- Joined
- Aug 1, 2021
- Messages
- 72
இதழ்:- 7
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியபடி நிலவன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவினி.
.ஹே ... வினிக்கா உன் ஆளை சைட் அடிக்க கிளம்பிட்டியா??? என்று திடீரென்று காதருகில் தாரணியின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் பூவினி.............
தாரணி ஒரு குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.
ஏய் குரங்கு.. உனக்கு வேற வேலையே இல்லையா??
என் அருமை தமக்காய் !!!!!!! இப்போதைக்கு உன்னை கண்காணிப்பதை தவிர வேறு வேலையே இல்லை.
என் எருமை தங்கையே நீ என்னை கண்காணிப்பது இருக்கட்டும்.முதலில் உன் படிப்பையும் சற்று கண்காணியுமம்மா.என்றாள் பூவினி சற்று கடுப்புடன்.
அதையெல்லாம் தாரணி கண்டு கொள்பவளா என்ன.!!!!!
அதெல்லாம் நான் நல்லா படித்துக்கொண்டுதான் இருக்கேன்.என்று உதட்டை சுளித்தவள்.
ஹே .. என்ன வினிக்கா நீ இவ்ளோ அழகா சும்மா தேவதை மாதிரி இருக்கிற என்னைப் பார்த்து எருமைன்னு சொல்லுற??? என்றாள் குறும்பாக.
இதோடா .....இந்த விடயம் தேவதைக்கு தெரியுமா??? தெரிஞ்சா பாவம் தற்கொலை பண்ணிக்க போகுது.
போ வினிக்கா நா உன்னை விட அழகா இருக்கேன் என்று உனக்கு பொறாமை.
ஆமாமா.... பொறாமை பட்டுட்டாலும்.... என்று சிரித்தாள் பூவினி.
என்னதான் சரிக்குசரி தாரணியுடன் வாயடித்தாலும் என் தங்கை அழகு தான் என்று மனதுக்குள் மகிழ்ந்தாள் பூவினி.
தாரணி அழகு தான்.அவளின் சின்ன இதழ்களும் யாருடன் என்றாலும் சரிக்கு சரி வாயடிக்கும் பேச்சும்.பளீர் சிரிப்பும் யாரையும் சட்டென வசீகரித்து விடும்.
இருவரும் பேசியபடியே நடந்த போது திடீரென்று தாரணி கேட்டாள். எப்போ வினிக்கா நீ உன்னோட லவ்ஸ் ஐ அத்தானிடம் சொல்லப் போகிறாய்.இப்படியே சும்மா சைட் அடிச்சுட்டே இருக்க போகிறாயா??
ஏய் குரங்கு.. ஏண்டி உனக்கு இந்த தேவையில்லாத கேள்வி???
ஹலோ எது தேவை இல்லாத கேள்வி??? இவங்க காதலிப்பாங்களாம் பார்வையாலையே ஆளை விழுங்குவாங்களாம்.ஆனா தன்னோட காதலை மட்டும் சொல்ல மாட்டாங்களாம்.அதை பற்றி நாங்க கேட்டா மட்டும் எங்களை திட்டுவாங்களாம். இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன் இது எந்த ஊரு நியாயம் ஹா ?? என்றாள் முறைப்புடன் தாரணி.
ஏய் தரு எதுக்குடி இப்போ என் கூட சண்டை போடுற?? நான் அத்தான காதலிக்கிறேன் தான்.ஆனா அதற்காக அதை அவரிடம் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று இல்லையே.என் காதல் உண்மையா இருந்தா அது நான் சொல்லாமலே அவருக்கு புரியும்.சின்ன வயசில் இருந்தே என் மனசில என்ன நினைக்கிறேன் என்று அத்தான் என் கண்களைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவார். பார்க்கலாம் என் காதலையும் நான் சொல்லாமலே கண்டு பிடிக்கிறாரா என்று.
ஹ்ம்ம்... இது தேறாத கேஸ்.சைட் அடிச்சோமா.காதல சொன்னோமா ....... திருட்டுத்தனமா நாலு கிஸ் அடிச்சோமா............. என்று மேலும் ஏதோ சொல்ல போன தாரணியின் வாயை பொத்திய பூவினி
ஏய் குரங்கு என்ன பேச்சு பேசுற நீ. கொஞ்சமாவது வயசுக்கு ஏத்த மாதிரி பேசுடி.ஒரு தங்கை அக்காவிடம் பேசுற மாதிரியா பேசுற.என்று திட்டி தீர்த்தாள்.
தாரணிக்கும் தன் பேச்சு சற்று அதிகப்படி என்று தோன்றியதோ என்னவோ அதற்கு மேல் எதுவும் பேசாது மௌனமாக நடந்தாள்.
இருவரும் நிலவன் வீட்டை நெருங்கும் போது வாசலிலேயே தமிழ் அமர்ந்து கையில் இருந்த குலோப் ஜாமுனை காலி செய்து கொண்டிருந்தாள்.அவள் அருகிலேயே புஜ்ஜியும் தன்னுடைய சிவந்த நாக்கை சப்புக்கொட்டியபடி அதன் அருகில் ஒரு சிறிய தட்டில் இருந்த குலோப்ஜாமூனை சுவைத்துக் கொண்டு இருந்தது.
இவளைக் கண்டதும் ஹாய் ... வினிக்கா என்று உற்சாக குரல் எழுப்பிய தமிழ் இவள் பின்னால் நுழைந்த தாரணியைக் கண்டதும் அய்யய்யோ ......... என் வில்லி... என்று அலறிய படியே வீட்டினுள் எடுத்தாள் ஓட்டம்.அதைக்கண்ட தாரணி விடுவாளா என்ன ஏய் குண்டூஸ் நில்லுடி... என்ற படி அவளை துரத்தியபடியே உள்ளே ஓடினாள்.
அவர்கள் இருவருக்குள்ளும் இது ஒரு விளையாட்டு யாராவது ஒருவர் ஏதாவது உண்டு கொண்டிருக்கும் போது அடுத்தவர் கண்டு விட்டால் சரி உடனே ஓடிச்சென்று அவ் உணவைப் பறித்து ஒருவாய் வைக்காமல் விட மாட்டார்கள். அது சோறு என்றாலும் சரி தான்.பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) என்றாலும் சரி தான்.அந்த ஒருவாயை எடுக்க விடாமல் அடுத்தவர் கொண்டு ஓடுவதும் மற்றவர் துரத்தி பறிப்பதும் அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் நடப்பது தான். அந்த விளையாட்டில் இருவருக்குள்ளும் ஓர் அன்னியோன்னியம் பாசம் இருக்கும்.அந்த ஒருவாயை ஒருத்தி எடுக்கும் வரை தான் இந்த ஓட்டம்.அதன் பிறகு இரண்டும் ஒரு மெத்திருக்கையில் அருகருகே அமர்ந்து ஒரு தட்டிலேயே ஒன்றாக உண்ணுவார்கள்.
அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தபடியே படியேறியவள் அப்போது தான் புஜ்ஜியை கவனித்தாள். வெகு மும்முரமாக குலாப்ஜாமூனை சுவைத்துக்கொண்டிருந்த புஜ்ஜியும் அப்போது அசைவை உணர்ந்து தலை நிமிர்த்திப் பார்த்தது. தமிழும் தாரணியும் நிலம் அதிர அதை உரசிக்கொண்டு ஓடும் போது கூட சற்றும் அசராது குலாப்ஜாமூனை சுவைத்துக் கொண்டிருந்த புஜ்ஜி பூவினியை கண்ட மறுகணம் விழிகளை உருட்டி அவளை நன்றாக ஒருகணம் பார்த்தது அவ்வளவு தான் மறுகணம் அது அங்கே இருந்தால் தானே.
புஜ்ஜி என்பது ஒரு பூனை.வெள்ளை நிறத்தில் அடர்த்தியான ரோமங்களுடன் புஸ் புஸ் என்றிருக்கும். அதைக்கண்டாலே பூவினிக்கு அப்படி ஒரு ஆசை.அதை கையில் தூக்கினால் அதை அணைத்து முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுவாள்.இவள் கையை விட்டு அதை இறக்கவே மாட்டாள்.அப்படிப்பட்டவளிடம் சிக்கி இம்சைப்பட அது முட்டாள் பூனையா என்ன??
தன்னைக்கண்டதும் தலை தெறிக்க ஓடும் புஜ்ஜியை கண்டதும் இவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.கூடவே அதை துரத்தி பிடிக்கும் ஆசையும் தோன்ற அதை துரத்திக் கொண்டே அதன் பின்னால் ஓடினாள்.
அப்போது தான் தன்னை இடித்து விட்டு ஓடும் தமிழையும் தாரணியையும் கண்டு செல்ல முறைப்புடன் ஒதுங்கி வந்த சாந்தாவின் கால்களை உரசிக்கொண்டு புஜ்ஜி ஓட அதை துரத்திக்கொண்டு தன்னை மோதுவது போல வந்த பூவினியை கண்டு திடுக்கிட்டு விலகியவர்.
ஒரு விரிந்த முறுவலுடன் ஏய் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் என்னதான் ஆச்சு??? கார்டூன் சானல்ல வாறதுகள் மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டே இருக்கீங்கள். பாவம் வினிம்மா புஜ்ஜி அதை எதுக்கு இந்த விரட்டு விரட்டுறாய்.
யாரு இதா அத்தை பாவம்.இது என்ன பண்ணிச்சு தெரியுமா?? நான் வரும் போது வாசல்கிட்ட உட்கார்ந்து குலாப்ஜாமூன் சாப்பிட்டு இருந்திச்சு. பேசாம சாப்பிட வேண்டியது தான?? என்னை கண்டதும் சாப்பிட்ட குலாப்ஜாமூனையும் விட்டுட்டு தலை தெறிக்க ஓடுது அத்தை.என்ன பாத்தா என்ன அவ்ளோ மோசமாவா இருக்கு??
பூவினியின் பேச்சை கேட்டு கலகலவென சிரித்த சாந்தா பின்னே நீ அதைப்படுத்துற பாட்டுக்கு அது உன்னைக் கண்டு ஓடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.என்றார்.
போங்கத்தை நான் அதை என்ன அடிகிறனா? எவ்ளோ ஆசையா தூக்கி அணைத்து முத்தம் தான கொடுக்கிறேன். அது என்னவோ வில்லனை கண்ட கதாநாயகி மாதிரி இந்த ஓட்டம் ஓடுது.இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி இந்த புஜ்ஜியை தூக்கி முத்தம் கொடுக்காமல் விடவே மாட்டேன்.என்றவள் மீண்டும் புஜ்ஜியை துரத்திக்கொண்டு ஓடினாள்.
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியபடி நிலவன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவினி.
.ஹே ... வினிக்கா உன் ஆளை சைட் அடிக்க கிளம்பிட்டியா??? என்று திடீரென்று காதருகில் தாரணியின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் பூவினி.............
தாரணி ஒரு குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.
ஏய் குரங்கு.. உனக்கு வேற வேலையே இல்லையா??
என் அருமை தமக்காய் !!!!!!! இப்போதைக்கு உன்னை கண்காணிப்பதை தவிர வேறு வேலையே இல்லை.
என் எருமை தங்கையே நீ என்னை கண்காணிப்பது இருக்கட்டும்.முதலில் உன் படிப்பையும் சற்று கண்காணியுமம்மா.என்றாள் பூவினி சற்று கடுப்புடன்.
அதையெல்லாம் தாரணி கண்டு கொள்பவளா என்ன.!!!!!
அதெல்லாம் நான் நல்லா படித்துக்கொண்டுதான் இருக்கேன்.என்று உதட்டை சுளித்தவள்.
ஹே .. என்ன வினிக்கா நீ இவ்ளோ அழகா சும்மா தேவதை மாதிரி இருக்கிற என்னைப் பார்த்து எருமைன்னு சொல்லுற??? என்றாள் குறும்பாக.
இதோடா .....இந்த விடயம் தேவதைக்கு தெரியுமா??? தெரிஞ்சா பாவம் தற்கொலை பண்ணிக்க போகுது.
போ வினிக்கா நா உன்னை விட அழகா இருக்கேன் என்று உனக்கு பொறாமை.
ஆமாமா.... பொறாமை பட்டுட்டாலும்.... என்று சிரித்தாள் பூவினி.
என்னதான் சரிக்குசரி தாரணியுடன் வாயடித்தாலும் என் தங்கை அழகு தான் என்று மனதுக்குள் மகிழ்ந்தாள் பூவினி.
தாரணி அழகு தான்.அவளின் சின்ன இதழ்களும் யாருடன் என்றாலும் சரிக்கு சரி வாயடிக்கும் பேச்சும்.பளீர் சிரிப்பும் யாரையும் சட்டென வசீகரித்து விடும்.
இருவரும் பேசியபடியே நடந்த போது திடீரென்று தாரணி கேட்டாள். எப்போ வினிக்கா நீ உன்னோட லவ்ஸ் ஐ அத்தானிடம் சொல்லப் போகிறாய்.இப்படியே சும்மா சைட் அடிச்சுட்டே இருக்க போகிறாயா??
ஏய் குரங்கு.. ஏண்டி உனக்கு இந்த தேவையில்லாத கேள்வி???
ஹலோ எது தேவை இல்லாத கேள்வி??? இவங்க காதலிப்பாங்களாம் பார்வையாலையே ஆளை விழுங்குவாங்களாம்.ஆனா தன்னோட காதலை மட்டும் சொல்ல மாட்டாங்களாம்.அதை பற்றி நாங்க கேட்டா மட்டும் எங்களை திட்டுவாங்களாம். இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன் இது எந்த ஊரு நியாயம் ஹா ?? என்றாள் முறைப்புடன் தாரணி.
ஏய் தரு எதுக்குடி இப்போ என் கூட சண்டை போடுற?? நான் அத்தான காதலிக்கிறேன் தான்.ஆனா அதற்காக அதை அவரிடம் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று இல்லையே.என் காதல் உண்மையா இருந்தா அது நான் சொல்லாமலே அவருக்கு புரியும்.சின்ன வயசில் இருந்தே என் மனசில என்ன நினைக்கிறேன் என்று அத்தான் என் கண்களைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவார். பார்க்கலாம் என் காதலையும் நான் சொல்லாமலே கண்டு பிடிக்கிறாரா என்று.
ஹ்ம்ம்... இது தேறாத கேஸ்.சைட் அடிச்சோமா.காதல சொன்னோமா ....... திருட்டுத்தனமா நாலு கிஸ் அடிச்சோமா............. என்று மேலும் ஏதோ சொல்ல போன தாரணியின் வாயை பொத்திய பூவினி
ஏய் குரங்கு என்ன பேச்சு பேசுற நீ. கொஞ்சமாவது வயசுக்கு ஏத்த மாதிரி பேசுடி.ஒரு தங்கை அக்காவிடம் பேசுற மாதிரியா பேசுற.என்று திட்டி தீர்த்தாள்.
தாரணிக்கும் தன் பேச்சு சற்று அதிகப்படி என்று தோன்றியதோ என்னவோ அதற்கு மேல் எதுவும் பேசாது மௌனமாக நடந்தாள்.
இருவரும் நிலவன் வீட்டை நெருங்கும் போது வாசலிலேயே தமிழ் அமர்ந்து கையில் இருந்த குலோப் ஜாமுனை காலி செய்து கொண்டிருந்தாள்.அவள் அருகிலேயே புஜ்ஜியும் தன்னுடைய சிவந்த நாக்கை சப்புக்கொட்டியபடி அதன் அருகில் ஒரு சிறிய தட்டில் இருந்த குலோப்ஜாமூனை சுவைத்துக் கொண்டு இருந்தது.
இவளைக் கண்டதும் ஹாய் ... வினிக்கா என்று உற்சாக குரல் எழுப்பிய தமிழ் இவள் பின்னால் நுழைந்த தாரணியைக் கண்டதும் அய்யய்யோ ......... என் வில்லி... என்று அலறிய படியே வீட்டினுள் எடுத்தாள் ஓட்டம்.அதைக்கண்ட தாரணி விடுவாளா என்ன ஏய் குண்டூஸ் நில்லுடி... என்ற படி அவளை துரத்தியபடியே உள்ளே ஓடினாள்.
அவர்கள் இருவருக்குள்ளும் இது ஒரு விளையாட்டு யாராவது ஒருவர் ஏதாவது உண்டு கொண்டிருக்கும் போது அடுத்தவர் கண்டு விட்டால் சரி உடனே ஓடிச்சென்று அவ் உணவைப் பறித்து ஒருவாய் வைக்காமல் விட மாட்டார்கள். அது சோறு என்றாலும் சரி தான்.பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) என்றாலும் சரி தான்.அந்த ஒருவாயை எடுக்க விடாமல் அடுத்தவர் கொண்டு ஓடுவதும் மற்றவர் துரத்தி பறிப்பதும் அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் நடப்பது தான். அந்த விளையாட்டில் இருவருக்குள்ளும் ஓர் அன்னியோன்னியம் பாசம் இருக்கும்.அந்த ஒருவாயை ஒருத்தி எடுக்கும் வரை தான் இந்த ஓட்டம்.அதன் பிறகு இரண்டும் ஒரு மெத்திருக்கையில் அருகருகே அமர்ந்து ஒரு தட்டிலேயே ஒன்றாக உண்ணுவார்கள்.
அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தபடியே படியேறியவள் அப்போது தான் புஜ்ஜியை கவனித்தாள். வெகு மும்முரமாக குலாப்ஜாமூனை சுவைத்துக்கொண்டிருந்த புஜ்ஜியும் அப்போது அசைவை உணர்ந்து தலை நிமிர்த்திப் பார்த்தது. தமிழும் தாரணியும் நிலம் அதிர அதை உரசிக்கொண்டு ஓடும் போது கூட சற்றும் அசராது குலாப்ஜாமூனை சுவைத்துக் கொண்டிருந்த புஜ்ஜி பூவினியை கண்ட மறுகணம் விழிகளை உருட்டி அவளை நன்றாக ஒருகணம் பார்த்தது அவ்வளவு தான் மறுகணம் அது அங்கே இருந்தால் தானே.
புஜ்ஜி என்பது ஒரு பூனை.வெள்ளை நிறத்தில் அடர்த்தியான ரோமங்களுடன் புஸ் புஸ் என்றிருக்கும். அதைக்கண்டாலே பூவினிக்கு அப்படி ஒரு ஆசை.அதை கையில் தூக்கினால் அதை அணைத்து முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுவாள்.இவள் கையை விட்டு அதை இறக்கவே மாட்டாள்.அப்படிப்பட்டவளிடம் சிக்கி இம்சைப்பட அது முட்டாள் பூனையா என்ன??
தன்னைக்கண்டதும் தலை தெறிக்க ஓடும் புஜ்ஜியை கண்டதும் இவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.கூடவே அதை துரத்தி பிடிக்கும் ஆசையும் தோன்ற அதை துரத்திக் கொண்டே அதன் பின்னால் ஓடினாள்.
அப்போது தான் தன்னை இடித்து விட்டு ஓடும் தமிழையும் தாரணியையும் கண்டு செல்ல முறைப்புடன் ஒதுங்கி வந்த சாந்தாவின் கால்களை உரசிக்கொண்டு புஜ்ஜி ஓட அதை துரத்திக்கொண்டு தன்னை மோதுவது போல வந்த பூவினியை கண்டு திடுக்கிட்டு விலகியவர்.
ஒரு விரிந்த முறுவலுடன் ஏய் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் என்னதான் ஆச்சு??? கார்டூன் சானல்ல வாறதுகள் மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டே இருக்கீங்கள். பாவம் வினிம்மா புஜ்ஜி அதை எதுக்கு இந்த விரட்டு விரட்டுறாய்.
யாரு இதா அத்தை பாவம்.இது என்ன பண்ணிச்சு தெரியுமா?? நான் வரும் போது வாசல்கிட்ட உட்கார்ந்து குலாப்ஜாமூன் சாப்பிட்டு இருந்திச்சு. பேசாம சாப்பிட வேண்டியது தான?? என்னை கண்டதும் சாப்பிட்ட குலாப்ஜாமூனையும் விட்டுட்டு தலை தெறிக்க ஓடுது அத்தை.என்ன பாத்தா என்ன அவ்ளோ மோசமாவா இருக்கு??
பூவினியின் பேச்சை கேட்டு கலகலவென சிரித்த சாந்தா பின்னே நீ அதைப்படுத்துற பாட்டுக்கு அது உன்னைக் கண்டு ஓடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.என்றார்.
போங்கத்தை நான் அதை என்ன அடிகிறனா? எவ்ளோ ஆசையா தூக்கி அணைத்து முத்தம் தான கொடுக்கிறேன். அது என்னவோ வில்லனை கண்ட கதாநாயகி மாதிரி இந்த ஓட்டம் ஓடுது.இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி இந்த புஜ்ஜியை தூக்கி முத்தம் கொடுக்காமல் விடவே மாட்டேன்.என்றவள் மீண்டும் புஜ்ஜியை துரத்திக்கொண்டு ஓடினாள்.