• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕1

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
11
Epi - 01

சுற்றிலும் இருட்டு சூழ்ந்து இருந்த அறையில் அவன் எக்காலமிட்டு சிரிக்கும் சத்தம் அந்த கானகத்தையே ஒர் உலுக்உலுக்கியது அவன் முழு அரக்கனாக ‌மாறி வேட்டையாடும் அரிமாவின் கர்ஜனையோடு எதிரில் இருப்பவனை காண.... அவனுக்கு சப்த நாடியும் ஆட்டம் கண்டது...அவனுக்கு முகமெல்லாம் இரத்தால் நனைந்து சொட்டிக் கொன்டு பார்க்கவே பரிதாப நிலையில் இருந்தான்....

அவன் அந்த நிலையிலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கெஞ்சினான் "சார் மன்னிச்சுருங்க பீளிஸ்" என கதற அது எதுவும் அந்த அரக்கன் செவியை தீண்டவில்லைப் போலும் அசராமல் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டு தள்ளினான்...கதறி கொன்டியிருந்தவன் உயிர் கதறலோடே பிரிந்தது... வீர் என அழைக்க விரைந்து ஓடி வந்தான்..அவன் கண் அசைவிலேயே புரிந்து கொன்டு "நான் டிஸ்போஸ் பன்னிறேன்" என அமர்தலாக கூற தலை அசைத்து "அவனோட குடும்பதுக்கு அவன் இருந்தா செய்ற எல்லாம் பன்னிரு " என கட்டளையை பிறப்பித்துவிட்டு எதுவும் நடவாததுப் போல் சாவகசமாக நடந்து சென்றான்

அவன் போவதை வழக்கம்போல் அனைவரும் ஆச்சிரியம் கலந்த மெச்சுதல் பார்வையுடன் பார்தனர்..

இறந்தவனை கண்டு அவர்களால் உச்சு கொட்ட மட்டுமே முடிந்தது... இறந்த சடலத்தை அப்புறபடுத்த சென்றனர் அவர்கள் வீரின் மேல்பார்வையில்...

சாவகாசமாக நடந்து சென்றவன் கானகத்தின் தார் சாலையில் இருந்த தனது உயர்ரக Mercedes-Benz GLA வில் அமர்ந்து சீரிபாய்தான் "அதர்ஷன் வர்மா"
இவன் அரக்கன் தான் ஆனால் அழகிய அரக்கனவன் கரிய அடர்ந்த சிகை எவரையும் பார்வையில் கணக்கிடும் கூரிய விழி தினமும் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய தோள் தின்னிய மார்பு என ஆண்களே பொறாமைக் கொள்ளும் அழகனவன்...

அவன் நேராக சென்றது அவனது கெஸ்ட் ஹவுஸ்ற்க்கு தான் அங்கே... ஒர் அழகிய யுவதி தன் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டும் இறுக்கி பிடித்த ஆடையுடன் அவன் படுக்கையறையில் காத்திருக்க..தனது கால் அடிகளை பூமி தாய் நோக அழுத்தமாக பதித்து அவன் படுக்கையறைக்குள் நுழைகையில்...எதிரில் இருந்த யுவாதி அவனை நெருங்கி தன் முன்னழகு மொத்ததையும் அவன் மிது படும்படி அனைத்து "பேபி"என குழைய...
அவன் முகம் இறுகி அவளை உதறி தள்ளியவன் சுவரின் மீது அவளை முட்டி பெண் என்றும் பாராமல் தாக்க அவள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட்டம் பிடித்தவளை தன் தனல் கண்களாலால் வெறித்து இருந்தவன்...

முகம் கடுகடுத்து அவன் வேலயாதான் இருக்கும் என தனக்குள் உறுமிக்கொன்டான்....

***************

காலைப் பொழுது அழகா விடிய கதிரவன் தன் பூமி காதலியை காணும் ஆர்வத்தில் கதிரவன் யாருக்கும் காத்திராமல் மலை முகட்டின் வழியே பளீர் என்ற‌ சிரிப்புடன் ஓச்சியில் உதித்து பூமி தாயை தழுவிய இனிய காலை பொழுதில்.... அழகிய பதுமைப் போல் தூங்கிக் கொடுயிருந்தாள் அந்த மங்கையவள். ...

கண்களை திறக்க சிரமப்பட்ட நேரம் வெளியே பல நல்ல வார்த்தைக் கொன்டு சுப்ரபாதம் பாடிக் கொன்டுயிருந்தார் தேவகி " இதுலாம் பிறக்கலனு யாரு அழுதா அப்பன் ஆத்தா போனதும் எங்கயாவதுப் போய் சாக வேண்டியதுதான நம்ம உயிர வாங்கவே பிறந்துயிருக்கு"...என திட்டிக்கொன்டே போய் அவள் அறை கதவை தட்டினார் தேவகி..." முதேவி எருமை எந்திரி யாரு வேலையலாம் பாக்க "என வெளியே இருந்து கத்த
இவ்வளவு நெரம் திறக்க சிரமப்பட்ட கண்கள் கூட சட்டென திறந்து கொன்டது அவளுக்கு....

வேகமாக எழுந்து தன்னை சுத்த படுத்திக் கொன்டு அவள் கதவை திறக்க அவளை " பளார் "என கன்னத்தில் அறைந்து ஏன் மகாராணிக்கு சிக்கரம் எழுந்து வேலைப பாக்கனும்னு
நினைப்பு இல்லயோ உங்களுக்கு நாங்க சேவகம் செய்யனுமோ போடி போய் வேலையப் பாரு" என விடியலின் இனிமை உணரவிடாது காலையிலேயே கரித்து கொட்டினால் அவள் அதற்கு எதிர்வினை ஆற்ற தெரியாத பேதை பெண்ணோ ...
"சாரி சித்தி" என சென்றுவிட்டாள்..

தேவகியின் அக்காவின் பிள்ளைதான் இப்போது இவர்களால் வளர்க்கப் படும் இல்ல இல்ல கொடுமை படுத்தபடும் அஞ்சலி.‌..

சிறு வயதிலேயே தன்னைவிட அதிக அழகிலும் அறிவிலும் சிறந்த அக்கா சிவகாமியின் மீது அவளுக்கு பொறாமை அதிகம் அதுவே நாள் அடைவில் வெறுப்பாக மாற காரனமாகியது... திருமணம் என்று வந்த போதும் வெறுப்பு பெறுகியதே தவிர குறைவில்லை.... சிவகாமி ரஞ்சன் என்ற ஒருவரை விரும்ப அவரும் அவரை விரும்பினார்...

அவருக்கு சொத்து மதிப்பு அதிகம் ஆனால் சொந்தம் என்று யாரும் இல்லை..சிவகாமிக்கு வரன் பார்த்த சமயம் சிவகாமி காதலை வீட்டில் உறைத்து விட அவர் அப்பாவும் காதலுக்கு எதிரி இல்லை என்பதால் சம்மதித்தார் ஆனால் அவரின் வசதியை கண்டு அஞ்ச அதுவும் மாப்பிள்ளையின் பேச்சில் நீங்க அவறே திருமனத்தை நடத்தினார்...

ஆனால் தேவகிக்கு தங்கள் வசதிக்கு ஏற்ப பார்த்து திருமணம் முடித்து வைக்க அது தேவகிக்கு புகைச்சலை ஏற்படுதியது..சிவகாமி கருவுற்றப்போது ஊர் மக்களுக்கு அளித்த விருந்து மனைவியை தங்கியது என அனைத்திலும் வெறுப்பையே மேலும் மேலும் வளர்த்துக் கொன்டார் அவர்.. ஒர் நாள் கார் விபத்தில் சிவகாமி ரஞ்சன் இருவரும் இறைவனடி செற அந்த ரோஜா மோட்டு மட்டும் தனித்து விட

அந்த பொறுப்பு பாட்டி தாத்தாவின் பக்கம் செல்ல ஆனால் ஊர் மக்கள் பெரியவர்களடம் பாதுகாப்பு இருக்காது என கருதி அனுப்பாமல் சித்தியான தேவகியிடம் ஒப்படைக்க...இவளை வளர்ப்பது சுமையாக தோன்றினாலும் இவளை வளர்த்தாள் இவள் பெயரில் உள்ள சொத்து நம் வசம் வரும் என ஒத்து கொள்ளலாம் என நினைத்து இருக்க...

அவள் திட்டத்தில் இடி விழுந்தது போல் ஏற்கனவே நழிவு அடைந்து இருந்த நிறுவனம் இப்போது கேட்பார் அற்று கிடந்ததில் காசுக்காக வாயை திறந்து கொண்டு இருக்கும் பிசாசுகள் அதை சாதகமாக பயன்படுத்தி சுருட்டி கொண்டர்...

கேட்டால் அஞ்சலி தான் கேட்க வேண்டும் ஆனால் அந்த பால் மனம் மாற பிஞ்சுக்கு இன்னும் தாய் தந்தை விட்டு சென்றதே புரியாத போது பாவம் அவளும் என்ன செய்வாள்...இதை வைத்து பல திட்டம் தீட்டி இருந்த அவருக்கு அனைத்தும் கை நழுவி போனதில் அதிலும் வெறுப்பே மிஞ்ச பிறகு அனைத்திற்கும் அந்த பிஞ்சைய வாட்டினார்....

இவளை அனைத்திலும் ஒதுக்கி தன் பிள்ளையை மட்டும் பார்த்துக் கொன்டு இவளை விரட்டினார்....அம்மாவிற்க்கு தப்பாமல் பிறந்த பள்ளை திக்ஷாவுக்கும் அஞ்சலி என்றால் ஆகாது அனைத்திலும் மட்டம் தட்டுவாள்...

சித்தி என்ற பொறுப்பில் அவர் அவளுக்கு எதுவும் செய்ததில்லை ஆனால் கூசாமல் காசை மட்டும் பிடுங்குவார்...கல்விக் கூட அவளே ஸ்கோலர்ஷிப்பில் தான் முடித்தாள்.... அதுவும் சித்திக்கு தெரியாமல் சித்தப்பாவின் உதவியுடன்...

மாட்டு தொழுவத்தை பெறுக்கி சுத்தம் செய்து சாம்பிராணி புகை காட்டி எல்லாம் முடிய....வயிறு கூப்பாடுப்போட்டது தன்னையும் கவனி என்று....
ஏனினில் நேற்று காலை உண்டது அலுவலகத்தில் கூட உன்னவில்லை தலை கிருகிருத்தது இருந்தும் எல்லாம் செய்து முடித்து வேலைக்கு கிளம்ப..

அடுத்து மகளின் ஆட்டம் போல "சாப்பாடு எடுத்து வச்சுட்டு போ " என கூற "அ..அது லெட் ஆயிடுச்சு என மெல்லமாக "கூற ஒஒ என நக்கலாக சிரித்து டைனிங் டேபிளிலில் இருந்த தன்னிரை எடுத்து அவள் என்னவேன உணரும் முன் பளிச்ச என முகத்தில் உத்தினள்..‌.

அதில் அவள் தொப்பளாக நனைந்து விம்மி உடைப்பேடுக்க தயாராக இருக்கும் கண்ணீரை இமை தட்டி உள் இழுத்து உதடு கடித்து பாவமாக பார்த்தவளின் பார்வையை சட்டை செய்யாது "வச்சுட்டு போ" என சட்டமாக டேபிளிலில் அமர, அவளுக்கு பரிமாரிவிட்டு...
உடை மாற்றிக் கொன்டு கிளம்பி விட்டால்... அரக்கனின் மான்குட்டி...


தொடரும்.......
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
827
ஆரம்பம் நல்லா இருக்கு மா..
எழுத்துப்பிழைகள் இருக்கு, அதை முடிந்தளவு திருத்தி பதிவிடுங்கள்.
 

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
11
ஆரம்பம் நல்லா இருக்கு மா..
எழுத்துப்பிழைகள் இருக்கு, அதை முடிந்தளவு திருத்தி பதிவிடுங்கள்.
கண்டிப்பா திருத்திக்கிட்டு எழுத்து பிழை இல்லாம போடுறேன்..அப்பறம் ரொம்ப நன்றி கம்மென்ட பண்ணதுக்கு
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
26
வர்மா டெரர் பீஸ் போல... 🙄
இவனோட இன்ட்ரோ 😎

இவன்கிட்ட மாட்டப்போற அந்த மான்குட்டி அஞ்சலியா 😢
பாவம் அஞ்சலி சித்திகிட்ட ரொம்ப கொடுமைய அனுபவிக்கிறா.. 🤧

கதை நல்லா இருக்குப்பா, தொடர்ந்து எழுதுங்க 🤩

முடிந்தளவு எழுத்துப் பிழை இல்லாம பதிவு குடுங்க 👍

டெய்லி எபி இருக்கா?
 

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
11
நல்லா இருக்கு மா தொடர்ந்து எழுதுங்க
கண்டிப்பா
வர்மா டெரர் பீஸ் போல... 🙄
இவனோட இன்ட்ரோ 😎

இவன்கிட்ட மாட்டப்போற அந்த மான்குட்டி அஞ்சலியா 😢
பாவம் அஞ்சலி சித்திகிட்ட ரொம்ப கொடுமைய அனுபவிக்கிறா.. 🤧

கதை நல்லா இருக்குப்பா, தொடர்ந்து எழுதுங்க 🤩

முடிந்தளவு எழுத்துப் பிழை இல்லாம பதிவு குடுங்க 👍

டெய்லி எபி இருக்கா?
Thank you so much sister♥️💛✨
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
146
நல்ல ஆரம்பம் ப்பா. பிழைகள் மட்டும் பார்துகோங்க.
ஹீரோ டெரர் போல
 
Top