்தவன் அவளைத்தான் ஒரு மாதிரியாக நின்று ரசித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவள் அந்த நேரம் ஒரு சாதாரண சுடிதாரில்தான் நின்று இருந்தாள்.
ஒரு சிறு அலங்காரம் கூட செய்யவில்லை, அவ்வளவு ஏன் முகத்துக்கு பௌடர் கூட போடாமல், தலை கூட ஒழுங்காக வாராமல் தான் இருந்தாள். அப்படியும் அவள் அழகி என அவனது புத்தி சொல்ல, அந்த மொத்த அழகையும் எப்பொழுது தன் சொந்தமாக்குவோம் என்றுதான் இருந்தது.
முன்னரே அவளைப் பார்த்தால் சும்மாவே இருக்க மாட்டான். இப்பொழுது அவள் வீட்டில் பேசி, தன் அத்தையின் முழு சம்மதம் கிடைத்துவிட்டது எனத் தெரிந்த பிறகு அவன் சும்மா இருந்தால்தான் ஆச்சரியம்.
அவளை கிட்டத்தட்ட உரசும் விதத்தில் வந்து நிற்க, அவளுக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருந்தது. “அப்பா, அதெல்லாம் இவகிட்டே எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க? நேற்றைக்கு இவ இன்டர்வியூவுக்கு போன இடத்தில்தான் ஏதோ நடந்து இருக்கு. நாமளே பார்த்துக்கலாம்...” அவன் சொல்ல, அவள் அதிர்ந்தாள்.
வைஷாலி விஷயத்தைச் சொல்லாமல் நிற்பதிலேயே ‘என்னவோ இருக்கிறது?’ என் முத்துப்பாண்டியின் குறுக்கு புத்தி சொன்னது.
இவர்கள் அங்கே போய் கேட்டால், தான் அங்கே நேர்முகத் தேர்வுக்கே செல்லவில்லை என்ற விஷயம் இவர்களுக்குத் தெரிய வந்து விடுமே. அப்படித் தெரியவந்தால் விஷயம் இன்னும் சிக்கலாகும் எனப் புரிய அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“அப்பா... நான் என்ன சொல்ல வர்றேன்னா...” அவர்களை எப்படியாவது தடுத்துவிட மாட்டோமா என்று இருந்தது.
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்... அட்ரஸை மட்டும் சொல்லு போதும்” முத்துப்பாண்டி அதிலேயே நின்றான். தகப்பன் தன் துணைக்கு வருவாரா எனப் பார்க்க, அவரும் சூழ்நிலைக் கைதியாக இருப்பது புரிந்தது.
மகளின் முகத்தைப் பார்த்தவர், “இப்படி வந்து உட்காரும்மா” என தன் அருகே கை காட்ட, வேகமாகச் சென்று தகப்பனின் அருகே அமர்ந்துகொண்டாள்.
“இது எப்படிம்மா ஆச்சு? கையெல்லாம் இந்த அளவுக்கு கொப்பளித்து, தோல் வழண்டு போகும் அளவுக்கு போயிருக்குன்னா, என்னம்மா ஆச்சு?” பொறுமையாகக் கேட்டார். தகப்பன் தனியாக இருக்கையில் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பாளோ என்னவோ? ஆனால் தன் மாமனையும், மாமன் மகனையும் வைத்துக்கொண்டு அவர் கேட்க, அவளால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.