• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் -22

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -22

" அது அவ்வளவு சீக்கிரம் மாறாது உதி."
என்றவனை அதிர்ச்சியாக உத்ரா பார்க்க.

"எப்பவெல்லாம் உன்னை அழவச்சு பார்க்கணும்னு நினைக்கிறேனோ, அப்போ எல்லாம் அவனை திட்டுவேன்." என்று கண் சிமிட்டி சிரித்தான்.

" உங்களை என்ன தான் செய்றது? எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது, நினைப்பப் பாரு." என்றவள், அவனை அடிக்க துரத்த. அவனோ, அவளிடமிருந்து ஓடியவன், " ஹேய் உதி! நான் சாதாரணமா தான் சொன்னேன்‌. உனக்கு தான் நினைப்பு வேற எங்கோ போகுது." என்றவன் சிரிக்க.

அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"உதி! அதுக்குள்ள கோபம் வந்திருச்சா? ரித்விக் என் தம்பி. எனக்கும் மனசுக்கு கஷ்டமாகத் தான் இருக்கு. ஆனால் அதையே நினைச்சிட்டு இருக்க வேண்டாம் உதி. நாம் அவனோட இழப்புல இருந்து வெளியே வர்றது தான் நல்லது."

" சரி அபி! இனி ரித்விக் பற்றி நானும் பேச மாட்டேன். நீங்களும் பேச வேண்டாம். ஓகேவா." என்றவளை, சிரிப்புடன் பார்த்தான் அபிமன்யு.

" உதி மா! அது நம்ம கையில மட்டும்
இல்லை." என்றவன் மேலே கையை காண்பிக்க.

" என்ன ஆண்டவன் கையில இருக்கா?" நக்கலாக வினவினாள் உத்ரா.

" அதுக்கும் மேல… எங்க பாட்டி கையில தான் இருக்கு. அந்த ஆண்டவனால கூட எங்க பாட்டி வாய மூட முடியாது. ஒன்னு வேணும்னா செய்யலாம்." என்று மனைவியை பார்த்தான் அபிமன்யு.

" என்ன செய்யணும்?" என்று ஆர்வமாக வினவினாள் உத்ரா.

" அது வந்து… உன் கையால ஒரு நாள் சமைச்சு எங்க பாட்டிக்கு போட்டால், நேரா பரலோகம் போயிடுவாங்க. அப்புறம் நம்ம ஜாலியா இருக்கலாம்." என்று மனைவியின் மனநிலையை மாற்றுவதற்காக, அவளது சமையலை கேலி செய்ய.

அவன் எதிர்ப்பார்த்தது போலவே, சற்று முன் இருந்த கலக்கம் எல்லாம் மறைந்து" என் சமையல் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு." என்று அவனை அடிக்கத் துரத்தினாள்.

அவள் கையில் சிக்காமல் ஆட்டம் காண்பித்தான் அபிமன்யு.

அவர்களது இனிய ஊடலை தடை செய்வது போல, உத்ராவின் ஃபோன் இசைத்தது.

மூச்சு வாங்க ஃபோனை எடுத்தவள், சொல்லுங்க அத்தை!" என.

" உதி! நீ அத்தையாக போற." என்று மானசா கருவுற்றிருக்கும் செய்தியை கூறினார் சுபத்ரா.

" சூப்பர் அத்தை! அண்ணி எப்படி இருக்காங்க. டாக்டர் கிட்ட காட்டியாச்சா?" என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாள் உத்ரா.

" டாக்டர் கிட்ட போய்ட்டு வந்தாச்சு. உங்க அண்ணியும், பேபியும் நல்லா இருக்காங்க. நேர்ல வந்து மத்த கேள்வியெல்லாம் கேளு." என்றவர் ஃபோனை வைத்து விட.

அபிமன்யுவிற்கு விஷயம் ஓரளவுக்கு புரிபட்டது. இருந்தாலும் உத்ராவின் வாயால் கேட்கணும் என்று எண்ணியவன் ஒன்றும் அறியாதது போல், " என்னாச்சு? மானுவுக்கு என்ன?" என்று வினவினான்.

" அது வந்து.. நீங்க மாமா ஆகிட்டீங்க." என்று சொன்னவளின் முகம் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.

அவளைப் பார்த்து ரசித்து சிரித்தான்.

அவனது சிரிப்பிலே அவன் புரிந்துக் கொண்டே விளையாடியது புரிய, " ப்ராடு." என்று அவனை அடித்தாள்.

"ஹேய் உதி இப்படியே அடிச்சிட்டு இருந்தா நாம எப்போ…" என்றவன் நிறுத்தி அவளை பார்க்க.

அவளோ, அவனைப் பார்த்து விழித்தாள்.

"எப்போ மானுவை போய் பார்க்கிறது. சீக்கிரம் கிளம்பு." என்று நமட்டு சிரிப்புடன் கூற.

அவனைப் பார்த்து முறைத்தவள், அது முடியாமல் சிரித்தாள். அபிமன்யுவின் முகத்திலும் புன்னகை.
***********************

இருவரும் முகம் நிறைந்த புன்னகையுடன், பூ, பழம் ஸ்வீட் வாங்கிக் கொண்டு மானசாவை பார்க்க சென்றனர்.

வழக்கம் போல் பர்வதம் உத்ராவைப் பார்த்ததும் சீண்டினார். " நீ எப்ப நல்ல செய்தி சொல்ல போற? கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சே!" என்று வினவினார்.

" ஏய் கிழவி! எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் தானே ஆகுது." என்று முறைத்தான் அபிமன்யு.

" ச்சே ச்சே நான் இவளுக்கும், நம்ம மானுவோட தானே கல்யாணம் ஆச்சு. அந்த ஞாபகத்துல சொன்னேன்."
என்று பர்வதம் கூறி முடிக்க.

" ஹேய் உதி! பாட்டி சொன்னதை கேட்டீயா? " என்று அவளை அர்த்தத்துடன் பார்த்து வினவ.

பாட்டி வேண்டும் என்றே தான் ரித்விக்கோட நடந்த கல்யாணத்தை கூறுகிறார் என்று உத்ராவிற்கு புரிந்தது. அதைத்தான் அபிமன்யு அவளிடம் பார்வையால் கூறினான்.

அவளும் சரி என்பது போல் தலையசைத்தாள்.

அதற்குள்" என்னாச்சு? ஏன் மச்சான் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?" என்று பதறி வந்தான் முகிலன்.

" அதுவா இவ்வளவு நாளா உங்களுக்கும், மானுக்கும் தான் கல்யாணம் ஆனது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மானுவுக்கும், உதிக்கும் தான் கல்யாணம் ஆச்சாம். எங்க பாட்டி சொல்றாங்க." என்று சொல்லி கிண்டலாக சிரித்தவனை, ' டேய் நான் என்ன அர்த்தத்துல சொன்னேன். நீ என்ன அர்த்தத்தை புரிஞ்சுக்கிட்ட. சும்மாவே மானு வீட்டுக்காரர் கோவம் மூக்கு மேல வரும். இப்படி கோர்த்து விட்டா, மானு கிட்ட கோபத்தை காண்பிக்க போறாரு. படுபாவி.' என்று பேரனை மனதிற்குள் திட்டியவர், அவனை முறைத்துக் கொண்டே நகர்ந்து பேத்தியிடம் சென்று அமர்ந்துக் கொண்டார்.

முகிலனும், அபிமன்யுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

உத்ராவோ, "கொஞ்சம் சும்மா இருங்களேன்." என்றவளுக்கும் சிரிப்பு வந்தது. அந்த புன்னகையுடனே மானசாவிடம் சென்றாள்.

" சரி வாங்க மச்சான். நம்மளும் அங்கே போகலாம்." என்ற அபிமன்யுவிடம், " நீங்க போங்க மச்சான். அத்தை ஜுஸ் போட்டாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்." என்றவனை, " ம் வாழ்த்துக்கள் மச்சான். குடும்பஸ்தானாகிட்டீங்க." என்று கேலி செய்தான் அபிமன்யு.

அங்கோ, " வாழ்த்துக்கள் அண்ணி!" என்று உத்ரா ஸ்வீட் ஊட்ட.

" ஹேய்! ஸ்வீட் எல்லாம் கொடுக்க கூடாதுன்னு தெரியாதா?" என்று பர்வதம் உத்ராவை அதட்ட.

முகம் மாறினாள் உத்ரா.

அவளைப் பார்த்துக் கொண்டே, " மானு! கொஞ்ச நாள் ஜாக்கிரதையா இருக்கணும் டா. நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு. பாட்டி வந்து உனக்கு சுத்திப் போடுறேன். எல்லார் கண்ணும் ஒரே போல இருக்காது."என்று உத்ராவைப் பார்த்துக் கொண்டே கூறினார்.

உத்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதா என்று பர்வதம் காத்திருக்க, அவளோ சிரித்தாள்.

"லூசா நீ? எதுக்கு இப்படி சிரிக்கிற?" என்று கடிந்துக் கொண்டார் பர்வதம்.

அங்கே வந்த அபிமன்யுவோ, " பாட்டி! பேரன் பொண்டாட்டி கிட்ட என்ன பேசிட்டுருக்க?" என்று வினவ.

அவரோ ஒன்றும் சொல்லாமல் முழித்தார்.

" அது வந்து நான் ஏன் அழ மாட்டேங்குறேன்னு கவலை படுறாங்க பாட்டி." என்றாள் உத்ரா.

" நானும் அதைத் தான் எதிர்பார்த்துக் கிட்டே இருக்கேன். அழமாட்டேங்குறா! என்னன்னு கேளுங்க பாட்டி." என்றவன் கண்களால் உத்ராவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார் பர்வதம்.

" என்ன இன்னைக்கு உன்னை அழ வைக்கவா?" என்று அபிமன்யு கண் சிமிட்டி சிரிக்க.

" சும்மா இருங்க அபி!" என்றவள் வெட்கத்தை மறைக்க முயன்று, அவனது தோளிலே சாய்ந்தாள்.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா, முகிலன், மானசா அவர்களின் மனம் நிறைந்து இருந்தது. என்றைக்கும் இதே மன நிறைவுடன் இவர்கள் இருவரும் வாழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர். நாமும் அவர்களை வாழ்த்தி விடைப்பெறுவோம்.

முற்றும்.



 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
சூப்பர் சூப்பர் சகி 🩷🩷🩷🩷🩷🩷🩷🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
ரொம்ப நன்றி சகி. உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி