இதழ்:- 16
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒரே நீர் மயம்.அந்த நீலநிற நீர்ப்பரப்பில் விழுந்து அவள் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.நீலநிற ஆழ்கடல் அவளை மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.மூச்சுக்குழாய்களுக்குள் எல்லாம் நீர் புகுந்துவிட அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.மூச்சுக்காற்றுக்குத் தவித்தபடி அவள் மெல்ல மெல்ல மூழ்குகிறாள்.இதோ முற்றிலும் மூழ்கிவிடப்போகிறாள்.
இதற்கு மேல் தப்பமுடியாது என்றுணர்ந்து அவள் உடலும் மனமும் சோரும் போது சட்டென ஒரு உறுதியான கரம் அவள் கரத்தைப் பற்றி மேலே தூக்குகிறது.கரையோரம் அமரவைத்து அவளை ஆசுவாசப்படுத்துகின்றது.மிகவும் சிரமப்பட்டு கண்களை விளித்துப்பார்க்கிறாள்.அவள் எதிரே முகத்தில் கனிவுடன் நிலவன் நிற்கிறான். தண்ணீரை நீட்டி பருகச் சொல்கிறான்.கடல் நீரில் மூழ்கி உப்புநீரை பருகிய நாக்கும் தொண்டையும் வறண்டு போய் இருக்க அவன் கொடுத்த நீரை வாங்கி மளமளவென பருகுகிறாள்.
சற்று தெம்புவந்ததும் சுற்றிலும் பார்க்கிறாள்.அவனைத்தவிர அருகில் யாருமே இல்லை. அவளை சுற்றிலும் ஒரே நீர் நீர் நீர் மட்டும் தான்.பயத்துடன் அருகில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்து “பயமாய் இருக்கிறது அத்தான் “ என்கிறாள்.அவன் ஒரு மென்மையான புன்னகையுடன் நான் தான் உன் அருகில் இருக்கிறேன் இல்லையா? பின் எதற்கு பயம் என கேட்டு கனிவுடன் அவள் தலையை வருடுகிறான்.அந்த வருடலிலேயே இவளின் பயம் கரைந்து போகிறது.மிகவும் பாதுகாப்பான உணர்வொன்று இவளிடம் தோன்றுகின்றது.அதன் பின் அவள் அருகில் உறவினர்கள் எல்லாம் நிற்கிறார்கள் அவனை மட்டும் காணவில்லை.எங்கே போனான் என இவள் தவிப்புடன் சுற்றிலும் தேடுகிறாள்.அவன் தூரத்தில் தனியனாய் நடந்துகொண்டிருக்கிறான்.அந்த கணத்தில் அனைத்தும் மறந்து அவன் தனியே இருக்கிறான் என்பது மட்டுமே மனதில் பட “அத்தான் ...” என்ற கூவலுடன் அவனை நோக்கி வேகமாக ஓடுகின்றாள்.
இதோ அவனை நெருங்கிவிட்டோம் எனும் போது அவன் சட்டென நின்று அவளை திரும்பி நோக்குகின்றான்.அவன் கண்களில் சற்று முன்பிருந்த மென்மை இல்லை கனிவு இல்லை.மாறாக கண்களில் ஏதோ ஒரு தவிப்புடன் அவளை நோக்கி கூறுகின்றான்.”என்னை தொடராதே “ என்று.அவனின் விழிகளில் தெரிந்த தவிப்பைக்கண்டு உள்ளம் உருக இவள் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கின்றாள்.அவ்வளவுதான் அவனுக்கும் இவளுக்கும் இடையே சட்டென நெருப்பு பற்றி எரிகிறது.
அதைக்கடந்து அவனை நெருங்கப் பார்க்கிறாள்.முடியவில்லை.கொழுந்துவிட்டெரியும் அந்த நெருப்பைக் கடக்க அவளால் முடியவில்லை.அந்த நெருப்பின் சுவாலைகளினூடே அவன் மீண்டும் தனியொருவனாய் நடந்து செல்வது தெரிகிறது.அந்த அக்கினியை கடந்து அவனிடம் செல்ல முடியாமல் மறுபுறம் நின்றுகொண்டே இவள் அவனை அழைக்கிறாள்.அவனோ அதை காதில் வாங்காமல் நடந்து கொண்டே இருக்கிறான்.தன்னை விட்டு விலகிப் போகின்றானே என்ற தவிப்புடன் ஓங்கி கத்துகிறாள் அத்தான்ன்ன்..................
அலறியபடியே விழித்தாள் பூவினி.அவள் உடல் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது. சற்றுநேரம் எதுவுமே புரியவில்லை அவளுக்கு.இருள் நிறைந்திருந்த அறையில் அவள் விழிகள் எதையோ துழாவ கைகள் அனிச்சையாய் அருகிலிருந்த விளக்கின் ஆழியை அழுத்தின. சட்டென அறை முழுதும் பரவிப்படர்ந்த வெளிச்சத்தில் அவளுக்கு தான் கண்டது கனவு என்பது உறைத்தது.ஆனாலும் பதட்டம் படபடப்பு குறையவில்லை.தொண்டை வறண்டு வலிக்க அருகிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள்.தாகம் தணிந்தது.ஆனால் தொண்டை வலி குறையவில்லை.கனவின் தாக்கம் என்று புரிந்தது.தொண்டை வலிக்கும் அளவுக்கு அலறியிருக்கிறாள்.
கடவுளே ..என்ன கனவு அது.கனவின் தாக்கம் அவளைவிட்டு அகலவில்லை.கடிகாரத்தைப் பார்த்தாள் நேரம் நான்கு என்று காட்டியது.மீண்டும் கட்டிலில் சென்று படுக்க கூட பயமாய் இருந்தது.அதற்கு மேல் தூக்கம் வரும் போலவும் தோன்றவில்லை.அறையின் மூலையில் இருந்த மெத்திருக்கையில் சென்று முடங்கினாள்.மனம் முழுதும் கண்ட கனவே நிறைந்திருந்தது.நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் தான் இந்தக் கனவு என்று புரிந்தது.
நேற்று அந்த மக்கள் சமுத்திரத்தில் சிக்குண்டு அவள் மயங்கப்பார்த்ததும் கை பற்றி அமர்த்தி நிலவன் உதவியது.பின் அவள் பயம் போக்க மென்மையாக பேசி அவள் தலை வருடியது.அதன் பின் சட்டென தன்னுணர்வு பெற்றவன் போல முகம் இறுக அவளைவிட்டு விலகியது என அனைத்தும் அவள் மனதில் மீண்டும் உலா வந்தன.நேற்று இரவு தூங்குவதற்கு முன்பும் இதையே சிந்தித்துக் கொண்டிருந்ததனால் தான் இப்படி ஒரு கனவு வந்ததென தோன்றியது.என்னதான் கண்டது அனைத்தும் கனவு என்பது தெளிவானாலும் அவள் மனதில் ஏதோ ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.
என்னைத்தொடராதே என்று கனவில் அவன் கூறியபோது அவன் விழிகளில் தெரிந்த தவிப்பு அவ்வளவு தெளிவாக இப்போதும் அவள் மனக்கண்ணில் தோன்றியது.நேற்று வீடு வந்து சேர்ந்து காரைவிட்டிறங்கி அவள் உள்ளே வரும்போது நிலவன் அவள் அருகில் வந்து கூறியது நினைவு வந்தது.
இன்று கோவிலில் நான் உன்னிடம் நடந்துகொண்டது வெறும் மனிதாபிமானத்தில் தான்.அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதே போலத்தான் நடந்து கொண்டிருப்பேன்.எனவே அதற்கு தப்பர்த்தம் செய்யாதே.என்று இறுகிய குரலில் கூறிவிட்டு சென்றான்.
அது சரி தான்.ஆனால் இன்று காலையில் சேலையில் என்னைக் கண்டபோது போது பார்த்தீர்களே ஒரு பார்வை அதற்கு என்ன விளக்கம் கூறுவீர்கள். ஒருவேளை அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படித்தான் பார்த்திருப்பீர்களோ என்று கோபமாக கேட்கத்துடித்த நாவை அடக்கி வெறுமனே தோளைக் குலுக்கி விட்டு வந்துவிட்டாள்.
அவனிடம் ஏதோ முரண்படுவதாக அவளுக்கு நேற்றிலிருந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
நிலவன் பெரும்பாலும் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தாதவன்.ஆனால் நேற்று ஒரே நாளில் அவனிடம் வெளிப்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவைகள் அவளை முற்றிலும் குழப்பிவிட்டன.அதே சிந்தனையிலேயே இரவு நீண்டநேரம் ஆழ்ந்திருந்ததன் விளைவு தான் இப்படி ஒரு கனவு போலும்.
அன்று நிலவன் அவளிடம் நடந்து கொண்ட முறை அவளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.
நீண்டநாளைக்கு பின் அவளின் பழைய அத்தானைக் கண்டுகொண்ட உணர்வு தோன்றியது அவளுக்கு. அவளுக்கு சிறுவயதில் இருந்தே கூட்டத்தில் சென்றால் ஒத்துவராது.வாந்தி மயக்கம் வரும்.அதன் காரணமாகவே கூட்டமாக இருக்கும் இடத்துக்கு அவளை அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுவர்.ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் இந்த திருவிழாவுக்கு மட்டும் அவளை தவிர்க்க முடியாமல் அழைத்து செல்வர்.அப்படி ஒரு முறை சென்றபோது இவள் மயக்கம் வருவது போல் சோரவும் மற்றவர்கள் நீர் தெளித்து உதவ நிலவன் தான் ஒரு புளிப்பு மிட்டாயை அவள் வாயில் போட்டான்.அதனால் அவளுக்கு அன்று வாந்தி வரவே இல்லை.அத்துடன் சற்று தெம்பாய் வேறு உணர்ந்தாள்.அதனால் அதன் பிறகு இந்த திருவிழாவுக்கு போகும் போது கண்டிப்பாய் புளிப்பு மிட்டாய் எடுத்துக்கொண்டே செல்வாள்.அவள் மறந்தாலும் மேகலா கைவசம் வைத்திருப்பார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒரே நீர் மயம்.அந்த நீலநிற நீர்ப்பரப்பில் விழுந்து அவள் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.நீலநிற ஆழ்கடல் அவளை மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.மூச்சுக்குழாய்களுக்குள் எல்லாம் நீர் புகுந்துவிட அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.மூச்சுக்காற்றுக்குத் தவித்தபடி அவள் மெல்ல மெல்ல மூழ்குகிறாள்.இதோ முற்றிலும் மூழ்கிவிடப்போகிறாள்.
இதற்கு மேல் தப்பமுடியாது என்றுணர்ந்து அவள் உடலும் மனமும் சோரும் போது சட்டென ஒரு உறுதியான கரம் அவள் கரத்தைப் பற்றி மேலே தூக்குகிறது.கரையோரம் அமரவைத்து அவளை ஆசுவாசப்படுத்துகின்றது.மிகவும் சிரமப்பட்டு கண்களை விளித்துப்பார்க்கிறாள்.அவள் எதிரே முகத்தில் கனிவுடன் நிலவன் நிற்கிறான். தண்ணீரை நீட்டி பருகச் சொல்கிறான்.கடல் நீரில் மூழ்கி உப்புநீரை பருகிய நாக்கும் தொண்டையும் வறண்டு போய் இருக்க அவன் கொடுத்த நீரை வாங்கி மளமளவென பருகுகிறாள்.
சற்று தெம்புவந்ததும் சுற்றிலும் பார்க்கிறாள்.அவனைத்தவிர அருகில் யாருமே இல்லை. அவளை சுற்றிலும் ஒரே நீர் நீர் நீர் மட்டும் தான்.பயத்துடன் அருகில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்து “பயமாய் இருக்கிறது அத்தான் “ என்கிறாள்.அவன் ஒரு மென்மையான புன்னகையுடன் நான் தான் உன் அருகில் இருக்கிறேன் இல்லையா? பின் எதற்கு பயம் என கேட்டு கனிவுடன் அவள் தலையை வருடுகிறான்.அந்த வருடலிலேயே இவளின் பயம் கரைந்து போகிறது.மிகவும் பாதுகாப்பான உணர்வொன்று இவளிடம் தோன்றுகின்றது.அதன் பின் அவள் அருகில் உறவினர்கள் எல்லாம் நிற்கிறார்கள் அவனை மட்டும் காணவில்லை.எங்கே போனான் என இவள் தவிப்புடன் சுற்றிலும் தேடுகிறாள்.அவன் தூரத்தில் தனியனாய் நடந்துகொண்டிருக்கிறான்.அந்த கணத்தில் அனைத்தும் மறந்து அவன் தனியே இருக்கிறான் என்பது மட்டுமே மனதில் பட “அத்தான் ...” என்ற கூவலுடன் அவனை நோக்கி வேகமாக ஓடுகின்றாள்.
இதோ அவனை நெருங்கிவிட்டோம் எனும் போது அவன் சட்டென நின்று அவளை திரும்பி நோக்குகின்றான்.அவன் கண்களில் சற்று முன்பிருந்த மென்மை இல்லை கனிவு இல்லை.மாறாக கண்களில் ஏதோ ஒரு தவிப்புடன் அவளை நோக்கி கூறுகின்றான்.”என்னை தொடராதே “ என்று.அவனின் விழிகளில் தெரிந்த தவிப்பைக்கண்டு உள்ளம் உருக இவள் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கின்றாள்.அவ்வளவுதான் அவனுக்கும் இவளுக்கும் இடையே சட்டென நெருப்பு பற்றி எரிகிறது.
அதைக்கடந்து அவனை நெருங்கப் பார்க்கிறாள்.முடியவில்லை.கொழுந்துவிட்டெரியும் அந்த நெருப்பைக் கடக்க அவளால் முடியவில்லை.அந்த நெருப்பின் சுவாலைகளினூடே அவன் மீண்டும் தனியொருவனாய் நடந்து செல்வது தெரிகிறது.அந்த அக்கினியை கடந்து அவனிடம் செல்ல முடியாமல் மறுபுறம் நின்றுகொண்டே இவள் அவனை அழைக்கிறாள்.அவனோ அதை காதில் வாங்காமல் நடந்து கொண்டே இருக்கிறான்.தன்னை விட்டு விலகிப் போகின்றானே என்ற தவிப்புடன் ஓங்கி கத்துகிறாள் அத்தான்ன்ன்..................
அலறியபடியே விழித்தாள் பூவினி.அவள் உடல் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது. சற்றுநேரம் எதுவுமே புரியவில்லை அவளுக்கு.இருள் நிறைந்திருந்த அறையில் அவள் விழிகள் எதையோ துழாவ கைகள் அனிச்சையாய் அருகிலிருந்த விளக்கின் ஆழியை அழுத்தின. சட்டென அறை முழுதும் பரவிப்படர்ந்த வெளிச்சத்தில் அவளுக்கு தான் கண்டது கனவு என்பது உறைத்தது.ஆனாலும் பதட்டம் படபடப்பு குறையவில்லை.தொண்டை வறண்டு வலிக்க அருகிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள்.தாகம் தணிந்தது.ஆனால் தொண்டை வலி குறையவில்லை.கனவின் தாக்கம் என்று புரிந்தது.தொண்டை வலிக்கும் அளவுக்கு அலறியிருக்கிறாள்.
கடவுளே ..என்ன கனவு அது.கனவின் தாக்கம் அவளைவிட்டு அகலவில்லை.கடிகாரத்தைப் பார்த்தாள் நேரம் நான்கு என்று காட்டியது.மீண்டும் கட்டிலில் சென்று படுக்க கூட பயமாய் இருந்தது.அதற்கு மேல் தூக்கம் வரும் போலவும் தோன்றவில்லை.அறையின் மூலையில் இருந்த மெத்திருக்கையில் சென்று முடங்கினாள்.மனம் முழுதும் கண்ட கனவே நிறைந்திருந்தது.நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் தான் இந்தக் கனவு என்று புரிந்தது.
நேற்று அந்த மக்கள் சமுத்திரத்தில் சிக்குண்டு அவள் மயங்கப்பார்த்ததும் கை பற்றி அமர்த்தி நிலவன் உதவியது.பின் அவள் பயம் போக்க மென்மையாக பேசி அவள் தலை வருடியது.அதன் பின் சட்டென தன்னுணர்வு பெற்றவன் போல முகம் இறுக அவளைவிட்டு விலகியது என அனைத்தும் அவள் மனதில் மீண்டும் உலா வந்தன.நேற்று இரவு தூங்குவதற்கு முன்பும் இதையே சிந்தித்துக் கொண்டிருந்ததனால் தான் இப்படி ஒரு கனவு வந்ததென தோன்றியது.என்னதான் கண்டது அனைத்தும் கனவு என்பது தெளிவானாலும் அவள் மனதில் ஏதோ ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.
என்னைத்தொடராதே என்று கனவில் அவன் கூறியபோது அவன் விழிகளில் தெரிந்த தவிப்பு அவ்வளவு தெளிவாக இப்போதும் அவள் மனக்கண்ணில் தோன்றியது.நேற்று வீடு வந்து சேர்ந்து காரைவிட்டிறங்கி அவள் உள்ளே வரும்போது நிலவன் அவள் அருகில் வந்து கூறியது நினைவு வந்தது.
இன்று கோவிலில் நான் உன்னிடம் நடந்துகொண்டது வெறும் மனிதாபிமானத்தில் தான்.அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதே போலத்தான் நடந்து கொண்டிருப்பேன்.எனவே அதற்கு தப்பர்த்தம் செய்யாதே.என்று இறுகிய குரலில் கூறிவிட்டு சென்றான்.
அது சரி தான்.ஆனால் இன்று காலையில் சேலையில் என்னைக் கண்டபோது போது பார்த்தீர்களே ஒரு பார்வை அதற்கு என்ன விளக்கம் கூறுவீர்கள். ஒருவேளை அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படித்தான் பார்த்திருப்பீர்களோ என்று கோபமாக கேட்கத்துடித்த நாவை அடக்கி வெறுமனே தோளைக் குலுக்கி விட்டு வந்துவிட்டாள்.
அவனிடம் ஏதோ முரண்படுவதாக அவளுக்கு நேற்றிலிருந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
நிலவன் பெரும்பாலும் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தாதவன்.ஆனால் நேற்று ஒரே நாளில் அவனிடம் வெளிப்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவைகள் அவளை முற்றிலும் குழப்பிவிட்டன.அதே சிந்தனையிலேயே இரவு நீண்டநேரம் ஆழ்ந்திருந்ததன் விளைவு தான் இப்படி ஒரு கனவு போலும்.
அன்று நிலவன் அவளிடம் நடந்து கொண்ட முறை அவளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.
நீண்டநாளைக்கு பின் அவளின் பழைய அத்தானைக் கண்டுகொண்ட உணர்வு தோன்றியது அவளுக்கு. அவளுக்கு சிறுவயதில் இருந்தே கூட்டத்தில் சென்றால் ஒத்துவராது.வாந்தி மயக்கம் வரும்.அதன் காரணமாகவே கூட்டமாக இருக்கும் இடத்துக்கு அவளை அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுவர்.ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் இந்த திருவிழாவுக்கு மட்டும் அவளை தவிர்க்க முடியாமல் அழைத்து செல்வர்.அப்படி ஒரு முறை சென்றபோது இவள் மயக்கம் வருவது போல் சோரவும் மற்றவர்கள் நீர் தெளித்து உதவ நிலவன் தான் ஒரு புளிப்பு மிட்டாயை அவள் வாயில் போட்டான்.அதனால் அவளுக்கு அன்று வாந்தி வரவே இல்லை.அத்துடன் சற்று தெம்பாய் வேறு உணர்ந்தாள்.அதனால் அதன் பிறகு இந்த திருவிழாவுக்கு போகும் போது கண்டிப்பாய் புளிப்பு மிட்டாய் எடுத்துக்கொண்டே செல்வாள்.அவள் மறந்தாலும் மேகலா கைவசம் வைத்திருப்பார்.