• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 7

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 7

"டேய் வேலா இவனுங்க தொல்லை தாங்கலடா"

பைரவி தம்பியிடம் முறையிட்டாள்… தம்பியோ இன்னிக்கு ஆதித்யா சேனல் பார்த்து இருப்பானோ என்னவோ…

"எவனுங்க கா "

"இதுவரைக்கும் ஒரு கார்த்திக் தான் தொல்லை கொடுத்து கிட்டு இருந்தான் இப்ப இன்னொருத்தனும் கூட சேர்ந்துட்டான்… "

" நீ அவந்தி அக்கா கிட்ட சொல்லலாம்ல"

"என்னன்னு சொல்ல சொல்ற ஒருத்தன் ஆபீஸ்ல அவன் முகம் என் கண்ணு முன்னாடி இருக்கிற மாதிரி பாத்துக்குறான்.. அதுக்கு மேல ஏதாவது பேசினால் திட்டி அனுப்பி விடலாம் அமைதியா உசுர வாங்குறான் டா…

"ஹாஹாஹா அடுத்தவன் என்ன செய்றான்? "

"இவனே நல்லவன்னு சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்கு போன்ல அளப்பறை பண்ணுறான் டா"

ஆர்வம் தாங்காமல் " அப்படி என்ன பண்றான் கா "

"குட்டிக்குட்டியா ஏதாவது பாட்டு, கவிதை, கொட்டேஷன், குட் மார்னிங் ல இருந்து குட் நைட் வரைக்கும் ஏதாவது அனுப்பிகிட்டே இருக்கான்

மெசேஜ் பாக்கலனா போன் பண்றான்... போன் எடுக்கலைன்னா…. சோக ஸ்டேட்டஸ் வைக்கிறான்.." சொல்லில் அடங்காத அவஸ்தை அவளிடம்

" சரிக்கா நீ ஏன் அவாய்ட் பண்ணனும் பேசிப் பார்க்கலாம்ல? புடிக்கலனா உங்களை புடிக்கல இனிமேல் டிஸ்டர்ப் பண்ணா அவந்திகா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன் இல்லனா போலீஸ்க்கு போவேன்னு சொல்லு... நீ ஒதுங்கி ஒதுங்கி போகத்தான் அவனுங்க உன்கிட்ட இப்படி எல்லாம் அப்புரோச் பண்றாங்க"

ஒரு ஆணின் மனசு ஒரு ஆணுக்கு தான் புரியும் போல அந்த ரீதியில் பேசி வைத்தான் வேலன்

"என்னடா நீ கோபப்பட்டு கத்துவ சண்டைக்கு போவன்னு பார்த்தால் இப்டி அவனுங்களுக்கு சாதகமா பேசுற ஓ நீயும் பாய் இல்லையா அதனாலயா டா வேலா? அக்காக்காக பேச மாட்டியா டா??? கடவுளே எனக்கு இருந்த ஒரு குட்டி தம்பியும் பெரிய ஆம்பளையா வளந்துட்டானே… " என போலியாக கண்களை துடைத்து பாசாங்கு செய்தாள் பைரவி...

"ஹா ஹா ஹா ஹா அக்கா அப்படி எல்லாம் ஒன்னுமில்ல நீ எப்படியும் ஒரு கல்யாணம் பண்ணித்தான ஆகணும்…."

" அதுக்கு"????

"உன்ன விரும்புற யாரையாவது மேரேஜ் பண்ணா உன்ன நல்லா பாத்துப்பாங்க இல்ல? எப்படியும் உங்க காங்கு கொள்கை படி லவ் மேரேஜ் தான் செஞ்சிப்ப… இப்பவே 24 வயசு ஆகிடிச்சி… சான்ஸ் குடு கா… பசங்க பாவம் கா" பொறுப்பாக ஆரம்பித்து வம்பாக முடித்தான் வேலன்

இவன் என்ன இப்டி பேசுறான் என நினைத்து கொண்டே கேட்டாள் " இதெல்லாம் செட்டாகுமா டா"

"கண்டிப்பா செட்டாகும் கா நீ ட்ரை பண்ணி தான் பாரேன் புடிக்கலனா பிடிக்கல வேலைக்கு ஆகாது என விலகிடு சிம்பிள்…"

இருவரிடமும் பழகி ஒருவரை செலக்ட் செய்வதெல்லாம் கண்டிப்பாக சரிவராது முக்கியமாக அது அவளுக்கு அசிங்கமாகவும் பட...

இரு கார்த்திக் இல் ஒரு கார்த்திக் அது யார் என்பதை கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்…

இது இவனுக்கு சிம்பிள் ஹா தெரியுதா… இவனையும் கவனிக்கணும்.. பேச்செல்லாம் சரி இல்ல.. என நினைத்துக்கொண்டே கிளம்பினாள்...

பைரவியும் அவந்திகாவும் ஆபீஸ் வந்து இறங்கிய சிறிது நேரத்தில் ஜித்தேஷும் மணிவாசகமும் வந்து சேர்ந்தனர்...

அனைவருக்கும் அவனை முறையாக அறிமுகம் செய்துவைத்தார் மணிவாசகம்...

"இவர் என்னோட மாப்பிளை… இனி உங்களோட தான் வேலை பார்க்க போறார்… எனக்கு அவந்திகாக்கு என்ன மதிப்பு மரியாதையோ அதான் இவருக்கும்… பாத்துக்கோங்க… நா கிளம்பறேன் மாப்பிளை… "

அறிமுகப்படலம் முடியும் முன்னரே அவனுக்கான கேபின் அனைத்தும் செய்து கொடுத்து இருந்தாள் பைரவி..

அவளை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்து அவனிடம் அமர்ந்தான் ஜித்தேஷ்... பைரவி கூடவே இருந்து அவன் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பதில் அளித்தாள்…

காலையில் தாய் தந்தையிடம் அரவிந்த் பற்றி பேசியதால் என்னவோ அவந்திகாவிற்கு வேலையே ஓடவில்லை அவனின் நினைவாகவே இருந்தது….

அவன் குரலை ஆவது கேட்டே ஆகவேண்டும் என்ற உந்துதலில் ஒரு வேகத்தில் அவனுக்கு கால் செய்து விட்டாள்….

அவனோ சின்னப் புன்னகையுடன் நான்கு ரிங்குகள் வந்த பின்னரே எடுத்து "ஹலோ மேம் "என்றான்

அவளால் சட்டென்று ஒரு ஹாய் கூட சொல்ல முடியவில்லை மீண்டும் அவனே " ஹலோ மேம் லைன்ல இருக்கீங்களா" எனக் கேட்ட பின்னரே

"அர்விந்த் லைன்ல இருக்கேன் நீங்க அட்டென்ட் பண்ணினத கவனிக்கல பா " என நண்பனிடம் பேசுவது போல் பேசினாள்..

"இட்ஸ் ஓகே மேம் சொல்லுங்க " அவளின் அந்த உரிமையை தானும் எடுத்துகொள்ள முயலவில்லை அர்விந்த் …

"வொர்க் எப்படி போகுது அர்விந்த்?"

" நல்லா போகுது மேம் நாங்க சொல்றதையும் சீப் இஞ்சினியர் கன்சிடர் பண்றார் ரொம்ப சந்தோஷமா இருக்கு " தங்களுடைய எண்ணங்கள் அங்கீகரிக்கபடுவதில் அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு..

" கரெக்டான விஷயத்தை யார் சொன்னாலும் எடுத்துக்கலாம் அர்விந்த்… அதனால உங்களோட டேலண்ட முழுசா வெளிப்படுத்துங்க...அதுதான் எங்களுக்கும் வேணும் "

"கண்டிப்பா செய்வோம் மேம் "

"தட்ஸ் குட் அரவிந்த் இன்னிக்கி ஒர்க் முடிஞ்ச பிறகு ஆபீஸ் வந்துருங்க 4 பேரும்...அப்புறம் மேம் மேம்னு கூப்பிட அவசியம் இல்ல… நாம பிரிஎண்ட்ஸ்ன்னு நினைச்சிட்டு இருக்கேன்… நீங்க இல்லனு ஒவ்வொரு முறையும் சொல்லி காட்டுறிங்க அர்விந்த் " தாளாமல் கேட்டு விட்டாள்..

"சாரி அவனி…இனி மேம்ன்னு சொல்லல… சொல்லுங்க எனி ஸ்பெஷல்?" சின்ன சிரிப்புடன் மேலும் பேசினான்...

"ஸ்பெஷல் எல்லாம் ஒன்னும் இல்ல… மை கசின் ஹேஸ் கம் டு ஆபீஸ் டுடே..
ஹி அல்சோ கோயிங் டு வொர்க் வித் மீ... ஜஸ்ட் தாட் ஆப் இன்ட்ரோடியூஸ் ஆல்" சட்டெனெ தோன்றிய எண்ணத்தை வெளியிட்டாள்...

இதெல்லாம் ஒரு காரணமா என நினைத்தாலும் "ஓ ஓகே அவனி ஈவ்னிங் வர்ரோம் " என ஒத்துக்கொண்டான்...

"பை அர்விந்த்"

அவளின் அர்விந்த் எனும் உச்சரிப்புக்கு மெல்லிய புன்னகை புரிந்தான் ஆனால் அவளின் இந்த அழைப்பில் உள்ள வித்தியாசத்தை கொஞ்சமாய் உணர முடிந்தது அவனால்...

ஆனால் இவனின் பயம் தேவையற்றது எனும் விதத்தில் அவளின் கசினை இன்ட்ரோ கொடுக்க போவதில் குறைந்தது..

அவளும்தான் என்ன செய்வாள்
பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே ஐ லவ் யூ சொல்லி விடலாமா என எழும் எண்ணங்களை துரத்தி சகஜமாக பேச முடியவில்லை… ஆங்காங்கே உரிமைக்குரல் வந்து விடுகிறது… அவனுக்கு சந்தேகம் வராமல் இருக்கவே ஜித்தேஷ் பற்றி பேசி இன்ட்ரோ செய்யப்போவதாக கடைசி நேரத்தில் தோணினதை சொல்லி இருந்தாள் அவந்திகா.

ஜித்தேஷ் அலுவலகத்தை தன் வசம் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு இருந்தான்.. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது அவந்திகா அவனை ஒவ்வொரு செயலிலும் ஆச்சரியப்படுத்தினாள்...

ஏனென்றால் இதுவரை செய்த செய்து கொண்டு இருக்கும் அனைத்து ப்ராஜெக்ட்டுகளையும் பைலில் பார்ப்பதற்கே பிரமாண்டமாய் இருந்தது...

இத்தனையும் செய்ய அவளுக்கு உறுதுணையாக இருந்தது பைரவி என்பதை அறிந்து கொண்டான்...

அதன்பொருட்டு மாமன் மகளின் மீதும் பைரவி மீதும் மரியாதை கூடியது... அன்றைய நாளின் முடிவில் அவன் அனைத்தையும் பார்வையிட்டு இருந்தான்... மறுநாள் கூடுமானவரை அனைத்து கட்டிட வேலைகளையும் சென்று பார்க்க ஆவல் கொண்டான் ஜித்தேஷ்…

அதேநேரம் அரவிந்தும் அவன் நண்பர்களும் ஆபீஸை நெருங்கி இருந்தனர்…

" டேய் மச்சி எதுக்குடா இங்க வந்திட்டு இருக்கோம்? " ஷியாம்

" அதுவா மச்சி நமக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க மேடம் ஆசைபட்டங்களாம் அதான் கூப்பிட்டு விட்டிருக்காங்க… " கார்த்திக்

"நெஜமாவாடா அரவிந்து" ஷியாம்

"டேய் அவன் சொல்றான்னு நீயும் நம்புற.. மேடம் ஓட கூட வேலை செய்ய அவங்க மாமா பையன் வந்து இருக்காராம் அதான் அவங்களோட பிரண்ட்ஸ்னும் வேலை செய்றவங்கனும் இன்ட்ரோ கொடுக்கப் போறாங்களாம்" அர்விந்த்

"அவ்வளவுதானா" ஷியாம்

"நீ என்னடா எதிர்பார்த்த" வருண்

"ஒன்னும் இல்ல டா மச்சி" ஷியாம்

" நீ ஏதாவது ஏடாகூடமா யோசிச்சி இருக்கனுமே அது என்னன்னு சொல்லு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்" கார்த்திக்

"அது வந்துடா அரவிந்தா மேடம் எங்க யாருக்கும் போன் பண்ணாம உனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்க இல்ல" ஷியாம்

"அதுக்கு" அர்விந்த் பல்லை கடிக்க

"உன்னப் பாக்கத்தான் கூப்பிட்டாங்களோன்னு …" ஷியாம் உள்ளடங்கிய குரலில் கூறினான்

…. டமால்…. அரவிந்த் ஷியாமின் முதுகில் ஒரு அடி போட்டு இருந்தான்.. ஷேர் ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் அவர்களை பார்த்து சிரித்து வைத்தனர்…

அதில் ஷியாம்கு எந்த அசிங்கமும் கூச்சமும் இல்லை போல ஹி ஹி ஹி என அவனும் சிரித்து வைத்தான்...

"ப்ளீஸ் ஷியாம் இப்படி பேசாதடா தப்புடா" அர்விந்த்

" என்னடா தப்பு ஒரு பொண்ண பார்க்கிறதா? அதேபொண்ணை இவள் லைப் லாங் நம்ம கூடவே இருந்தா நல்லா இருக்கும்னு தோணுறதா? அதுக்கு லவ்வுன்னு பேர் வைக்கிறதா?

இது எதுவுமே தப்பு இல்லடா அரவிந்தா இருபாலருக்கும் ஆதியில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இருக்கிற அந்த பாலின ஈர்ப்பு கூட தப்பு இல்லடா... அத வக்ரமாக வெளிப்படுத்துவது மட்டும் தாண்டா தப்பு…..

நீயே யோசிச்சு பாரு டா ஏன்? எதுக்கு? உனக்கு லவ் மேல இவ்வளவு வெறுப்புன்னு " ஷியாம் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டினான்..

"டேய் என்னடா இவ்வளவு பெருசா லக்சர் அடிக்கிற எல்லாமே சரியானதாக இருந்தாலும் கூட இதெல்லாம் எனக்கு வேணாம் டா இந்த மாதிரி இதே விஷியத்தை பல முறை பல விதமா விவாதம் செஞ்சிட்டோம்….

ரோஜாவனம் எனக்குன்னு அல்லி, முல்லை, தாமரை என்று யாரையாவது செலக்ட் பண்ணும்டா….

அந்தப் பிலவரை (பெண்ணை) என்னைக்கும் வாடாம பார்த்துப்பேன்டா.. " அவனைப்போலவே நீளமாக பேசி கண் சிமிட்டினான் அர்விந்த்...

" ஹாஹாஹா எப்படிடா இப்படி எல்லாம் இருக்கிற" கார்த்திக்

"நான் நல்லா தான்டா இருக்கேன் உங்களுக்கு தான் லூசு பிடிச்சு போயிருக்கு"

"சரி டா உன்ன ஒன்னு கேக்கவா" கார்த்திக்

" ஏதோ வில்லங்கமா கேட்க போற அதை நம்ம உள்ள போய் வந்த பிறகு கேப்பியாம் சரியா? " அவனை டீல் செய்து டீலில் விட்டான் ஹீரோ…

ஜித்தேஷ் ஆர்வமாக காத்திருந்தான் அர்விந்த்காக…நால்வரில் ஒருவனை அவந்திகா விரும்புகிறாள் என்றால் கண்டிப்பாக பார்த்தவுடன் தெரியும் படி இருப்பான் என எண்ணிக்கொண்டு காத்திருந்தான்…மேலும் அவன் அப்படி என்ன ஸ்பெஷல் என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் வேறு...

நேராக ஜித்தேஷின் அறைக்கே நால்வரையும் அழைத்து சென்றாள் பைரவி…. பின்னரே அவந்திகா வந்து சேர்ந்தாள்…

அதற்குள் அனைவரும் பேச தொடங்கி இருந்தனர்… அறிமுக படலம் ஒன்று நிறைவேறியது….ஜித்தஷ்க்கு அர்விந்தை மிகவும் பிடித்து போய் விட்டது…

பைரவி எதிலும் ஈடுபாடு காட்டமல் அமைதியாக நின்று இருந்தாள்… அவளுக்கு எப்பொழுதும் ஒரு அர்ச்சர்யம் உண்டு… இந்த ஆண்கள் எப்படி பேச தொடங்கியதும் பல காலம் பேசியது போல் பழகுகிறார்கள் என்று…

இவள் மிகவும் யோசித்து யோசித்து தான் பேசுவாள் புதியவர்களிடம்… அவந்திகா சட்டென பேசிவிடும் ரகம்...

அவந்திகா வரும் பொழுது வீகென்ட் சந்திப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்…

அவந்திகா "என்ன ஜிக்கி பாய்ஸ் மட்டும் தனி கூட்டணி போடறீங்களா? எங்களை அவ்ளோ சீக்கிரம் கழட்டி விட முடியாது பாத்துக்கோ…. "

"ஹாஹாஹா கண்டிப்பா நீ இல்லாம நாங்க எங்கயும் போக மாட்டோம் இல்ல அர்விந்த்? " குறும்பு புன்னகையுடன் அரவிந்தை பார்த்து பேசினான் ஜித்தேஷ்

"ஹ்ம்ம் அவனி இல்லாமல் எப்டி… பைரவி வேலன் எல்லாரும் தான் போவோம்…. " அவள் எனக்கு தனி இல்லை இவர்கள் அனைவருடன் தான் அவள் என பதிவு செய்தான்..

ஒருத்தியை தவிர அனைவரும் அர்விந்தை ஆர்ச்சர்யமாக பார்த்தனர்…. அவனியா? இந்த பெயரில் அவளை யாரும் அழைத்தது இல்லை…

மீண்டும் அவனே பேசினான் "என்ன எல்லாரும் இப்டி பாக்குறீங்க? "

"அவனி யாருன்னு பாத்தோம்.. " கார்த்திக் தான் வாய் பிளந்தபடி இருந்தவன் தவம் களைந்து பேசினான்..

"ஓ… அவங்க என் பேர சரியா உச்சரிப்பாங்க.. யாருமே இதுவரைக்கும் அப்டி கூப்பிட்டது இல்ல… அதான் நானும் இதுவரை யாரும் கூப்பிடாத பேரா இருக்கட்டுமேன்னு இப்டி கூப்பிடுறேன்… " சரியான விளக்கம் கொடுத்ததாக நினைத்தான் அர்விந்த்...

இவன் தெரிந்து பேசுகிறானா? என்று தான் அனைவரும் அவனை பார்த்து இருந்தனர்…

அவந்திகா பெரிய புன்னகையுடன் நின்று இருந்தாள்…

அந்த புன்னகையில் இருந்த காதலை அரவிந்த் தவிர எல்லோரும் கவனித்தனர்…


ஹீரோ எல்லாம் மக்கு பீசா இருந்தா நா எப்டி லவ் ஸ்டோரி சொல்லுறது? 🙊

அரவிந்தை காதல் மணி அடித்ததா? அடலீஸ்ட் குண்டு பல்பு ஆச்சும் எரிஞ்சுதா கேட்டால் இல்லை என்பான்...அவந்திகா பார்த்துக்கொள்வாள் அவனை…

அதை அடுத்த எபி ல பாக்கலாம்….
 
Top