"சாப்டியா??" என்று கேட்டான்.. மித்ரா ஒருநிமிடம் தடுமாறினாள்.. அவளுக்கு இப்படி அழைத்து சாப்டியானு கேக்கிற ஒரே ஜீவன் மிதுதான்…இப்போது கவின் கேட்டதும் என்ன சொல்றதுனு தெரியவில்லை அவளுக்கு…
" ஹலோ லைன்ல இருக்கிறாயா மிரா? "
" ஆ.. இருக்கிறன்.. சாப்டன்.. நீங்க சாப்டீங்களா??"
"thanks மிரா"
"எதுக்கு?"
"என்னை இதுவரைக்கும் சாப்டியானு கேக்க யாரும் இல்லை…. இப்போ நீ கேட்ட பாரு இது ரொம்ப பெரிய விசயம்… சீக்கிரமா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு மிரா" என்றான் உட்சென்ற குரலில்…
மித்ராவுக்கு பாவமாக இருந்தது.. இருந்தாலும் அவனை பற்றி எதுவும் தெரியாமல் எப்படி கல்யாணத்துக்கு சரினு சொல்றது என குழம்பினாள்..
" மிரா என்னடா இவன் திடீர்னு வந்தான்… கல்யாணம் பண்ணிக்கனு சொல்றான்… இவன் எப்படி பட்டவன்னு யோசிக்கிறியா?? என்கூட கொஞ்சநாள் பேசு பழகு உனக்கு பிடிச்சிருந்தா ஒத்துக்க… இல்லைனா பிடிக்கலனு சொல்லு உன்னை கட்டாயப்படுத்த மாட்டன்… ஆனால் உனக்காக காத்திருப்பேன்…" என்றான்.
" எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்லை… வேலைக்கு டைம்மாச்சி நான் போனை வைக்கட்டுமா?? "
" சரி பாய்"
இப்படியாக தினமும் அவர்களது உரையாடல் தொடர்ந்தது.. காலைலையும் இரவிலையும் மித்ராவுக்கு போன் பண்ணிடுவான் கவின்.. மித்ராவும் அவனது அழைப்பினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டாள்…
திடீரென இரண்டு நாட்களாக கவின் மித்ராவுக்கு போன் பண்ணவில்லை.. மித்ரா போனை எடுப்பதும் பார்ப்பதுமாக இருந்தாள்.. "என்ன ரெண்டுநாளா போனே பண்ணல… என்னாச்சி?? ஒருவேளை அவருக்கு நான் சரினு சொல்லாததனால பேசக்கூடாதுனு நினைக்கிறாரோ?? இல்லைனா உடம்பு சரியில்லாம இருக்குமோ??" என யோசித்த மித்ராவுக்கு மனசு வலித்தது.. "உடம்பு சரியில்லைனா அவர பார்த்துக்க யாரும் இல்லைனு சொன்னாரே " என்ற நினைத்த மித்ரா உடனே யோசிக்காமல் கவினுக்கு போன் பண்ணினாள்…
உண்மையாகவே கவின் தனது வீட்டில் காய்ச்சலால் படுத்திருந்தான்.. அவனால் எழக்கூட முடியவில்லை… போன் அடித்தது.. கஸ்ரப்பட்டு எடுத்துப் பார்க்க மித்ரா.. அவன் மித்ராவுக்கு எடுக்க நினைத்தான்.. ஆனால் அவனால் போன் எடுக்க முடியாதளவிற்கு காய்ச்சல்..அவள் போன் பண்ணியதை பார்த்த கவினுக்கு மனசெல்லாம் நிறைந்தது…
"ஹ… லோ…"
"ஹலோ… கவி… உங்களுக்கு ஒண்ணுமில்லைதானே… நல்லா இருக்கிறீங்களா??? ஏன் எனக்கு போன் பண்ணல??" என்று விடாது பேசினாள்…
"மி… ரா"
"என்னாச்சிங்க?? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?"
"மி… ரா… ரெண்டு… நா.. ளா.. கா.. ய்.. ச்… ச… ல்"
"ரெண்டு நாளா காய்ச்சலா? ஏன் என்கிட்ட சொல்லல? மருந்து எடுத்தீங்களா?? " என்று கேட்டாள்..
" இ.. ல்… லை.. "
"என்ன நீங்க ரெண்டு நாளா காய்ச்சலோட இருக்கிறீங்க கூட யாரு இருக்கிறா? "
" யா.. ரு… ம்… இ.. ல்… லை"
" தனியாகவா காய்ச்சலோட இருக்கிறீங்க? "
" எ.. ன.. க்… கு… யா.. ரு… இ… ரு… க்… கி… றா? " என்றான்.
உடனே போனை கட் பண்ணிய மித்ரா அவனுக்கு தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு வேலைக்கு லீவு சொல்லிவிட்டு கவின் வீட்டிற்கு சென்றாள்…
அவனது வீட்டைப் பார்த்தவள்.. மலைத்துவிட்டாள்.. ஆம் அது பெரிய மாளிகையாக இருந்தது.. உண்மையில் இது கவின் வீடுதானா என்று யோசித்தவள்.. அவனது காய்ச்சல் நினைவு வர எதையும் யோசிக்காது வீட்டினுள்ளே சென்றுவிட்டாள்..
வீட்டிற்குள் சென்று விட்டாள்.. ஆனால் அவனது அறை தெரியாதே.. என்று யோசித்தபடி நின்றவள் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தாள்… கடைசியில் இரண்டாவது தளத்தில் இருந்த அறையை திறந்தாள்.. அங்கே கவின் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.. அவனைப் பார்த்ததும்
"கவி" என்று அழைத்தபடி உள்ளே சென்றாள்.
மெதுவாக அவனது நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.. உடல் நெருப்பாய் கொதித்தது..
அவளது தீண்டலில் கடினப்பட்டு கண்களை திறந்தான் கவின்..
"மி.. ரா"
"என்ன கவி… உடம்பு இப்பிடி கொதிக்குது. இவ்வளவு காய்ச்சலோட எப்பிடி இருக்க முடியும்? மருந்து எடுந்திருக்கலாமே.."
கவினால மித்ரா வந்ததை நம்ப முடியவில்லை "மி.. ரா… நீ…எப்.. படி இங்க…. வந்… த?என்.. னால.. நம்ப…. முடி… யல…"
"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க கவி"
" எ… ன்… னா… ல… முடியல… மிரா. "
என்றவன் அருகில் வந்து அமர்ந்தவள் தான் கொண்டு வந்த மாத்திரைகளை போட கொடுத்தாள்..
"சா..ப்ப…டல மி…ரா" என்றான்.. சாப்பிடாமல் மாத்திரை போட முடியாதே என்று நினைத்த மிரா" இருங்க கவி" என்றவள் மெதுவாக அவனை பிடித்து கட்டிலில் சாய்ந்து அமர வைத்தவள் தனது கைகளை கழுவிக் கொண்டு வந்து தனது சாப்பாட்டை எடுத்து கவினுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
"என்ன பார்க்கிறீங்க? ஆ.. காட்டுங்க"
"ம்.." என்றவன் கண்களில் நீருடன் உணவை வாங்கிக்கொண்டான்.
" சாப்பாடு காரமா இருக்கா?"
"இ.. ல்.. லை.. எனக்கு… யாரும்… சாப்பாடு.. ஊட்டி விட்டதில்லை…" என்ற கவின் அவளது கைகளில் முத்தமிட்டான்.. மித்ரா தலையை குனிந்து கொண்டாள்.
" sorry மிரா… உணர்ச்சிவசப்பட்டுட்டன்"
"முதல்ல சாப்பிடுங்க" என்றவள் உணவை ஊட்டி விட்டு மாத்திரைகளை கொடுத்தாள்..
" மிரா நான் உன் மடியில படுத்துக்கட்டுமா?? "
" மௌனம்"
" உனக்கு பிடிக்கலனா விட்று"
"இல்லை கவி வாங்க" என்றவள் அவனை தனது மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்… மருந்தின் உபயத்தால் நன்றாக தூங்கினான். சில மணி நேரம் சென்ற பின் கண்விழித்தான்..
அவனை மடியில் தாங்கி அவனது தலையை வருடிக்கொடுத்தபடி இருந்ததைப் பார்த்தான்..
" மிரா" என்றபடி அவளது மடியிலிருந்து எழுந்தான்.
" எழுந்திட்டீங்களா கவி? இப்போ உடம்புக்கு எப்பிடி இருக்கு?"
"இப்போ ok மிரா… thanks"
"எனக்கு எதுக்கு நன்றியெல்லாம்.. நீங்க காய்ச்சல் வரும் போதே மாத்திரை போட்டிருக்கலாமே கவி"
"எனக்கு இவ்வளவு பெரிசா காய்ச்சல் வந்ததில்லை மிரா.."
"அதுக்காக இப்பிடி இருக்காதீங்க.. இப்போ காய்ச்சல் இல்லைதானே" என்றவள் அவனது நெற்றியில் கைவைத்தாள்..சூடு இன்றி காணப்பட்டது..
" நான் சொன்னேன் தானே மிரா காய்ச்சல் சுத்தமா போயிடிச்சினு.. உடம்பு கொஞ்சம் களைப்பாக இருக்கு மிரா. "
" நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. டைமுக்கு சாப்டு இந்த மாத்திரையை போடுங்க.. நான் போயிட்டு வர்றன்"
"எங்க போற?"
"hostel கு"
"வேணாம் மிரா ரெண்டு நாளைக்கு என் கூட இரு மிரா.."
"முடியாது கவி நான் போகணும்"
"நீ போனா என்ன யாரு மிரா பார்த்துப்பா?? டைமுக்கு யாரு சாப்பாடு தருவா?? மடியில போட்டு யாரு தூங்க வைப்பா.???மிரா இன்னும் என்னோட காதல் உனக்கு புரியல்லையா?" என்றான் கண்களில் காதலோடு..
" புரியுதுங்க.. ஆனா உங்களுக்கு ஏத்தவ நான் இல்லை… நீங்க எவ்ளோ பெரிய ஆள்… நான் சாதாரண நர்ஸ்.. "
" இவ்ளோ பெரிய ஆளா இருந்தும் என்கூட யாரும் இல்லையே மிரா… எனக்கு காய்ச்சல் என்றதும் நீதானே வந்த.. பிளீஸ் மிரா… என் காதல ஏத்துக்க.. நான் உன்ன என் கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துப்பன்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா மிரா பிளீஸ் "
சிறிது யோசித்த மித்ரா" உங்களை நம்புறன்… சரி கல்யாணம் பண்ணிக்கலாம்… என்ன ஏமாத்தி மாட்டீங்களே.. அப்பிடி ஏதும் நடந்திச்சி என்னால தாங்கிக்கவே முடியாதுங்க.. " என்று மிரா சொன்னவுடன் வெளியே இருந்து கைதட்டும் சத்தம் கேட்டது… யாரென பார்க்க அங்கே ராஜ்ஜீம் கௌதமும் நின்றிருந்தனர்..
இவர்களை புரியாது பார்த்தாள் மித்ரா..
" கவின் நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான்டா.. இவள சொன்ன மாதிரியே மூணு வாரத்தில உன்ன லவ் பண்ண வச்சிட்ட… போட்ட சவால்ல ஜெயிச்சிட்ட மச்சி" என்றான் ராஜ்..
இதைக் கேட்ட மித்ராவுக்கு தனது மனசில் இடி விழுந்து போல இருந்தது..
இருந்தாலும் "நீங்க சொல்றது உண்மையா?" என்றாள்…
" உண்மைதான் உங்கிட்ட எதுக்கு பொய் சொல்லணும்… அன்னைக்கு என்னை அடிச்சியே அதுக்கு பழிவாங்கதான் இப்பிடி பண்ணன்" என்றான் ராஜ்.
கவினை இப்பிடி என்னை ஏமாத்திட்டியே என்று ஒரு பார்வை பார்த்தாள் மித்ரா..
"மிரா.."
"நிறுத்துங்க.. என்னோட பெயரை சொல்ற தகுதிய நீங்க எப்பவோ இழந்திட்டீங்க.. உங்கள நான் எவ்ளோ நம்பினேன்… என்னை பார்த்துக்க.. என்மேல அன்பு காட்ட…கஸ்ரம் வந்தா தட்டிக்கொடுக்க.. எனக்காகனு ஒரு உறவு இருக்குனு ரொம்ப சந்தோசம் பட்டன்… ஆனால் நீங்க என்ன ஏமாத்திட்டீங்க… என் மனசை உடைச்சிட்டீங்க… இனிமேல் என் முகத்தில முழிக்காதீங்க… நான் போறேன்… " என்றவள் கவின் கூப்பிடுவதைக் கூட கேட்காமல் சென்றுவிட்டாள்…
அங்கிருந்து நான் வரும்போதுதான் நீ என்ன பார்த்த என்று நடந்ததை சொல்லி முடித்தாள் மித்ரா.. இதைக் கேட்ட மிதுவுக்கு கவின் மீது கோபம் வந்தது…
அதே நேரத்தில் ரிஷி கௌதமிடம் இருந்து நடந்ததை அறிந்து கொண்டு கவின் அறைக்கு வந்தான்
" மித்து உனக்கு ஒரு நிமிடம் கூட அவன் காட்டின அன்பு பொய்னு தோணலையா?"
"இல்லையே மிது… அவர் எங்கிட்ட பேசும் போது அவர் கண்ல எனக்கான காதலை பார்த்தன் டி ஆனால் இப்பிடி என்ன ஏமாத்துவாருனு நினைக்கவே இல்லைடி…"
"சரி நீ அதையே நினைச்சிட்டு இருக்காத சரியா? வா ஊர சுத்தி பார்த்திட்டு வருவம்"
" நான் வரலடி"
" மித்து இங்கையே இருந்தா அதையே யோசிசிட்டு இருப்ப.. வா என்கூட "என்று மித்ராவை அவளுடன் அழைத்துச் சென்றாள்..
ரிஷி கோபத்துடன் கவினின் அறைக்குள் நுழைந்தான். அங்கே கவின் வெளியே செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.
" என்ன கவின் அடுத்து யார சவாலுக்காக ஏமாத்த போறீங்க? " என்று கேட்டபடி அவன் முன்னால் வந்த ரிஷி கவின் கண்களில் தெரிந்த கண்ணீரைப் பார்த்து பதறிவிட்டான்.
"கவின் என்னாச்சி?"
"நீ கூட என்னை புரிஞ்சிக்கலையே ரிஷி… நான் அப்பிடி பட்டவனா? ஆரம்பத்தில சவாலுக்காகதான் பேச ஆரம்பிச்சேன்.. ஆனால் அவளோட பேசி பழகும் போது என்னை அறியாமலே அவள விரும்ப ஆரம்பிச்சிட்டன் ரிஷி.. இத அவகிட்ட சொல்ல முதல்லேயே அவ போயிட்டா… உண்மையா மனப்பூர்வமா அவளை விரும்பறேன் ரிஷி… எனக்கு என்னோட மிரா வேணும் "என்று அவனிடம் கூறினான் கவின்..
" என்னை மன்னிச்சிடு கவின்.. நானும் தப்பா நினைச்சிட்டன். சரி வா போய் மித்ராவ பார்க்கலாம். "
" அவ இப்போ இங்க இல்லைடா ஊட்டிக்கு போயிட்டா.. அங்க போகத்தான் நானும் ரெடியாகிட்டு இருக்கிறன்"
" நானும் வர்றன் டா "
" சரி வா" என்றவர்கள் மித்ராவை பார்க்க சென்றனர்..
வெளியே சென்று விட்டு வந்த மிதுவும் மித்ராவும் வீட்டுக்கு வந்து இரவு சாப்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.. " இந்த நேரத்தில் யாரு? மித்து போய் கதவை திறடி"
" சரி "என்ற மித்ரா போய் கதவை திறந்தாள்.. அங்கே கவினும் ரிஷியும் நின்றிருந்தனர்..
"யாரு நீங்க எதுக்கு வந்தீங்க?"
"உள்ள போய் பேசலாம் மித்ரா" என்றான் ரிஷி.. இரவு நேரத்தில் யாருக்கும் காட்சிப்பொருளாக வேண்டாமென நினைத்த மித்ராவும் அவர்களை உள்ளே அழைத்தாள்..
" யாருடி இது"
"தெரியாது மிது"
"மிரா…"
"நிறுத்துங்க இங்க எதுக்கு வந்தீங்க?? நான் செத்திட்டனானு பார்க்க வந்தீங்களா? " என்று மித்ரா கேட்டதும் கவின் கோவத்தில் அவளை அறைந்து விட்டான்..
"எதுக்காக அவளை அடிச்சீங்க?"
"நீங்க கொஞ்சம் பேசாம இருங்க… அவங்க பேசிக்கட்டும்" என்று ரிஷி மிதுவிடம் கூறினான்.
"இங்க பாரு மிரா… நான் ஆரம்பத்தில உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சேன்.. ஆனால் உங்ககூட பேசி பழகும் போது உண்மையிலே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டன் மிரா…என் மனசு முழுதும் நீதான்டி இருக்க… நடந்ததை உங்கிட்ட சொல்லலாம்னு நினைக்கும் போதுதான் அவன் வந்து சொல்லிட்டேன்… மிரா நான் உன் கால்ல விழுந்துகூட மன்னிப்பு கேட்கிறேன் மிரா… எனக்கு நீ வேணும் என்னை அன்பா பார்த்துக்க நீ வேணும் மிரா… என்னை நம்பு மிரா… என் காதல் உனக்கு புரியலையா மிரா.. "
" எதுக்காக திரும்ப வந்து நடிக்கிறீங்க? இப்படி பேசினா நான் நம்பிருவன்னு நினைக்கிறீங்களா.. "
" மிரா நீ நம்பணும்னா நான் என்ன பண்ணட்டும்.. அந்த பள்ளத்தில குதிக்கட்டுமா?? இல்லை வேற என்ன பண்ணட்டும்"
" எங்க அந்த பள்ளத்தில் குதிங்க பார்ப்பம்" என்றாள் உடனே கவின் வீட்டிலிருந்து வெளியே வந்து பள்ளத்தில் பாய சென்றான்.. ரிஷி மிது தடுத்தும் கேட்காமல் சென்றான்.. ஒரு முடிவுடன் மித்ராவை திரும்பி பார்த்தவன்" இந்த உலகத்தில நான் ரொம்ப சந்தோசமா இருந்த நாட்கள் உன்னோட பழகின நாட்கள்தான் மிரா.. லவ் யூ சோ மச் மிரா" என்றவன் பள்ளத்தில் குதிக்க முயற்சிக்க அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டு அழுதாள் மித்ரா…
"மிரா"
"உங்களை நம்புறன் கவி… உங்க கண்கள்ல எனக்கான காதலை பார்த்திருக்கேன்… உங்க மேல கோவம் வந்திச்சே தவிர வெறுப்பு வரல…நான் இங்க வந்ததும் உடனே நீங்களும் இங்க வந்தீங்களே இதுதான் உண்மையான காதல்…ரொம்ப ரொம்ப சந்தோசம் கவி… பிளீஸ் இனிமேல் இப்பிடி விளையாட்டுகூட பண்ணாதீங்க.. லவ் யூ சோ மச் கவி" என்றவள் முகத்தை தனது கைகளில் ஏந்திய கவின் முத்தமழை பொழிந்தான்…
" இவங்க காதல் உண்மையான காதல் அதுதான் ரெண்டு பேரும் சேர்ந்திட்டாங்க" என்றான் ரிஷி
" உண்மைதான் "என்று கூறி சிரித்தாள் மிது…
உண்மைக் காதல் இணைந்தது…


காதல் நிறைவுற்றது

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத்தோழி


திவ்யதுர்ஷி
